தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு...
தமிழ் தந்தது என் வார்த்தைக்கு துளிர்ப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் உணர்வுக்கு மதிப்பு...
தமிழ் தந்தது என் மனதுக்கு கவிதை..,
தமிழ்மன்றம் தருவது என் கவிதைக்கு அரங்கை...
இது எனது நூறாவது பதிப்பு..!
இப்பொழுதே..,
நூறாண்டு வாழ்ந்த உணர்வு...
முழுமையாய்.., நிறைவாய்..!
ஆயிரம் பல தாண்டியும் அடக்கமாய், பலர் இருக்க,
எனக்கு முதல் அடி என்பதால், சிகரமாய் தெரிகிறது...
எனக்கும் மன்றத்தில் கவிஞனாய் வாழ ஆசை... அதனாலேயே நான் இங்கே பதிந்துகொள்கின்றேன்...
இப்போதைக்கு இல்லாவிட்டாலும், மன்ற கவிஞர்களின் உந்துதலில், எப்போதாவது ஒருநாளேனும் கவிஞன் என்ற நிலைக்கு உயர்வேன் என்கின்ற நம்பிக்கை...
அதுவே, இங்கே பதிந்துகொள்ளும் என் துணிவு...
மன்றிலே சில குறும்படைப்புக்களைப் (கவிதைகள்...???) பதித்துவிட்டேன். கவிகள் கண்நோக்க வேண்டும். எனக்கு வழிகாட்ட வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
இன்றைய சில படைப்புக்கள், நாளைய பல கவிதைகளாய் மாற, என் சிந்தைக்குச் சிறகுபூட்ட வேண்டும். சிறகடித்துப் பறக்க, கற்றுத் தரவேண்டும்.
இது, இந்தச் சிறியவனின் பெரிய வேண்டுதல்...
உங்களது தூண்டுதல்களும், விமர்சனங்களுமே எனது அங்கீகாரம்...
எனது எழுத்துக்களிலிருந்து.., (பதிவுகள் இங்கே புதுப்பிக்கப்படும்)
மென்மை..!
இன்றைய காதல் ஸ்பெஷல்..!
காபனீரொட்சைட்...
இது அழகான நினைவல்ல..!
மரணத்தை வென்ற காவியநாயகர்..!
நினைப்பும்.., துடிப்பும்...
இனியும் எனக்கு வலுவில்லை..!
பசுமை நாடிய பயணங்கள்..!
பெருமூச்சு..!
இதுதான் தலைவிதியா..?
வெடிப்பு..!
லஞ்சம் என்றால்...
ஜாதி..!
கருமையில் பிறந்த புதுமை...
காத்திருப்பு..!
எனக்குள் ?? ...
அக்னித் துளிகள்..!
தமிழ் தேடி... தமிழ்மன்றம் நாடி..!
Bookmarks