அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்
பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் நாளில் இந்த இனிய படைப்பை பொங்கல் பரிசாக மன்ற மக்களுக்கு வழங்குகிறேன்.
நமது மன்றத்தில் சிலருக்கு இவரை தெரிந்திருக்கும், பலருக்கு இவரை தெரியாமலிருக்கலாம். அமரர் கல்கி மிக பிரபலமான சரித்திர கதை எழுத்தாளர். இவரை பற்றி எத்தனை சொன்னாலும் பத்தாது. இவரின் படைபுகளை பற்றிதான் நிரைய சொல்லவேண்டும். சர்வதேச அளவில் ஒரு பழமொழி உண்டு மனிதன் தன் வாழ்கையில் ஒரு முரையாது தாஜ் மகாலை பார்த்துவிடவேண்டும் என்று. அது போல நான் ஒரு பழமொழி சொல்கிறேன் தமிழர்கள் வாழ்கையில் ஒரு முரையாவது அமரர் கல்கியின் சில கதைகளை படித்து விடவேண்டும். கட்டாயம் ஒரு மிக பெரிய மன நிரைவு கிடைக்கும்.
சரித்திர கதைகளில் கல்கியை விட பிரபலமானவர் சாண்டிலியன். சாண்டில்யன் கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். சண்டில்யனின் திறமைக்கு ஈடு இனை இல்லை என்பதை மறுக்க முடியாது. கல்கி சாண்டில்யன் இருவரையும் ஒப்பீடு செய்ய கூடாது. இருவருக்கு தனி தனி திறமைகள் இருக்கும். ஆனால் இருவர் கதைகளிலும் என்னை அதிகம் கவர்ந்தது அமரர் கல்கியே. காரனம் சாண்டில்யன் கதையில் வர்னனைகள் கொஞ்சம் கடுமையான தமிழில் இருக்கும், கல்கி கதைகள் கொஞ்சம் புரியும் தமிழில் இருக்கும். சாண்டில்யன் விஞ்ஞானத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், கல்கி மனொதத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், சாண்டில்யன் கதாநாயர்கள் அனைத்து திறமைகளும் உள்ளடக்கி இருப்பார்கள், ஆனா கல்கி கதாநாயர்கள் சாதர்ன மனித சக்தி உட்பட்ட திறமைகளை தான் வைத்திருப்பார்கள். அதாவது கல்கி எக்ஸாஜரேட் பன்ன மாட்டார்.
இருவருமே வரலாற்றை நன்றாக அறிந்தவர்கள். ஆனால் சாண்டில்யன் பிரபலமானதுக்கு முக்கிய காரனம் அவரின் விஞ்ஞான திரமை மற்றும் பென்களை வர்னிக்கும் கலை, காதலை தத்ரூபமாக வர்னிக்கும் ஆற்றல் உள்ளவர். மேலும் குமுதத்தில் வந்தது. வார இதழ்களில் கல்கியை பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் குமுதத்தை நிரைய பேர் விரும்புவார்கள். காரனம் குமுதத்தில் நிரைய மசாலா சமாசாரங்கள் இருக்கும். சாண்டில்யன் கல்கியைவிட பிரபலமானதுக்கு இது ஒரு முக்கிய காரனம்.
அமரர் கல்கி சிரித்திர சம்பவங்களை சரியான வரலாற்றிலிருந்து எடுப்பார் (ஆங்கிலேயர்கள் சொன்ன வரலாற்றிலிருந்து அல்ல). கதையில் வரலாற்று சம்பவங்களை ஆதாரத்துடன் கூறுவார். அதே சமயம் கதையின் கதாநாயகனாக மன்னர்களை வைக்க மாட்டார். அவர்களுக்கு துனை புரிந்த படைதலைவர்களை கதாநாயகனாக வைத்து தான் கதையை கொண்டு செல்வார். இவர் கதைகளில் ராஜ தந்திரிகள், வீரர்கள், மத தலைவர்கள், சதிகாரர்கள், ராஜ குல பென்மனிகள் மற்றும் பொது ஜன வீர பென்மனிகள் பலர் இருப்பார்கள். அவர்கள் குணத்தை அறிமுகபடுத்தி கடைசிவரை மாற்றாமல் கடைபிடிப்பார். அதுதான் கல்கியிடம் எனக்கு பிடித்த திறமை. கல்கி கதைகளை மின் புத்தமாக படிப்பது கடினம். கல்கியில் தொரர்கதைகளாக படிப்பது இன்னும் நன்றாக இருக்கும். அதுவும் சேர்த்து வைத்து பைண்ட் செய்து படிப்பது நல்ல அனுபவத்தை தரும். மனியம் அவர்களின் படத்துடன் இருந்தால் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
ஆரம்ப காலத்தில் அமரர் கல்கி கதையை படிக்க சொல்லி என் உறவினர் ஒருவர் சொல்லி இருந்தார். ஆனால் நான் அமரர் கல்கி பிராமனர் என்பதால் அவர் படைபுகள் ஏதோ பிராமனர்கள் சம்மந்த பட்ட கதைகளாக இருக்கும் அல்லது ஆன்மீக நூலாக இருக்கும் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். மேலும் கல்கி வார இதழில் படிப்பதற்க்கு எதுவும் சுவாரியயமாக இருக்காது அது ஒரு ஆன்மீக புத்தகம் போல இருக்கும். பொன்னியன் செல்வன் கல்கியில் வரபோகிறது என்று என் உறவினர் என்னை வற்புறுத்தி கல்கியை வாங்க வைத்தார். படிக்க ஆரம்பித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன் எத்தனை அற்புதமான மனிதர் என்று. என்னை கல்கி கதைகளை படிக்க சொல்லி தூண்டியவரை என்றும் நான் மறக்க மாட்டேன்.
அமரர் கல்கி பல கதைகள் எழுதி இருந்தாலும் நமது தேசத்து வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள அவரின் நான்கு கதைகளை வரிசையாக பட்டியலிடுகிறேன்.
சிவகாமியின் சபதம்
இது பல்லவர்கள் காலத்து கதை. பல்லவ மன்னரிகளில் மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்ம வர்மன் அவர்களின் கதை. இந்த கதையில் கல்கி நாட்டிய சிற்ப கலைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அருமையாக விளக்கி இருப்பார். இந்த கதையின் நாயகி சிவகாமி ஒரு கற்பனை பாத்திரம், ஆனால் இந்த கதை நாயகி சிவகாமி தனது நாட்டிய திறமையால என்னை அதிகம் கவர்ந்தவர். என்னுடைய கல்லூரி பருவத்தில் வெளிவந்த சிவகாமியின் சபதம் கதையின் படங்களை நாண் பத்திரமாக வைத்து அதிலிருந்து சிவகாமியின் நடனத்தை ஸ்கேன் செய்து நமது தமிழ் மன்ற நேயர்களுக்கு பிரத்தியேகமாக சமர்பிக்கிறேன். இந்த படத்தை நன்பர்கள் சேவ் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த படங்கள் வேறு எங்கும் கிடைக்காது. காரனம் இது நான் ஸ்கேன் செய்து உங்களுக்கு வழங்கும் படங்கள். இந்த அழகிய படங்கள் என் நினைவாக வைத்து கொள்ளுங்கள்.
சிவாகாமியின் சபதம் பல்லவர்கள் புலிகேசி மன்னன் - சாளுக்கியர்கள் (கர்நாடகா) இடையில் நடந்த போர் சம்மந்த பட்ட கதை. இந்த கதையில் பரஞ்சோதி என்ற படைதளபதிதான் கதாநாயகன். இவர் கற்பனை பாத்திரம் அல்ல, உன்மையில் 64 நாயன்பார்களில் சிறுதொண்டர் என்று அழைக்க பட்ட சிவனடியாரின் இளமை கால வாழ்கை வரலாறு. இந்த கதையில் வரும் நாநந்தி என்னும் கதாபாத்திரம் உன்மையிலேயே நம்மை நடுங்க வைக்கும் கதாபாத்திரம். இந்த கதையில் பல்லவ சக்ரவர்த்தி மகேந்திரவர்மனின் ராஜதந்திர திறமையும் ஒற்றர் சாம்ர்த்தியமும் தான் பிரசக்தி பெற்றது.
பார்த்திபன் கனவுஅறுபுதமான கதைகளை படைத்த கல்கியின் கதைகளில் இது ஓரளவுக்குதான் இருக்கும். மற்றவர்கள் கதையை விட பல மடங்கு தாண்டிவிடும். ஆனால் கல்கியின் திறமை குரைவாக தான் இருக்கும். இதை சிவகாமியின் சபதத்தின் தொடராகவே கருத வேண்டும். இதில் அடிமை தேசமாக இருக்கும் சோழ நாடு மீண்டும் எப்படி சுந்தந்திர நாடாக முயற்ச்சி செய்தது என்பதை பற்றிய கதை.
பொன்னியன் செல்வன்
அமரர் கல்கி கதைகளில் மாஸ்டர் பீஸ் என்றாலே அது பொன்னியன் செல்வன் தான். பொன்னியன் செல்வனுக்கு மட்டும் நிரைய ரசிகர்கள் இருகிறார்கள். அப்பப்பா எத்தனை கதா பாத்திரங்கள் எவ்வளவு அழகாக நகர்ந்த கதை. இந்த கதையின் உதவியால் தான் நான் மாவீரன் லொள்ளுவாத்தியார் எழுதி குறிப்பாக இலங்கையை சுற்றிய ரவுசு எல்லாம். பொன்னியன் செல்வன் என் மனதில் என்றுமே ஓடி கொண்டிருக்கும். அதன் கதா பாத்திரங்கள் என் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நான் பள்ளி பருவத்தில் மனியம் படத்துடன் தொடராக வந்த போது படித்தது.
பொன்னியன் செல்வன் மொத்தம் 5 பாகம். இதன் கதை சுருக்கத்தை தரமுடியாது. ஆனால் இந்த கதை ராஜ ராஜ சோழர்கள் காலத்தில் தமிழகம் எந்த அளவுக்கு செளிப்பாகவும் தன்னிரைவாகவும் கல்வி அறிவாக இருந்தது என்று விளக்க கூடிய நூல். பொன்னியன் செல்வன் மூலம் பழையரை சோழ மன்னர்களில் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். சோழ நாட்டின் ஒரு போர் வீரன் வந்தியதேவன் (உன்மை பாத்திரம்) கதாநாயகனாக வைத்து அருமையாக கொண்டு செல்லபட்ட கதை. இதில் ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் ஒவ்வொரு குனாதிசியங்களை தந்து அதை கடைசிவரை கடைபிடித்து வந்தார். அருள்மொழிவர்மன் என்று அழைக்கபட்ட ராஜ ராஜ சோழன், அவருடை தந்த சுந்தரசோழர், சகோதரன் ஆதித்த கரிகாலன், சகோதரி குந்தவை அவர்களுடைய பெரியபாட்டி செம்பியன் மாதேவி இந்த பாத்திரங்களை மையமாக வைத்து எழுத பட்ட கதை. இவர்கள் அனைவரும் நிஜ பாத்திரங்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்க வைத்தது. நாடுளும் விதம், ஜனநாயகம், பென் உரிமை, ஆண்மீகம் காதல் அனைத்து அற்புதமாக கையாளபட்டிருந்தது இந்த கதையில். இந்த கதையின் கதாநாயகன் வந்தியதேவனை அசாத்திய திறமைசாலியாகவோ விரனாகவோ படைக்கவில்லை. ஒரு சாதர்ன வீரன் தான் ஆனால் முந்திரிகொட்டை, மேலும் அவன் திட்டமிடாமல் காரியம் செய்வான், பிரச்சனைகள் தேடிவரும் பிறகு அது பலரின் உதவியாள் சரியாகிவிடும்.
காதல் இல்லாமல் காவியம் படைக்க முடியுமா. கல்கி அதிலும் ஒரு படி மேலே வசீகரம் கலக்கபடாமல் அன்பும் மென்மையும் கலந்து வந்தியதேவன் மற்றும் குந்தவையின் காதல் காட்சி நன்றாக இருக்கும். குந்தவை வந்தியதேவன் மீது காதல் கொண்டாலும் தனது கடமைக்கு தான் முக்கியத்துவம் தருகிறார். இந்த இடத்தில் கல்கி அரச குல பிரஜைகள் மக்கள் பிரச்சனைக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதன் பிறகுதான் சொந்த உனர்ச்சிகளுக்கும் இடம் என்று தெளிவாக விளக்கி இருப்பார். ராஜகழை பொருந்திய வானதியின் காதல் அதில் இருந்த தியாக என்னம் மிகவும் சிறப்பு பெற்றது. இன்னொரு சிறுப்பு மிக்க காதலும் வரும் அதை கடைசியில் விளக்குகிறேன்.
இந்த கதையில் கற்பனை பாத்திரமாக விளங்கும் நந்தினி என்னும் பென் படிப்பவர்களையே மதி மயக்கி விடுவார். அந்த அளவுக்கு அழகு உறுதி நிரைந்தவர் என்று சொல்லலாம். இன்னொரு கற்பனை பாத்திரம் பெரிய பழுவேட்டையார் தன்னுடை கடைசி கட்டத்தில் நம் மனதை மிகவும் கொள்ளை அடித்து விடுவார். அதுவும் ஆற்றில் விழுந்து அடித்த செல்லபட்ட காட்சிகளில் அவர் மனதில் ஓடிய சிந்தனைகள் என்றுமே நம் மனதை விட்டு அகலாது.
கல்கி கதைகளில் நகைசுவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பொன்னியன் செல்வனில் ஆழ்வார்கடியன் என்று ஒரு கற்பனை கதா பாத்திரத்தை படைத்திருப்பார், அடடா அவர் செய்யும் ரவுசு இருகிறதே. அப்படி ஒரு நகைசுவை செயல்கள் அதே சமயம் மிக புத்திசாலியாகவும் வருவான். பொன்னியன் செல்வனை படித்தவர்கள் ஆழ்வார்கடியானை மறக்க வாய்பே இல்லை.
பூங்குழலி - பொன்னியன் செல்வன் கதையில் ஒரு கற்பனை பாத்திரம்தான், கடலில் படகு செலுத்தும் மீனவ குலத்து பென் அது ஏனோ தெரியவில்லை இந்த பென் தான் என்னை மிகவும் கவர்ந்தவள். காரனம் என்ன தெரியுமா, இந்த பென்னின் துடுக்குதனம் தைரியம் வீரம் இதுதான். இந்த கற்பனை கதாபாத்திரத்தின் மீது நான் காதல் கொண்டேன் என்றால் அது மிகையல்ல. என் வாழ்கையில் வாலிப பருவத்தில் காதல் உனர்ச்சியை தோற்றுவித்தவளும் இந்த பாத்திரம்தான், இன்றும் அதை இளமையாக வைத்திருப்பதும் இந்த பூங்குழலி என்ற கதாபாத்திரத்தினால் தான். பூங்குழலியை கல்கி சாதர்ன பென்னாளிலிருந்து மாறு பட்டு படைத்திருகிறார். வெறும் வீரம் மட்டுமல்ல காதல் உனர்ச்சியிலும் வீரம் நிரைந்தவள், எந்த பென்னையும் விஞ்சி விடும் ஆற்றல் நிரைந்தவள். ஏழை பென்னாகா பிறந்தாலும் அரசியாக ஆசைபடுபவள், மன்னரை காதலித்தவள் சிம்மாசனம் ஏற துடித்தவள். அந்த அளவுக்கு ஆசை மட்டுமல்ல அதை அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்டவள், இளவரசனை காதலித்து தோல்வி அடைந்தாலும் கூட இவள் கரம்பிடித்த ஒரு ஏழை இறுதியில் நாட்டுக்கு மன்னரவான். அந்த அளவுக்கு இவள் மண உறுதியை கல்கி விசேசமாக கையாண்டிருப்பார். பூங்குழலி பாடிய ஒரு பாடல் மட்டும் என் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தன.
அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்
என்ன அற்புதமான வரிகள் இந்த வரிகளை பூங்குழலி அடிகடி பாடுவாள். என் மனதிலும் நான் ராகத்துடன் பாடுவேன்.
சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியன் செல்வன் இந்த மூண்று கதைகள் மூலம் அமரர் கல்கி நாட்டுக்கு ஒரு மெசேஜ் சொல்லி இருப்பார் அது தான் ஒற்று வேலை. ஒரு நாடு செழித்தோங்க வேண்டுமானால் மிக முக்கியமான விசயம் ஒற்றர் படை. இண்டலிஜன்ஸ் அல்லது புலனாய்வு துரை போல, நன்றாக கவனித்து பாருங்கள் நமது நாட்டில் நீண்ட காலமாக இண்டலிஜன்ஸ் சரியாக இல்லாததாலே பல பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருகிறோம்.
சரித்திர நாவல்களை எழுதி வந்த அமரர் கல்கி இறுதி நாளில்
அலைஓசை என்று ஒரு அற்புதமான நாவலையும் எழுதினார். பொன்னியன் செல்வன் அளவுக்கு இல்லாவிட்டாலு இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். காரனம் என்ன தெரியும் விடுதலை போராட்டம் பாக்கிஸ்தான் பிரிவினை மதகலவரம் இதை ஒட்டிய ஒரு கதை இது. இந்த கதையில் ஒன்றுபட்ட இந்தியா (இன்றைய இந்தியா, பங்களாதேஸ், பாக்கிஸ்தான்) இப்படி அனைத்து இடங்களிலும் சுற்றி வரும் கதை. எங்கு பிரச்சனைகள் நட ந்ததோ அங்கு கதாநாயகியை கொண்டு சென்று விடுவார். வட இந்தியாவில் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது ஹிந்து மக்கள் எப்படி தமிழர்கள் அறிய இந்த கதையை கட்டாயம் படிக்க வேண்டும். அதே சமயம் மத நல்லினக்கத்தையும் வலியுறுத்தி இருக்கிறார் கல்கி. இதில் ஒரு சிறப்பு என்னவென்றாள் காந்திஅடிகள். இந்த அலைஓசையில் அமரர் கல்கி காந்தியை பற்றி ஒரு தவறான கன்னோட்டத்தில் சொல்ல ஆரம்பித்து கதையின் இறுதி பாகத்தில் காந்தியை சந்திக்க வைத்து காந்தியையின் மீது அளவு கடந்த பக்தியை வெளிகாட்டுவார். இந்த கதையிலிருந்து இஸ்பிரேசன் தான் ஹே ராம் திரைபடம்.
அன்பு தமிழ் மன்ற நன்பர்களே, வாய்பு கிடைத்தால் அமரர் கல்கியின் இந்த நாலு கதைகளை படித்து விடுங்கள். அறிய பொக்கிசம் இந்த கதைகள். பொன்னியன் செல்வன் கதை நான் பூஜை அரைவில் வைத்து பூஜை செய்யும் ஒரு நாவல். என் மனைவியிடம் நான் வைத்திருக்கும் கோரிக்கை என்ன தெரியுமா என் இறுதி நாட்களில் பொன்னியன் செல்வனை என் அருகிலேயே வைத்திருக்கும் படி தான். அந்த அளவுக்கு பொன்னியன் செல்வன் மீது எனக்கு பிடிப்பு.
பொங்கல் வாழ்த்துகள்
இந்த திரியில் படம் இருகிறது
சிவகாமியின் சபதம் படங்கள்
Bookmarks