Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்

    அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்

    பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் நாளில் இந்த இனிய படைப்பை பொங்கல் பரிசாக மன்ற மக்களுக்கு வழங்குகிறேன்.

    நமது மன்றத்தில் சிலருக்கு இவரை தெரிந்திருக்கும், பலருக்கு இவரை தெரியாமலிருக்கலாம். அமரர் கல்கி மிக பிரபலமான சரித்திர கதை எழுத்தாளர். இவரை பற்றி எத்தனை சொன்னாலும் பத்தாது. இவரின் படைபுகளை பற்றிதான் நிரைய சொல்லவேண்டும். சர்வதேச அளவில் ஒரு பழமொழி உண்டு மனிதன் தன் வாழ்கையில் ஒரு முரையாது தாஜ் மகாலை பார்த்துவிடவேண்டும் என்று. அது போல நான் ஒரு பழமொழி சொல்கிறேன் தமிழர்கள் வாழ்கையில் ஒரு முரையாவது அமரர் கல்கியின் சில கதைகளை படித்து விடவேண்டும். கட்டாயம் ஒரு மிக பெரிய மன நிரைவு கிடைக்கும்.

    சரித்திர கதைகளில் கல்கியை விட பிரபலமானவர் சாண்டிலியன். சாண்டில்யன் கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். சண்டில்யனின் திறமைக்கு ஈடு இனை இல்லை என்பதை மறுக்க முடியாது. கல்கி சாண்டில்யன் இருவரையும் ஒப்பீடு செய்ய கூடாது. இருவருக்கு தனி தனி திறமைகள் இருக்கும். ஆனால் இருவர் கதைகளிலும் என்னை அதிகம் கவர்ந்தது அமரர் கல்கியே. காரனம் சாண்டில்யன் கதையில் வர்னனைகள் கொஞ்சம் கடுமையான தமிழில் இருக்கும், கல்கி கதைகள் கொஞ்சம் புரியும் தமிழில் இருக்கும். சாண்டில்யன் விஞ்ஞானத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், கல்கி மனொதத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், சாண்டில்யன் கதாநாயர்கள் அனைத்து திறமைகளும் உள்ளடக்கி இருப்பார்கள், ஆனா கல்கி கதாநாயர்கள் சாதர்ன மனித சக்தி உட்பட்ட திறமைகளை தான் வைத்திருப்பார்கள். அதாவது கல்கி எக்ஸாஜரேட் பன்ன மாட்டார்.

    இருவருமே வரலாற்றை நன்றாக அறிந்தவர்கள். ஆனால் சாண்டில்யன் பிரபலமானதுக்கு முக்கிய காரனம் அவரின் விஞ்ஞான திரமை மற்றும் பென்களை வர்னிக்கும் கலை, காதலை தத்ரூபமாக வர்னிக்கும் ஆற்றல் உள்ளவர். மேலும் குமுதத்தில் வந்தது. வார இதழ்களில் கல்கியை பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் குமுதத்தை நிரைய பேர் விரும்புவார்கள். காரனம் குமுதத்தில் நிரைய மசாலா சமாசாரங்கள் இருக்கும். சாண்டில்யன் கல்கியைவிட பிரபலமானதுக்கு இது ஒரு முக்கிய காரனம்.

    அமரர் கல்கி சிரித்திர சம்பவங்களை சரியான வரலாற்றிலிருந்து எடுப்பார் (ஆங்கிலேயர்கள் சொன்ன வரலாற்றிலிருந்து அல்ல). கதையில் வரலாற்று சம்பவங்களை ஆதாரத்துடன் கூறுவார். அதே சமயம் கதையின் கதாநாயகனாக மன்னர்களை வைக்க மாட்டார். அவர்களுக்கு துனை புரிந்த படைதலைவர்களை கதாநாயகனாக வைத்து தான் கதையை கொண்டு செல்வார். இவர் கதைகளில் ராஜ தந்திரிகள், வீரர்கள், மத தலைவர்கள், சதிகாரர்கள், ராஜ குல பென்மனிகள் மற்றும் பொது ஜன வீர பென்மனிகள் பலர் இருப்பார்கள். அவர்கள் குணத்தை அறிமுகபடுத்தி கடைசிவரை மாற்றாமல் கடைபிடிப்பார். அதுதான் கல்கியிடம் எனக்கு பிடித்த திறமை. கல்கி கதைகளை மின் புத்தமாக படிப்பது கடினம். கல்கியில் தொரர்கதைகளாக படிப்பது இன்னும் நன்றாக இருக்கும். அதுவும் சேர்த்து வைத்து பைண்ட் செய்து படிப்பது நல்ல அனுபவத்தை தரும். மனியம் அவர்களின் படத்துடன் இருந்தால் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

    ஆரம்ப காலத்தில் அமரர் கல்கி கதையை படிக்க சொல்லி என் உறவினர் ஒருவர் சொல்லி இருந்தார். ஆனால் நான் அமரர் கல்கி பிராமனர் என்பதால் அவர் படைபுகள் ஏதோ பிராமனர்கள் சம்மந்த பட்ட கதைகளாக இருக்கும் அல்லது ஆன்மீக நூலாக இருக்கும் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். மேலும் கல்கி வார இதழில் படிப்பதற்க்கு எதுவும் சுவாரியயமாக இருக்காது அது ஒரு ஆன்மீக புத்தகம் போல இருக்கும். பொன்னியன் செல்வன் கல்கியில் வரபோகிறது என்று என் உறவினர் என்னை வற்புறுத்தி கல்கியை வாங்க வைத்தார். படிக்க ஆரம்பித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன் எத்தனை அற்புதமான மனிதர் என்று. என்னை கல்கி கதைகளை படிக்க சொல்லி தூண்டியவரை என்றும் நான் மறக்க மாட்டேன்.

    அமரர் கல்கி பல கதைகள் எழுதி இருந்தாலும் நமது தேசத்து வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள அவரின் நான்கு கதைகளை வரிசையாக பட்டியலிடுகிறேன்.

    சிவகாமியின் சபதம்

    இது பல்லவர்கள் காலத்து கதை. பல்லவ மன்னரிகளில் மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்ம வர்மன் அவர்களின் கதை. இந்த கதையில் கல்கி நாட்டிய சிற்ப கலைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அருமையாக விளக்கி இருப்பார். இந்த கதையின் நாயகி சிவகாமி ஒரு கற்பனை பாத்திரம், ஆனால் இந்த கதை நாயகி சிவகாமி தனது நாட்டிய திறமையால என்னை அதிகம் கவர்ந்தவர். என்னுடைய கல்லூரி பருவத்தில் வெளிவந்த சிவகாமியின் சபதம் கதையின் படங்களை நாண் பத்திரமாக வைத்து அதிலிருந்து சிவகாமியின் நடனத்தை ஸ்கேன் செய்து நமது தமிழ் மன்ற நேயர்களுக்கு பிரத்தியேகமாக சமர்பிக்கிறேன். இந்த படத்தை நன்பர்கள் சேவ் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த படங்கள் வேறு எங்கும் கிடைக்காது. காரனம் இது நான் ஸ்கேன் செய்து உங்களுக்கு வழங்கும் படங்கள். இந்த அழகிய படங்கள் என் நினைவாக வைத்து கொள்ளுங்கள்.

    சிவாகாமியின் சபதம் பல்லவர்கள் புலிகேசி மன்னன் - சாளுக்கியர்கள் (கர்நாடகா) இடையில் நடந்த போர் சம்மந்த பட்ட கதை. இந்த கதையில் பரஞ்சோதி என்ற படைதளபதிதான் கதாநாயகன். இவர் கற்பனை பாத்திரம் அல்ல, உன்மையில் 64 நாயன்பார்களில் சிறுதொண்டர் என்று அழைக்க பட்ட சிவனடியாரின் இளமை கால வாழ்கை வரலாறு. இந்த கதையில் வரும் நாநந்தி என்னும் கதாபாத்திரம் உன்மையிலேயே நம்மை நடுங்க வைக்கும் கதாபாத்திரம். இந்த கதையில் பல்லவ சக்ரவர்த்தி மகேந்திரவர்மனின் ராஜதந்திர திறமையும் ஒற்றர் சாம்ர்த்தியமும் தான் பிரசக்தி பெற்றது.

    பார்த்திபன் கனவுஅறுபுதமான கதைகளை படைத்த கல்கியின் கதைகளில் இது ஓரளவுக்குதான் இருக்கும். மற்றவர்கள் கதையை விட பல மடங்கு தாண்டிவிடும். ஆனால் கல்கியின் திறமை குரைவாக தான் இருக்கும். இதை சிவகாமியின் சபதத்தின் தொடராகவே கருத வேண்டும். இதில் அடிமை தேசமாக இருக்கும் சோழ நாடு மீண்டும் எப்படி சுந்தந்திர நாடாக முயற்ச்சி செய்தது என்பதை பற்றிய கதை.

    பொன்னியன் செல்வன்
    அமரர் கல்கி கதைகளில் மாஸ்டர் பீஸ் என்றாலே அது பொன்னியன் செல்வன் தான். பொன்னியன் செல்வனுக்கு மட்டும் நிரைய ரசிகர்கள் இருகிறார்கள். அப்பப்பா எத்தனை கதா பாத்திரங்கள் எவ்வளவு அழகாக நகர்ந்த கதை. இந்த கதையின் உதவியால் தான் நான் மாவீரன் லொள்ளுவாத்தியார் எழுதி குறிப்பாக இலங்கையை சுற்றிய ரவுசு எல்லாம். பொன்னியன் செல்வன் என் மனதில் என்றுமே ஓடி கொண்டிருக்கும். அதன் கதா பாத்திரங்கள் என் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நான் பள்ளி பருவத்தில் மனியம் படத்துடன் தொடராக வந்த போது படித்தது.

    பொன்னியன் செல்வன் மொத்தம் 5 பாகம். இதன் கதை சுருக்கத்தை தரமுடியாது. ஆனால் இந்த கதை ராஜ ராஜ சோழர்கள் காலத்தில் தமிழகம் எந்த அளவுக்கு செளிப்பாகவும் தன்னிரைவாகவும் கல்வி அறிவாக இருந்தது என்று விளக்க கூடிய நூல். பொன்னியன் செல்வன் மூலம் பழையரை சோழ மன்னர்களில் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். சோழ நாட்டின் ஒரு போர் வீரன் வந்தியதேவன் (உன்மை பாத்திரம்) கதாநாயகனாக வைத்து அருமையாக கொண்டு செல்லபட்ட கதை. இதில் ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் ஒவ்வொரு குனாதிசியங்களை தந்து அதை கடைசிவரை கடைபிடித்து வந்தார். அருள்மொழிவர்மன் என்று அழைக்கபட்ட ராஜ ராஜ சோழன், அவருடை தந்த சுந்தரசோழர், சகோதரன் ஆதித்த கரிகாலன், சகோதரி குந்தவை அவர்களுடைய பெரியபாட்டி செம்பியன் மாதேவி இந்த பாத்திரங்களை மையமாக வைத்து எழுத பட்ட கதை. இவர்கள் அனைவரும் நிஜ பாத்திரங்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்க வைத்தது. நாடுளும் விதம், ஜனநாயகம், பென் உரிமை, ஆண்மீகம் காதல் அனைத்து அற்புதமாக கையாளபட்டிருந்தது இந்த கதையில். இந்த கதையின் கதாநாயகன் வந்தியதேவனை அசாத்திய திறமைசாலியாகவோ விரனாகவோ படைக்கவில்லை. ஒரு சாதர்ன வீரன் தான் ஆனால் முந்திரிகொட்டை, மேலும் அவன் திட்டமிடாமல் காரியம் செய்வான், பிரச்சனைகள் தேடிவரும் பிறகு அது பலரின் உதவியாள் சரியாகிவிடும்.

    காதல் இல்லாமல் காவியம் படைக்க முடியுமா. கல்கி அதிலும் ஒரு படி மேலே வசீகரம் கலக்கபடாமல் அன்பும் மென்மையும் கலந்து வந்தியதேவன் மற்றும் குந்தவையின் காதல் காட்சி நன்றாக இருக்கும். குந்தவை வந்தியதேவன் மீது காதல் கொண்டாலும் தனது கடமைக்கு தான் முக்கியத்துவம் தருகிறார். இந்த இடத்தில் கல்கி அரச குல பிரஜைகள் மக்கள் பிரச்சனைக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதன் பிறகுதான் சொந்த உனர்ச்சிகளுக்கும் இடம் என்று தெளிவாக விளக்கி இருப்பார். ராஜகழை பொருந்திய வானதியின் காதல் அதில் இருந்த தியாக என்னம் மிகவும் சிறப்பு பெற்றது. இன்னொரு சிறுப்பு மிக்க காதலும் வரும் அதை கடைசியில் விளக்குகிறேன்.

    இந்த கதையில் கற்பனை பாத்திரமாக விளங்கும் நந்தினி என்னும் பென் படிப்பவர்களையே மதி மயக்கி விடுவார். அந்த அளவுக்கு அழகு உறுதி நிரைந்தவர் என்று சொல்லலாம். இன்னொரு கற்பனை பாத்திரம் பெரிய பழுவேட்டையார் தன்னுடை கடைசி கட்டத்தில் நம் மனதை மிகவும் கொள்ளை அடித்து விடுவார். அதுவும் ஆற்றில் விழுந்து அடித்த செல்லபட்ட காட்சிகளில் அவர் மனதில் ஓடிய சிந்தனைகள் என்றுமே நம் மனதை விட்டு அகலாது.

    கல்கி கதைகளில் நகைசுவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பொன்னியன் செல்வனில் ஆழ்வார்கடியன் என்று ஒரு கற்பனை கதா பாத்திரத்தை படைத்திருப்பார், அடடா அவர் செய்யும் ரவுசு இருகிறதே. அப்படி ஒரு நகைசுவை செயல்கள் அதே சமயம் மிக புத்திசாலியாகவும் வருவான். பொன்னியன் செல்வனை படித்தவர்கள் ஆழ்வார்கடியானை மறக்க வாய்பே இல்லை.

    பூங்குழலி - பொன்னியன் செல்வன் கதையில் ஒரு கற்பனை பாத்திரம்தான், கடலில் படகு செலுத்தும் மீனவ குலத்து பென் அது ஏனோ தெரியவில்லை இந்த பென் தான் என்னை மிகவும் கவர்ந்தவள். காரனம் என்ன தெரியுமா, இந்த பென்னின் துடுக்குதனம் தைரியம் வீரம் இதுதான். இந்த கற்பனை கதாபாத்திரத்தின் மீது நான் காதல் கொண்டேன் என்றால் அது மிகையல்ல. என் வாழ்கையில் வாலிப பருவத்தில் காதல் உனர்ச்சியை தோற்றுவித்தவளும் இந்த பாத்திரம்தான், இன்றும் அதை இளமையாக வைத்திருப்பதும் இந்த பூங்குழலி என்ற கதாபாத்திரத்தினால் தான். பூங்குழலியை கல்கி சாதர்ன பென்னாளிலிருந்து மாறு பட்டு படைத்திருகிறார். வெறும் வீரம் மட்டுமல்ல காதல் உனர்ச்சியிலும் வீரம் நிரைந்தவள், எந்த பென்னையும் விஞ்சி விடும் ஆற்றல் நிரைந்தவள். ஏழை பென்னாகா பிறந்தாலும் அரசியாக ஆசைபடுபவள், மன்னரை காதலித்தவள் சிம்மாசனம் ஏற துடித்தவள். அந்த அளவுக்கு ஆசை மட்டுமல்ல அதை அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்டவள், இளவரசனை காதலித்து தோல்வி அடைந்தாலும் கூட இவள் கரம்பிடித்த ஒரு ஏழை இறுதியில் நாட்டுக்கு மன்னரவான். அந்த அளவுக்கு இவள் மண உறுதியை கல்கி விசேசமாக கையாண்டிருப்பார். பூங்குழலி பாடிய ஒரு பாடல் மட்டும் என் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தன.

    அலைகடலும் ஓய்ந்திருக்க
    அகக் கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில்
    நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்


    என்ன அற்புதமான வரிகள் இந்த வரிகளை பூங்குழலி அடிகடி பாடுவாள். என் மனதிலும் நான் ராகத்துடன் பாடுவேன்.

    சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியன் செல்வன் இந்த மூண்று கதைகள் மூலம் அமரர் கல்கி நாட்டுக்கு ஒரு மெசேஜ் சொல்லி இருப்பார் அது தான் ஒற்று வேலை. ஒரு நாடு செழித்தோங்க வேண்டுமானால் மிக முக்கியமான விசயம் ஒற்றர் படை. இண்டலிஜன்ஸ் அல்லது புலனாய்வு துரை போல, நன்றாக கவனித்து பாருங்கள் நமது நாட்டில் நீண்ட காலமாக இண்டலிஜன்ஸ் சரியாக இல்லாததாலே பல பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருகிறோம்.

