Page 5 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #49
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!! இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.

    அடேங்கப்பா... எவ்வளவு கவிதைகள்.. ஆதவனின் வெயில் கரங்களை விட உங்களின் கவிதைகள் அதிகமாகிவிடும் போல் தெரிகிறதே....

    வெயில் என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பே வெளிவிடலாம்.....

    இதே வேகத்தில் கவிதைகள் வந்து குவிந்தால், வெயில் காலம் முடிவதற்குள் இந்தத் திரி பல பக்கங்களை தாண்டிவிடும்.

    அமர் அண்ணா, சிவா அண்ணா, பூமகள் ஆகியோரின் கவிதைகளும் அற்புதம்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அலைந்து திரிந்து
    பசித்த மதியத்தில்..
    உச்சிக் கதிர்கள்
    உச்சி வகிடு வழி
    வழியத் துவங்கியிருக்கும்..

    எப்போதும் நிற்கும்
    மரத்தடி நிழலின்
    புழுது படிந்த இலைகளின்
    வடிகட்டிய குளுமை
    வெப்பக் காற்றோடு
    ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

    ஓரமாய் பானையோடு
    கம்பங்கூல் தாத்தாவும்..
    அவர் கொண்ட சுத்தமான
    ஆறுவகை வற்றல் குவியல்களும்..

    நினைவில் எழுந்து
    நாவின் நீர் சுரப்பிக்க..
    காத்துக் கொண்டிருக்கிறேன்..
    அடுத்த வருட
    வெயில் காலத்துக்காக...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #51
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நீங்க சொன்ன மாதிரி எழுதலாம்..
    ஆனா நான் தான் கவிஞன் இல்லையே... :(

    கற்பனைகளை கடன் வாங்க வேண்டிய நிலையில் தானே இருக்கிறேன்.
    வெக்கையில் மதியும் இழந்தாச்சு..

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by samuthraselvam View Post
    அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!! இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.
    தங்கையே...
    தாமரை அண்ணா ஒரு கடல்... அள்ள அள்ளக் குறையாத கருத்துகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக் காரர்..

    அவர் அறியேன் என்று சொல்லி இது வரை நான் கேட்டதில்லை..

    அவரின் பல் முகங்கள் நெருங்கியவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகும்.. இப்போது நீங்களும் அருகில் வந்திருப்பது புரிதலிலிருந்து தெரிகிறது..

    எங்கள் அனைவருக்கும் அவ்வப்போது தேவைப்படும் அனைத்து பதில்களும் இந்த மகா சமுத்திரத்திடமிருந்து அன்புடன் கிட்டிவருகிறது...

    இவரின் ஆழம் அறிந்தவர் எவருமில்லை என்றே சொல்லலாம்.. உணர்ந்ததால் இத்தனை சொல்கிறேன்..

    மொத்தத்தில்..

    தாமரை அண்ணா..


    • அளக்க முடியாத ஆழமறிய இயலாத அறிவுச் சுரங்கம்...
    • வற்றா ஜீவ நதி...
    • எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சற்றும் சலனப்படாத ஆழ் கடல்..



    இதுக்கு மேல சொன்னா.. தாமரை அண்ணா எத்தனை ஈ-பணம் கொடுத்தார் இப்படி பேச என்று ஒரு கூட்டம் கேட்டு வரும்... ஆகவே.. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தங்கையே...
    தாமரை அண்ணா ஒரு கடல்... அள்ள அள்ளக் குறையாத கருத்துகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக் காரர்
    அதான் குடிக்கக் குடிக்க தாகம் தணிவதில்லை.

  6. #54
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தாகம் தணிந்து விட்டால் தேடல் இருக்காதே அமர் அண்ணா...!!

    (நாங்களும் சொல்வோம்ல....!! )
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!! இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.

    .
    எப்படி பருவகாலங்கள் மாறி மாறி வருதோ அப்படி எழுத்துக்களும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்

    எதாவது ஒரு பருவத்தில் பூமியைப் பார்த்துவிட்டு பூமி இப்படித்தான் என்று நாம் கற்பனை செய்து கொள்வதில்லை..

    கவிதைகளாகவே வாழ்ந்த பருவ காலம் ஒன்று உண்டு.. கட்டுரைகளாக கழித்த காலங்களும், விவாதங்களில் வெடித்த காலங்களும், நகைச்சுவையில் திளைத்த காலங்களும், அனுபவங்களை வடித்த காலங்களும், கதைகளை கொறித்த காலங்களும் இப்படி அந்தந்த பருவத்திற்கேற்ற மாதிரி பூமி ஆடை அணிந்து கொள்வது போல எழுத்தாளன் வேடமேற்றுக் கொள்கிறான்.

    எழுத்தை ஆண்டால் தானே எழுத்தாளன்.. மத்தவங்க வெறும் எழுதுபவர்கள் மட்டும்தானே...

    அதனால்தான் எழுத்து எவ்வடிவு என்றாலும் அதைக் கைகொள்கிறேன்.

    என்னுடைய கவிதைகளைத் தேடிப்படிக்க சிரமப்பட வேண்டியது இருக்கும். அமரன், பூமகள், மீரா, அக்னி இப்படிச் சிலரைக் கேட்டால் சுட்டி தந்து உதவுவார்கள்..

    உங்களுக்காக சில திரிகள்...தாமரை கவிதை எழுதிய திரிகள்.. தேடிப் பிடிச்சு படிக்கணும். எங்கியாவது ஒளிஞ்சுகிட்டு இருக்கும்

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15396
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10049
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6177
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6055
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7397
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6057
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18437
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294
    http://www.tamilmantram.com/vb/showp...6&postcount=21
    http://www.tamilmantram.com/vb/showt...?t=7317&page=2
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9343
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14256
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15696
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6293
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6268
    http://www.tamilmantram.com/vb/showp...5&postcount=23
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6067
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6242
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6344
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7192
    http://www.tamilmantram.com/vb/showp...51&postcount=6
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6068
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6584
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6583
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6546
    http://www.tamilmantram.com/vb/showp...68&postcount=4
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6139
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6075
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6128
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9343
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7072
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6093
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17286
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10049
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9283
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15466
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6690
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6268
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6068
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6550
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6549
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6546
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6267
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6177
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6051
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6139
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6128
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6075
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6093
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6208
    Last edited by தாமரை; 05-05-2009 at 12:53 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சுருக்கங்கள் விழுந்த கரங்கள்
    சுருள் முடியைக் கோதி
    உருண்டைச் சோறெடுத்து
    ஊட்டிய தருணங்களில்
    எரிந்தான் சூரியன்

    பனைவிசிறிகள்
    அசையாமல் நின்ற
    காற்றுக்கு
    நடனம் சொல்லித்தந்து
    ஆடவைத்ததில்
    இன்னும் கோபம் கொண்டு
    உக்ரமாய்
    எரிகிறான் சூரியன்


    நீ விசிறி விடு

    அவன் எரியட்டும் பாட்டி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பூமகள் View Post

    நினைவில் எழுந்து
    நாவின் நீர் சுரப்பிக்க..
    காத்துக் கொண்டிருக்கிறேன்..
    அடுத்த வருட
    வெயில் காலத்துக்காக...!!
    வெயில் காலத்து விடுமுறையும்
    பாட்டி வீடும்
    ஆகஸ்ட் பதினைந்தை
    மிட்டாய் நாளாக்கி
    கேலி செய்கின்றன..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    படர்ந்திருக்கும் வெயில்
    உச்சியைக் குத்தியிழுக்கிறது
    அடர்ந்திருக்கும் ரோமங்களின் வழி
    கைகளில் ஊடுறுவப் பார்க்கிறது
    முகமெங்கும் வெயிலின் தடங்கள்
    அப்பிவிடா தடயங்கள் இருக்கின்றன
    என் தோள் தேடி வருகிறார்கள்
    பறவையினத்தவர்கள்
    வெப்பத்தை வென்றுவிட்ட சந்தோஷத்திலும்
    சலனமற்று இருக்கிறது.
    என் காலடி நிழல்

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மதிய உணவு முடிந்து
    மெல்ல நடக்கிறேன்
    நீளமாய் சோம்பி உறங்கும்
    கருநாகச் சாலை அரவின் மீது..

    இத்தனை வருடங்கள் தொலைத்து விட்ட
    வெய்யில் சகவாசத்தை
    ஆதவன் சுட்டு உணர்த்த
    அசை போட ஆரம்பிக்கிறேன்,,

    முதுகும் உச்சந்தலையும்
    சுள்ளென சுட
    மனது மட்டும்
    சில்லென்று இருக்கிறது..

    நாற்புறம் மட்டுமல்ல
    வானத்தையும் அண்ணாந்து பார்க்கிறேன்..

    வியர்த்து வழிந்த சூரியன்
    முகம் துடைத்துப் போட்ட
    கைக்குட்டை வெண்மேகம்

    பறவைகளே இல்லா வானம்
    முகம் வெளிறிக் கிடக்கிறது..

    மரங்களெல்லாம் அசையாமல்
    இழந்து விட்ட இயற்கைக்கு
    மௌன அஞ்சலி செய்து கொண்டிருக்கின்றன

    அவசர அவசரமாய்
    கரியாய் இருமிக் கொண்டு
    வாகனங்கள்
    விரைந்து கொண்டிருந்தன,..

    வெளியில் தெரிந்தவை எல்லாம்
    வேகங்கள் சோகங்கள்

    ஆழ மூச்சிழுத்து
    பெயர் தெரியா மொட்டை மரத்தடியில்
    உள்ளுக்குள் எனை வாங்கி
    நானறிந்த வெயில் காலங்களை
    தேடிப் பார்த்து
    குளிர்ந்து போகிறேன்..

    மீண்டு(ம்) மெல்ல நடக்கிறேன்
    உச்சிச் சூரியன் வெப்பத்தை
    உள்ளிருந்து வந்து நீர்
    தணித்துக் கொண்டிருக்கிறது...

    உதடுகள் உப்புக் கரிக்கின்றன..
    கைகால்கள் பிசுபிசுக்கின்றன
    வெற்றுக் கால்களால்
    நடக்க ஆசை என்றாலும்
    இயலாமையினால்
    குறுகித் தலைகுனிகிறேன்

    தூரத்துக் கானல் நீரில்
    வாகனங்களின் பிரதிபலிப்புகள் கண்டு
    எத்தனை ஆண்டுகள் ஆகின்றன
    அசை போடுகிறேன்..

    சாக்கடை நீரை ஒரு குருவி
    தயங்கித் தயங்கி அருந்துவதைக் கண்டு
    சட்டென
    உறுதி எடுத்துக் கொள்கிறேன்

    நாளை முதல் ஒரு வாளித் தண்ணீர்
    பால்கனியில் வைத்திட வேண்டும்..
    சட்டெனப் தோன்றியது
    வெய்யிலின் பிரஹாசம்
    உள்ளிருந்தும்...
    Last edited by தாமரை; 30-04-2009 at 11:23 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 5 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •