தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.
ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.
ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபநை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.
பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி த்ன்டனைக்காக ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிந்தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.
அவ்வளவுதான் கதை முடிந்தது. இதில் என்ன இருகின்றது என்கிறீர்களா, சிலர் இந்த கதையை ஏற்க்கனவே படித்திருக்கலாம், மற்றவர்களுக்காக இது.
1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்?
2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?
யோசித்து பாருங்கள், இரன்டு நாளில் விடை சொல்லுகின்றேன். சரியாக கன்டு பிடித்தவர்களுக்கு நன்பர் manojoalex அவர்களிடம் தமிழ்கணபுலி பட்டத்துக்கு சிபாரிசு செய்கின்றேன்.
Bookmarks