நீயில்லா நெடுஞ்சாலை
நான் மட்டும் தனியாக
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு
வளையல் சத்தம்
கொலுசின் ஓசை
சிரிப்பொலிகள்
என் உயிர்த்துடிப்பாய்
எது வாழ்க்கையென்று
அறியாமல் ஏகாந்தமாய்வாழ்ந்தவன் - நான்
இன்று எங்கே என் வாழ்க்கை என்று
தேடுகின்றேன்
தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை
உன் வாழ்க்கையெனும்
மலர்ச்சோலை
வாழ்ந்துவிட்டுப் போனவன்
நான்
திரும்பவந்து
பார்க்கின்றேன்
சோலையதை காணவில்லை
பேதையவள் எங்கும் இல்லை
உயிரின் வலிஅறியவில்லை
உறங்குகின்றேன் காதலியே
உன் நினைவோடு
Bookmarks