வாசலில் தனது வண்டியை துடைத்து கொண்டு இருந்தார் ஒருவர்..நம்ம
இளசு மாதிரின்னு நினைச்சுக்குங்க....
பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்,கதவை திறந்துகொண்டு
அவள் வீட்டுக்கு முன்னாடி இருந்த கடிதபெட்டியை திறந்தாள்...
உள்ளே பார்த்தாள்....மூடினாள்..திரும்ப போய்விட்டாள்
கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வந்தாள்....திறந்தாள்..பார்த்தாள்..
மூடினாள் போய்விட்டாள்.....
மீண்டும் கொஞ்ச நேரத்தில் அதே மாதிரியே.....நம்மாளு உடனே
என்ன ஆச்சு மேடம் என்றார் பவ்யமாக...
அவள் எரிச்சலுடன்..என் கம்ப்யூட்டர் "You've got Mail"-ன்னு
சொல்லுது..ஆனால் இங்கே வந்து பார்த்தால் ஒன்னுமே
இல்லை என்றாள்....
(இளசு உள்ளே கூட்டிட்டு போய் சொல்லி கொடுத்தது வேறு கதை)
Bookmarks