கவிதை எழுத தயங்கிடும் யாவருக்குமே நான் சொல்லவிரும்புவது....
நான் முதன்முதலில் எழுதின கவிதை.... 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த என் தோழி ஒருத்திக்காக என் இளவயது நாளில் எழுதியது... "தோல்வியை வெற்றியாக நினைத்து தொடர்ந்து முயற்சி செய்!தோல்விகள் இனி உன்னிடம் நெருங்காது" இது மிகச் சாதாரணமானதுதான்.. ஆனால் இன்று நான் கண்டெடுத்திருக்கும் கவிதை என்னும் கிணற்றில் அன்று தென்பட்டது இந்த சிறுதுளிதான்...அதன் பின்னர் நிலவையும், காதலியையும் ஒப்புப்படுத்தி ஒரு கவிதை எழுதினேன்.. அதற்கு இன்று வரை பெயர் சூட்டவில்லை... கவிதை எழுதிடும் ஆர்வத்தை பன்மடங்காக்கின கவிதை.. அந்தக் கவிதையை இதுவரை எங்கேயும் நான் வெளியிடவில்லை.. அது என் மனதுக்குள்ளேயே இருக்கிறது.. விரைவில் அதை இங்கே பதிக்கிறேன். அதன் பின்னர் கவிதை எழுதாமல் இருந்த காலங்களில் ஒரு நாள் கொஞ்ச காலம் என்னுடன் பழகிக்கொண்டிருந்த என் தோழி திடீரென்று கேட்டாள்.. உனக்கு கவிதை எழுத தெரியுமா என்று..... ம்... என்றேன், அவளுக்கு கவிதைகள் எழுதி காட்ட வேண்டும் என்று காதல் கவிதைகள் தான் எழுதினேன்... "முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்..." ஒன்று மறக்காதீர்கள்.. குழந்தையிடம் முடிவெட்ட பழகியபின் தான் பெரியவர்களுக்கு வெட்ட அனுமதிப்பார்கள்.. அதனால் காதல் கவிதை எழுதுவதும் சாதாரணமானதல்லல...இப்படியாய் போய்க்கொண்டிருந்த காலக்கட்டதில் வேலை செய்யுமிடத்தில் சக நண்பர் ஒருவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.. அவர் வைரமுத்து கவிதைகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தார்.. இரயிலில் நாங்கள் பயணிப்பது வழக்கம்... அப்பொழுதுதான் முதன் முதலில் வைரமுத்துவின் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அந்தக் கவிதைகள் படித்தபிறகுதான், வார்த்தைகளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன், அதுமட்டுமில்லாமல் காதலைத் தாண்டி அவர் எழுதியிருந்த பல்வேறு கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன... பிறகுதான் நான் எழுதும் கவிதைகளின் எல்லையை விரிக்க ஆரம்பித்தேன்... கவிதைகள் என் சிறகினுள் தஞ்சம் அடைந்தன.. திருமணம் ஆனது... கவிதைகள் எழுதுவதையே முழுமையாய் விட்டிருந்த காலத்தில்தான் ஆர்கூட் அறிமுகமானது.. மறுபடியும் என் கவிதைகளுக்கு தூசுதட்டினேன்.. அருமை நண்பர் ஆதவா அறிமுகமானார்.. என் கவிதைகளுக்கு விமர்சனம் என்னும் பல்வேறு ஆடைகளை அணிவித்தவர்.... அவர்தான் இம்மன்றத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார்... இங்கே வந்தேன்... முதலில் கைவசம் இருந்த கவிதைகளை பதிக்க ஆரம்பித்தேன்.. வாழ்த்துவதற்கு வஞ்சனை இல்லாத உள்ளங்கள்.... என் கவிதைகளை வாழ்த்தி வரவேற்றன... அன்பு அறிஞர் கவிதைப் போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.. இது எனக்கு கவிதை எழுதிட ஊன்றுகோலாய் அமைந்தது... இதோ, இன்று எழுதியிருக்கும் கவிதைகள் வரையில் இம்மன்ற உறவுகள் உற்சாகமான பின்னுட்டங்கள் இல்லையென்றால் என் கவிதைகள் பலவும் உயிர்பெற்றிருக்காது... என்னை வாழ்த்தின, என்னை வளர்க்கின்ற நம் மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி என் கவிதைகளை இங்கே தொடர்ந்து பதிக்கிறேன்....
என்றும் அன்புடன்.
உங்கள்.
ஷீ-நிசி..
-----------------------------------------------------------------
என் கவிதைகளின் சுட்டிகள்... உங்கள் வசதிக்காக....
கவிதைகள் தொகுப்பு (பல கவிதைகள் உள்ளடக்கியது.. அந்த கவிதைகளின் சுட்டி கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது)
காதல் கவிதைகள்
நிலவு தந்த வெளிச்சம் (முதல் நீள கவிதை)
ஆசையாகத்தானிருக்கிறது!!!
நிலவு களவு போனது
கிராமத்துக் காதலன்
உன்னை நான் பார்க்காமலிருந்திருந்தால்...
காதல் தோல்வியரே!
உன் திருமணம்
மின்சார (ரயில்) தேவதை
பிப்ரவரி 14-ல் ஒரு காதல் கடிதம்
மெளனமான நேரம்
யாருடன் அவளை ஒப்பிடுவேன்?!
காதல் நினைவுகள்
காதல் காலம்
வான் விழியாள்
நிகழ்வு கவிதைகள்
குடந்தையில் கருகிய குழந்தைகள்
கடல் நீர்
கரையோர மீன்கள்
காவிரி நீர்
மரணத்தை நேசித்தவன்
சமூக கவிதைகள்
போர்க்களமா வாழ்க்கை?
ஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை?!
இவர்கள் தவழும் குழந்தைகள்!
தீக்குச்சி
பிள்ளைப்பேறு
நடைபாதை மனிதர்கள்
புதுமைப் பெண்
விட்டுக்கொடுப்போம்
சித்தாள்
குயவனை வனையும் வாழ்க்கைச் சக்கரம்!
குறுங் கவிதைகள்
மனிதனைத் தவிர!
கருப்பு வானவில்
விழிவலை
சாமிக்கு ஒரு கோவில்
உயிர்க்காப்பான்!
விழி நீர்
விந்தை
புகைப்படக் கவிதைகள்
எப்போதடா வருவாய்?
நிலாப் பெண்
பூமியில் ஒரு வானவில்!
உதிராத நினைவுகள்
மற்றக் கவிதைகள்
கோபம்
அப்பா
சமாதானம்
தாய்மை
இந்த நட்சத்திரங்கள்
திருமண வாழ்த்து
புத்தாண்டு!
டிரிங்..... டிரிங்.....
கல்லூரி கடைசி நாள்
அம்மா....
கவிதைபோட்டி கவிதைகள்
1. குடியரசு தினம்
2. நீயும் நானும் கவிதைக்கான படம்
3. உயிர்ச்சிலைகள் கவிதைக்கான படம்
4. முதல் முத்தம்
5. பூக்காரி
6. உடைந்த ஜாடி கவிதைக்கான படம்
7. காதல் செய் காதலா கவிதைக்கான படம்
8. அதிர்ஷ்டமில்லாத காதல்
தொடரும்.....
Bookmarks