    சரித்திர நாவல்களை எழுதி வந்த அமரர் கல்கி இறுதி நாளில்
    அலைஓசை என்று ஒரு அற்புதமான நாவலையும் எழுதினார். பொன்னியன் செல்வன் அளவுக்கு இல்லாவிட்டாலு இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். காரனம் என்ன தெரியும் விடுதலை போராட்டம் பாக்கிஸ்தான் பிரிவினை மதகலவரம் இதை ஒட்டிய ஒரு கதை இது. இந்த கதையில் ஒன்றுபட்ட இந்தியா (இன்றைய இந்தியா, பங்களாதேஸ், பாக்கிஸ்தான்) இப்படி அனைத்து இடங்களிலும் சுற்றி வரும் கதை. எங்கு பிரச்சனைகள் நட ந்ததோ அங்கு கதாநாயகியை கொண்டு சென்று விடுவார். வட இந்தியாவில் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது ஹிந்து மக்கள் எப்படி தமிழர்கள் அறிய இந்த கதையை கட்டாயம் படிக்க வேண்டும். அதே சமயம் மத நல்லினக்கத்தையும் வலியுறுத்தி இருக்கிறார் கல்கி. இதில் ஒரு சிறப்பு என்னவென்றாள் காந்திஅடிகள். இந்த அலைஓசையில் அமரர் கல்கி காந்தியை பற்றி ஒரு தவறான கன்னோட்டத்தில் சொல்ல ஆரம்பித்து கதையின் இறுதி பாகத்தில் காந்தியை சந்திக்க வைத்து காந்தியையின் மீது அளவு கடந்த பக்தியை வெளிகாட்டுவார். இந்த கதையிலிருந்து இஸ்பிரேசன் தான் ஹே ராம் திரைபடம்.

    அன்பு தமிழ் மன்ற நன்பர்களே, வாய்பு கிடைத்தால் அமரர் கல்கியின் இந்த நாலு கதைகளை படித்து விடுங்கள். அறிய பொக்கிசம் இந்த கதைகள். பொன்னியன் செல்வன் கதை நான் பூஜை அரைவில் வைத்து பூஜை செய்யும் ஒரு நாவல். என் மனைவியிடம் நான் வைத்திருக்கும் கோரிக்கை என்ன தெரியுமா என் இறுதி நாட்களில் பொன்னியன் செல்வனை என் அருகிலேயே வைத்திருக்கும் படி தான். அந்த அளவுக்கு பொன்னியன் செல்வன் மீது எனக்கு பிடிப்பு.

    பொங்கல் வாழ்த்துகள்

    இந்த திரியில் படம் இருகிறது
    சிவகாமியின் சபதம் படங்கள்
    Last edited by lolluvathiyar; 14-01-2008 at 08:21 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடடா...அருமையான பதிவு வாத்தியார்.நானும் உங்களைப்போலவே பொன்னியின் செல்வனின் பரமரசிகன்.5 பாகங்களும் வைத்திருக்கிறேன்.மின் புத்தகமாகவும் இப்போதும் என் கணிணியில் வைத்திருக்கிறேன். இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான். எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை.பார்த்திபன் கனவு பைண்ட் செய்த பழைய புத்தகமாக இருக்கிறது.
    நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பொன்னியின் செல்வன் நல்ல நாவல் தான்...ஏகப்பட்ட முடிச்சுகள்...எங்கெங்கோ இழுத்துச் சென்றாலும்...ஒவ்வொன்றாக அவிழ்க்கப் பட்டிருக்கும்...இறுதியில்,ஒரு ஓட்டை கூட இல்லாமல் அடைபட்டிருக்கும்.ஆனால் வெறும் வரலாற்று நாவல்,காதல் கலந்த கதை,சுவாரசியமான தமிழ் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எழுத்து படிப்பவனின் மனதில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

    சில எழுத்தாளர்களைப் படிக்கும் போது புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு மௌனமாக அமர்ந்திருக்கிறேன்.மீண்டும் திறந்து படிக்க வேண்டும் எனத் தோன்றும்...ஆனால் மனது நிறைந்து விட்டிருக்கும். அந்த ஒரு உணர்வு பொன்னியின் செல்வனில் ஏற்பட இல்லை. அதற்காக அதை குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. வெறுமே கதை படிப்பது போல படித்து மூடி வைத்து விட்டு எழுத்தாளரின் கதைத் திறமையை ரசித்து விட்டுப் போய் விட்டேன்.

    ஆனாலும் வர்ணிப்புகளுக்காகவும்,அழகுத் தமிழுக்காகவும் கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டிய புத்தகம். சிலாகித்து நீங்கள் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள் வாத்தியாரண்ணா...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வாத்தியாரே நான் இதுவரை நீங்கள் கூறிய எதையும் படித்ததாக நினைவில் இல்லை.. நீங்கள் இத்தனை பெரிய விளக்கம் அளித்திருப்பதை பார்த்ததும் தேடி பிடித்து படித்துவிட வேண்டும் போலிருக்கிறது..! கண்டிப்பாக படித்துவிடுவேன்..! உங்களின் தூண்டுதலுக்கு மிக்க நன்றி வாத்தியாரே..! இந்த பதிவுக்கும் எனது வாழ்த்துக்கள்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நான் புத்தகங்கல் அவ்வளவாக படிப்பதில்லை
    தாங்கள் பதிவினால் அதில் என்ன அப்படி உள்ளது என்று படிக்க ஆர்வம் அதிகம் பதிவுக்கு நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    முதலில் சிவகாமியின் சபதம் பின்னர் பார்த்தீபன் கனவு பின்னர் பொன்னியின் செல்வன் என்ற ஒழுங்கில் வாசித்தேன்!!!!

    பொன்னியின் செல்வன் கதை இப்போதும் என் மனதில் திரைப்படமாக ஓடும்.. உலகில் இதற்கு இணையாக எந்தவொரு தமிழ் நாவலும் எழுதப்படவில்லை!!! தமிழர் பெருமையை தமிழரே அறியவைத்த நாவல்...

    சாண்டில்யன் நான் வாசித்ததில்லை.... பெண்களை வர்ணிப்பதில் பெரும் கில்லாடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வாத்தியாரே நான் இதுவரை நீங்கள் கூறிய எதையும் படித்ததாக நினைவில் இல்லை.. .!
    பொன்னியின் செல்வன்...தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்!!! அதிலிருந்து ஆரம்பியுங்கள்!!!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் எங்கள் ஊர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். நிறைய நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். இன்னதென்று கிடையாது எது கிடைத்தாலும் படித்தேன் புஷ்பாதங்கத்துரையும் படித்தேன். ஜெயகாந்தைனையும் படித்தேன். சில காலம் காதல் கதைகள் பிடித்தது. சில காலம் துப்பறியும் கிரைம் கதைகள் பிடித்தது. சில காலம் விஞ்ஞான கதைகள் பிடித்தது. ஆனால் எப்போதுமே பிடித்தது வரலாற்று நாவல்கள்தான். வரலாற்று நாவல்களை படிக்கும்போது நானே அந்த கதையின் நாயகனாக மாறிவிடுவேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் சமயம் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுவதும் படிக்காமல் வைக்க மனது வராது. பொன்னியின் செல்வனை ஒரு நாள் இரவு முழுவதும் கண்விழித்து படித்து வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டது தனிக்கதை.

    இவைகளில் படிப்பினை இருக்கிறதே இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. நம் மனதை மயக்கும் மிகப்பெரிய போதை இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம் செல்வன் என்ற ம.செ. அவரின் மாணவர் பெயர் மணியம். நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர். அவர்தான் கல்கி இதழில் வெளிவந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர். அவரிடம் சில காலம் நான் மாணவனாக இருந்திருக்கிறேன். அவரிடம் ஓவியம் அதிகம் பயின்றதை விட, பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் கதைகளைத்தான் அதிகமாக பயின்றிருக்கிறேன். ஓவிய வகுப்பு வந்தாலே மாணவர்களான எங்களுக்கு ஏற்படும் சந்தோசத்தை அளவிடமுடியாது. காரணம், மணியம் சார் மிக அருமையாக இந்தக் கதைகளை எங்களுக்கு சொல்லித்தருவார். கதை சொல்லும் போது கண்களை மூடிக்கொண்டு அப்படி கதையோடு ஒன்றியபடி சொல்வார். இடையிடையே கரும்பலகையிலும் ஓவியம் வரைந்து அதைக்கொண்டும் கதையை விளக்குவார். பழைய ஞபாகத்தை கிளிறிவிட்டுவிட்டீர்கள் வாத்தியார்.
    Last edited by ஜெயாஸ்தா; 13-01-2008 at 03:36 PM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சவுதி வந்து இரண்டு ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று தேடிஅலைந்து கொண்டிருந்த நான் ஒரு இணையதளம் வாயிலாக இந்த கதைகளை பார்த்தேன். வறியவன் பெற்ற பொற்குவியல் போல்.... அந்த நேரத்தில் அலுவலகத்திலும் கடுமையான பணி... இரவு 2 மணிக்கு மேல்தான் வீடு வருவோம் அனைவரும் தூங்கி விட நான் மட்டும் கணிணியை வைத்து கதை படித்துக் கொண்டிருப்பேன்..... எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ் ஆர்வத்தை மீண்டும் தூண்டிய பெருமை கல்கியை யே சாரும். இரசித்துப் படித்த நாவல்கள் ... சிவகாமியின் சபதம்.... பார்த்திபன் கனவு... பொன்னியின் செல்வன்...
    இவர்களின் தாக்கத்தால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சரித்திர நாவல் எழுதுகிறேன் பேர்வழி என்று நாவல் எழுத ஆரம்பித்தேன் என்பதை நம்புவீர்களா?
    அதுவும் ஏனோ தானோ என்று அல்ல... நூலகத்தில் சென்று சேரன் செங்குட்டுவனின் வாழ்க்கையைப் பற்றிப் படித்து .... ஹா...ஹா... வேடிக்கையாகத் தோன்றுகிறது ....... இப்போது நினைத்தால். பாடங்களை படிக்காமல் கதைபடிக்க ஆரம்பித்தால் தூக்கி வீசப்பட்ட அந்த காகிதக் கத்தைகளை .... இன்று வரை தேடுகிறென் கிடைக்கவில்லை. இனி அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை... ஒரு வேளை கிடைத்து விட்டால் இன்று இலக்கியச் சோலை எழுதும் செல்வாவை விட அன்றைய சரித்திர நாவல் நன்றாக இருந்ததை புரிந்து கொள்வீர்கள்........

    அடடா.... கல்கிய பத்தி பேசுண்ணு சொன்னா.... என்னப் பத்தி பேசுறன் பாருங்க.... என்ன பண்றது கல்கி மறுபடியும் மலரும் நினைவுகள தூண்டிவிட்டுட்டாரு....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    தமிழர் திருநாளை ஒட்டி பொருத்தமான படைப்பு. வாத்தியார் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கதைகளையும் படித்துள்ளேன். முற்றிலும் உண்மை.சாண்டில்யன் தனது கதைகளை பெரும்பாலும் கற்பனையாகவே எழுதியிருப்பார். கல்கியின் கதைகள் அனைத்துமே சரித்திர ஆதாரம் கொண்டவை. கதைக்குச் சுவையூட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் சேர்க்கப் பட்டன. எனக்கு இன்னமும் பொன்னியின் செல்வனின் முதல் வரி நன்கு நினைவில் இருக்கிறது. "தில்லைச் சிற்றம்பலத்திற்கு மேற்கே மூன்று காத தூரத்தில்..... என்று ஆரம்பிப்பார். வீரநாராயணத்து புரத்து ஏரி என்று பெயர் என்று முடியும் அத்தொடர். வீரநாராயணபுரம் தான் கால்ப்போக்கில் மருவி வீராணம் என்றாகியது. சென்னைக்கு குடிநீர் கொண்டுவர இரண்டு கழக அரசுகளும் விவாதம் செய்தே காலம் கடத்திய தோல்வியில் முடிந்த ஒரு திட்டம்.வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர் என்று வந்தியத்தேவந்தான் கதையின் முதன்முதாலாக அறிமுகம் ஆகும் பாத்திரம். என்னைப் பொறுத்தவரையில் கதாநாயகனும் அவன் தான். அதில் ஒரு கோவிலை வர்ணிப்பார். அந்தக் கோயில் உள்ள ஊருக்கு அருகில் என் கல்லூரி இரண்டாம் ஆண்டில் முன்றுமாத கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெரும் முகாமில் தங்கியிருந்தேன். அந்தக்கிராமத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு முதியவர்தான் எனக்கு கல்கியின் புத்தகங்களை அறிமுகம் செய்தார். கதை நிகழும் இடம் முழுவதும் தஞ்சை, கும்பகோணம்(குடந்தை சோதிடர்) மற்றும் சிதம்பரம் (கொஞ்சம் மட்டும்) கங்கைகொண்ட சோழபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் (வானதியின் தாத்தாவின் சிற்றரசு), கொடும்பாளூர் (கந்தமாறன்,மணிமேகலை), பழையாறை (பெரியபிராட்டியார் செம்பியன் மாதேவி, மதுராந்தகச் சோழன் ஆகியோரின் இருப்பிடம்) நாகப்பட்டிணம் (சூடாமணி விகாரம், புத்த பிட்சுகள்), கோடியக்கரை (பூங்குழலியும் சேந்தன் அமுதனும் சுற்றித் திரிந்த பகுதிகள்) என கதைக்களம் முழுவதும் செல்லும் பாக்கியம் எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றதாலேயே கிடைத்தது.அது மட்டுமன்றி அக்காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு அந்தப் புதினத்தின் முழுமையும் காணக் கிடைக்கும். மந்தாகினி தேவிக்கும் சுந்தர சோழருக்கும் உள்ள காதல் ஈழம், தமிழகத்தோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதை விளக்கும்.அருண்மொழிவர்மரே கூட ஈழத்தில் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவும் பொறுட்டே அங்கிருந்தார். எனக்கு கதையில் பிடித்த மற்றொரு பாத்திரம் "ஆதித்த கரிகாலன்". அவர் எப்படி இறந்தார் என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுவார் ஆசிரியர். வல்லவரையன் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய வல்லம் என்ற பகுதியின் சிறுநிலமன்னன். வல்லம் இப்பொழுதும் உள்ளது ஆனால் அதுதான் கதையில் வரும் வல்லமா எனத் தெரியாது. திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் வல்லம் எனும் பேரூராட்சி உள்ளது. நம் நண்பர் மதி, பயின்ற புகழ்பெற்ற சாஸ்ட்ரா எனும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியற் கல்லூரியும் அங்குதான் உள்ளன.

    அலைஓசையும் நம்மை பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுவிடும். அக்கால வாழ்க்கை முறையை நாமெல்லாம் அறிந்துகொள்ள அலை ஓசை ஒரு காலக்கருவூலம். ரன்னர் பாலகிருஷ்ணன் என்று ஒரு பாத்திரம். அக்காலகட்டத்தில் அஞ்சல்காரர்கள் கையில் மணியுடன் ஒவ்வொர் ஊருக்கும் ஓடிச்சென்று கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கும். ராகவன் ஒரு சிறந்த பொருளாதார மேதை.தேசிய அளவில் தேர்வெழுதி வெற்று பெறுவான். போட்டித்தேர்வுகட்கு மாணவர்கள் எப்படி அக்காலகட்டத்தில் தேர்வாகினர் எனபது தெளிவாகத் தெரியும். அக்காலகட்டத்தில் கலப்புமணங்கள் எப்படி ஆதரிக்க/எதிர்க்கப் பட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம். முனிசீப் என்ற பழங்கால ஊராட்சி முறை(பட்டாமணியம் கிட்டாவய்யர் கல்கி நகைச்சுவைப்பிரியர்). அது இந்தக் கதையின் முழுமையும் தெரியும்.பெரும்பாலானோர் பெண்ணடிமை எண்ணத்துடன் வாழ்ந்த அக்காலகட்டத்தில் சூரி, சூர்யா (சூர்யநாராயணன் என்றால் அவனுக்குப் பிடிக்காது) கலப்பு மணம் புரிவதோடு மட்டுமில்லாமல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவெண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பான். இவ்வாறாக கல்கியின் கதைகள் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு அறிவுரையை அவ்வப்பொழுது சொல்கின்றன.

    கல்கியின் மற்ற படைப்புக்கள் பொய்மான் கரடு (சிறுகதை), சோலமலை இளவரசி. இன்னமும் இருக்கலாம் எனக்குத் தெரிந்தவை இவையே!


    தக்க நேரத்தில் நல்ல படைப்புக் கொடுத்து மலரும் நினைவுகளைக் கீறிவிட்ட வாத்தியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    Last edited by mukilan; 13-01-2008 at 05:20 PM.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அடடா...அருமையான பதிவு வாத்தியார்.நானும் உங்களைப்போலவே பொன்னியின் செல்வனின் பரமரசிகன்.5 பாகங்களும் வைத்திருக்கிறேன்.மின் புத்தகமாகவும் இப்போதும் என் கணிணியில் வைத்திருக்கிறேன். இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான். எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை.பார்த்திபன் கனவு பைண்ட் செய்த பழைய புத்தகமாக இருக்கிறது.
    நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.
    நண்பர் சிவா.ஜி தான் காந்தியடிகள் என்றகதையைப் படிக்கவில்லை என்றார்.அப்படி ஒரு கதை இல்லை. காந்தியடிகள் அலைஓசையில் இருப்பதைக் குறிப்பிடவே வாத்தியார் அழுத்தம் கொடுத்திருந்தார். அதுதான் குழப்பிவிட்டதென நினைக்கிறேன்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •