Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: பஸ் பயணத்தில் எனது அனுபவம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0

    பஸ் பயணத்தில் எனது அனுபவம்

    அப்போது எனக்கு 16 வயது இருக்கும் நான் டிப்ளமோ முதல் வருடம் படித்து கொண்டிருந்தேன் சொந்தகாரங்க வீட்டு சுப நிகழ்சிகளுக்கு போக ஆரம்பித்த(மெயினா சாப்பாட்டுக்கு தான்) காலமது அப்போது தான் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது

    அப்போது நான் எங்கு போனாலும் என் அப்பா அழகாக பஸ் ரூட் சொல்லி விடுவார்கள் அதன் படி போய் விட்டு வருவேன்

    அப்படி தான் ஒரு நாள் ஒரு கல்யாணத்துக்கு போவதற்காக பூந்தமல்லியில் இருந்து குமணன்சாவடி என்ற இடத்திற்கு டிக்கட் எடுத்து விட்டு அமர்ந்தேன் பஸ்கண்டக்டரிடம் இடம் வந்தால் சொல்லுமாறு சீட்டில் போய் அமர்ந்து விட்டேன் பேருந்தும் காலியாக தான் இருந்தது பூந்தமல்லியில் இருந்து குமணன் சாவடிக்கு மினிமம் டிக்கட் அதனால் டோக்கன் கொடுக்காமல் காசு கொடுத்து தான் வாங்கினேன் அது தான் வினையே

    குமணன் சாவடி எல்லாம் கடந்து பஸ் போய் விட்டது என நினைக்கிறேன் எனக்கு அது தெரியாது நானும் கண்டக்டர் சொல்லுவார் என நினைத்து கொண்டே ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் கண்டக்டரையே பார்த்து கொண்டிருந்தேன் அவரும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் நானும் வேடிக்கை பார்த்து கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன்

    மினிமம் டிக்கட்டுக்கு இவ்வளவு தூரம் எப்படி இருக்கும் என மனதில் ஒரு நெருடல் இருந்தாலும் என்ன தான் நடக்க போகிறது என ஒரு குருட்டு தைரியத்தில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கே வந்து விட்டேன் அப்போது தான் எனக்கு உறைத்தது அடடா ரொம்ப தூரம் வந்து விட்டோம் என்று
    அங்கு இருந்த பேருந்து நிருத்தத்தில் இறங்கினால் செக்கிங் மாமா நின்று கொண்டிருந்தார் நான் எடுத்து இருந்த டிக்கெட்டை நீட்டினேன் என்னை அவர் பார்த்து விட்டு டிக்கெட் நம்பரை கண்டக்டரை பார்த்து படிக்க சொன்னார் படித்து முடித்ததும் அவர் என்னிடம் எங்க வாங்குன டிக்கெட் இது என கேட்டார் அதற்கு நான் பூந்த மல்லியில் வாங்குனது என்று சொன்னேன்

    அதற்கு அவர் எங்கு இறங்கணும் இங்க இறங்கி இருக்க என்று கேட்டார் நான் அதற்கு குமணன் சாவடியில் இறங்க வேண்டும் என்று சொன்னேன் அத்ற்கு அவர் இந்தா பிடி என 10 2 ரூபாய் டிக்கட்டை கண்டக்டரிடம் வாங்கி கொடுத்து விட்டு ஆப்போசிட் பக்கம் போ போய் பூந்தமல்லி போற பஸ்ல ஏறி இந்த தடவையாவது கரக்டா இறங்கிடு என்று சொன்னார் அதற்கு நான் கண்டக்டரிடம் சொல்ல சொன்னேன் அவர் சொல்லலன்னா நான் என்ன பண்றதுன்னேன் ஆனாலும் அவர் ஒப்பு கொள்ளவே இல்ல அதுக்கு அப்புறம் என்ன பண்றது காச கொடுத்துட்டு திரும்பியும் குமணன் சாவடி வந்து கரக்டா இறங்கினேன்(திரும்பி வரும்போது சீட்டு பக்கம் பாக்க கூட இல்லையே)

    அப்போது தெரியாமல் செய்த தவறை இப்போது நினைத்தாலும் என்னை அறியாமல் சிரிப்பு வந்து விடும்

    நண்பர்களே டிக்கெட் எடுத்துட்டு கண்டக்டர் சொன்னா தான் இறங்குவேன்னு அடம் பிடிச்சா இது தான் நிலைமை

    அருண்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ம்ம்ம்... இந்த மாதிரி ஆவுமின்னுதான் எப்போ குழப்பத்தோடு பஸ்ஸில ஏறினாலும் கண்டக்டரை நிமிஷத்துக்கு ஒருதரம் கூப்பிட்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி ஸ்டாப் வந்துருச்சான்னு கேட்டுக்கிருவேன். ஒரு சந்தர்ப்பத்துக்கு அப்புறம் அவரே கெஞ்சிக் கதறி அந்த இடம் வந்தவுடனே எறக்கி விட்டுருவாரு...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி

    நானும் இப்படிதான் ஒரு முறை லன்டனில் ஊர் சுற்றினேன்...

    நினைக்க நினைக்க சிரிப்புதான் உதிக்கும்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    இப்படி கண்டக்டரை நம்பி பல தடவை நான் மோசம் போயிருக்கின்றேன்!!! பாவிப்பசஙக!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நடத்துனரை நம்பி மோசம் போன அனுபவம் எனக்கும் உண்டு அருண்.. நன்றி பகிர்ந்தமைக்கு,,,
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt View Post
    ம்ம்ம்... இந்த மாதிரி ஆவுமின்னுதான் எப்போ குழப்பத்தோடு பஸ்ஸில ஏறினாலும் கண்டக்டரை நிமிஷத்துக்கு ஒருதரம் கூப்பிட்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி ஸ்டாப் வந்துருச்சான்னு கேட்டுக்கிருவேன். ஒரு சந்தர்ப்பத்துக்கு அப்புறம் அவரே கெஞ்சிக் கதறி அந்த இடம் வந்தவுடனே எறக்கி விட்டுருவாரு...
    இதைத்தான் அன்புத் தொல்லை என்று சொல்வார்களோ???

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    .
    இதை விட ஒரு தமாஷான விஷயம் என்னனா...? ஒரு 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து, அதற்கு பாக்கிப்பணம் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கண்டக்டர் சொன்னால்..... நம்மிடம் அந்த பணம் வரும் வரை டென்ஷன் தான்....
    அன்புடன் உதயா

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கண்டக்டருக்கு பஸ்ஸூல தனியா போக பயமா இருந்திருக்கும். அதான் கடைசி ஸ்டாப் வரைக்கும் கூட்டிட்டு போகலாம் நினைச்சிருக்காரு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்ததும் அருணைக் கழட்டி விட்டுட்டாரு.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இவர் பரவாயில்லைங்க, திண்டாடினாலும் போகவேண்டிய இடத்துக்கு போயிட்டாரு (சாப்பாட்டு நேரத்துக்கு கரக்ட்டா கணக்குபன்னி) நம்ப கதைய கேட்டா என்ன சொல்லுவீங்களோ?! திநகரிலிருந்து பாரிஸ்க்கு டிக்கட் எடுத்து திரும்ப திநகரில் இறங்கி பாரிச தேடுன கதையது?!!!
    என்றென்றும் நட்புடன்!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    இவர் பரவாயில்லைங்க, திண்டாடினாலும் போகவேண்டிய இடத்துக்கு போயிட்டாரு (சாப்பாட்டு நேரத்துக்கு கரக்ட்டா கணக்குபன்னி) நம்ப கதைய கேட்டா என்ன சொல்லுவீங்களோ?! திநகரிலிருந்து பாரிஸ்க்கு டிக்கட் எடுத்து திரும்ப திநகரில் இறங்கி பாரிச தேடுன கதையது?!!!
    இது தீநகர்ல இருக்கிற வடபழனி பிராஞ்சு ஜோக் மாதிரியல்லவா இருக்கிறது.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    கண்டக்டருன்னா இந்த நல்ல டிகெட்டெல்லாம் கிழிச்சு குடுப்பாங்கலே அவுகதானே
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சில நாட்களுக்கு முன்பு , சென்னை நகர பேருந்துகளில் , ஒவ்வொரு நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருந்தார்கள். பேருந்து நிற்கப்போகும் நிறுத்தத்தையும், அடுத்து வருகின்ற நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் சொல்லுவார்கள். அது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தப்பித் தவறி நாம் தூங்கிவிட்டால் கூட , ஸ்பீக்கர் ஒலி நம்மை எழுப்பிவிடும். இப்போது அந்தத் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. நம் இறங்கவேண்டிய இடத்தை நடத்துனரிடம் தெரிவிப்பதைவிட , சக பயணியிடம் தெரிவிப்பது நல்லது. ஆனால் அவரைத் தூங்கவிடாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •