நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.
சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மரண தண்டனையாக உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று.
எத்துனை முறை, நீ என்னை நிராக*ரித்தாலும்,
ஓயாது என் காதல்,
கரை தொடும் அலை போல.
உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.
ஊடல் இல்லா காதலும்
கூடல் இல்லா காதலும் காதலன்று,
நமக்கும் இது விதிவிலக்கன்று.
அன்புடன்,
சங்கர்.
Bookmarks