சங்கதி தெரியுமோ. இண்டைக்கு வவுன தீவில் விடுதலைப்புலிகளின் முகாம் தாக்கப்பட்டுள்ளது. இராணுவம் தாங்கள் இல்லை எண்டு மறுத்திட்டினம். எங்க போய் முடியப்போகுதோ தெரியவில்லை????
சங்கதி தெரியுமோ. இண்டைக்கு வவுன தீவில் விடுதலைப்புலிகளின் முகாம் தாக்கப்பட்டுள்ளது. இராணுவம் தாங்கள் இல்லை எண்டு மறுத்திட்டினம். எங்க போய் முடியப்போகுதோ தெரியவில்லை????
இன்று காலை கன்னட நடிகர் இராஜ்குமார் பெங்களூரில் இராமையா மருத்துவமனையில் இயற்கை எய்தினார். ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 78. அவருடைய சகோதரரை சிறிது காலத்திற்கு முன்னர் இழந்தது அவரை மிகவும் பாதித்தது என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
அவரது குடும்பத்தார்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்போதுதான் இந்தச் செய்தியைப் பதியலாம் என்று வந்தேன்.
அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பெங்களூர் சில இடங்களில் மக்கள் உணர்ச்சிவசப் படுவதால் நண்பர்கள் அனைவரும் சிறிது கவனமாக இருக்கவும். என் தம்பி அலுவலகத்திற்கு விடுமுறை விட்டு விட்டதாக அறிகிறேன்.
டீவியில் ஒரு காரும் ஜீப்பும் எப்படித் தாக்கப்பட்டு தள்ளப்பட்டு உருட்டப்பட்டு எரிக்கப்பட்டன என்பதை மிகவும் விலாவாரியாகக் காட்டினார்கள். முதல்வன் படத்தில் வருவது போல போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.
பெண்கள் கூட கல்லைப் போட்டு ஜீப் கண்ணாடியை உடைத்த வீரதீரக் காட்சியைக் கண்டு பெண்ணுரிமை பற்றிப் பேசுகின்ற என்னைப் புல்லரிக்க வைத்தனர்.
ஜீப்பும் காரும் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து பிறகு பட் பட்டென்று அங்கங்கு வெடித்து கொழுந்து விட்டெரியும் காட்டி மிகவும் தத்ரூபமாக கிராபிக்ஸ் போல இருந்தது.
எங்கள் அலுவலகத்தில் மாலை ஐந்து மணிக்கே மொத்தப் பேரையும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு....நாளைக்கு அலுவலகம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
நானும் கேள்விப்பட்டேன்..இந்த நிகழ்வுகளைப் பற்றி. இன்னும் இரண்டொரு நாட்களுக்கு பதட்டம் நிலவும் போல தெரிகிறது..
டாக்டர்.ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!!!
உடல் குன்றி.. முதிர்ந்த வயதில் மரணமடைந்துள்ளார்....
எதற்கென்று உணர்ச்சிவசப்படுவது....விவஸ்தையில்லாமல் போய்விட்டது....
நல்ல ஜனநாயகம் வாழட்டும்...
ராஜ்குமார் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆனால் இப்படி மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது.
மக்கள் சொத்து அநியாயமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது பெங்களூரில்.
இன்று பெங்களூரில் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் வழக்கம் போல வெளியே நடமாடினார்கள். கடைகள் திறக்கத் தொடங்கின. பேருந்துகள் ஓடத் தொடங்கின. நானும் அலுவலகம் வந்திருக்கிறேன்.
தமிழீழத்தின் தலைநகராக அறியப்பட்ட திருமலையில் சிங்கள்க் காடையரின் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 16 பேர் பலி 50 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி. காலம் காலமாக தமிழரை ஏமாற்ற நினைப்பவர்களிற்கு விரைவில் பதிலடி கிடைக்கும். இராணுவமும் காவல்துறையும் வழமைபோல் சிங்களக்கடையருக்கு பாதுகாப்பு கொடுத்ததாக தெரிகின்றது. இலங்கை அரசு விசயத்தை மூடி மறைத்துள்ளது.
திருகோணமலையில் வெள்ளியன்று மீண் டும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்த வன்செயல்களில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஓர் இந்தி யப் பிரஜை ஆகியோரின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை சிங் களக் குண்டர்கள் நடத்திய கொடூரத் தாக்கு தலில் நடேசபுரம் பகுதியைச் சேர்ந்த சோம சுந்தரம் மகேஸ்வரி(வயது 60) என்ற வயோ திபப் பெண் கத்தியால் குத்தப்பட்டுக் கொல் லப்பட்டார்.
இந்தியப் பிரஜையான பெங்களூர் இராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜோதிடரான வெங்கடசாமி வெங்கட்ராமன்(வயது 30) என்பவரும் திருமலை மாவட்டச் செயலகத் தில் சிற்ழியராகப் பணிபுரியும் தண்ணி மலை நமசிவாயலிங்கம்(வயது 28) என்ப வரும் வன்செயலில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.
திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு உத் தரவு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
edwp cjad;.fhk;
இலங்கை சம்பவங்கள் மனதை பாதிக்கிறது.. அமைதி, சமாதானம் திரும்ப பிராத்தனை செய்வோம்
தென்னிலங்கையில் அமைதி திரும்பி தமிழர்களும் ஏனையவர்களும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ இறைவனை வழிபடுவோம்.
There are currently 3 users browsing this thread. (0 members and 3 guests)
Bookmarks