இன்று கிரெக் சாப்பல் இந்திய கோச்சிங் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அடுத்த கோச் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.
என்னுடைய கணிப்பு, கீழே குறிப்பிட்டவர்களில் ஒருவராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சந்தீப் பட்டீல்
மொகீந்தர் அமர்நாத்
சுனில் கவாஸ்கர்
இதில் சந்தீப் பட்டீலுக்கும், சுனில் கவாஸ்கருக்கும் சான்ஸ் இருக்கிறது. காரணம் இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சரத் பவார் மகாராஷ்டிரா காரர். அது தவிற தேர்வுக்குழுவின் தலைவர் திலீப் வெங்சர்காரும் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர். அதுதவிற சச்சின் டெண்டுல்கர் காப்டனாக அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அவரும் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர். ஆகையால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட இது உதவும் ஐ ன்று நினைக்கலாம்.
மேலே கூறியது அனைத்துமே இந்த இருவருக்கும் எதிராகவும் அமையக்கூடும். ஆகையால் மொகீந்தர் அமர்நாத்திற்கு இந்த பதவி கிடைக்கக்கூடும். அது தவிற மொகீந்தர் அமர்நாத் இந்த பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பத்திருந்தார். அவருக்கு கொடுக்காமல் கிரெக் சாப்பலுக்கு இந்த வாய்ப்பை கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் சேர்ந்து கொடுத்தார்கள். ஆகையால் இந்த முறை இவருக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம்.
டார்க் ஹார்ஸாக அன்சுமன் கைக்வாய்டு இந்த சான்ஸில் வெற்றி பெற்றாலும் பெறக்கூடும்.
உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
Bookmarks