எனது வீட்டு முருங்கை மரத்தில் காக்கைக் கூட்டில் காக்கைக் குஞ்சொன்று இறந்து கிடந்தது. அதைவைத்து எழுதியிருக்கிறேன் இக்கவிதை. உங்களை கொஞ்சம் குழப்பிவிட்டேனோவென தோன்றுகிறது.
எனது வீட்டு முருங்கை மரத்தில் காக்கைக் கூட்டில் காக்கைக் குஞ்சொன்று இறந்து கிடந்தது. அதைவைத்து எழுதியிருக்கிறேன் இக்கவிதை. உங்களை கொஞ்சம் குழப்பிவிட்டேனோவென தோன்றுகிறது.
விஜய் உங்கள் கவிதைகள் அனைத்தும் எளிமையான தோற்றத்தில் ஆழ்ந்தசெறிவுடனும் பொலிவுடன் விளங்குகின்றன..!! தொடர்ந்து எழுத எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!!
ஆமாம்... விஜய் படத்தால ரொம்ப பாதிக்கபட்டிருப்பீங்க போலிருக்கே... இல்லை பெயர் வித்தியாசமா இருக்கேன்னு சொன்னேன்..!!
ஒரு சின்ன வேண்டுகோள்.. அறிமுகதிரியில் தங்களை அறிமுகபடுத்திக்கொண்டு தொடரலாமே..?!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நண்பரே உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.
தமிழகத்தில் விஜய்படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே?
அறிமுகத்திரியில் எப்படி அறிமுகப்படுத்துவது?
உங்கள் அன்புக்கு நன்றி.
சிதறிக்கிடக்கிறது நிலவுகள்
நக்கிக் குடிக்கிறது தவளை
வானம் வலுக்கிறது.
Last edited by veruppuvijay; 04-10-2012 at 11:28 AM.
நண்பரே... இங்கே சென்று பார்த்துவிட்டு தங்கள் அறிமுகத்தை தாருங்கள்..!!அறிமுகத்திரியில் எப்படி அறிமுகப்படுத்துவது?
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நன்றி நண்பரே
ஒரு காதல் கவிதை எழுதவேண்டி
மதமதவென வளர்ந்து பெருத்த ராட்ஷஷியின்
கண்ணுருண்டையுள் முத்தமிடுகிறேன்
ஆழியின் பெருஞ்சுழியென உன்
உந்திச்சுழி உள்ளதென காதுமடல்களில் ஓதிப்பார்க்கிறேன்
அடர்ந்து கருத்த வனமுலையாள் நீ
தொலைந்துவிடுவேனென சிலிர்த்துக் காட்டுகிறேன்
நீண்டு படுத்துயலும் மலைமுகடு உன்
சுயரூபத்தில் தெரிகுதடி என்றே ஆடிக்காண்பிக்கிறேன்
பூதனையின் மேல் குழந்தை ஊர்தல்போல
மேற்சென்று மெல்ல அவளிடம் இழக்கிறேன்
மேலும்
ஒரு காதல் கவிதை எழுதவேண்டி
அவள் கழுத்தை நெறிக்கிறேன்.
குளம்பியினுள் சக்கரைக் கனத்தை
கரையக்கொடுத்த பொழுதிலிருந்து
இக்கவிதை துவங்குகிறது.
spoonனின் சுழற்சியில்
சொற்களெல்லாம் உதிர்ந்து
கோப்பைக்குள் விழுந்துவிட்டன.
அல்லது தற்கொலை செய்துகொண்டன
கருத்த குளம்பி நீரினுள்ளில்
சொற்கள் ஏது சக்கரைக்கனம் ஏது
பருகக் காத்திருக்கிறது கோப்பை
முடியுதிர்ந்துவிட்ட மரங்களைப் போலவே
வஸந்தம் பார்த்து நின்றுகொண்டிருக்கிறது நான்
கசப்பை உணர்ந்துவிட்ட தருணத்தில்
உதடுகள் சுழிக்கின்றன
முடித்துவிட்டு எழுந்து நிற்கிறேன்
இக்கவிதை முடியும் தருவாயில்
எனக்கு கைகளில் நீரள்ளிக்கொடுத்தார்
சுகுமாரன்
வலிந்து எழுதப்படும் ஒரு கவிதையில்
சில சொற்கள் மட்டுமே தோன்றுகின்றன
சில படிமங்கள் தொடர்ந்து வருகின்றன
எத்தனை யோசித்தாலும்
உன் பெருவெளியை அடையமுடிவதில்லை
ஒரு கிணற்றுக்குள் அமர்ந்து கொண்டு
கவிதை எழுதுதல் போலும்
தவளையின் வாயில் தலைவிட்டு
கத்துகிறேன்.
தீரத்தீரத் தீராத சொற்கமண்டலம்
மாயமாக இருக்கிறது
அருகே நீயிருக்கிறாய்
கண்களில் கனன்று எரியும் தணலை
உன் எச்சிலில் துடைத்தெறிந்துவிட்டு
வாழ்வின் தீராத சுவையொன்றை
வலிந்து காட்டுகிறாய்
சுற்றியெழுப்பப்பட்ட பெருந்திரையினில்
தோன்றி விழுகின்றன
எண்ணற்ற கவிதைகள்
தொடங்கிய இடத்தினில் சேர்தல்
முடிந்த இடத்தினில் துவங்கல்
பிரபஞ்ச முயக்கம்
உதிர்ந்து விழும் சொற்கள்
நாணிச்சிவக்கிறது முகம்
அந்திமழை
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks