அநேகமா உங்களுக்கு இந்நேரம் வெங்காய பாய்ஸ் பத்தி தெரிஞ்சிருக்கும். நான் பெங்களூர் வந்து ஏறக்குறைய மூணு வருஷத்துக்கு மேலானாலும் கல்லூரி நண்பர்களோட எங்கேயும் டூர் போனதில்லை. பார்த்தி அடிக்கடி அவன் ஆபிஸ்ல டூர் போவான். அவந்தான் அடிக்கடி சொல்லுவான். நாம எல்லோரும் சேர்ந்து டூர் போலாம்டா.
ஏதோ இந்த திட்டம் ரொம்ப நாளா ஒத்துவராமலேயே இருந்துச்சு. ஒரு மாதிரி பேசிப்பேசி எல்லோரும் போலாம்னு முடிவு பண்ணினது புதன்கிழமை. வழக்கம் போல மருது அதாங்க கருத்து கண்ணாயிரம் அக்கா வீட்டுக்கு போகணும் வரலேன்னுட்டான்.
போக்கிரி வடிவேலு மாதிரி எங்க நெலம. ஒரு ஆளு போச்சே. சரி இந்த வாரமும் ஒன்னும் ஒத்து வராதுன்னு முடிவாச்சு. திடீர்னு வியாழக்கிழமை ஆபிஸ்ல இருக்கும் போது பார்த்தியிடமிருந்து போன்.
டேய். என் ஆபிஸ் கொலிக் ரெண்டு பேர் வர்றேங்கராங்க. இந்த வாரம் வயநாடு போலாமா?
ஆபிஸ்ல ஏற்கனவே நிறைய குடைச்சல். எங்கியாவது போகணும்னு தோணினதால உடனே வர்றேன்னுட்டேன்.
சரி. போலாம். வேற யாரெல்லாம் போறோம். நாளைக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுமா?
அதெல்லாம் பாத்துக்கலாம்டா. மருது வரல. அடுத்து பாடிக்கு (கண்ணனை வீட்டில் எல்லோரும் பாடிசோடான்னு தான் கூப்பிடுவோம். ஆள் நம்மூர் ஆர்னால்ட் வையாபுரி மாதிரி இருப்பதால அந்த பேர்) தான் போன் போடணும். விஜய் எப்படியும் வந்துடுவான். உன் தம்பி வேற இருக்கான். ஆறு பேருக்கு ஒரு குவாலிஸ் போதும்டா. நான் பாத்துக்கறேன்
ஏற்கனவே நிறைய டூர் ஆர்கனைஸ் பண்ணியிருந்ததால பார்த்திக்கு டிராவல்ஸ் எல்லாம் பழக்கம். கண்ணனும் விஜயும் வர்றேனுட்டாங்க. பார்த்தி ஹோசூர்ல தெரிஞ்ச ஒரு டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டான்.
வெள்ளிக்கிழமை ராத்திரி. ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் பத்து மணிவாக்கில் கிளம்பலாம் என்று திட்டம். பார்த்தியும் அவன் நண்பர்களும் ஏற்கனவே ரெண்டு தடவை வயநாடு போய்ட்டு வந்திருக்காங்க. என்னமோ தெரியல கேரளானால எல்லோருக்கும் தனிகுஷி.
வண்டி வந்து வீட்டு முன்னாடி தயாரா இருந்துச்சு. ரெண்டு நாள் பயணத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்தாச்சு. விஜய்கிட்டேர்ந்து போன்.
டேய் நான் நாளைக்கு ஆபிஸ் வரணும். அவசர வேலை வந்துடுச்சு. நீங்க போங்க..
என்னடா இப்படி சொல்ற. சரி.. நாங்க கிளம்பறோம்
புறப்பட்டாச்சு வயநாடு நோக்கி பயணம். மடிவாலாலேர்ந்து கிளம்பி பனஷங்கரி பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கற கோயிலுக்கு போய் பூட்டியிருந்த கோயிலுக்கு முன்னாடி நின்னு சாமி கும்பிட்டு ( கொஞ்சம் பக்தியும் உண்டுங்கன்னா) வண்டி விடு ஜூட்.
ஆரம்பிச்சாச்சு எங்க மொக்கை. எல்லா பயலுவலும் தமிழ். மாத்தி மாத்தி அவங்க வேலைய பத்தி ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
டேய். . ஆமா.. அந்த எக்ஸல் ஷீட்டுல என்னடா பண்ணுவ.. எப்ப பாத்தாலும் எக்ஸல், டாக்குமெண்ட்.. நல்ல பொழப்புடா
போடா..டேய் எக்ஸல்ல இல்லாத மேட்டரே இல்ல.. உனக்கென்ன அதப்பத்தி தெரியும்.
ஆமாமா.. எந்த பிளாட்பாரத்துல வேலை பாக்குறன்னு கேட்டா மைக்ரோசாப்ட் ஆபிஸ்னு சொல்ற. ஊரே அதுல தான் வேல பாக்குது.. ஆனாலும் உன்னையும் வச்சுகிட்டு சம்பளம் குடுக்கறாங்க பாரு
நீ மட்டும் என்னவாம்.. HR ல வேல பாக்குறேன்னு ஒரே சீன்னு.. நீ பயன்படுத்தற டூல் கூட எக்ஸல் மாதிரி தானே பெரிய இவனாட்டம்.
என்ன பண்றோம்னு அடுத்தவனுக்கு தெரியற வரைக்கும் தான் மதிப்பு. தெரிஞ்சிடுச்சுன்னா மதிக்க மாட்டாங்க. இங்க அவனவன் பாக்குற வேலை எல்லோருக்கும் தெரியும்கறதால இப்படியும் இதவிட ரொம்ப பெருமையாவும் எல்லோருடைய வேலையும் பேசப்படும்.
அங்க பாரு...சுள்ளான் என்னமோ யோசிச்சிட்டு வர்றான். டேய் ரபட்ட்டிக்ஸ்..என்னடா பண்ற.. வேற ஒன்னுமில்லீங்க அவன் ரோபோடிக்ஸ் இஞ்சினீயர்.
அதுவா.. அடிக்கடி ரோபோ டெலிவரி.. அது இதுங்கறான். போய் பாத்தா தான் தெரியும். அங்க ஷோகேஸ்ல இருக்குற ரோபோவெல்லாம் தொடைக்கற வேலையாம். இன்னிக்கு நிறைய தூசியாடுச்சாம். அதான் கவலை
இப்படி மொக்கையாக இரவு போயிட்டிருந்தது. மைசூர் தாண்டி பந்திப்பூர் சாலையில் வண்டி திரும்பியது. குறிஞ்சியும் முல்லையும் அந்தகாரமா இருந்தது. ரோடு வேற மோசமா இருந்ததால கொஞ்சம் மெதுவா போனோம். வழியில ஒரு இடத்துல வண்டிய நிறுத்தி இயற்கைய ஸ்நேகிச்சுட்டு திரும்ப வண்டியிலேறி கொஞ்ச தூரம் தான் போயிருப்போம். திடீர்னு ஒரு சத்தம். வண்டி குலுங்கியது. அது.
Bookmarks