தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
புதிய பூவிது, பூத்தது!
காலேஜ்ல, என்னோட மரபுக் கவிதைகள் மதிக்கப்படவில்லை. புரியலை என்று ஒரு கூட்டம், பீடா மாதிரி வார்த்தைகளை மடித்துப் போட்டு வந்து கொண்டிருந்த புதுக் கவிதைகள் மக்கள் மனசை ஆக்ரமித்திருந்தன. வார்த்தைகள் வசப்பட்ட பிறகு வடிவா கஷ்டம்.
நான் முதன்முதல் எழுதிய அந்தப் புதுக்கவிதை கல்லூரியில் ஒரு புயலையேக் கிளப்பி விட்டது. அந்தக் கவிதை அப்போதைய வயசுக் கோளாறு.. அதனால் சொல்ல விரும்பவில்லை. இப்படியும் யோசிப்பாய்ங்களோ, ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ என மக்கள் கலங்கி விட்டனர்..
சடாரென என்னைச் சுற்றி இருந்த அப்பாவி நண்பர்களை ஓரங்கட்டி புது நண்பர்கள் முளைத்தனர்.. தினம் தினம் கவிதை மழை ஆரம்பித்தது. என்னுடைய நோட்டுப்புத்தகங்கள் இல்லாத காதலிக்காக எழுதிய கவிதைகளால் நிறைந்தன. நடு வரிசையில் அமர்ந்திருந்த நான் கடைசி பெஞ்சுக்கு ஷிப்ட் ஆனேன்,
எனக்குன்னு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க.. எனக்கு துக்காராம் என்ற பட்டப் பெயர் வந்தது .. (அதுக்கு காரணம் புதையல், சிவாஜி கணேசன் படத்தில் வரும் சந்திர பாபுவைப் போல இருந்தேனாம்)
கணக்கு பீரியட், எனக்கு வசதியாய் இருந்தது கவிதை எழுத, ஏன்னா வாத்தியார் சொல்லிக்கொடுக்கறது ஆரம்பத்திலயே புரிஞ்சுடும்.. நிறைய நேரம் கிடைக்கும் எழுத,,
அதே சமயம், இங்க்லீஷ் பீரியட்ல எழுத ரொம்ப விஷயம் கிடைக்கும்.
அப்போதெல்லாம் நான் பேசினாவே அதிரும்.. ஓங்கி ஒலிக்கும் என் குரலால் இரண்டாவது மாடியில இருக்கறங்க கூட தூங்க முடியாம கஷ்டப்படுவாங்க.. ஒல்லிக்குச்சி உடம்பு (46 கிலோ), இடிச்சிரிப்பு, கணீர்குரல் இதெல்லாம் தான் என் அடையாளங்கள்..
ஹாஸ்டல் வார்டன்களுக்கு நான்னா தலைவலி.. ஆனால் ரெண்டு பேரும் எங்க கிட்ட மாட்டிகிட்டாங்க ..
வேற என்ன காதல்தான்...
தொடரும்
Last edited by தாமரை; 08-12-2007 at 02:19 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சிறுவயதில் தீராத புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்களாக இருந்த நிறையப் பேர் இந்த மன்றில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்களே...!!
இளசு அண்ணா கூட தான் சிறுவயதில் ஏராளமான புத்தகங்கள் படித்ததாகக் கூறியுள்ளார்...!!
செல்வன் அண்ணா...!!
ஒருவரின் வளர்சிப்பாதையை அறிவதில் எத்தனை எத்தனையோ அனுகூலங்கள்.......!!
மிக்க நன்றி உங்கள் அரும்படைப்புக்கு....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அட இவ்ளோ அட்டூழியம் எல்லாம் பண்ணீருக்கீங்களா...?
சபாஷ்.. கல்லூரியில் நடந்தது.. சொல்லுங்கோ...
அருமையான அனுபவங்கள், கவிதிறனை வளர்த்தி வந்த உங்கள் கல்லூரி வாழ்கை ஆரம்பத்தில் ஆதரவுகள் இருந்திருக்காது. நான் படிச்ச கல்லூரியில் கலையை சுத்தமாக மதிக்க மாட்டார்கள்.
ஆகா காதல் ஆரம்பிச்சாச்சா அதையும் சொல்லிருங்க கேக்க இன்ட்ரரிஸ்டிங்கா இருக்கோம்
அதில்தான் இருக்கு ட்விஸ்ட்.. நான் நர்ஸரிப் பள்ளியில எஞ்ஜினியரிங் படிச்சவனாக்கும். அதாவது நாங்கதான் ஃபர்ஸ்ட் செட். முதலாம் ஆண்டு ஒரு நர்சரிப் பள்ளியில்தான் வகுப்புகள். கல்யாண மண்டபம்தான் லேப். 6 பிளாட்கள் கொண்ட அபார்ட்மெண்ட் தான் ஹாஸ்டல்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அண்ணா.. மேல் நிலைப்பள்ளி தமிழை சொல்லாமல் விட்டு விட்டீங்களே. அப்படியே நீங்க எழுதின முதலாவது புதுக்கவிதையை கண்ணுல காட்டுறது.
இந்த விசயத்துல எனக்கும் உங்களுக்கும் ஒற்றுமை அதிகம். நீங்க கவிதை நான் பேச்சு. அவ்வளவுதான் வித்தியாசம். அடுத்தது வாலிபவிருந்தா??கணக்கு பீரியட், எனக்கு வசதியாய் இருந்தது கவிதை எழுத, ஏன்னா வாத்தியார் சொல்லிக்கொடுக்கறது ஆரம்பத்திலயே புரிஞ்சுடும்.. நிறைய நேரம் கிடைக்கும் எழுத,,
அதே சமயம், இங்க்லீஷ் பீரியட்ல எழுத ரொம்ப விஷயம் கிடைக்கும்.
பாடசாலை முதல் கல்லூரி வரை நினைவுகளை கிளறி விட்டிருக்கிறீங்க.... உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளளது, எங்கள் பாடசாலையில் இந்தளவிற்குச் சந்தர்ப்பம் தரவில்லை.
ஆண்டில் ஒரு தடவை தமிழ் தினப் போட்டி நடக்கும் அதில் பங்கு பற்றினால்தான உண்டு மற்றும் படி தமிழ் வளர்க்கும் போட்டிகள் நடந்ததில்லை.
மேடையேறி நான் பேசியது 12ம் வகுப்பில்தான்... இப்போது வலைப்பதியும் மு.மயூரன் போன்றோர் எல்லாம் ஒன்றாகப் பாடசாலையில் படடித்தோம்.
கல்லூரியில் தமிழ் மூச்சே இல்லை. நாங்கள் 5 பேர்தான் தமிழ் மற்றவர் எல்லாம் சிங்கள சகோதர சகோதரிகள். பேசுவது எழுதுவது எல்லாம்் 50 வீதமம் சிங்களம் 50 வீதம் ஆங்கிலம்...!!!!!1
பொறாமையாக உள்ளது...
அந்தக் காலத்திலேயே என்னோட கதைகளை மாதிரி கதை எழுதத் தொடங்கீட்டீங்களா???? அந்தக் காலத்தில் நான் இருந்திருந்தால் தவளை இளவரசி நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம்!!!
ஊற்றுக்கண் திறந்து தமிழ் பிரவகித்த நினைவுகள், கோர்வையான வாடாமலர்ச்சரப் பதிவு அருமை...
தொடருங்கள் செல்வரே...
Last edited by அக்னி; 05-12-2007 at 11:01 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
காதலும் கவிதையும்!
காதல்னா மனசில மட்டுமில்ல மன்றத்தில கூட ஒரு புத்துணர்ச்சி வந்திருது பாருங்க.. அதுதான் காதலோட பெருமை.. எங்க பாய்ஸ் ஹாஸ்டலுக்கு இரண்டு வார்டன்கள்.. ஒருத்தர் இங்கிலீஸ் லெக்சரரை காதலிக்க இன்னொரு வார்டன் லேடீஸ் ஹாஸ்டல் வார்டனைக் காதலிக்க...
சனிக்கிழமை ஃபிரீ நைட்.. அன்னிக்கு எங்க மட்டும் போகலாம்.. எப்ப மட்டும் வரலாம்.. பசங்க எல்லாம் செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்தா பயங்கர மழை.. அந்த மழையில தேர்ட் ஷோ..
ஹி ஹி ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் ஒரே குடையில நனைஞ்சுகிட்டு போறதை மக்கள் பார்த்துட்டாங்க.. குடைக்குள் மழை.. காதல் மழை..
மறுநாள்ல இருந்து வார்டன்கள் (பிஸிக்ஸ் -னு வச்சுக்கவோம், கேர்ள்ஸ் ஹாஸ்டல் வார்டன் - மேத்ஸ், இன்னொரு வார்டன் - டிராயிங், இங்க்லீஸ்) எங்க கையில.. பீச்சில் முறுக்கு, சுண்டல் விற்கும் பையனை எப்படி காதலர்கள் பகைச்சிக்க முடியாதோ () அப்படி எங்களை ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு..
புது நண்பர்கள் சகவாசத்தால் நான் இரண்டாம் மாடிக்கு அறை மாறினேன்.. (நான் என் அறையிலேயே வாழ்ந்தது கடைசி வருடம் மட்டும் தான்).
உமாசங்கர் (ஆப்பு) கவிதைகளோட தீவிர ரசிகன். சக்திவேல்(பந்தா) பார்க்க அசப்பில சினிமா நடிகர் பழைய கார்த்திக் மாதிரியே இருப்பான். பயங்கரமான ஆதிக்க மனப்பான்மை இருக்கிறவன்.. அவன் என்.எஸ்.எஸ் (நேஷனல் சோஷியல் சர்வீஸஸ்) சேர்மன் ஆனான். வாசு(தகதகா) அற்புதமாக பாடுவான். பி.கே. "கரண்ட்" குமரேசன் ஆக நாலு பேர் ரூம்மேட்ஸ். நான் போய் ஒட்டிகிட்டேன்..
என்னுடைய கவிதைகளுக்காக எல்லோரும் அவங்க நோட்டுகளையெல்லாம் எனக்குத் தருவாங்க.. நோட்டு ஃபுல்லாயிட்டா வாங்கிட்டுப் போயிடுவாங்க.. என்னுடைய நோட்டுகளும் என்னிடத்தில் நிற்பதில்லை..
ஒரு நாள் மேத்ஸ் கூப்பிட்டாங்க.. தாமரை உன் கவிதைகள் நோட்டை கிளாஸ்லயே விட்டுட்டுப் போயிட்டியேன்னு குடுத்தாங்க.. (அப்ப கூட அவங்களுக்கு நாம பாடம் நடத்தும் போது இவன் கவிதை எழுதறான்னு கோபம் வராதா என்ன?)
எனக்குத் தெரியும் அது இரண்டு மாசத்துக்கு முன்னால எழுதிய கவிதைகள்னு.. அது வாங்கியது பிஸிக்ஸ்.. நம்ம கவிதை இப்படி வேற பாலம் கட்டுதான்னு நினைச்சேன்..
இதே மாதிரி என் கவிதை பந்தா சக்திவேலால் பயன்படுத்தப் பட்டதும் லேட்டாதான் தெரிஞ்சது எனக்கு.. எப்படியோ நல்லா இருந்தாச் சரின்னு விட்டுட்டேன்.
ஹாஸ்டல்ல இரண்டு கோஷ்டி ரொம்ப பலமா இருந்தது. ஒண்ணு மெட்ராஸ் கோஷ்டி இன்னொன்னு மதுரை கோஷ்டி.. நான் எல்லோருக்கும் பொது.. எல்லோரடவும் பேசுவேன்..
முதல் வருஷம் முடிஞ்சது.. எல்லோரும் காசு கலெக்ட் பண்ணி, பாட்டில் பாட்டிலா வாங்கி பக்கெட்ல கலந்து காக்டெய்ல் அடிச்சாங்க.. அப்பல்லாம் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்..
வீட்டுக்குக் கிளம்பும் பொழுது ஆப்பு அந்தத் தப்பைச் செஞ்சான்.. என்ன தெரியுமா? துக்கா, போனா கண்டிப்பா லட்டர் போடணும்னு சொல்லி அட்ரஸ் குடுத்துட்டுப் போனான்.
அப்புறம்... தொடரும்
Last edited by தாமரை; 08-12-2007 at 02:30 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks