Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: திசை மாறிய தருணங்கள்.......

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    திசை மாறிய தருணங்கள்.......

    மகாத்மா காந்தியடிகள் (1869-1948)

    காந்தி 1893-ம் வருடம், தெ‎ன்னாப்பிரிக்கா ரயில் பயணத்தின் போது
    முதல் வகுப்பு டிக்கட் எடுத்திருந்தும், வலுக்கட்டாயமாக ஒரு வெள்ளையனால் ‏இனவெறி காரணமாக வெளியே தள்ளப்பட்டார். வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்த தனக்கே ‏இந்த அவமானம் எ‎ன்றால், அங்கே வாழும் ‏இந்தியர்கள் எத்தனை தூரம்
    அடிமை வாழ்க்கையில் கொடுமைப் படுத்தப்படுவார்கள் எ‎ன்று சிந்தித்து, அன்றைய ‏இரவே யுத்தம் ஏந்தாத போராளியாக மாறினார். கத்தியி‎ன்றி ரத்தமின்றி இவர் நடத்திய அறப்போராட்டம் உலக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்.


    பகத்சிங் (1907-1931)

    1919-ம் வருடம் நடந்த ஜாலிய‎ன் வாலா பாக்கில் நடந்த கொடூர
    படுகொலை பகத்சிங்கி‎ன் பிஞ்சு மனதில் பெரும் எரிமலையை உருவாக்கியது.அந்தச் சிறு வயதிலேயே அப்பாவி மக்களி‎ன் ரத்தத்தைக் குடித்த வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டு, பஞ்சாப் படுகொலை நடந்த ‏இ‏டத்தி‎ன் ரத்த மண்ணை நெற்றித் திலகமாக வைத்துக் கொண்டார். டெல்லி நாடாளும‎‎ன்றத்தில் வெடிகுண்டு வீசி கைதாகி, 1931-ம் வருடம் மரணக்கயிற்றை முத்தமிட்டு தூக்கிலிடப்பட்டபோது ‏இந்திய நாடே அழுதது.


    அன்னை தெரசா (1910-1997)

    தீவிரமான கிருஸ்துவ மதத்தை கடைப்பிடிக்கும் குடும்பத்தின் மூன்றாவது மகளாகப்பிறந்த தெரசா, கடவுளுக்கு தொண்டு செய்வதற்க்காக இறை பணியில் சேர்ந்தார். அதற்காகவே இந்தியா வந்தார். ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும், கன்னியாஸ்திரியாகவும் இருந்தார். 1946-ம் வருடம் உடல் நிலை சரியில்லாமல் போகவே, குணமடைவதற்காக ரயிலில் டார்ஜிலிங் சென்றார். அப்போது ஏழையிலும் ஏழைகளுக்கு சேவை செய்வதுதான் எனக்கு நீ செய்யும் சேவை என்று இறைவன் சொன்னதாக உணர்ந்தார். உடனே ஆசிரியர் பணியை துறந்து சமூக சேவையில் ஈடுபட்டு உலகின் தலைசிறந்த தாய் என புகழ் பெற்றார்.


    ஈ.வெ.ராமசாமி (1879-1978)

    வசதியான குடும்பத்தில் பிறந்து படிப்பதில் விருப்பமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டார். 1909-ம் வருடம் இவரது தங்கையின் மகள் ஒன்பது வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விதவையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு பணியாமல் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இதுபோலவே மூடப்
    பழக்கவழக்கம், சாதி, மதம், மொழி என்னும் கட்டுப்பாட்டுக்குள் தழிழகம் தலைகுனிந்து நிற்பதை காணப் பொறுக்காமல் ஒரு பகுத்தறிவு பகலவனாக மாறினார். இறுதி மூச்சு வரை போராடி தமிழ் தந்தையானார்.

    சுவாமி விவேகானந்தர் (1863-1902)

    பிரபலமான வழக்கறிஞரின் மகனாகப் பிறந்த நரேந்திரனுக்கு எப்போதுமே கேள்விகள் கேட்பதில் ஆர்வம் அதிகம். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோடு எத்தனையோ ஞானியரையும், கல்வியாலரையும் கண்டு பேசி எதுவும் கண்டு கொள்ள முடியாமல் இருந்தவர், 1881-ம் வருடம் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். அவரை ஒரு பைத்தியகார சந்நியாசியாக நினைத்து, கடவுள் எங்கே இருக்கிறார் என கேட்டார். கடவுளை காட்டுகிறேன் என்று நரேந்திரனை அவர் தொட்ட நிமிடத்திலேயே உடலில் பெரும் மாற்றத்தை உணர்ந்தார். அன்று முதல் வாழ்வு மாறியது. பகுத்தறிவு வாதியாகிய நரேந்திரன் ஆன்மிகவாதியாக மாறினார். பின்னர் விவேகானந்தர் ஆனார். கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளில் இன்றும் உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது இவர் உருவாக்கிய ராமகிருஷ்ணமிஷன் அமைப்புகள்தான்.
    Last edited by மன்மதன்; 15-01-2007 at 05:01 PM. Reason: எழுத்துப்பிழை
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    சபாஷ். காந்தி, உங்கள் பதிவுகளின் தரம் கூடிக் கொண்டே போகிறது. இன்னும் இது போல் தகவல்கள் நிறையத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி

    தொடரவும்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    காமராஜர் (1903-1975)

    அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார். இவர் சுதந்திர தாகத்தால் காந்தியின் கொள்கையின் பால் கவரப்பட்டு சத்திய மூர்த்தியின் சீடர் ஆகி சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். தூய்மைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்று விளங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார். இந்தியாவின் கிங் மேக்கர் என்ற சிறப்பு பெற்றார்.


    M.G. இராமச்சந்திரன் (1917 - 1987)

    மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (M.G.R.) இதுதான் இவர் பெயர். இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
    25 ஆண்டுகள் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். அறிஞர் அண்ணாவின் அறிவாற்றலிலும், பேச்சாற்றலிலும் கவர்ந்த இவர் அரசியலில் ஈடுபட்டார். 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவினார். 1977ல் நடந்த தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
    Last edited by மன்மதன்; 15-01-2007 at 05:13 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முதல் பதிவில் ' திசை மாறிய' தருணங்கள் கருத்தைக் கவர்ந்தன.
    பாராட்டுகள் காந்தி.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    திசை மாறிய தருணங்கள்

    சுப்பரமணியன் (1882 - 1921)

    எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு திங்கள் 11-ம் நாள் சின்னசாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். பெற்றோர் தம்மகனுக்கு சுப்பரமணியன் என்று பெயரிட்டனர். ஆனால் அனைவரும் சுப்பையா என்றே செல்லமாக அழைத்தனர்.
    சுப்பையாவுக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தைக் காட்டிலும் பாட்டு இயற்றுவதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. சுப்பையாவின் புகழை விரும்பாத காந்திமதி நாதப்பிள்ளை என்பவர் சுப்பையாவை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கோடு, 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பாவை பாட முடியுமா என்று கேட்டார். கேட்ட அக்கணமே சற்றும் சளைக்காமல் காரதுபோல நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் என பாடத் தொடங்கினார். சுப்பையா அன்று முதல் பாரதியார் என்று பட்டம் பெற்றார்.
    பாரதிக்கு பதினைந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே திருமணம் நடந்தது. மனைவி பெயர் செல்லம்மாள்.

    பாரதி அப்பா நடத்திய பஞ்சாலை பெரும் இழப்பு ஏற்பட்டது. அதனால் மனம் நொந்து போன அவர் காலமானார். பின்னர் பாரதி காசியில் வாழ்ந்த அத்தையின் இல்லத்திற்கு சென்று தங்கினார். காசியில் இருந்த போதுதான் பாரதிக்கு தலைப்பாகை கட்டும் பழக்கம், மீசை வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் பாலகங்காதர திலகர் ஊட்டிய நாட்டுப் பற்றும் உரிமை வேட்கையும் அவர் உள்ளத்தில் பதிந்தன. இவர் இந்திய மொழிகளில் பலவற்றை நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான் 'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிது ஒன்றும் இல்லை' என்று பாடினார்.
    இவர் பல பாடல்கள் இயற்றினார். அவை சுதந்திர தாக்கம் கொண்டவை. 1921ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவரை தேசியகவி என்றும், மகாகவி என்றும் கூறுவர்.
    Last edited by மன்மதன்; 15-01-2007 at 05:21 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    காமராஜர் (1903-1975)

    அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள்.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.


    1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

    தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார் இவர் சுதந்திர தாகத்தால் காந்தியின் கொள்கையின் பால் கவரப்பட்டு சத்திய மூர்த்தியின் சீடர் ஆகி சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார் தூய்மைக்கும்,நேர்மைக்கும் பெயர் பெற்று விளங்கினார்.

    இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.

    இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


    காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார்.இந்தியாவின் கிங் மேக்கர் என்ற சிறப்பு பெற்றார்
    வணக்கம் காந்தி அவர்களே

    தங்களின் பதிப்பில் சிறு தவறு இருக்கின்றது, வர்ணம் செய்துல்ல வரிகல் மீண்டும் பதிவில் இடம் பெற்றுல்லன, கவனிக்க

    அன்புடன்
    ஓவியா
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    ஜி.டி நாயுடு(1893-1974)

    ஜி.டி நாயுடுவின் முழுப்பெயர் கோபலசுவாமி துரைசாமி நாயுடு.அவரை இந்தியாவின் எடிசன் என்று கூறுவார்கள்.அவர் சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அர்வம் மிக்க வராய் திகழ்ந்தார்.அவர் விவசாயத்துறை, எலட்ரிக்கல்,மெக்கானிக்கல் துறை போன்ற பல துறைகளில் தம் முத்திரையைப் பதித்தவர். இவர் 1893-ம் ண்டு மார்ச்சு மாதம் 23ம் நாள் கோயம்புத்தூரில் உள்ள களங்கல் என்னும் ஊரில் பிறந்தவர்.

    போக்குவரத்து துறையை தேர்ந்தெடுத்த இவர்,சில வருடங்களில் யுணைட்டட் மோட்டார் சர்வீஸ் என்னும் நிருவனத்தை தொடங்கி,அதில் வெற்றியும் பெற்றார்.
    1937-ம் ண்டு இந்தியாவின் முதல் மோட்டார் விற்பனை,ஜி.டி நாயுடுவின் நிறுவனத்தில் தான் தயாராக்கப்பட்டது. அவர் தயாரித்த எலட்ரிக்கல் ரேசர் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.மேலும் அவர் மிகவும்மெல்லிய ஷேவிங் பிளேட்,கேமிராக்களில் தூரத்தை சரிசெய்வது,பழச்சாறை பிழிந்தெடுக்கும் கருவி,மற்றும் மண்ணென்னையால் ஒடும் விசிறி போன்றவற்றை கண்டுபிடித்தார்.
    அவர் 1941-ம் ஆண்டு ஐந்து வால்வுகளை கொண்ட ரேடியோவை மிக்க் குறைந்த விலையாக 70- ரூபாய்க்கு தர திட்டமிட்டார் அதை அமல் படுத்தினார்.1952-ம் ஆண்டு இரண்டு சீட்களை கொண்ட பெட்ரேல் காரை கண்டு பிடித்தார்.அதன் விலை ரூ-2000- னால் அவரது தயாரிப்பு அரசால் அங்கிகாரம் தராமல் ரத்து செய்யப்பட்டது.
    மேலும் விவசாயத்தில் 10 அடி உயரமுள்ள பருத்தி செடியை கண்டு பிடித்தார்.
    அவர் 1974 -ம் ண்டு ஐனவரி மாதம் 4-ம் தேதி இயற்கை எய்தினார்.அவரை நினைவு படுத்த கல்லூரிகளும்,பள்ளிகளும்,திறக்கப்பட்டுள்ளது.அவரது பெருமை இன்றும் அவரை நினைவு படுத்துகின்றது.
    Last edited by mgandhi; 16-01-2007 at 11:21 AM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அருமையான பதிவு. நல்ல பதிவில் எழுத்துப்பிழை இருக்கக்கூடாது காந்தி. டைப் பண்ணியவுடன் பதிக்காமல், பதிக்கும் முன் ஒருதடவை நீங்களே படித்துவிட்டு பதியுங்க. தொடர்ந்து எழுதுங்க. இந்த திரி அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    திசை மாறிய தருணங்கள்

    தேவநேயப் பாவாணர் (1902-1981)
    அவர்கள் ஓர் ஒப்பரிய தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர். அவர் நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்தவர். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ் வேராய் இருந்தவர். இவர் சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் படுபவர்.

    தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் திரு ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறித்துவ மத குரவராய் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசு அவர்களின் பெற்றோர் திரு. முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.

    1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு பாவாணர் அவர்கள் தம் புகழுடம்பை நீத்தார். மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் நெஞ்சாங்குலையில் வலி வந்து, குருதியழுத்தமும் மிகுந்து இறுதி நிலை அடைந்தார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கேட்டதற்காக தேவநேயப் பாவாணர் பற்றி கொடுத்த தகவலுக்கு நன்றி.. காந்தி..

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நன்றி காந்தி அவர்களே!!!
    அருமையான தகவல்!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •