Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 51 of 51

Thread: வெறுப்பு விஜய் கவிதைகள்

                  
   
   
  1. #49
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by veruppuvijay View Post
    கனச்சதுரமாய் விழுந்து
    கிடக்கிறாள் பெண்
    போராடும் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில்
    முதுகுப்புறத்தினோரமாய்
    கத்தியிலாலான பேனாவொன்றில்
    கவிதை கிழிக்கப்படுகிறது
    காகிதம் - சதுரம்....

    கனச்சதுரம் - நோட்டுப்புத்தகம்?

    கனச்சதுரத்தை பெண்ணென்று உருவகப்படுத்தியபின் கத்தியை பேனாவென்று குறிப்பிடவும் வேண்டுமோ?

    கத்தியால் கிழிக்கப்படுகிறது ஒரு கவிதை - இது போதுமே.

    Quote Originally Posted by veruppuvijay View Post


    பெண்ணை வதைப்பது மிகவும் பிடித்தமாயிருக்கிறது
    ஒரு ஆணுக்கு
    அவளுக்கோ மயிற்பீலியின் சுரண்டல்
    (என எழுதச் சொன்னார்கள்)
    அடைப்புக்குறிக்குள் இருப்பது நச்.

    Quote Originally Posted by veruppuvijay View Post
    மொழிக்குப் புதிதான குறியீட்டில் கூக்குரலிட்டு
    வன்புணர்ந்து தள்ளிய அவளின் இறவாபிணத்தை
    துண்டாக்கப்பட்ட மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
    ஒரு கவிதை
    மென்மையாக அல்லது
    மிக மிகக் கொடுமையாக.
    இறவாபிணம் - புதிய சொல்லாடல்

    மென்மையாகவோ வன்மையாகவோ... வாசிக்கக் கிடைத்துவிடுகிறது ஒரு அற்புதமான கவிதை.

    அபாரம். பாராட்டுகள்.

  2. #50
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by veruppuvijay View Post
    முன்குறிப்பு

    இது
    திருமணமாகாத
    திருமணத்திற்கே வழியில்லாத
    எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
    நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
    இருக்கும் ஒருவனின் கவிதை
    சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு
    ஏற்படும் சங்கடங்களையும்
    அசெளகரியங்களையும்
    காழ்ப்புணர்ச்சிகளையும்
    (அப்படி ஏதுமில்லை என்றாலும் கற்பனையாகவேனும்)
    இக்கவிதையில் நாம் காணப்போகிறோம்.
    கவிதை படித்த ஒவ்வொருவரின் மனதிலும்
    பிரம்மச்சரியம் கொடுமையானது என்பதை
    உணர்த்தும் விதமாக வார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
    கவிதையை பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது
    கவிஞரின் எண்ணம் - (ஆண்கள் தவிர்த்துவிடலாம்)
    இதன் எதிர்வினைகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்
    யாரையும் குறிப்பிட்டு சொன்னதாக இருக்காது,
    இதற்கு முன்பு இம்மாதிரியொன்றை
    எங்கும் நீங்கள் படித்திருக்க முடியாது
    நீங்கள் பெற்றோராகவோ
    சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவோ இருக்கும்பட்சத்தில்
    கனத்த இதயத்துடன் கவிதையைப் படிக்கவும்.

    பின்குறிப்பு :

    மிக முக்கியமான விஷயம்
    இக்கவிதை ஆரம்பிக்கபடாமலேயே
    முடிந்துவிடலாம்.
    பின்குறிப்பை முன்குறிப்புக்கு முன்னால் வாசிப்பவர்கள் முன்குறிப்பை அலட்சியம் செய்துகடக்கும் சாத்தியம் உண்டு.

    ஆழ்ந்து வாசித்தால் புலப்படும் வாய்ப்பு உண்டு முன்குறிப்புக்கும் பின்குறிப்புக்கும் இடையில் அரூபமாய் அடங்கிக்கிடக்கும் ஆதங்கக்கவிதையொன்று.

    பாராட்டுகள் வெறுப்பு விஜய்.

  3. #51
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post

    மென்மையாகவோ வன்மையாகவோ... வாசிக்கக் கிடைத்துவிடுகிறது ஒரு அற்புதமான கவிதை.

    அபாரம். பாராட்டுகள்.
    மிக்க நன்றி கீதம் அவர்களுக்கு.

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •