Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 79

Thread: விஞ்ஞானி தொடர் கதை (இறுதி பாகம்):

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    விஞ்ஞானி தொடர் கதை (இறுதி பாகம்):

    முகவுரை:

    இது ஒரு விஞ்ஞான சம்பந்தமான கற்பனைக் கதை. காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னைக்கு எவ்வாறு ஒரு விஞ்ஞானி தனது கண்டு பிடிப்பின் மூலம் தீர்வு காண்கிறார், அதில் அவருக்கு ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் எத்தனை எத்தனை? என்பதை இக் கதையின் மூலம் விளக்குகிறேன்.. இக்கதைக்காக கற்பனையாக ஒரு இயந்திரத்தை உருவாக்கனேன் சில வருடங்களுக்கு முன். இன்று அந்த இயந்திரம் அமெரிக்காவில் வேறு ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டு விற்பனைக்கும் தயார் என்பதை பார்த்து பூரிப்படைகிறேன். தலை சிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப் படி அறிவியலில் நான் கண்ட கனவு தான் இந்த இயந்திரம். கதை தொடர தொடர இந்த இயந்திரத்தைப் பற்றி புகைப்படங்களுடன் விளக்குகிறேன். இந்த கதையில் வரும் சமபவங்கள் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இனி கதைக்குச் செல்வோம்.


    காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு கிராமத்தின் விடியற் காலைப் பொழுது. கிராமத்து மங்கையான அஞ்சலை அவசரமாக எழுந்தாள். வழக்கம் போல் வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு அன்று சற்று தாமதமாகி விட்டது. ஒரு பானையில் தண்ணீர், விளக்குமாறு மற்றும் கோலப் பொடியுடன் வாசலுக்கு வந்த அஞசலையின் கவனத்தை கிராமத்து மக்கள் சிறு சிறு கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதை ஈர்த்தது. மேலும் சிலர் கிராமத்திலிருந்து புகைவண்டி நிலையம் செல்லும் பாதையில் செல்லத் துவங்கியதையும் அவள் பார்த்தாள். ஆவல் மேலிட அருகிலிருந்த ஒரு சிறுவனிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். பையன் சொன்னான்

    " டேசனுக்குப் பக்கத்து ஆல மரத்தடியில பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் வந்திருக்காரு. அவரைப் பார்க்கத் தான் எல்லாரும் போய்க்கிட்டு இருக்காங்க. நானும் அங்கே தான் போறேன்".

    கோலம் போடுவதை கை விட்டு விட்டு அஞ்சலையும் அவனுடன் சென்றாள். ஆலமரத்தடியை நெருங்க அதை பலர் சூழ்ந்திருப்பதை அவள் பார்த்தாள். எட்டிப் பார்த்தில் அவர்களுக்கு நடுவில் தாடி மீசையுடன் பாண்ட் ஷர்ட் அணிந்த ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள்.

    கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி " சாமி எதுவும் பேச மாட்டேங்குது. எல்லாரும் விழுந்து கும்பிட்டா கூட சாமி சிரிச்சுக் கிட்டே இருக்கே ஒழிய ஒரு விபூதி குங்குமம் கொடுத்துச்சுனா நம்ம கஷ்டம் போய் ஒரு விடிவு வரும். ஊம் என்னத்தை சொல்ல?" என்றாள்.

    ஊர் பெரியவர்களில் சிலர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த மனிதரின் அருகில் சென்றனர். அதில் ஒருவர் பய பக்தியுடன் தன் வாயை கையால் பொத்திக் கொண்டு " சாமி எங்கிருந்து வருது? சாமிக்கு தமிழ் தெரியுமா?" என்று கேட்டார். சாமியார் என்று அழைக்கப் பட்ட அந்த மனிதர் பெரிதாக சிரித்து " நான் சாமியார் இல்லை. என் தாடி மீசையை வைச்சு அப்படி நினைக்காதீங்க. நான் ஒரு விஞ்ஞானி. மும்பையிலிருந்து வருகிறேன்" என்றார்.

