Results 1 to 8 of 8

Thread: உன் நினைவோடு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0

    Smile உன் நினைவோடு


    நீயில்லா நெடுஞ்சாலை
    நான் மட்டும் தனியாக
    எப்போதோ தொலைத்த ஒன்றை
    தேடிக்கொண்டு

    வளையல் சத்தம்
    கொலுசின் ஓசை
    சிரிப்பொலிகள்
    என் உயிர்த்துடிப்பாய்

    எது வாழ்க்கையென்று
    அறியாமல் ஏகாந்தமாய்வாழ்ந்தவன் - நான்
    இன்று எங்கே என் வாழ்க்கை என்று
    தேடுகின்றேன்

    தேடித்தேடி
    அலைகின்றேன்
    தேடியது கிட்டவில்லை
    கிட்டியது தேவையில்லை

    உன் வாழ்க்கையெனும்
    மலர்ச்சோலை
    வாழ்ந்துவிட்டுப் போனவன்
    நான்

    திரும்பவந்து
    பார்க்கின்றேன்
    சோலையதை காணவில்லை
    பேதையவள் எங்கும் இல்லை

    உயிரின் வலிஅறியவில்லை
    உறங்குகின்றேன் காதலியே
    உன் நினைவோடு
    Last edited by சக்தி; 02-05-2007 at 04:30 AM.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ம்...
    உணர்வுகள்.. மனதின் ஆழமான வடுக்கள்.. என்றும் ஆற்றப்பட முடியாதவை.. பிரிவு.. காதலை சில வேளைகளில் மழுங்கடித்துவிடும்.. (உண்மைக் காதலுக்கல்ல)

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by rojainraja View Post

    தேடித்தேடி
    அலைகின்றேன்
    தேடியது கிட்டவில்லை
    கிட்டியது தேவையில்லை
    அருமையான வரிகள் ரோஜா!

    ரசித்தேன்,உங்கள் வரிகளை வியந்தேன்
    வலியையும் ரசனையோடு சொல்லும் உங்கள் பாங்கு அருமை.
    வாழ்த்துக்கள் ரோஜா!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by rojainraja View Post
    வளையல் சத்தம்
    கொலுசின் ஓசை
    சிரிப்பொலிகள்
    என் உயிர்த்துடிப்பாய்
    இதயம் விரைவாக துடிக்கவைக்கும் உலிகளவை.
    யாரிதையம் தான் துடிக்காதிருக்கும்.
    Quote Originally Posted by rojainraja View Post
    உயிரின் வலிஅறியவில்லை
    உறங்குகின்றேன் காதலியே
    உன் நினைவோடு
    நானும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் என்னவளின் முகம் காண.
    அருமையான வரிகள். நன்றி ரோஜா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    நன்றிகள் பலகோடி என் நண்பர்களே,
    உங்களின் விமர்சனங்கள் என்னை
    என்றென்றும் உயிர்பித்திருக்கும்.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தமிழை அழகாக கவிதைக்குல் அடக்கி இருகின்றீர்கள்.

    கவிதை நன்று...
    பாராட்டுக்கள்.

    சோகம் சுகமாமே!!! யாரோ சோகம் என்றால் என்ன என்று அறியாமல் சொல்லியவை அவை......



    கொசுரு:
    காதல் தோழ்வி என்றால் இப்படிதான் கவிதை வருமா????????
    ... ... .அச்சோ............பத்திக்கிட்டு வருதே
    Last edited by ஓவியா; 02-05-2007 at 01:44 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நீயில்லா நெடுஞ்சாலை என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்......

    என்றோ அவனும், அவளும் நடந்து சென்ற பாதையில் அவன் மட்டும் இன்று நடந்துசெல்கிறான், அவனோடு இன்று அவள் இல்லை... ஆனால், அவளின் சிரிப்பு சத்தமும், கொலுசின் ஒலிகளும், சிரிப்பின் ஒலிகளும், இன்று அவனுக்கு கேட்கிறது..

    காதலால் உண்டான மன வலிகள், கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றது நண்பரே! வாழ்த்துக்கள்!
    Last edited by ஷீ-நிசி; 02-05-2007 at 05:25 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    மாற்றிவிட்டேன் நண்பரே.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •