அவன் கூற விழைந்திருந்தான்
இதயமிடறிய இடர்பாடொன்றை
உட்புகுந்து உடலறுக்கும்
உள்ளங்கள் ஒவ்வாததை
பார்த்ததும் பளிச்சென்பதைப்போல்
எவருமெளிதில் கண்டுகொள்ளவியலாததை
தலையிலமர்ந்து தன் புத்திக்குப் பதிலாய்
தானாய் தனித்தியங்குமதை
முற்றிலுமாய் கூறிவிடுவதென்று
பிரணாயாமும் ஏற்றான்
அவன் அறிந்திருந்தான்
அவ்வார்த்தையின் செயல்பாடுகளை
இன்னும் உணர்ந்திருந்தான்
அதன் மூலத்திய விளைவுகளை
கூறியும் முடித்திருந்தான்
எப்பொழுதுமாய் இயங்கியது உலகம்
நேற்றையைப் போலும்
அதற்கு முந்தைய நாட்களைப் போலும்
இன்னும் பிரகாசமாய்..
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
Bookmarks