Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: ஆறா ரணம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    ஆறா ரணம்

    முற்களைத் தாண்டித்தான்
    உன்னைக் கண்டேன்.
    கொன்று போட்டிடும்
    அந்த வேள் விழியால்
    அன்றே கொன்றிருக்கலாம்
    இன்று சித்ரவதைப் படும் என்னை.


    குருதியால் ஏற்பட்ட
    ரணத்தை விட
    குருட்டுக் காதலில் ஏற்பட்ட
    ரணங்களின் வடுக்கள்

    ஆறத் துடிக்கவில்லை
    இன்னும்.

    என்னுள் கொப்பளிக்கும்
    ரத்தங்கள் உன்னையே
    நினைப்பதாலோ என்னவோ
    சூடேறிவிடுகிறது.
    தணிக்கத்தான் ஒருமுறை
    நீ காண்வாய் என்னை..
    தன்னை மறந்து
    தணிக்கவும் மறந்து
    ஓட்டங்களை நிறுத்திவிட்டு
    எட்டிப் பார்க்கிறது இத்திரவம்.


    கூந்தலில் ஏறிய என்னை,
    மாலையில் பூக்களை
    மதிக்காமல்
    மிதிப்பதுபோல
    கிடத்திவிட்டாய்..
    நறுமணத்தை இழந்து
    ஒரு சாக்கடைக்குள் தவிக்கிறேன்
    பூ என்ற குணத்தோடு மட்டும்.


    அள்ளிக்கொண்ட
    அனைத்து நீரையும்
    பருகிவிட முடியாது.
    உன் உதடு பட்ட நீராக
    நான் இருக்கையில்
    உன் கைவிரல் இடுக்குகளில்
    தொலைந்து போகிறேன்.


    என் கதிர்களின் வீச்சை
    தடுத்து விட்ட பிறகு
    என்னடி உனக்கு இன்னும் பார்வை?
    என்றாவது நின்றுபோன கதிர்களுக்கு
    நீ வருத்தப்படுவாய்..
    அன்று நான் மேகத்திலிருந்து
    உன்னைக் கண்டு
    அழுவதா, சிரிப்பதா என்று
    யோசிப்பேன்..


    விழிகளில் அடக்கிக்கொண்ட
    உன் மனதினை
    ஒரு முறையாவது காட்டு.
    உன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.


    தொடரும் இந்த புலம்பல்கள்.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஆதவா View Post
    விழிகளில் அடக்கிக்கொண்ட
    உன் மனதினை
    ஒரு முறையாவது காட்டு.
    உன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.

    தொடரும் இந்த புலம்பல்கள்.....
    காதலித்ததின் விளைவு
    ஒரு புலம்பல் படலம்.....

    ஒரு ஜென்மத்தை பிழைக்கவிட
    மனதினை காட்டுவாரா.. காதலி...

    தொடருங்கள் ஆதவா..

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் நன்றி அறிஞரே!
    காதல் ஒரு ஜென்மக்கோளாறு. பிறவி எடுக்க முடியா ஊனம் தோல்வியில் அடங்கியிருக்கிறது. எடுக்கப்பட்ட பிறவியும் ரணத்தை அனுபவிக்காமல் இல்லை....
    காதலின்றி உலகில்லை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    முதல் சந்திப்பே பல இன்னல்களின் மத்தியில் ஆரம்பித்ததாய் கூறுகிறது கவிதையின் முதல் வரி....

    முற்களைத் தாண்டித்தான்
    உன்னைக் கண்டேன்.


    காதல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலே ஏற்படும் குருட்டுக்காதல்கள் தான் நாட்டில் அதிகம்...

    பூக்களின் நிலை, காலையில் தலையில், மாலையில் காலில்...
    அந்நிலையில் தான் இக்காதலன்....

    அள்ளிக்கொண்ட
    அனைத்து நீரையும்
    பருகிவிட முடியாது.
    உன் உதடு பட்ட நீராக
    நான் இருக்கையில்
    உன் கைவிரல் இடுக்குகளில்
    தொலைந்து போகிறேன்.


    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... எனக்கு புரிந்தவரையில்...

    ஒரு சின்ன செயல் நடக்கிறது..
    உதட்டின் மேல் ஒட்டி இருக்கின்றது நீர்த்துளிகள்.
    அந்த நீரை கைகளினால் அவள் துடைத்துவிடுகிறாள்.. அந்த நீர் பின் காணாமலே போகிறது..

    அந்த நீரின் நிலையில் காதலன், உதடுவரை வந்த அவனால் உள்செல்லமுடியவில்லை.. நிராகரிப்பில் சிக்கி கைவிரலின் இடுக்கில் ஆவியானான்...


    என் கதிர்களின் வீச்சை
    தடுத்து விட்ட பிறகு
    என்னடி உனக்கு இன்னும் பார்வை?
    என்றாவது நின்றுபோன கதிர்களுக்கு
    நீ வருத்தப்படுவாய்..
    அன்று நான் மேகத்திலிருந்து
    உன்னைக் கண்டு
    அழுவதா, சிரிப்பதா என்று
    யோசிப்பேன்..


    நிராகரித்தாகிவிட்டது... அவ்வப்போது பல பயணங்களில் நாம் சந்திக்க நேர்கிறது.. நம் பார்வைகள் பார்த்துக்கொள்கிறது.. வார்த்தைகளில்லை.. என்றைக்காகிலும் ஒரு நாள் இவனை நாம் இழந்துவிட்டோமே என்று வருத்தபடுவாய்.. அன்றைக்கு நான் உன்னைக் கண்டு சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் எல்லாம் விதி என்று இயற்கையின் மேல் பழி போட்டு விழுந்து கிடப்பேன்..நீயும் என்னைப் போலவே..

    90% காதலர்களும் ஏதேனும் ஒரு காலத்தில் இந்த வட்டத்துக்குள் அடங்குவர் ஆதவா...

    வாழ்த்துக்கள்! அருமையான கவிதை..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கூந்தலில் ஏறிய என்னை,
    மாலையில் பூக்களை
    மதிக்காமல்
    மிதிப்பதுபோல
    கிடத்திவிட்டாய்..
    நறுமணத்தை இழந்து
    ஒரு சாக்கடைக்குள் தவிக்கிறேன்
    பூ என்ற குணத்தோடு மட்டும்.

    இதுவரை கவிதைகளை மேலோட்டமாகப் படித்த நான் இப்போதெல்லாம் ஆழ்ந்து படிக்கின்றேன். அந்த வகையில் என்னைத் தொட்ட வரிகள் இவை.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி ஷீ! மற்றும் நரன். ரணத்தை அனுபவத்தவர்களுக்கு இது ஆறட்டுமே!!
    காதல் எவ்வளவு இனிமையானதோ அதைவிட் துன்பமானது......... எனது புலம்பல்கள் இன்னும் தொடரும்..............

    கண்ணீர் வர மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... உங்களின் கண்ணீருக்கும்தான்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஆதவா கண்ணீருக்கும் வலிக்கிறது
    உங்கள் காதல் புலம்பல் அருமை கவிதை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சில வகை வலிகள் சாசுவதமாய்.. தலைமுறை தாண்டியும்..
    படும் மனங்கள் மாறினாலும், வலியின் குணம் மாறாமல்..

    களத்தூர் கண்ணம்மா படப்பாட்டு ஒன்று:

    மலரே மலரே நீ யாரோ
    வஞ்சனை செய்தவர் தான் யாரோ -அன்று
    சூட்டி மகிழ்ந்ததும் அவள்தானோ -பின்பு
    தூக்கி எறிந்ததும் அவள்தானோ!

    மலராய் வாடும் கவலை இப்படி என்றால்
    விரலிடுக்கு நீராய் வீணாவது புதிய வீச்சு..

    என்னை நிராகரித்தற்கு
    என்றாவது நீ அழுவாய் எனும்
    நினைப்பே இம்மனப்புண்ணுக்கு மருந்து..

    ஆதவனின் கவிதைப்பூம்புலம்பல்கள் அருமை..
    அதனால் தொடரட்டும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    எப்பிடி ஆதவா இப்படி உணர்ந்து எழுத முடிகின்றது... ???

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி இளசு அண்ணா மற்றும் மனோ!
    ---------------------------------------

    வலியை அனுபவித்தவனுக்கு எப்படி என்று தெரியும்
    வலியைக் கண்டவனுக்கும் அது தெரியும்...

    இரண்டையும் ஒருங்கே ஒருமித்தமாய் என் மனது போட்டு குழப்பி.....

    ரணத்தை மீண்டும் கீறுகிறேன்.........

    நன்றி மயூரா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பெண்களுக்கு சாதாரணம்..
    ஆண்களுக்கு சதா ரணம்.

    - இன்னும் தொடருங்கள் ஆதவன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க பூ!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •