Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: நான் வாழ வேண்டும்....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1

    நான் வாழ வேண்டும்....

    பொறியாளனாக இருந்தாலும், மனம் விரும்பிய காரணத்தினால் கவுன்சிலிங் பயின்று வருகிறேன், என் வகுப்பில் ஒருவர் கூறிய சம்பவம்...


    நான் வாழ வேண்டும்....


    சில்லென்ற அந்த ஸ்பரிசம் என் கன்னத்தில் விழுந்து என் உறக்கத்தைள் கலைத்தது.. அம்மா காப்பியுடன் நின்று கொன்டிருந்தாய். அவள் கன்னதில் இருந்த கரியை துடைத்து கொண்டு "குட் மார்ணிங்" சொல்லிய என்னை கண்ணதில் ஒரு முத்தம் தந்து பள்ளிக்கு செல்ல செல்லமாய் மிரட்டினாள்..சுமார் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்லுகிறேன், இத்தனை காலம் அனுபவித்த அந்த மருத்துவமனை நெடி இன்னும் என்னுள் ஓடி கொன்டிருந்து.

    பள்ளியின் கடைசி பென்ச்சில் இருந்து கலகல என் சிரித்து கொன்டு இருந்த என்னை பார்த்து செல்வி ஒரு நிமிடம் அதிந்து பின் என் மூக்கில் வழித்த ரத்தத்தை துடைத்த போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.அலறி அடித்து கொண்டு வந்த அப்பா என்னை மருத்துவமனைக்கு கொன்டு சென்று பரிசோதித்த பிறகு "அனயிமியா" என்று சொன்னார்கள். +2 படித்து கொன்டு இருந்த எனக்கு அது சிவப்பு ரத்த அனுக்குறைவால் வருது என்று மட்டும் தெரியும். நடுதரகுடும்பம் என்பதால் அப்பாவின் வரவில் பெரும் பகுதி என்னுடைய மற்றும் தங்கையின் படிப்பிற்காக மட்டுமே சரியாக இருந்தது. ஏதேதோ சிகிட்ச்சைகளை பற்றி பேசினார்கள், ஆனாலும் அப்பாவின் கண்களை வாசிக்கும் திறன் எனக்கு இல்லை, ஆனால் கண்ணிரை மட்டும் காண முடிந்தது.....

    குளியல் அறையில் செம்பு கிழே விழ, தங்கை வேட்டின் பின்புறம் இருந்து ஓடி வந்தாள், முகத்தில் ஒரு பயம் கலந்த பாசம் தெரிந்தது, திட்டினாள் "கவனம் கிடையாதா?". அமைதியாஇ கதவை அடைத்து கொண்டு குளிக்க ஆரம்பித்த எனக்கு பள்ளியை நினைத்த போது செல்வி, கலை நியாபகம் வந்தது, எத்தனை நாட்கள் ஆயிற்று. கலை குறைவாகதான் பேசுவாள் ஆனால் பாசகாரி, செல்வி வாயாடி கொஞ்சம் பயந்த சுபாவம்.

    வகுப்பில் எல்லோரும் என்னை பரிதாபத்துடன் பார்த்தனர், ஆசிரியர் உட்பட.. கலை என்னை கட்டி கொன்டாள், செல்வி கண்ணில் கண்ணீர் தெரிந்தலும், என்னை பார்த்து சிரித்து கொன்டாள்.
    என்னக்கு எல்லாம் பிடித்து போயிருந்து, அம்மா அப்பா, தங்கை, செல்வி, கலை, பள்ளி, அரசரடி வினாயகர் கோவில், எங்கு சென்றாலும் கூடவே வரும் நாய் குட்டி. எல்லாம் சரியாகிவிடும் ... அம்மாவும் அப்படிதான் சொன்னாள். அனால் என்னக்கு பெட்ரோல் அடிப்பது போல் ரத்தம் அடைப்பது மட்டும் பிடிக்கவில்லை..

    அன்று கலை என்னிடம் அதிகம் பேசவில்லை, சில நாட்களாகவே அவள் சரியில்லை என்று தெரிந்தது. நான் அவளை கண்டு கொள்ளவில்லையோ என்ற வருத்தம் வர, நானும் செல்வியும் அவளிடம் கேட்க அவள் விலகி சென்றாள். மதியம் மரத்தடியில் சாப்பிட்டு கோண்டு இருந்த எஙளிடம் வந்தவள்
    "ஏய்!! மதியம் வேதியல் வகுப்பை விட்டு வருவீர்கள? எனக்கு உங்களிடம் நிறைய பேச வென்டும்".
    என்றவள் முகத்தில் ஏக கலவரம். வேயிட்டிங் அறையின் முலையில் பதுங்கி கொண்டோம்.

    "என்ன சொல்லு..."

    என்று செல்வி மெதுவாக கத்தினாள், கலையால் அழ மட்டுமே முடிந்தது. சிறுது நேர அமைதிக்கு பிறகு..

    "எனக்கு சாக வேண்டும், உதவுவீர்களா?? "..

    செல்வி முகம் வேளிறி போயிருந்தது, எனக்கு எதுவும் புரியாதது போல் இருந்து..

    "எனக்கு 3 1/2 மாதங்களக மாதவிடாய் வரவில்லை..."

    "எதோ தெரியாமல் நடந்துவிட்டது, அம்மா, அப்பாவுக்கு தெரிந்தால் என்னை கொன்று போட்டு விடுவார்கள், அதுக்கு பதிலா நானே செத்து போயிடுறேன்..." என்று அழ ஆரம்பித்தாள்

    செல்வி ஏதேதோ சொல்லி கலையை சமாதான படுத்தி கொண்டிருந்தாள்.. அவளை நிறுத்திவிட்டு நான் தொடர்ந்தேன்

    "ஏன் நீ சாகவேண்டும்? நாம் ஏன் நம் உயிர்களை மாற்றி கொள்ள கூடாது? எனக்கு வாழ வேண்டும்.."

    "எனக்கு குணம் ஆகும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.."

    யாரும் வெகு நேரம் பேசவில்லை., செல்வி எதோ முடிவுக்கு வந்தவளாய், அமைதியை கலைத்தாள்.
    "சரி! 2 வாரம் கழித்து இங்கு சந்திப்போம், பிறகு உன் சாவை பற்றி முடிவு எடுக்கலாம்" என்று கலையிடம் கூறி விட்டு வேளியெறினாள். நனும் பின் தொடர்ந்தேன்.

    கலை மறுநாள் பள்ளிக்கு வரவில்லை , நானும் செல்வியும் பதறினோம், அடுத்த நாள் வந்தாள் யாரிடமும் பேசவில்லை. அந்த வாரம் எதோ மந்தமாக போனது. ஆடுத்த வாரம் வகுப்பில் நுழைந்த எனக்கு கலை முகத்தில் சந்தோசம் ஒட்டியிருப்பதை பார்த்தேன்,

    "இன்று கோவிலுக்கு போகவில்லை" என்றாள். அருகில் இருந்த என் கையை அவள் கரம் இறுக்கியது, அவள் கண்ணில் நான் சொன்ன வரிகள் "நான் வழ வேண்டும்.." என்று தெரிந்தன...



    குறிப்பு: சம்பவத்தின் "நான்", என் வகுப்பு நண்பர், இரு குழந்தைகளின் தாய்... வாழ்ந்து கொன்டிருக்கிறர், இன்னும் 100 காலம் நிச்சயம் வாழ்வார்
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நல்ல பாடம்...

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அற்புதமான படைப்பு எப்படித்தான் தவறவிடப்பட்டதோ..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    மனம் கனத்துப் போச்சுங்க... அவங்க இன்னும் பல காலம் நல்லா இருக்கட்டும்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வெகு காலம் தாழ்த்தி படித்த... சம்பவம்.. மனதை பாதித்தது....

    எல்லா உயிர்களும் பல்லாண்டு வாழட்டும்....

    நம்பிக்கை தான் வாழ்க்கையே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மறுபதிப்பு அறுமைதானே நன்பர்களே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அருமையான ஆக்கம் என்று சொல்வதிலும் பார்க்கம் திறமையாக கேள்விப்பட்டதை தொகுத்து அளித்துள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    எதை இழந்தாலும் இழப்பு இல்லை, தன்னம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர! என்பதற்கு வாழும் ஓவியமாக உயிரூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் பென்ஸூ.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பென்சு

    பல கதையாசிரியர்கள் கடைசியில் நெஞ்சில் கல்லை வைப்பார்கள், நீங்களோ மெல்ல மெல்ல பாரத்தை குறைத்துல்லீர்கள்.

    சபாஷ்

    வகுப்பு நண்பர் இரு குழந்தைகளின் தாய் சந்தோஷமாய் பல்லாண்டு வாழட்டும்




    Quote Originally Posted by mukilan View Post
    எதை இழந்தாலும் இழப்பு இல்லை, தன்னம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர! என்பதற்கு வாழும் ஓவியமாக உயிரூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் பென்ஸூ.
    அருமையான வாக்கியம். (நன்றி:முகி)
    Last edited by ஓவியா; 12-02-2007 at 07:57 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என் கண்ணிலே படத் தவறிய ஒரு அருமையான படைப்பு!, வாசிக்கும் போது நெஞ்சமே கனத்தது, எவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு அழகாக இவ்வளவு இயல்பாக.......

    உங்களது அந்த நண்பர் இன்னும் பல நூறாண்டுகள் வாழ்வார் என்ற உங்கள் முத்தாய்ப்பான முடிவு எவ்வளவு உண்மை. அவரது வாழ்க்கை மீதான பற்றுதலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஒற்றைவார்த்தையில் சொன்னால் இது ஒரு பொக்கிஷம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல பாடம்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •