லொள்ளுவாத்தியார் கவிஞரா?இந்த கேள்விக்கு பதில் நானே கூறுகிறேன்
இதுவரை சத்தியமாக இல்லை
இதுவரை எனக்கு கவிதை என்பது ஏணி வைத்தாலும் எட்டாது
யாரோ எழுதிய கவிதையையே கூட ஒழுங்காக எனக்கு புரிந்து படிக்க தெரியாது
எழுத்து பிழை என் உடன் பிறவா சகோதரன்
இலக்கணப் பிழை எனக்குப் பிறந்த தலை மகன்
என்னைப் பத்தி ஒரு நகைச்சுவை உண்டு
நான் என் மனைவிக்கு காதல் கவிதை எழுதினா
அடுத்த நாள் அவ எழுதுவா டைவர்ஸ் கடிதம்
எதையோ கிறுக்கி அதை கவிதை
பகுதியில் பதித்து நானும் கவிஞன்
என்று என்னை அறிமுக படுத்தினால்
அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல
இந்த உலகில், உண்மையில் பல கவிகள்
இருக்க, இவர்கள் மத்தியில் நானும் அறிமுகத்திலாவது
வர ஒரு ஆசையினால் என்னை அறிமுகப்படுத்தி விட்டேன்.
மன்னிக்க முடியாத ஒரு குற்றம்தான்
இங்கு உள்ள கவிகள் அவர்கள் படைத்த கவிதைகளின்
சுட்டியை தந்திருகிறார்கள்
ஐயா நான் அப்படி சுட்டிகள் தர முடியுமா என்று எனக்கே தெரியவில்லை
ஒரு முறை ஆதவா தன்னம்பிக்கையோடு கவிதை எழுது என்று சொன்னார்
எதுக்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று
வந்து விட்டேன் முந்திரி கொட்டை போல.
ஒரு நாள் பாரதி கண்ட அக்னி குஞ்சாய் வருவேன் என்று
பகல் கணவு கானும் ஒரு மானிட குஞ்சு நான்
நல்ல படமாக இருந்தாலும் இடைவேளை வேண்டுமல்லவா டீ சாப்பிட?
தித்திக்கும் கவிதைகள் பல இருக்கும் இந்த பகுதியில்
இடைவேளையில் நான் ஏதாவது கவிதை படைந்திருந்தால்
படித்து என்னை தூக்கி விடவும்.
கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்களாம்.
நானும் ஒரு கவிஞன் என்று பொய் சொல்லி இருகிறேன்.
கவிதை இந்த ஒரு தகுதி போதாதா?
நன்றி
ஏதோ என்னால் முடிந்த சில கவிதை பயிற்ச்சிகள்
காதலித்தால்
லொள்ளு வாத்தியார் அவசர அட்வைஸ்
காலை எழுந்தவுடன்
ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட
லொள்ளுவாத்தியார் சிலையாய் நின்றார்
டன்டனக்கா
என் மனைவி காதலிகிறாள்
சுத்தி சித்தி அடிவாங்க
வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ
அழுதாய் வாழி காவேரி
Bookmarks