கரு மயிராய் இருந்தாலும் ஆட்கொண்ட விதம் உயிராய் இருந்தது . நல்லதொரு கவிதைக்கு நன்றி.
Type: Posts; User: எஸ்.எம். சுனைத் ஹஸனீ; Keyword(s):
கரு மயிராய் இருந்தாலும் ஆட்கொண்ட விதம் உயிராய் இருந்தது . நல்லதொரு கவிதைக்கு நன்றி.
நன்றி கௌதமன் அவர்களே சுட்டிக்காட்டலுக்கும் சிறியதொரு கவிதைக்கும்.
அவன் கூற விழைந்திருந்தான்
இதயமிடறிய இடர்பாடொன்றை
உட்புகுந்து உடலறுக்கும்
உள்ளங்கள் ஒவ்வாததை
பார்த்ததும் பளிச்சென்பதைப்போல்
எவருமெளிதில் கண்டுகொள்ளவியலாததை
தலையிலமர்ந்து தன் புத்திக்குப் பதிலாய்...
நல்ல கவிதை. நீங்கள் சிரித்தால் தான் அவைகள் சிரிக்கின்றன. கொஞ்சம் அழுது பாருங்கள். உங்களுடன் யார் சேர்ந்து அழுகிறார்கள் என்பது தெரியும். பிற நோக்கை கவிதையில் வெளிப்படுத்தியது நன்று. பாராட்டுக்கள்.
தனிமை கொடிதுதான். ஆதை கவிதையில் கொடுவித்த விதம் இன்னும் கொடிது.
தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன
அழுகைக்கு தனிமை அவசியமில்லை. ஆனால் சில...
நான் படித்த வரையில் ஆதனின் கவிதைக் கருவிற்கான தலைப்பு அவ்வளவு ஒன்றும் பிரதானமாக இருக்காது. ஆனால் அவரது கவிதையைப் படித்த பின்பு அந்த கருவைத் தவிர வேறென்றும் பிரதானமாக இருக்காது. அதையே...
மிக்க நன்றி கலாசுரன் அவர்களே. எவ்வ்ளவு நாளைக்குத்தான் பிற கலாச்சாரத்திற்கு ஒத்தூதிக் கொண்டிருப்போம். நம் கலாச்சாரம் ஒன்றும் அவ்வளவு குறைந்து விடவில்லை பிறத்தியாருக்கு முன். வார்த்தைக்...
கௌதமன் அவர்களுக்கு: கூற வந்ததை நேர்த்தியாக புரிந்துள்ளீர்கள். சும்மா கெடப்பதுதானே என்று விட்டுக் கொடுப்பதைத்தான் முழுச் சமாதானமாய் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். கூற வந்ததை அப்படியே...
கண நேரக் கோபத்தில் வெளிக்கடாசிய
நிறைவுறா என் பிந்தைய கனவுகளை
அவன் எடுத்து ஓடிக் கொண்டிருந்தான்
என் மனமும் பொட்டை நாயை பின்னிடும்
ஆளுமைக்கார ஆண் நாயாய்
இப்படித்தான் நானும் ஒரு காலத்தில் புலம்பிக்கொண்டிருந்தேன். காக் கஞ்சியெனினும் அது நம் தேசக் கஞ்சியாக வேண்டுமென்று அரக்க பறக்க வந்து சேர்ந்தேன் எல்லாம் துறந்து. நல்ல கவிதை மீரா. உணவுக்காக உறவுகளை...
அல்லி ராணியா? இல்ல அசத்தல் ராணியா?
கலக்கிட்டீங்க.
ஒரு மாதிரியான கவிதை என்றுதான் நினைத்தேன. உண்மையிலேயே கவிதைக்கு மாதிரியாய் அமைந்து விட்டது. படம் இன்னும் பிரமாதம். வாழ்த்துக்கள ரவி.
படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஏதோ ஒரு தங்களுக்கு முன்னான மரணத்தை அசை போட்டிருப்பார்கள். நல்ல கவிதை சசி.
பாராட்டுக்கு மிக்க நன்றி உமா.
பத்து வரியில் முத்தான கவிதை சென். மிக்க நன்றி.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கௌதமன்.
ஆடைகள் வழியாய் மீய்ந்து கிடந்த
சொட்டு வெட்கத்தையும் உரித்தாடி
ஆதவன் மாண்டொழிந்தான் கடலுக்குள்
விரசமுற்ற அம்மண நீட்சிகள் மெதுவாய் படர்ந்தன
அம்மண ஒளிக்கற்றைகளை ஓடவிட்டபடி
வீடுகளில் அம்மணமாய்...
கவிதைக்கு அவசியமே இல்லை. கவிதைக்கு மேலான படமே ஆயிரம் கவிதை பகரும். வாழ்த்துக்கள் மலர் மகள்.
கௌதம் சொன்னது சரியே. அழுகை தோல்வியல்ல. பயிரை வளர்க்கும் நீர் போல் உணர்வுகளை அழுகை முறுக்கேற்றும். கவிதைக்கு வாழ்த்துக்கள் கீதம்.
நீண்டதொரு மெல்லிய படர் பனியின்
அதிகாலை செஞ்சூரியக் கீற்றுகளின் வழியே
மெல்ல விசை கூட்டும் பெருவியாதிக்கார முனகலாய்
ஈரங்களற்ற வெற்றுக் காற்றாய் என் விசும்பல்கள்
இன்றும் எவரைச் சேர்ந்திருக்கவும்...
இன்றும் அதே சிந்தனைகள் இன்னுமொரு ஆடை பூண்டு
பூதாகரமாய் உருவெடுக்கும்
உங்கள் மீதான தூற்றங்களை
அள்ளிக் கூட்டி விசிறிக் கடாசப்பட்ட
புணர் ஜென்ம ஊழ் வினைகளை
மீண்டும் தட்டியெடுத்து வெள்ளையடிக்கும்...
உங்களைப் போன்றவர்களின் தோழமையால்தான் கற்க ஆரம்பித்திருக்கிறேன் அகத்தியா! இன்னும் நன்றாய் தேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
அடித்தலில்தான் தங்கம் ஜொலிக்கிறது. அறுத்தலில்தான் வைரம் பளபளக்கிறது. பிணியும் பாடமென்றுரைக்கும் நல்ல கவிதை தோழரே. இது போன்ற கவிதை மன்றத்தில் வெகுவாக குறைந்து விட்டதென்று நினைக்கிறேன். குறையை...
இன்று இணையத்தில் படித்த கவிதைகளில் இதுதான் சிறந்த கவிதை என நினைக்கிறேன். பாராட்டுக்கள் அகத்தியா.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா. சிலரின் பின்னூட்டத்திற்காகவே கவிதை எழுத தோன்றும். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் சொன்ன kk எனக்கு விளங்கவில்லை. நான் ஈழ வரலாற்றைத்தான் எழுத...