எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீராவிதான் இருக்கு
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
ஆவிகள் உண்டு! மேலை நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
ஆவிகளும், குட்டிசாத்தான்களும் இருப்பது உண்மை என் தந்தையிடம் பேய் பிடித்துவிட்டது மந்தரித்து விடுங்கள் என்று பல நபர்கள் வந்து மந்தரித்து சென்றதுண்டு, என் தந்தை பேய் ஒட்டியதை நான் கண்டுள்ளேன். குட்டிச்சாத்தான் எப்படி வசியம் செய்வது என்ற புத்தகம் என்னிடம் உள்ளது ஆனால் ஒன்று அப்படி நாம் சென்றுவிட்டால் குடும்ப வாழ்க்கையை இழக்கவேண்டும். நல்லது செய்தால் சரி கெட்டது செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக அதுவே திரும்பி செய்தவரை அழித்துவிடும்.
சாமியார்களுக்கு குடும்பம் இருக்காது ஏன் என்றால் பாவங்கள் அவரின் வாரிசுகளை தொடரும்.
இதை நாம் சொன்னால் யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் ஏன் என்றால் உள்ளூர் சரக்கு விலை போகது அதுபோல்தான்
அப்படி பட்டவர்களுக்காக : http://www.ghostresearch.org/ghostpics/fake/frauds.html
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
வெளி நாட்டில் ஆவிகளின் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
ஆவிகள் இருப்பது உண்மைதான்
நான் பேயை நேரில் பார்த்தேன்
நடிகை மும்தாஜ் சொல்கிறார்
சென்னை, ஜூன்.22
ஆவிகள் இருப்பது உண்மைதான். நான் லண்டன் போய் இருந்தபோது, ஒரு பேயை நேரில் பார்த்தேன் என்று நடிகை மும்தாஜ் கூறினார்.
பேய் படம்
மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் டைரக்டர் விஜய டி.ராஜேந்தரால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், மும்தாஜ். இவர், மும்பையை சேர்ந்தவர்.
குஷி, மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மனாபன் உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்போது அவர், திக்...திக்... என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இது, ஒரு திகில் படம் ஆகும். ஆவி கதை. இந்த படத்தில், மும்தாஜ் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார்.
பேட்டி
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
மும்தாஜுடன், பாக்யராஜின் மகள் சரண்யா, புதுமுகம் தருண்பாலா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாகி வருகின்றன.
படப்பிடிப்பு இடைவேளையில், நடிகை மும்தாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பேய் படத்தில் நடிக்கும் நீங்கள் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து,மும்தாஜ் கூறியதாவது:&
லண்டன் பேய்
நான் ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் போய் இருந்தபோது, அங்குள்ள நீத்ரோ என்ற ஓட்டலில் தங்கியிருந்தேன். இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீர் என்று எனக்கு விழிப்பு வந்தது.
என் தலைக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், வெள்ளையாக ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. குலை நடுங்கிப்போனேன். என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. பயத்தில், வார்த்தைகள் வெளிவரவில்லை.
அது, பேய்தான் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் ஆண் பேயா, பெண் பேயா? என்று தெரியவில்லை. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். மீண்டும் மெதுவாக கண் திறந்து பார்த்தபோது, அந்த உருவத்தை காணவில்லை.
காய்ச்சல்
மறுநாள் எனக்கு பயங்கர காய்ச்சல் வந்து விட்டது. உடனடியாக அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு, வேறு ஓட்டலுக்கு போய்விட்டேன். என் வாழ்க்கையில், பேயை நேரில் பார்த்த முதல் அனுபவம் அதுதான்.
இவ்வாறு நடிகை மும்தாஜ் கூறினார்.
நன்றி : தினத்தந்தி 22/6/2007
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
என தோழி 3 வருடம் குட்டிச்சாத்தானுடன் வாழ்ந்தாதாக என்னிடம் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்தாள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
நான் பேயை பார்த்ததில்லை, இருப்பினும் சீன பாசை, சக்காய் என்ற ஆதிவாசிகளி காட்டு பாசை மற்றும் ஆங்கில பாசை தெரியாத என் அத்தை என்னிடம் ஆங்கிலத்தில் பேய் பிடித்த பொழுது பேசினார்கள். மற்ற மொழிகளிலும் பொளந்து கட்டினார்......அது எப்படி என்று இன்றும் எனக்கு புரியாத புதிர்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆம்,ஆவிகள் உலகமென்ரொரு உலகமே இருக்கிறது.பேய் ஆவி,குட்டிச் சாத்தான்,பிசாசு என்பதெல்லாம் உண்மைதான்.
அதை பற்றி நிறய அறிய வேண்டுமெனில், நீங்கள் தமிழகத்தில் விழுப்புரம் அருகிலுள்ள விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஆசிரியராக உள்ள பேசும் ஆவிகள் என்ற மாத இதழை பாருங்கள்.இவை சம்பத்தப்பட்ட அணைத்திர்க்கும் நிச்சயம் விடை காண்பீர்கள்.
அப்போ.... ஆள வுடுங்கப்பா நான் ஓடிப் போயிடுறன்..!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks