Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: லொள்ளுவாத்தியார் கவிஞரா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    லொள்ளுவாத்தியார் கவிஞரா?

    லொள்ளுவாத்தியார் கவிஞரா?
    இந்த கேள்விக்கு பதில் நானே கூறுகிறேன்
    இதுவரை சத்தியமாக இல்லை

    இதுவரை எனக்கு கவிதை என்பது ஏணி வைத்தாலும் எட்டாது

    யாரோ எழுதிய கவிதையையே கூட ஒழுங்காக எனக்கு புரிந்து படிக்க தெரியாது
    எழுத்து பிழை என் உடன் பிறவா சகோதரன்
    இலக்கணப் பிழை எனக்குப் பிறந்த தலை மகன்

    என்னைப் பத்தி ஒரு நகைச்சுவை உண்டு
    நான் என் மனைவிக்கு காதல் கவிதை எழுதினா
    அடுத்த நாள் அவ எழுதுவா டைவர்ஸ் கடிதம்


    எதையோ கிறுக்கி அதை கவிதை
    பகுதியில் பதித்து நானும் கவிஞன்
    என்று என்னை அறிமுக படுத்தினால்
    அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல

    இந்த உலகில், உண்மையில் பல கவிகள்
    இருக்க, இவர்கள் மத்தியில் நானும் அறிமுகத்திலாவது
    வர ஒரு ஆசையினால் என்னை அறிமுகப்படுத்தி விட்டேன்.
    மன்னிக்க முடியாத ஒரு குற்றம்தான்


    இங்கு உள்ள கவிகள் அவர்கள் படைத்த கவிதைகளின்
    சுட்டியை தந்திருகிறார்கள்

    ஐயா நான் அப்படி சுட்டிகள் தர முடியுமா என்று எனக்கே தெரியவில்லை
    ஒரு முறை ஆதவா தன்னம்பிக்கையோடு கவிதை எழுது என்று சொன்னார்

    எதுக்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று
    வந்து விட்டேன் முந்திரி கொட்டை போல.

    ஒரு நாள் பாரதி கண்ட அக்னி குஞ்சாய் வருவேன் என்று
    பகல் கணவு கானும் ஒரு மானிட குஞ்சு நான்

    நல்ல படமாக இருந்தாலும் இடைவேளை வேண்டுமல்லவா டீ சாப்பிட?

    தித்திக்கும் கவிதைகள் பல இருக்கும் இந்த பகுதியில்
    இடைவேளையில் நான் ஏதாவது கவிதை படைந்திருந்தால்
    படித்து என்னை தூக்கி விடவும்.

    கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்களாம்.
    நானும் ஒரு கவிஞன் என்று பொய் சொல்லி இருகிறேன்.
    கவிதை இந்த ஒரு தகுதி போதாதா?

    நன்றி


    ஏதோ என்னால் முடிந்த சில கவிதை பயிற்ச்சிகள்
    காதலித்தால்
    லொள்ளு வாத்தியார் அவசர அட்வைஸ்
    காலை எழுந்தவுடன்
    ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட
    லொள்ளுவாத்தியார் சிலையாய் நின்றார்
    டன்டனக்கா
    என் மனைவி காதலிகிறாள்
    சுத்தி சித்தி அடிவாங்க
    வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ
    அழுதாய் வாழி காவேரி
    Last edited by lolluvathiyar; 24-07-2007 at 03:48 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    தருமியே சற்று பொறுங்கள், நக்கீரர் யாராவது வந்து பதில் தருவர்.

    பார்க்க கவிதை மாதிரி இருக்கு, படித்துப்பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது.

    விமர்சனத்தில் பொய் இருக்கலாமா கவியே?
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    ஆஹா கவியே அழகான திரியை ஆரம்பித்துள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    வாழ்த்துகள் வாத்தியாரே. தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாத்தியாரே! அறிமுகம் ரசிக்கும்படியாய் இருந்தது....

    மறுபடியும் சொல்கிறேன்...

    கவிதை ஒன்று எழுதிடும்வரை, யாருக்குமே தான் கவிஞன் என்று தெரிந்திடாது...

    உங்களிடம் கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருக்கிறது... கொஞ்சம் தனிமை, நிறைய கற்பனை.. கிடைக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்.. கவிதை பிறப்பு தள்ளிப்போகாது....

    வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    விரைவில் கவிதைக்கும் வாத்தியாராக வாழ்த்துக்கள் நண்பரே..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நானும் நீங்களும் ஒன்றுதான் நாம் இந்த குறைகுடத்துடன் இருக்க
    மன்றத்தில் நிரைகுடமாக மாருவோம்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    வாழ்த்துக்கள் வாத்தியார்...
    ஒன்று கூறுகிறேன்...
    கிறுக்கல்கள்தான் அழகான கவிதைகளுக்கு அத்திவாரமிடும்..
    ஏனெனில் கிறுக்கல்கள் ஆம் மனதின் பாஷைகள்...
    முதலில் தாழ்வு எண்ணங்களை தூர எறிந்து உங்களை முதன்மையாக எண்ணிக்கொண்டு காரியத்தில் இறங்குங்கள்...
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    நானும் லொள்ளுவாத்தியாரும்

    எழுதிய இரு கவிதைகளும் யதார்த்தம் மிக்கதாய்... அழகான படைப்புகள்.. ஆழ்மனதில் உறங்கும் கவிஞனை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்... வாத்தியாரய்யா.... இன்னும் நிறைய எழுதவேண்டும்.. கவிதைகள் என்பது ஒரு பூ பூப்பது போல.... உடனே நிகழாது... மெதுவாகத்தான் விரியும்... பின் அது கொண்டையில் ஏறுவதும் வீணே போவதும் வேறு.... உம் கவிதைகள் கருகிவிடா பூக்கள்... எழுதுங்கள் நிறைய
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
    புலவர் பெருமானே
    என்றார் கவிஞர்

    ஆண் பெண்ணிலே பிறக்கிறான்
    பெண்மடியில் வளர்கிறான்
    அப்படியானால்
    பெண் என்றால் பொய்யா??

    அதனால் தான்
    பெண்களை
    அழகான கவிதை என்கிறார்களோ???
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    லொள்ளுவாத்தியாரின் கவிதைகள்...
    நகைச்சுவையில் மனதை மகிழ்வூட்டி, அதனுள் ஒரு அழகிய செய்தியை எமக்குத் தருகிறது. வாத்தியார் கவிஞரா? கேள்வியே வேண்டாம். கவிஞர்தான். மனதை திறந்து இன்னும் பல படைப்புக்களைத் தந்தால், சிரித்துக்கொண்டே சிந்திப்போம். மேலும் வளர வாழ்த்துக்கள்....

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by asho View Post
    தருமியே சற்று பொறுங்கள்
    எப்படிங்க அந்த உன்மைய கண்டு பிடிச்சீங்க, (சத்தமா சொல்லாதீங்க)
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •