எனக்கு சிறுவயதில் ( வயது 10) கொஞ்சமும் பிடிக்காத விடயம் சங்கீதம் படிப்பது. ஆயினும் எனது அம்மா ஒரு சங்கீதப்பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். எனக்கு சங்கீத ஆசிரியையின் அடித்தொல்லை ஒரு புறம் அம்மாவின் அரியண்டம் ஒரு புறம். இறுதியாக் இருவருக்கு அலுவா குடுக்க முடிவு சேய்தேன்.
மாலை 4 மனிக்கு வகுப்புக்கு கிளம்புவது போல் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன். பின்பு வீதியெல்லாம் சுத்திவிட்டு மாலை 6 மணியளவில் சாதாரணமாக வகுப்பு முடிந்து வீடு திரும்புவது போல் வீடு திரும்புவேன். சுமார் 6 மாதம் இந்த நாடகம் தொடர்ந்தது.
ஒரு நாள் துரதிஷ்டவசமாக அம்மாவும் சங்கீத ஆசிரியையும் ஒருவரை ஒருவர் வீதியில் சந்தித்துவிட்டனர். சும்மா இருக்கேலாமல் எனது அம்மாவும் " அப்ப டீச்சர் என்ற மகன் இந்த முறை சங்கீதபரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் தானே??" என கேட்டார். அப்போது டீச்ச்ர் " உங்கட மகன் கிலாசுக்கு வரதேயில்லை". அப்போது தான் என்னுடைய திருவிளையாடல் அம்பலமானது.
பின்னர் இருவரு கையும் களவுமாக என்னை வீதியில் வைத்துப்பிடித்தனர். அப்பப்பா பின்பு என்ன இரவிரவாக எனக்கு சங்கீதப்பயிற்சி தந்து 1 ம் தரம் பரீட்சையை எடுக்க வைத்தன்ர். அதன்பின்பு நான் அம்மாவிடம் அட்ம்பிடித்து ஒரு மாதிரி வகுப்பிலிருந்து நின்று விட்டேன். ஆயினும் இப்போ ஏன் படிக்காமல் விட்டேன் என்று கவலையாக உள்ளது.
கண் கெட்டபின்பு சூரிய நம்ஸ்காரம்
Bookmarks