பறந்து செல்லும்
பறவைக் கூட்டங்களோடு
தவழ்ந்து செல்லும்
மேக கூட்டங்கள்!
காம்பில்லாத ரோஜாக்கள் -இந்த
காலில்லாத ரோஜாக்கள்!
வலிகளை சுமக்கமுடியுமென
இறைவன் தேர்ந்தெடுத்த
வான் குழந்தைகள்!
காலணிகளை வைக்கவும்
தயங்கும் இடங்களில்,
கரங்களை வைத்தபடி
இயங்கும் இதயங்கள்!
சமூகத்தின்
அவநம்பிக்கைகளை
களைய வைத்து,
தன்னம்பிக்கைகளை
விளைய வைத்தவர்கள்!
இழந்திட்ட அங்கங்களின்
உடல் வலிமையை
இருமடங்காய்
இதயத்தில் ஏற்றியவர்கள்!
இவர்களுக்கு தேவை....
வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......
Bookmarks