    அவர் அப்படி கூறியவுடன் அதுவரை சத்தம் போடாமல் அவர் பேச்சைக் கேட்ட மக்களிடயே கசமுச கசமச என்று பேச்சு சத்தம் துவங்கியது. எல்லோரிடயேயும் பொதுவில் எழுந்த சந்தேகம்
    " விஞ்ஞானி எனறால் யார்?".

    தொடரும்


    இங்கு நான் தொடரும் என்று போட்டதின் காரணம் மன்றத்து நண்பர்களும் விஞ்ஞானி எனபவர் யார் என்று பதில் அளிக்க ஒரு வாய்ப்பு வேண்டி
    Last edited by மதுரை மைந்தன்; 17-12-2008 at 11:39 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அண்ணா, அழகான தொடக்கம். விஞ்ஞான சம்பந்தமான கதையா? ஆவல் மேலிட காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பாகங்களுக்காக.

    நம்ம ஆளுங்களுக்கு தாடி மீசை வைச்ச எல்லாரும் சாமியார் தானா? திருந்தமாட்டாங்களேஏஏஏஏஏஎ
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    விஞ்ஞானி என்றால் யார்? நல்ல கேள்வி... கலக்கல் ஆரம்பம் தொடருங்க.. வாசிக்க காத்திருக்கின்றோம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 4 )

    விஞ்ஞானி என்பவர் யார்? இந்த கேள்விக்கு மன்றத்து நண்பர்கள் இதுவரை பதிலளிக்காதது எனக்கு சற்று ஏமாற்றமே. இருந்தும் மனம் தளராமல் கதையைத் தொடருகிறேன்.

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 2)

    விஞ்ஞானி என்பவர் யார்? இந்த கேள்வி அங்கு குழுமியிருந்த அனைவரது மனத்திலும் எழுந்து ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.

    ஓரு விடலைப் பையன் முன் வந்து "எனக்குத் தெரியும் யார் விஞ்ஞானி என்று" சொல்லவும் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.

    அவன் சொன்னான் " விஞ்ஞானி ஒரு பெரிய வெள்ளை கோட்டு போடடிருப்பார். குறுந்தாடி வெச்சிருப்பார். சோடா பாட்டில் கண்ணாடி போடடிருப்பார். அவரு பெரிய ரகசியத்ததை கண்டுபிடிச்சுருவாரு. இப்படித் தான் நம்ம ஊர் கொட்டாயில உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.அர் படத்தில காண்பிச்சாங்க".

    சென்னைக்குச் சென்று திரும்பியிருந்த இன்னொரு பையனும் இதை ஆமோதித்தான். அவன் மிஸ்டர் இந்தியா என்ற ஒரு இந்தி படத்தில் எப்படி ஒரு விஞ்ஞானி மனிதனை மாயமாய் மறைந்து போகச் செய்யும் வித்தையைக் கண்டுபிடித்தார் என விவரித்தான்.

    இதைக் கேட்டு மும்பையிலிருந்து வந்த விஞ்ஞானி பெரிதாக சிரித்துச் சொன்னார் " விஞ்ஞானி என்பவர் ஒரு மந்திரவாதி இல்லை. அவரது கண்டுபிடிப்புக்களும் ரகசியங்கள் இல்லை. அவர்களின் கண்டுபிடிப்பக்கள் ஏற்கனவே கடவுளால் உருவாக்கப்பட்ட உண்மைகள். விஞ்ஞானி கனவு காண்கிறான். இயற்கையின் நியதிகளை ஆராய்ந்து ஏற்கனவே இயற்றப்பட்ட சூத்திரங்களைக் கொண்டு பரிசோதனைகளை நடத்தி தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வருகிறான்".

    அங்கு குழுமியிருந்தோருக்கு அவர் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை.

    அங்கிருந்த பெரியவர் ஒருவர் " அய்யா நீங்க சொன்னது ஒன்னும் விளங்கலை. இந்த பையன் சொன்ன மாதிரி விஞ்ஞானி என்பவர் ரகசியங்களை கண்டபிடிக்கிறாங்கனா நீங்க என்ன ரகசியத்தை கண்டபிடிச்சிருக்கீங்க?" எனறார்.

    விஞ்ஞானி கூறினார் " எனது கண்டுபிடிப்பைப் பற்றி கூறுமுன் என்னைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறேன்.நானும் இந்தக கிராமத்தைச் சேர்ந்தவன். எனது பாட்டனார் இங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். எனது தந்தையார் உத்தியோக நிமித்தமாக மும்பை சென்றவர் அங்கேயே தங்க நேரிட்டது".

    "என் பெயர் ராமன். சர் சி.வி. ராமனைப் பொல் நானும் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பி எனது பெற்றோர்கள் இந்தப் பெயரை எனக்கு வைத்தனர்".

    "நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவன். விஞ்ஞானத்தில் நாட்டம் கொண்டு அதற்கான படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள ஒரு பெரிய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தேன். இந்தக் கிராமத்தைப் பற்றி எனது பாட்டனாரும் தந்தையாரும் என்னிடம் கதை கதையாகக் கூறுவர். இங்குள்ள கரை புரண்டு ஓடிய காவிரி ஆற்றைப் பற்றியும் அதன் பாசனத்தில் எப்படி இந்த கிராமம் செழித்திருந்தது என்றும் கேட்டிருக்கிறேன்".

    விஞ்ஞானி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சலசலப்பின் காரணம் ஒருவர் கையிலிருந்த அன்றைய செய்தித் தாள். அதில் போடப்பட்டிருந்த ஒரு விளம்பரமே சலசலப்பிற்கு காரணம். விளம்பரத்தில் போடடிருந்த செய்தி:

    எச்சரிக்கை

    மும்பையிலுள்ள பிரபல மனநோய் மருத்துவ மனையிலிருந்து நோயாளி ஒருவர் தப்பியுள்ளார். அவர் தன்னை ஒரு விஞ்ஞானி என்று கூறிக் கொள்வார். அவரிடம் அரிய கண்டுபிடிப்பு ஒன்று இருப்பதாகவும் கூறுவார். இவர் அபாயகரமானவர். சமயங்களில் வன்முறையிலும் ஈடுபடுவார். இவரைப் பார்த்தால் உடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கவும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்த அந்த விளமபரத்தில் விஞ்ஞானி ராமனின் புகைப்படமும் இருந்தது.

    தொடரும்........


    Last edited by மதுரை மைந்தன்; 06-08-2008 at 02:21 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆஹா.. மதுரைவீரரே...விஞ்ஞானி என்றால் என்ற கேள்வியில் ஆரம்பித்து இப்போது கதை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது...

    சீக்கிரமே தொடருங்கள் கதையை.. ஆவலோடு காத்திருக்கிறோம்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    விஞ்ஞானி என்பவர் யார் என்பதற்கான விளக்கம் மிக அருமை. எல்லா அறிவியல் மேதைகளையும் உலகம் ஆரம்பத்தில் பைத்தியக்காரர்களாகத்தான் பார்க்கிறது. யாரென்று தெரிந்தபின் தலையில்தூக்கி வைத்துக்கொள்ளும். இது சரித்திரம். கதையை சொல்லும் விதம் அருமை. வாழ்த்துகள்.
    (ஒரே ஒரு வேண்டுகோள்....எல்லா பாகங்களையும் ஒரே திரியில் கொடுத்தால் முந்தைய பாகங்களைப் படிக்க வசதியாய் இருக்கும். தொடர்கதை வடிவத்தில் இருக்கும்)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அறிவியல் கதைகள் பஞ்சத்தைப் போக்க வந்த மதுரை வீரருக்கு வரவேற்பு..

    விஞ்ஞானி யார் - என்ற வினாவுக்கு இங்கே மன்ற நண்பர்கள் பதிலளிக்காதது ஏமாற்றம் என இரண்டாம் பாகத்தில் நீங்கள் பட்டிருக்கும் வருத்தம் நியாயமானதே!

    கே டிவியில் எப்பவோ அரைமணி நேரம் அறிவியல் நிகழ்ச்சி வந்தவுடன், சாளரம் மாற்றி சன்னில் அரதப்பழசான சினிமா சிரிப்பு பார்க்கும் சராசரியாய்த்தான் இன்னும் நான்..

    இப்படிப்பட்ட நுகர்வோரைக் கட்டியழுதோ, கட்டியிழுத்தோ போகவேண்டிய நிலை - நல்ல எழுத்தாளருக்கு..

    நீங்கள் நல்ல படைப்பாளி..

    பின்னூட்ட உற்சாகம் 'இப்படி/அப்படி'' என்றாலும்
    உள்ளுற்சாகத்தோடு தொடருங்கள்..

    காலக்காற்று சொல்லும் - நிலைப்பவை நல்லவை என!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சுவாரசியமான தொடரல்..
    திடுக் வரும்போது ''தொடரும்''!

    பாராட்டுகள் மதுரை வீரரே!

    விஞ்ஞானி பற்றிய உங்கள் பார்வை - உண்மை!

    ''முருகன் .. நீங்க மா......மேதை'' என அசோகன் அறிமுகப்படுத்திய உலகம் சுற்றும் விஞ்ஞானி பிம்பமே
    ஆழமாய் பதிந்துவிட்ட எனக்கு நல்ல பாடங்கள் இக்கதையில் கிடைக்கும்..

    நன்றி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    இப்போதான் இதைப் பார்த்தேன் மதுரை வீரரே....
    அருமையான ஆரம்பம்...
    தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்.
    மன்றத்திற்கு வருபவர்கள் பலரும் பலவித வேலைகளில் பலவித மனநிலைகளிலிருந்து வருவர். அதனால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஐயா. அதனால் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
    முயற்ச்சி மெய்வருத்தக் கூலிதரும்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆகா திடுக்கிடும் திருப்பத்தோடு கதைத் தொடருகிறது.... சீக்கிரம் தொடருங்க.... தொடர்ந்து எழுதுங்க.
    உரையாடல்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    சிவா அண்ணா கூறியது போன்று ஒரே திரியில் தொடர்ந்து கொடுத்தால் வாசிக்கவும் பின்பு தொகுக்கவும் வசதியாக இருக்கும். நீங்கள் அனுமதித்தால் பொறுப்பாளர்கள் மாற்றித் தருவார்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    அண்ணா, அழகான தொடக்கம். விஞ்ஞான சம்பந்தமான கதையா? ஆவல் மேலிட காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பாகங்களுக்காக.

    நம்ம ஆளுங்களுக்கு தாடி மீசை வைச்ச எல்லாரும் சாமியார் தானா? திருந்தமாட்டாங்களேஏஏஏஏஏஎ
    அன்பு மீரா

    உங்களது ஆவல் எனது கற்பனைக்குத் தீனி.

    எத்தைத் தினறால் பித்தம் தெளியும் எனறிருக்கும் அப்பாவி மக்களை சாமியார்கள் விபூதி குங்குமம் கொடுத்து நம்பிக்கை ஊட்டுவதால் மக்கள் சாமியார்களிடம் செல்கிறார்கள். அவர்கள் போலிச் சாமியாராக இருந்து மக்களை ஏமாற்றாத வகையில் சரி.

    உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by மயூ View Post
    விஞ்ஞானி என்றால் யார்? நல்ல கேள்வி... கலக்கல் ஆரம்பம் தொடருங்க.. வாசிக்க காத்திருக்கின்றோம்

    அன்பு மயூ

    கேள்வியைப் பாராட்டியதற்கு நன்றி. இக்கேள்விக்கான எனது பதிலை இரண்டாம் பாகத்தில் நீங்கள் காணலாம்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •