முகவுரை:
இது ஒரு விஞ்ஞான சம்பந்தமான கற்பனைக் கதை. காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னைக்கு எவ்வாறு ஒரு விஞ்ஞானி தனது கண்டு பிடிப்பின் மூலம் தீர்வு காண்கிறார், அதில் அவருக்கு ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் எத்தனை எத்தனை? என்பதை இக் கதையின் மூலம் விளக்குகிறேன்.. இக்கதைக்காக கற்பனையாக ஒரு இயந்திரத்தை உருவாக்கனேன் சில வருடங்களுக்கு முன். இன்று அந்த இயந்திரம் அமெரிக்காவில் வேறு ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டு விற்பனைக்கும் தயார் என்பதை பார்த்து பூரிப்படைகிறேன். தலை சிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப் படி அறிவியலில் நான் கண்ட கனவு தான் இந்த இயந்திரம். கதை தொடர தொடர இந்த இயந்திரத்தைப் பற்றி புகைப்படங்களுடன் விளக்குகிறேன். இந்த கதையில் வரும் சமபவங்கள் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இனி கதைக்குச் செல்வோம்.
காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு கிராமத்தின் விடியற் காலைப் பொழுது. கிராமத்து மங்கையான அஞ்சலை அவசரமாக எழுந்தாள். வழக்கம் போல் வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு அன்று சற்று தாமதமாகி விட்டது. ஒரு பானையில் தண்ணீர், விளக்குமாறு மற்றும் கோலப் பொடியுடன் வாசலுக்கு வந்த அஞசலையின் கவனத்தை கிராமத்து மக்கள் சிறு சிறு கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதை ஈர்த்தது. மேலும் சிலர் கிராமத்திலிருந்து புகைவண்டி நிலையம் செல்லும் பாதையில் செல்லத் துவங்கியதையும் அவள் பார்த்தாள். ஆவல் மேலிட அருகிலிருந்த ஒரு சிறுவனிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். பையன் சொன்னான்
" டேசனுக்குப் பக்கத்து ஆல மரத்தடியில பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் வந்திருக்காரு. அவரைப் பார்க்கத் தான் எல்லாரும் போய்க்கிட்டு இருக்காங்க. நானும் அங்கே தான் போறேன்".
கோலம் போடுவதை கை விட்டு விட்டு அஞ்சலையும் அவனுடன் சென்றாள். ஆலமரத்தடியை நெருங்க அதை பலர் சூழ்ந்திருப்பதை அவள் பார்த்தாள். எட்டிப் பார்த்தில் அவர்களுக்கு நடுவில் தாடி மீசையுடன் பாண்ட் ஷர்ட் அணிந்த ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள்.
கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி " சாமி எதுவும் பேச மாட்டேங்குது. எல்லாரும் விழுந்து கும்பிட்டா கூட சாமி சிரிச்சுக் கிட்டே இருக்கே ஒழிய ஒரு விபூதி குங்குமம் கொடுத்துச்சுனா நம்ம கஷ்டம் போய் ஒரு விடிவு வரும். ஊம் என்னத்தை சொல்ல?" என்றாள்.
ஊர் பெரியவர்களில் சிலர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த மனிதரின் அருகில் சென்றனர். அதில் ஒருவர் பய பக்தியுடன் தன் வாயை கையால் பொத்திக் கொண்டு " சாமி எங்கிருந்து வருது? சாமிக்கு தமிழ் தெரியுமா?" என்று கேட்டார். சாமியார் என்று அழைக்கப் பட்ட அந்த மனிதர் பெரிதாக சிரித்து " நான் சாமியார் இல்லை. என் தாடி மீசையை வைச்சு அப்படி நினைக்காதீங்க. நான் ஒரு விஞ்ஞானி. மும்பையிலிருந்து வருகிறேன்" என்றார்.
அவர் அப்படி கூறியவுடன் அதுவரை சத்தம் போடாமல் அவர் பேச்சைக் கேட்ட மக்களிடயே கசமுச கசமச என்று பேச்சு சத்தம் துவங்கியது. எல்லோரிடயேயும் பொதுவில் எழுந்த சந்தேகம்
" விஞ்ஞானி எனறால் யார்?".
தொடரும்
இங்கு நான் தொடரும் என்று போட்டதின் காரணம் மன்றத்து நண்பர்களும் விஞ்ஞானி எனபவர் யார் என்று பதில் அளிக்க ஒரு வாய்ப்பு வேண்டி
Bookmarks