Page 1 of 39 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 463

Thread: ஷீ-நிசி கவிதைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    Post ஷீ-நிசி கவிதைகள்

    ஆசையாகத்தானிருக்கிறது!!!

    ஆசையாகத்தானிருக்கிறது!
    ஆசைகளை எல்லாம்
    உன்னிடம் சொல்லிவிட
    ஆசையாகத்தானிருக்கிறது!

    விடியல் தலை காட்டும் வரை
    மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
    நொடியும் இடைவெளியின்றி,
    பேசிக்கொண்டிருக்க
    ஆசையாகத்தானிருக்கிறது!

    மங்கிய நிலவொளியில்
    பொங்கிய சாதத்தை
    இங்கிதம் பார்க்காமல்
    ஊட்டிவிட;
    ஆசையாகத்தானிருக்கிறது!

    கண்ணிறம் கருப்பல்லவா!
    செந்நிறம் உதடல்லவா!!
    பொன்னிறம் மேனியல்லவா!!!
    உன்னைப் பாடிவிட
    ஆசையாகத்தானிருக்கிறது!

    சோர்வோடு நீ இருக்கும்போது
    மார்போது அனைத்துக்கொண்டு;
    உயிரோடு கலந்த உன்னைப்
    பரிவொடு விசாரிக்க
    ஆசையாகத்தானிருக்கிறது!

    பின்னால் உன்னை அமரவைத்து
    முன்னால் போகும் வாகனங்களை;
    என்னால் முடிந்த மட்டும்
    விரட்டிப் பிடிக்க
    ஆசையாகத்தானிருக்கிறது!

    குளித்து விட்டு நீ
    தலை துவட்ட;
    தெளித்து விழும்
    அந்த துளியில்;
    சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
    அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
    ஆசையாகத்தானிருக்கிறது!

    காதருகில் வைத்த அலாரம்
    12 மணி இரவில் கதற;
    அலற லோடு நீ எழும்
    அந்த தருணத்தில்
    பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
    முத்தமிட ஆசையாகத்தானிருக்கிறது!

    நகத்தை நீ கடிக்கும்போது
    நானும் அப்படியே செய்து;
    முகத்தை நீ திருப்பும்போது
    நானும் அப்படியே செய்து;
    கோபத்தில் இருக்கும் உன்னை
    மேலும் கோபமூட்ட
    ஆசையாகத்தானிருக்கிறது!

    நீ சிரிக்கின்றபோது
    உனக்கு பின்பாகவும்;
    நீ அழு கின்றபோது
    உனக்கு முன்பாகவும்;
    நீ நடக்கின்றபோது
    உனக்கு பக்கமாகவும்;
    என்றுமே காவலனாயிருக்க
    ஆசையாகத்தானிருக்கிறது!

    ஆசையாகத்தானிருக்கிறது!
    ஆசைகள் எல்லாம்
    உன்னுடன் நடந்துவிட,
    ஆசையாகத்தானிருக்கிறது!

    ஷீ-நிசி
    Last edited by அறிஞர்; 29-01-2007 at 03:25 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    என்னோட பதில் இல்லாமயா ஷீ... அருமை அருமை... முதல் கவிதையிலேயே அசத்திட்டீங்க....

    நீ சிரிக்கின்றபோது
    உனக்கு பின்பாகவும்;
    நீ அழு கின்றபோது
    உனக்கு முன்பாகவும்;
    நீ நடக்கின்றபோது
    உனக்கு பக்கமாகவும்;
    என்றுமே காவலனாயிருக்க
    ஆசையாகத்தானிருக்கிறது!


    அருமையான வரிகள்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ரொம்ப தான் ஆசை அற்புதராஜ். ஆசைப்படுங்க தப்பில்லை. நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா.................கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படித்திலிருந்து.
    Last edited by இளசு; 19-12-2006 at 10:06 PM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    இளைஞர்களே கற்பனை காணுங்கள் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கும் போது என்ன கவலை கற்பனை காணுங்கள்...
    கற்பனை தானே இலக்கியங்களில் ஊற்று!! B)

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    Post போர்க்களமா வாழ்க்கை?

    போர்க்களமா வாழ்க்கை?
    பார்க்கலாமே ஒரு கை!

    சோந்து விடாதே!
    இதுதானா வாழ்க்கை என்று
    கோழைகளின் பட்டியலில்
    சேர்ந்து விடாதே!

    இல்லையென்பார்,
    இருப்பதைக் கொடுப்பாய்;
    இன்னமும் என்பார்
    இதுதான் முடியும் என்பாய்!

    மறுகணமே
    கஞ்சப் பிரபு என
    புறம் கூற புரண்டு நிற்கும்
    பஞ்சப் பிரபுவின் நாக்கு!

    கொடுத்ததை
    திரும்பக் கேட்டால்
    கோமாளி என்பான்;
    இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
    ஏமாளி என்பான்!

    நாம் இழைக்கும்
    தவறுகளிலே
    கதைப் பேசி
    பிழைக்கும் கூட்டங்கள்

    இந்த
    நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
    கதற வேண்டாம் -உன்மனம்
    பதற வேண்டாம்!

    வீணாய்
    ஒலித்துக்கொண்டிருக்கும்
    ஓநாய்களின்
    ஒப்பாரி சத்தமிது..

    தானாய்
    குறைந்து விடும்;
    ஒரு நாள் காணாமலே
    கறைந்து விடும்!

    கருணையற்ற கூட்டம்
    காணும்படி,
    கண்ணீரை மட்டும்
    சிந்தி விடாதே!

    இவர்கள் -உன்
    விழி நீரிலே விளையாடும்
    விந்தை மனிதர்கள் -உன்
    கண்ணீரிலே கவிபாடும்
    கந்தை மனிதர்கள்!

    வில்லில் பூட்டின
    அம்புக்கும்,
    அவர்கள் நாவிலே
    பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
    அதிக வித்தியாசமில்லை!

    இரண்டுமே
    காயப்படுத்திவிட தயாராய்;

    அம்பின் கூர்மையும்
    மழுங்கி விடலாம்;
    வம்பளக்கும் அவர்களின்
    நாவுகளோ ஒருநாளும்
    மழுங்கி விடாது!

    புறம் கூறிடும்
    வஞ்சக கூட்டத்தின்;
    நிறம் மாறிடும் நாட்கள்
    வெகு தொலைவில்
    அல்ல தோழா!

    நன்றி கெட்ட
    மனிதனின் நாக்கு;
    அப்படி இப்படி
    புரளத்தான் செய்யும்!

    அவனுக்கும்
    ஒரு கூட்டம்;
    எப்படி எப்படியோ
    திரளத்தான் செய்யும்!

    போகட்டும்
    அவர்களிடம் இல்லாத,
    ஆனால் உன்னிடம் இருக்கும்
    ஒரே ஆயுதம் மன்னிப்பு!

    இவர்களைப் பற்றி
    இனி மனதிலே
    சிந்திக்கவும் வேண்டாம்!

    மறந்தும் கூட
    நிந்திக்கவும் வேண்டாம்!

    காலம் கண் போன்றது!
    கவனித்துக்கொண்டே இருக்கிறது!!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அருமை நண்பரே!


    வில்லம்பின் காயம் கட்டாயம் மாறும்.ஆனால் சொல்லம்பின் காயம் ஆருவது கடிணம் தான்.

    பேசுபவர் பேசட்டும் நாம் நம் கடமையை செய்வோம்.

    அழகான,ஆழமான வரிகள். வாழ்த்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அடடா,எத்தனை ஆசைகள்.

    ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    அருமை ....காதலை காதலியிடம் சொல்லியாச்சா

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    வைரமுத்து உலகம் கவிதை பொல இருக்கிரது....அருமையான முதல் இரு வரிகல்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    Smile

    நன்றி மீரா & கோபாலன் அவர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கவிதை எழுதிவிட்டேன்... இனி இதைக் கொடுப்பதற்கு ஒரு காதலி கிடைக்க வேண்டும்.. சும்மா விளையாட்டுக்காக...

    காதலின்
    எல்லா சுகங்களும்,
    எல்லா முகங்களும்
    கண்டுவிட்டேன்
    Last edited by ஷீ-நிசி; 19-12-2006 at 03:59 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    காதலி கிடைகாதவரை-
    எல்லாமே ஆசை ஆசையாய் தான் இருக்கும் ஷீ...

    ஆசையை சொன்ன அழகான கவிதைக்கும்..
    ஷீ'யின் ஆசைகள் நிறைவேரவும்..
    வாழ்த்துக்கள்..
    சுகுணா ஆனந்தன்

Page 1 of 39 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •