நல்லவேளை. கடவுளுக்கு நன்றி பல. தாங்கள் நலம் தானே?
நல்லவேளை. கடவுளுக்கு நன்றி பல. தாங்கள் நலம் தானே?
நன்பர்களே நான் நலம்.
ஆனால் அடுத்த திங்கள் வரை நாங்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாது,
என்று கட்டளை ..இன்று வரை காவல் அதிகாரிகள் பலத்த பாதுக்காப்புடன் செயல் ஆற்றுகின்றனர்....
பாஷ்போர்ட், பணம், லாப்டோப், நகைகள் எல்லாம் இருக்க என்று தெரியவில்லை.....
(இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு)
கடவுளுக்கு நன்றி.
உங்கள் அனைவரின் மடல் கண்டு மனதுக்கு சந்தொஷம்.
நன்றி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஓவியா, உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே, அதுவே மனதிற்கு சந்தோஷம்.
இப்பொழுது என்ன செய்கிறீர்கள். நண்பர்கள் யாராவது உதவினார்களா?
ஓவியா, வருந்தற்க. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது எனக் கொள்க. பெரியதைச் சிறியதாக்கி உங்களைக் காத்திருக்கிறான் ஆண்டவன். இனியெல்லாம் சிறப்பாக நடக்கும் பாருங்கள்.
கடவுளே நன்றி!Originally Posted by இனியவன்
உங்களுக்கு எதுவும் நேராமல் காத்தமைக்கு இறைவனுக்கு நன்றி..
ஓவியாக்கா அதென்ன செல்போனை மட்டும் காப்பாற்றியிருக்கிறீங்க....
நன்பர்களே நான் நலம்
இன்னும் பல்கலைகலகத்தின் வசிப்பிடத்திற்க்கு திரும்ப வில்லை...
மற்றவை அடுத்த மடலில்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இன்றுதான் இந்த செய்தியை படித்தேன் சகோதரி... வாழ்த்துக்கள்... நீங்கள் தப்பியமைக்கு... நல்லகாலம், தீயின் கரங்கள் தீண்டி இந்த ஓவியம் காயம்பட்டுவிடவில்லை...
இன்னுமா மனதில் அச்சம்... எங்களை நினையுங்கள்... அது தானாகவே விலகிவிடும். தீக்குள் தீய்ந்தபின்னும் மீண்டும் எழும் பீனிக்ஸ்சாய் எழுந்து வாருங்கள் சகோதரி...
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....
(காதல் கொடுமையா.....இல்லை காயம் கொடுமையா...?
நினைக்கவே ரொம்ப வலிக்கிறதுப்பா)
வீடு (அறை ) திரும்பியாகிவிட்டது
நான், என் அறை அனைத்தும் நலமே.....
தமிழ்மன்ற நன்பர்களின் கனிவான மடல்கலுக்கு நன்றிகள்
Last edited by ஓவியா; 20-07-2006 at 04:21 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
[QUOTE=ஓவியா]நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....
வாழப் பயந்த கோழை
நித்தம் நித்தம் பயந்து வாழப் பிடிக்காமல்
மாட்டிக் கொண்டாரோ என்னவோ,
ஆழ்ந்த அனுதாபங்கள்,
நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,
இனியவன்.
வாழத்தெரியாத ஒரு கோழைக்குOriginally Posted by ஓவியா
சாவதற்கு தைரியம் இருக்கிறது
அந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பசங்க திருந்த மாட்டாங்க என்பதற்கு அடுத்த உதாரணம்.Originally Posted by ஓவியா
பெண்கள் பின்னால் போகாதே!!!
அவர்களை பின்னால் வரவை அன்பனே!!
அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் போலீஸ் ஏட்டாக இருந்தார். இவரது மகள் சங்கீதா (22) விருதுநகரில் உள்ள ஒரு கல்லுரியில் ஹாஸ்டலில் தங்கி எம்.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சிவசுந்தரம் (22).
சங்கீதாவுக்கு சிவசுந்தரம் மாமா உறவாகும். இதனால் சிவசுந்தரம் சங்கீதாவிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். சங்கீதா பல முறை மறுத்தும் அவர் தொந்தரவு செய்துள்ளார். நேற்று காலையில் சங்கீதா வகுப்பறையில் அமர்ந்திருந்தார். இவருக்கு முன்பாகவே அங்கு காத்திருந்த சிவசுந்தரம் ஒரு கையில் தாலியுடனும், ஒரு கையில் கத்தியுடனும் சங்கீதாவை நெருங்கி, தாலி கட்ட முற்பட்டபோது சங்கீதா தடுத்துள்ளார். சிவசுந்தரம் சங்கீதாவின் இடது கையில் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். சத்தம் கேட்டு உடன்படிக்கும் மாணவிகள் சிவசுந்தரத்தை பிடித்தனர். இதனால் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜன், சிவசுந்தரத்தைக் கைது செய்தார்.ந்தரம்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks