அப்போது எனக்கு 16 வயது இருக்கும் நான் டிப்ளமோ முதல் வருடம் படித்து கொண்டிருந்தேன் சொந்தகாரங்க வீட்டு சுப நிகழ்சிகளுக்கு போக ஆரம்பித்த(மெயினா சாப்பாட்டுக்கு தான்) காலமது அப்போது தான் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது
அப்போது நான் எங்கு போனாலும் என் அப்பா அழகாக பஸ் ரூட் சொல்லி விடுவார்கள் அதன் படி போய் விட்டு வருவேன்
அப்படி தான் ஒரு நாள் ஒரு கல்யாணத்துக்கு போவதற்காக பூந்தமல்லியில் இருந்து குமணன்சாவடி என்ற இடத்திற்கு டிக்கட் எடுத்து விட்டு அமர்ந்தேன் பஸ்கண்டக்டரிடம் இடம் வந்தால் சொல்லுமாறு சீட்டில் போய் அமர்ந்து விட்டேன் பேருந்தும் காலியாக தான் இருந்தது பூந்தமல்லியில் இருந்து குமணன் சாவடிக்கு மினிமம் டிக்கட் அதனால் டோக்கன் கொடுக்காமல் காசு கொடுத்து தான் வாங்கினேன் அது தான் வினையே
குமணன் சாவடி எல்லாம் கடந்து பஸ் போய் விட்டது என நினைக்கிறேன் எனக்கு அது தெரியாது நானும் கண்டக்டர் சொல்லுவார் என நினைத்து கொண்டே ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் கண்டக்டரையே பார்த்து கொண்டிருந்தேன் அவரும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் நானும் வேடிக்கை பார்த்து கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன்
மினிமம் டிக்கட்டுக்கு இவ்வளவு தூரம் எப்படி இருக்கும் என மனதில் ஒரு நெருடல் இருந்தாலும் என்ன தான் நடக்க போகிறது என ஒரு குருட்டு தைரியத்தில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கே வந்து விட்டேன் அப்போது தான் எனக்கு உறைத்தது அடடா ரொம்ப தூரம் வந்து விட்டோம் என்று
அங்கு இருந்த பேருந்து நிருத்தத்தில் இறங்கினால் செக்கிங் மாமா நின்று கொண்டிருந்தார் நான் எடுத்து இருந்த டிக்கெட்டை நீட்டினேன் என்னை அவர் பார்த்து விட்டு டிக்கெட் நம்பரை கண்டக்டரை பார்த்து படிக்க சொன்னார் படித்து முடித்ததும் அவர் என்னிடம் எங்க வாங்குன டிக்கெட் இது என கேட்டார் அதற்கு நான் பூந்த மல்லியில் வாங்குனது என்று சொன்னேன்
அதற்கு அவர் எங்கு இறங்கணும் இங்க இறங்கி இருக்க என்று கேட்டார் நான் அதற்கு குமணன் சாவடியில் இறங்க வேண்டும் என்று சொன்னேன் அத்ற்கு அவர் இந்தா பிடி என 10 2 ரூபாய் டிக்கட்டை கண்டக்டரிடம் வாங்கி கொடுத்து விட்டு ஆப்போசிட் பக்கம் போ போய் பூந்தமல்லி போற பஸ்ல ஏறி இந்த தடவையாவது கரக்டா இறங்கிடு என்று சொன்னார் அதற்கு நான் கண்டக்டரிடம் சொல்ல சொன்னேன் அவர் சொல்லலன்னா நான் என்ன பண்றதுன்னேன் ஆனாலும் அவர் ஒப்பு கொள்ளவே இல்ல அதுக்கு அப்புறம் என்ன பண்றது காச கொடுத்துட்டு திரும்பியும் குமணன் சாவடி வந்து கரக்டா இறங்கினேன்(திரும்பி வரும்போது சீட்டு பக்கம் பாக்க கூட இல்லையே)
அப்போது தெரியாமல் செய்த தவறை இப்போது நினைத்தாலும் என்னை அறியாமல் சிரிப்பு வந்து விடும்
நண்பர்களே டிக்கெட் எடுத்துட்டு கண்டக்டர் சொன்னா தான் இறங்குவேன்னு அடம் பிடிச்சா இது தான் நிலைமை
அருண்
Bookmarks