அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!! இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.
அடேங்கப்பா... எவ்வளவு கவிதைகள்.. ஆதவனின் வெயில் கரங்களை விட உங்களின் கவிதைகள் அதிகமாகிவிடும் போல் தெரிகிறதே....
வெயில் என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பே வெளிவிடலாம்.....
இதே வேகத்தில் கவிதைகள் வந்து குவிந்தால், வெயில் காலம் முடிவதற்குள் இந்தத் திரி பல பக்கங்களை தாண்டிவிடும்.
அமர் அண்ணா, சிவா அண்ணா, பூமகள் ஆகியோரின் கவிதைகளும் அற்புதம்.
Bookmarks