இது மனதை பாதிக்கிற விசயம் தான்.
உயிர் கொடுத்த... அன்பரின் குடுமப்த்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த தீக்குளித்தல் யார் மனதையும் மாற்றுமா.... என காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
இது மனதை பாதிக்கிற விசயம் தான்.
உயிர் கொடுத்த... அன்பரின் குடுமப்த்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த தீக்குளித்தல் யார் மனதையும் மாற்றுமா.... என காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
தமிழனினத்திற்காக தன் உயிர் நீத்த முத்துக்குமாரனுக்கு எமது அஞ்சலிகள். இவரைப்பற்றி தெரிந்தவற்றை தாருங்கள்.
உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முட்டாள்தனமான முடிவு!
இதைப் படிக்கும் சிலருக்கு என்மீது கோபம் வரலாம். ஆனால் இவரது சாவு இப்போதைய சூழலில் எள்முனையளவுகூட மாற்றம் கொண்டுவரப்போவதில்லை. முத்துக்குமார் குடும்பத்துக்குதான் பேரிழப்பு. அவரின் பாட்டியான மூதாட்டியின் கதறலை நான் மறக்க மிகக் காலம் எடுக்கும்.
ஆனால் முத்துக்குமாரின் சாவு இன்னும் சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படும். பின்னர் மறக்கப்பட்டுவிடும்.
வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!
தமிழனினத்திற்காக தன் உயிர் நீத்த முத்துக்குமாரனுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !
தமிழன்
உண்மையான ஒரு தியாகம்...ஆனால்...உபயோகமில்லாமலாகப்போகிறது. இந்திய அரசோ, தமிழக அரசோ இதை ஒரு பொருட்டாகவே மதிக்காது. உலகத்தமிழினத்தலைவரும் இதன்மூலம் என்ன ஆதாயம் கிடைக்குமென்று இப்போதே கணக்குபோட்டிருப்பார்.
இன்னும் எத்தனை முத்துகுமார்கள் தீக்குளித்தாலும் தமிழனின் வாழ்வு இருட்டில்தான்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நினைத்துப் பார்க்க முடியாத தியாகம்,
சகோதரனின் தியாகத்துக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..!!
அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...!!
இழந்தவை போதும், இனியும் வேண்டாம் இழப்புக்களும் இறப்புக்களும்...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களில் ஒருவனாகிவிட்ட என் மதிப்புக்குரிய சகோதரன் முத்துக்குமரனுக்கு என் வீர வணக்கம். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் :- வீரமிக்க தமிழ் இளைஞர்களே ! தயவுசெய்து இது போன்ற தற்கொலை போராட்டங்களில் இறங்க வேண்டாம். ஈழத்தில் போராடும் எம் சொந்தங்களுக்காக உங்கள் போராட்டத்தை மாற்று வழிகளில் நடத்துங்கள். எமது விடுதலைப் போராட்டங்கள் இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உறவை உடைத்தெறிந்து வெல்லவேண்டும். உங்கள் குரலை உயர்த்திக் கொடுங்கள். நம்புங்கள் நிச்சயம் தமிழீழம் மலரும். வணக்கம்.
வெகு முட்டாள்தனமான முடிவு.. அவருக்கு என் கண்டனங்கள்...
இங்குள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைத்து போராட்டங்கள் நடத்தவேண்டும். அப்படி நடந்தால் நானும் பங்கெடுக்கத் தயாராக இருக்கிறேன்.. சும்மா, அங்கொன்றும் இங்கொன்றுமா உண்ணாவிரதம், தீக்குளிப்பு எல்லாம், வீண்.... பேருக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது..
ஒருப் பக்கம் பீரங்கிகளை அனுப்பிவைத்துவிட்டு, மறுபக்கம் அமைதி (பேசுவதாக) பேசும் சாக்கடைகளிடம் எந்தத் தழலும் அமுங்கிவிடும்....
வாழ்க ஜனநாயகம்...
ஆத்திரத்துடன்
ஆதவன்
உலகத் தமிழர்களின் தலைவரை ஒரு கவிதை எழுதி தொலைக்காட்சியில் வாசிக்க சொல்லுங்க...!
முள்ளந்தண்டில்லாதவர்கள்...! வெட்க கேடு..! (வாயில ஏதோதோலாம் வருது.. இங்க பொதுவில எழுத முடியாது)
வீரவேங்கை முத்துக்குமாருக்கு என் வீர வணக்கங்கள்..., நீ தமிழன்... உன்னைப் போன்றவர்களால் நான் தமிழன் என்று சொல்வதைப் பெருமையாக்கஃ கொள்கின்றேன்.
தமிழக இளைஞர்களே... உங்கள் உயிரை மாய்க்காதீர்கள்..! அங்கிருந்து உரத்துச் சத்தம் போடுங்கள்... அப்பத்தான் டெல்லிக்கு கேட்கும்... சென்னைக்கு கேட்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.. அதிக பட்சம் ஒரு சட்ட மன்ற தீர்மானம், அனைத்து கட்சி கூட்டம், ஒரு கவிதை... இதுக்கு மேல எதுவும் வராது
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
நாம் தமிழர்கள் எதை ஒற்றுமையாக
சேர்ந்து சாதிதுள்ளோம்,
ஒற்றுமையா அப்படி என்றால் என்ன என கேட்கும் இனம் நமது இனம்,
எல்லாம் சுய நலம் , சுய நலம்.
கடவுளே காப்பாத்து இவர்களை
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
வேதனையான நிகழ்வு...
அவர் கொண்ட பற்று வரவேற்புக்குரியது என்றாலும்,
அதனை எடுத்துச் சொல்ல, அவர் மேற்கொண்ட வழிமுறை என்னைப்பொறுத்தவரையிற் தவறானது.
ஊடகத்துறையில் இருந்து கொண்டு,
அவர் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கலாம்.
தீக்குளித்தல் என்பதற்கு இருந்த மனோபலத்தை,
தன் எழுத்துக்களிற் பிரயோகித்து, எரித்திருக்கலாம்...
இருப்பினும்,
ஈழத்தமிழர்களுக்காக எரியூட்டிக் கொண்ட தீபத்திற்குத் தலைவணங்குகின்றேன்.
முத்துக்குமார்...
ஈழத் தமிழர்களின் இன்னல்களை
உலகிற்கு வெளிச்சம் போட,
எரியூட்டிக் கொண்டீரோ...
உம் தற்கொடையால்,
நெஞ்சம் நெகிழ்கின்றது...
உமது இழப்பால்
துயருறும் நெஞ்சத்தில்,
உமது நினைவுகளை
நிரப்பிக் கொள்கின்றோம்...
வீரவணக்கம் செலுத்துகின்றோம்...
எனது இதயவஞ்சலிகளும், அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல்களும்...
முத்துக்குமார் அவர்களின் மரணம்,
தொடர்கதையாக ஆகாதிருக்கப் பிரார்த்திக்கின்றேன்...
Last edited by அக்னி; 30-01-2009 at 10:58 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks