Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: இவர்கள் தவழும் குழந்தைகள்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    இவர்கள் தவழும் குழந்தைகள்!

    பறந்து செல்லும்
    பறவைக் கூட்டங்களோடு
    தவழ்ந்து செல்லும்
    மேக கூட்டங்கள்!

    காம்பில்லாத ரோஜாக்கள் -இந்த
    காலில்லாத ரோஜாக்கள்!

    வலிகளை சுமக்கமுடியுமென
    இறைவன் தேர்ந்தெடுத்த
    வான் குழந்தைகள்!

    காலணிகளை வைக்கவும்
    தயங்கும் இடங்களில்,
    கரங்களை வைத்தபடி
    இயங்கும் இதயங்கள்!

    சமூகத்தின்
    அவநம்பிக்கைகளை
    களைய வைத்து,
    தன்னம்பிக்கைகளை
    விளைய வைத்தவர்கள்!

    இழந்திட்ட அங்கங்களின்
    உடல் வலிமையை
    இருமடங்காய்
    இதயத்தில் ஏற்றியவர்கள்!

    இவர்களுக்கு தேவை....

    வாய்ப்புகள் என்னும்
    வழிகள் தான்!
    அனுதாபம் என்னும்
    வலிகளல்ல.......
    Last edited by ஷீ-நிசி; 06-07-2007 at 12:54 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சபாஷ் ஷீ....

    கையகுடுங்க.... கலக்கிட்டிங்க போங்க....

    முதலில் கூறிய வரிகள் எல்லாம் நீக்க படவேண்டியவைகள்...
    அல்லது நீக்கபட முடியும்... அதை செய்ய வேண்டும்...
    உதாரணமாக, மேலை நாடுகளில் எல்லா பொது இடங்களுக்கும் சக்கரநாற்காலி செல்ல வசதி இருக்கும். அவர்கள் இப்படி ஊர்ந்து செல்லவில்லையே... அதை நம் அரசாங்கம் செய்யவேண்டும்...
    சில விசயங்கள் சட்டத்தால் கட்டாயபடுத்தபடவேண்டும். இந்த நிலை கண்டிப்பாக மாறும்.
    இவர்களுக்கு தேவை....

    வாய்ப்புகள் என்னும்
    வழிகள் தான்!
    அனுதாபம் என்னும்
    வலிகளல்ல.......
    .
    இது பஞ்ச்....
    எல்லோருக்கும் காரமாக நீங்கள் கொடுத்த பஞ்ச்...
    ஊனமுற்ற*வர் என்ற சொல்லே முதலில் தவறு...
    இவர்களுக்கு நல்லது செய்வதாக நான் செய்யும் முதல் தவறு இவர்களை பரிதாபமாக பார்ப்பது...
    இதை எல்லோரும் மாற்ற*வேண்டும்.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஷீ. கலக்கல் கவிதை. பறந்து செல்லும் பறவைகள், காம்பில்லாத ரோஜாக்கள் என பல இடங்களில் உவமான உவமேயங்கள். தவழ்ந்து செல்லும் மேகங்கள் ,காலில்லாத ரோஜாக்கள் என வலிக்காதபடி சொல்லி இருகின்றீர்கள். ஒவ்வொரு வரியிலும் பொருள் பொதிந்துள்ளது. சில வரிகளில் நன்பிக்கை, பல இடங்களில் சாட்டை. பாராட்டுகள் ஷீ.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    கவிதை நெத்தியடி... ரொம்ப நல்லாயிருக்கு.... உவமான உவமேயங்கள் வெகு அழகு.... இவர்கள் இறைவனின் நேரடி குழந்தைகள்... அவரது அன்புக்குப் பாத்திரமானவர்கள்....
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    காலணிகளை வைக்கவும்
    தயங்கும் இடங்களில்,
    கரங்களை வைத்தபடி
    இயங்கும் இதயங்கள்!
    ரொம்ப டச்சிங் இடம் இதுதான்....அவர்களையும் சக மனிதர்களாக (அனுதாபத்துடன் பார்க்காமல்) பார்க்க வேண்டும்...

    அவர்களிடம் இருந்து தான் தன்னம்பிக்கையை பல மக்கள் கற்க வேண்டும்...

    வாழ்த்துக்கள் ஷீ..
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி பென்ஸ்... இவைகள் நீக்கப்படவேண்டும் என்பதில் நானும் உங்களோடு ஒத்துபோகிறேன்.. பணம் படைத்த தேசத்தில் ஊனங்கள் நவீன உபகரணங்களால் அவர்கள் கவலையினை மறக்க செய்கிறது. அரசாங்கமும் உதவுகிறது.. ஆனால் ஜனத்தொகை மிகுந்த வறுமையான தேசங்களில் வாழும் இவர்களுக்கு அவர்களைப்போல் வாழும் காலம் என்று வரும்? அதற்கு நம் அரசாங்கம் செய்யபோகும் வழிகள் என்ன?
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி அமரன்.. உவமானங்களை மிக அழகாக புரிந்து சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி அமரன்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி காயத்ரி! உங்களின் விமர்சனம் கவிதையை இன்னும் மெருகூட்டுகிறது..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அன்பான ஷீ!

    கலங்க வைத்த வரிகள் உங்களுடையவை............

    முத்தாய்ப்பாக முடித்துள்ளீர்க்ள், இவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் தான்.......

    எவ்வளவு உண்மையான வார்த்தைகளாவை, அரசாங்கம் மாத்திரமன்றி உதவக் கூடிய நிலையிலுள்ளவர்கள் எல்லோரும் அவர்களுக்கு வாய்ப்பளித்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்கும்.

    கிடைக்குமா?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    உண்மைதான் ஓவியன்.....

    தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post

    வாய்ப்புகள் என்னும்
    வழிகள் தான்!
    அனுதாபம் என்னும்
    வலிகளல்ல.......

    ஷீ நீசி... என*க்கு என்ன* சொல்வ*தென்றே தெரிய*வில்லை. விம*ர்ச*ன*மும் கைக்கு வ*ர*வில்லை. அதே எளீமை. அதே சிற*ப்பு, அதே தொடை... அட*டா!!

    வாழ்வினில் ப*ல* புத்த*க*ங்க*ள் வ*ந்து போகும், சில* காகித*ங்க*ள் நெஞ்சில் நிற்கும். க*ரைய* முடியாத* மையினால் எழுத*ப்பட்டிருக்கும். வ*லிக*ள் நிறைந்திருக்கும்.. காண்ப*த*ற்கு க*ண்ணீர் வ*ரும். இது உங்க*ள் க*விதைக்கும் அந்த* காம்பில்லா ரோசாக்க*ளுக்கும் பொருந்தும்...


    வாழ்த்தோடு நிற்க*முடிய*வில்லை.. நேர*மிருந்தால் க*ருத்து கிடைத்தால் சொல்லுகிறேன். இறுதி வ*ரிகள் மிக* அருமை... வாழ்த்துக்க*ள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவரே! குறுகிய விமர்சனமாக இருந்தாலும் மனதில் ஒட்டிக்கொண்டன உங்கள் வரிகள்.. நேரம் கிடைக்கும்.. மீண்டும் தாருங்கள்.... நன்றி ஆதவரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வாழ்த்துக்கள் ஷீ−நிசி...
    வரிகளில் ஆணித்தரம்...
    இவர்களுக்கு தேவை....

    வாய்ப்புகள் என்னும்
    வழிகள் தான்!
    அனுதாபம் என்னும்
    வலிகளல்ல.......
    மனவலிமை கொண்டவர்களுக்கு எங்கள் ஆறுதல்கள் தேவையில்லை...
    மனவலிமை குன்றியவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள் தேவையில்லை...
    இன்றைய உலகில்,
    அங்கவீனருக்கான ஒலிம்பிக் போட்டிகளை சற்றுப் பார்ப்போமானால்,
    உங்கள் கவிதையின் நிதர்சனம் உறுதியாகும்.
    அவர்களின் திறமையான செயற்பாடுகள் அதிசயத்தைத் தருவதோடு,
    சுகதேகியான சோம்பேறிகளுக்கு,
    சாட்டையடியாகவும் இருக்கின்றது...

    மீண்டும் வாழ்த்துக்கள், சிறப்பான கவிதைக்கு...
    Last edited by அக்னி; 07-07-2007 at 12:45 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •