மன்றத்தை பொறுத்தவரை யாருக்கும் ஆதரவானது அல்ல.
அதே நேரம் பலரின் மன வெளிப்பாட்டை உணர்த்தும் இடமாக இது இருக்கிறது. அந்த வெளிப்பாட்டை நாம் அடக்க விரும்பவில்லை.
செய்திகளாக தரும்பொழுது... அதை அங்கீகரிக்கிறோம். அவ்வளவு தான்.
மன்றத்தை பொறுத்தவரை யாருக்கும் ஆதரவானது அல்ல.
அதே நேரம் பலரின் மன வெளிப்பாட்டை உணர்த்தும் இடமாக இது இருக்கிறது. அந்த வெளிப்பாட்டை நாம் அடக்க விரும்பவில்லை.
செய்திகளாக தரும்பொழுது... அதை அங்கீகரிக்கிறோம். அவ்வளவு தான்.
நன்றி அறிஞரே.
இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அமைதியான சூழலில் எதிர்கால இலங்கை தமிழர்கள் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் அவா.
இனியாரும் தந்தையையோ தாயையோ மகனையோ மகளையோ சகோதரனையோ சகோதரியையோ கணவனையோ மனைவியோ இழக்க கூடாது என்பதே என் ஆதங்கம்.
இதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய மன்னிப்புகள். நன்றி.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
மன்னிப்புத் தேவையில்லை அன்புள்ள சகோதரரே!!!
தமிழருக்கே அதே குருதி ஓடும் ஒருவரே ஏன் நாம் ஆயுதம் தூக்கினோம் என்பதை உணராமல் இருக்கும் போதும் அதை ஏன் என்று அவருக்கு உணர்த்த முடியாமல் தவிப்பதாலும் ஏற்படும் வேதனைகள்தான் உங்களை நோக்கிப் பாய்ந்த வார்த்தைகள்.. அத்தனையும் ஏக்கங்கள்... புரியவைக்க முடியாததால் ஏற்பட்ட வலி.!!!!
தப்பாக நினைக்காதீர்கள்... உங்களை மனம் நோக வைத்திருந்தால் இலங்கை நண்பர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்...
என்றும் அன்புடன் சகோதரன்,
மயூரேசன்.
என்னப்பா... இந்தப்பக்கம் எல்லோரும் போட்டி போட்டுட்டு மன்னிப்பு கேக்கிறீங்க... இப்பிடியே நம்ம சிங்கள நண்பர்களும் இருந்தால் நாங்க இஞ்ச இப்பிடி அல்லோலப்பட வேண்டியதில்ல...
அப்புறம், இந்திய மீனவர்களையே காப்பாத்தமுடியாத இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென நாங்கள் நினைப்பது எவ்வளவு அபத்தம்...
(னேற்று முந்தினம் கூட 5 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.) இந்த நிலையில அகிம்சையை பற்றி போதித்து இம்சை பண்றீங்களே...
சரித்திரத்தில் ஆயுத போராட்டம் வென்றதில்லையென தப்பாக சொல்லாதீர்கள்..
வியட்னாம் போரில் அமரிக்கா தோற்றது ஆயுதபோராட்டத்தால்தான்... மாசேதுங் சீனப்புரட்சியில் வென்றதும் ஆயுதப் போராட்டத்தால்தான்.. பாலச்தீனப் பிரச்சினையிலும் ஓரள்வுக்கு தீர்வு கிடைத்திருப்பது அவர்களது ஆயுத பலத்தால்தான்..
ஏன், இந்தியா சுதந்திரம் அடைந்ததுகூட நேதாயியின் ஆயுதப்பலமும் கணிசமான பங்கை வகித்தமையால்தான்...
தனியே அகிம்சையை நம்பி போராடினால் இருக்குமிடமே தெரியாமல் செஇதுவிடுவார்கள் நம் எதிரிகள்...
காலத்திற்கேற்றமாதிரி மனிதர்களும் மாற்கிறார்கள்.. மனிதமும் மாறுகின்றது... ஆகவே, போராட்டமும் மாறவேண்டியுள்ளது...
தினசரி சாவுக்குள் வாள்பவர்களிடம் அகிம்சையை போதிப்பது பனையால விளுந்தவனை மாடேறி மிதிப்பது போலுள்ளது...
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டும் யேசுவாக நாமிருந்தால் வெட்கப்பட்டு திருந்தும் நிலையில் இன்றைய எதிரி இல்லை... மாறாக மறுகன்னத்திலும் அடித்து ஏறி மிதித்தபடி சென்றுகொண்டிருப்பான்..
இந்திய மீனவர்கள் பிரச்சினையே இதர்கு நல்ல எடுத்துக்காட்டு...
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
முடியா போராட்டம்
முடிவில்லா மரணம்
முடிவு என்றே கடவுளே கருனை செய் எம் உயிர்கள் வெற்றி பெற
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மோகன் உங்கள் கருத்திலே நாம் மன வருத்தம் அடைந்தோம் என்பதனை விட எங்கள் பக்க நியாயங்கள் வெளியுலகிற்குத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான் எங்களது கருத்துக்களைச் சூடாக்கி விட்டது என்பதே உண்மை.
ஒருவகையிலே நாம் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் உங்களால் தானே பலரிற்கு எங்களது கருத்துக்கள் இன்று போய்ச் சேர்ந்தன.
தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவன். அப்போதுதான் நாம் எங்களது தரப்பு நியாயங்களை சரி வர எடை போட முடியும்.
உங்களைப் போன்றே எங்களுக்கும் எங்கள் மண்ணில் அமைதி வர வேண்டுமென்ற தீரா அவா உண்டு. எங்களுக்கும் போர் மீது வெறுப்பு, ஆனால் இன்று அந்தப் போரினாலேயே எங்களது அமைதியைப் பெற முடியுமென்று நம்புகின்றோம். ஏனென்றால் காலம் எங்களுக்கு அந்த ஒரு வழியினைத் தான் திறந்து வைத்துள்ளது. வேறு வழிகள் அடைக்கப் பட்டதனாலேயே நாம் இந்த கரடு முரடான, இலக்கினை அடையும் வேளை எப்போது என்று தெரியாத பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் எங்களுக்கும் இறை நம்பிக்கையுண்டு, எங்களது தெய்வங்களெல்லாம் அநீதிக்கு எதிராக ஆயுதமேந்தித் தானே போரிட்டார்கள்(மகா பாரதம், இராமாயணம்....). அந்த போர்த் தெய்வங்கள் எங்களை வழி நடத்துவார்களென்ற நம்பிக்கையிலே பயணிக்கின்றோம்.
ஆனால் இன்று எமது பதையின் இறுதிக் கட்ட்த்திலே இருப்பதாக உணர்கின்றோம், அதனாலேயே எங்கள் தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு விளக்கி வருகின்றோம்.
அந்த வகையிலே நீங்கள் எங்களது நியாயங்களை ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையிலேயே நாம் உங்களுடன் வாக்கு வாதப் பட்டோம் அவ்வளவே.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நான் சொல்ல கூடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்! வெளியிலே இருந்து பார்த்தால் விளங்காது! உள்ளே போய் நிலைமையை பாருங்கள்! அவ்வளவே! இப்போது சமீபத்திலே மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அவர்களின் உறவினர்களிடம் போய் கேட்டு பாருங்க இந்திய அரசு அஹிம்சை வழியில போகணுமான்னு?!!
தலை இடியும் காய்சலும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்! வலிகளை எழுத்திலே காட்ட முடியாது!!
தோழமையுடன்
சுபன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks