ராஜா மீண்டும் ஒரு கலக்கல் பதிவு வாழ்த்துக்கள்.
ராஜா மீண்டும் ஒரு கலக்கல் பதிவு வாழ்த்துக்கள்.
சிர்ப்பு முத்துகள் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அழகு நிலையம், ஷாப்பிங் கிளப் பிச்சைக்காரி.. அடடா...
ராஜா அவர்களே ரவுசு உன்மையில ரவுசுதாங்க...
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ராஜா அண்ணா அனைத்து நகைச்சுவையும் மிகவும் அருமை
ரசித்தேன்
மிக்க நன்றி
அறிஞசர் சார்,
இந்த பதிப்பை நகைச்சுவை பகுதியில் ஒட்டி வைக்கலாமா? வழிமொழிகிறேன்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ராஜா, கலக்கிட்டீங்க.
விஜயகாந்துக்குப் போட்டியா இன்னொரு படத்தையும் அனிமல் பிளானட்டுல போடலாம்.
அது எதுன்னு சொன்னா உங்களுக்கு கரடிக் குட்டி பரிசு
ஒரு சர்தார் தன்னோட வீட்டுல ஒரு கார் ஷெட் கட்ட ஆசைப்பட்டார்.. ஆனா எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கணுமின்னு தெரியல. பக்கத்து வீட்டு சர்தார் 1 மாசத்துக்கு முந்தி அதே மாதிரி ஷெட் கட்டினதால அவர்ட்ட கேட்டார்..
அஞ்சா.... கார்ஷெட்டுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கினே..?
20 மூட்டை வாங்கினேன் கஞ்சா...!
அதே போல வாங்கி ஷெட் கட்டினார்.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"
_________________________________
சர்தாரிணியோட தோழி ரொம்ப நாளைக்கு பிறகு அவளை சந்திச்சு பல விஷயங்களை பேசி தெரிஞசுகிட்டா.. கிளம்பும்போது சொன்னா..
உன் கணவர் தண்ணியில மூழ்கி இறந்து போனது வருத்தம்தான்.. இருந்தாலும் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாத உனக்கு கோடி ரூபாய் விட்டுட்டு போயிருக்கார்.. அதுக்கு நீ அவருக்கு நன்றி சொல்லணும்..
ஆமாண்டி.. அதோட அவர் சொம்பு தேட கெணத்துக்குள்ள இறங்கினப்போ கயிற்றை அவுத்து எடுத்துட்டுப் போயி துணி காயப் போட்டதுக்கும் மன்னிப்பு கேட்கணும்..!
__________________________________
ஒரு சர்தார் எப்பவும் தான் மட்டுமே முதல் ஆளா இருக்கணும்ன்னு ஆசைப்படுவார்.. ஒருநாள் வீட்டுக்குப் போனபோது அவருடைய மனைவி ஒரு புது டி.வி. வாங்கி பார்த்துட்டு இருந்ததைப் பார்த்து கடுப்பாயிட்டார்.
உடனே கைத் துப்பாக்கியை எடுத்து மனைவிய சுடப் போனார்..அப்புறம்
தன் கொள்கை ஞாபகம் வரவே துப்பாக்கியை தன் தலையில வச்சுக்கிட்டு சுட்டுக்க தயாரானார்.. மனைவி கத்தினாள்..
"ஐயோ வேணாங்க.. செத்துப் போயிடுவீங்க.."
"வாயை மூடு.. நீ மட்டும் உயிரோடவா இருக்கப் போறே.. அடுத்தது உன்னைத் தான் சுடப்போறேன்.."
_________________________________________
ஒரு சர்தார் தன்னோட பேசும் கிளியை அழைச்சுக்கிட்டு ஒரு உணவகத்துக்குப் போனார்.. அந்த உணவகம் ஒரு பெர்ர்ர்ர்ர்ரிய கட்டடத்தோட 110-ஆவது மாடியில இருந்தது. இருவரும் ஒரு மேசையில் அமர, சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்..
கிளி, " முட்டாளே.. முதலில் தண்ணீர் கொண்டுவா.. பின் என்ன வேண்டும் என்று கேள்.." என்றது. ஆச்சரியம் அடைந்து சர்வர் போய் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.. மீண்டும் என்ன வேண்டும் என்று கேட்க, கிளி, " அழுக்குப் பன்றியே.. விரலை தண்ணீரில் வைத்தா கொண்டு வருவது,,? போய் வேறு தண்ணீர் கொண்டுவா உதவாக்கரை பயலே.." என்றது.
இம்முறை சற்று கோபம் வந்தாலும், வேறு வழியின்றி சுத்தமான முறையில் தண்ணீர் கொண்டுவந்தார்.. பின் என்ன வேண்டும் எனக் கேட்க.. சர்தார், அறிவு கெட்டவனே.. சப்பாத்தி கொண்டுவா.. பசிக்கிறது.." என்று திட்டினார். வெகுண்டு போன சர்வர், சர்தாரையும், கிளியையும் சன்னல் வழியே தூக்கி வெளியே எறிந்தார்..
கீழே விழுந்து கொண்டிருக்கும் போது கிளி சர்தாரைக் கேட்டது..
" எனக்கு பறக்கத் தெரியும்.. நான் ரவுசு விட்டேன்.. நீதான் ஒன்னுக்கும் லாயக்கு இல்லாதவன் ஆச்சே.. என்னத்துக்கு வாயைக் கொடுத்து ஆப்பு வாங்கிக் கட்டிக்கிறே..?
ஒரு சர்தார் ஆபீஸ் விட்டு வந்துகிட்டிருந்தார். ரெண்டு திருடனுங்க வழிமறிச்சு பணத்தை கேட்டானுங்க. சர்தார் கொடுக்கல. பயங்கர கைகலப்பு. ஒருவழியா படாத பாடுபட்டு சர்தாரை புடிச்சு அமுக்கி அவர் பர்ஸ் எடுத்து பார்த்தானுங்க.. வெறும் 5 ரூபாய்தான் இருந்துச்சு. ஆச்சரியப்பட்ட திருடனுங்க கேட்டானுங்க..
" ஏன் சிங்கு.. எல்லாரும் உங்களை கிண்டல் பண்றது சரியாத்தான் இருக்கு.. இந்த பிசாத்து 5 ரூபாய்க்கா உயிரை பணயம் வச்சு போராடினே..?
" அடப் போங்கடா மடப் பயலுகளா..? நான் என்ன அவ்வளவு முட்டாளா..? டிப்பன் பாக்ஸ்ல இருக்கற சம்பளப் பணத்துக்காகதாண்டா இவ்வளவு கஷ்டப் பட்டேன்..!"
____________________________________
சிங்கு.. நீங்க வச்சிருக்கற "கோடீஸ்வரன் ஆவது எப்படி" ங்கற புத்தகத்தைக் கொஞ்சம் இரவல் தரீங்களா..?
ஓ. யெஸ்.. தருகிறேனே.. இந்தாங்க..
என்ன சிங்கு..? பாதி பக்கத்தைக் காணோம்..?
ஓசி தானே வாங்கி படிக்கிறீங்க.. 50 லட்சம் போதாதா..?
____________________________________
ஒரு தமிழர் படு வேகமா கார் ஓட்டிட்டு போனார்.. போலீஸ் புடிச்சுருச்சு.. சர்தார் போலீஸ்..! ரொம்ப ஸ்டைலா சர்தார் சொன்னார்.. உன்னை மாதிரி ஆளைப் பிடிக்கதான் காலையிலேருந்து இங்கே காத்துக் கிடக்கேன்.. தமிழர் சொன்னார்.. அது தெரிஞ்சு, உங்களைக் காக்க வைக்கக் கூடாதுன்னுதான் வேக வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்..
இதைக் கேட்டு மனசு உருகிப் போன சர்தார் " போயிட்டு வா நண்பா" ன்னு கண்ணீரோட அனுப்பி வச்சுட்டார்..!
___________________________________
அதே தமிழர் இன்னொரு நாள் படுவேகமா கார் ஓட்டிட்டுப் போனார். அவர் மனைவி சண்டை போட்டுட்டு அவங்க அண்ணன் வீட்டுக்கு போன மகிழ்ச்சியைக் கொண்டாட பாருக்கு தண்ணி போட போயிட்டு இருந்தார்.போலீஸ் துரத்த ஆரம்பிச்சுருச்சு. தமிழர் பயங்கரமா தண்ணி காட்டினாரு. இருந்தாலும் ஒரு அடைச்சிருந்த ரயில்வே கேட்டுக்கிட்ட மாட்டிக்கிட்டாரு. பாத்தா அதே பழைய சர்தார்.. அவர் தமிழரைக் கேட்டார்..
"அன்னிக்குதான் ஏதோ உருக்கமா சொல்லி தப்பிச்சுட்டே.. இன்னிக்கு என் வண்டியைப் பார்த்துட்டு வேகமா தப்பிக்கப் பாத்தியே.. இதுக்கு என்ன சொல்றே..?
ஒரு நிமிஷம் யோசிச்ச தமிழர் சொன்னார்..
என் மனைவி கோச்சுகிட்டு போயிட்டா.. அவங்க அண்ணன் போலீஸ்.. திருப்பி அவளை கொண்டாந்து விடப்போறார்ன்னு பயந்து ஓடினேன்..
"அப்படியா சரி.. போ.. எம் பொண்டாட்டியும் ராட்சசிதான்.. உன் கஷ்டம் புரியுது.
சிரிச்சுச் சிருச்சு என்வண்டி பஞ்சராச்சுப்பா. தொடர்ந்து தாங்க.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks