Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: இரவு தோறும்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by மதி View Post
    அட...மயூரா பேய் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா..?முதல்ல ஒன்று சொல்லணும்..
    கதை உன் வழக்கமான தமிழ் நடையில் செல்கிறது. ஆயினும் கதையும் அதன் முடிவும்.. சுவாரஸ்யமானதாய் இல்லை. வார்த்தைகளில் தான் திடுக் இருக்கிறதே தவிர நம் மனதினில் இல்லை. மேலும் எளிதில் கிரஹிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. சிறுகதையானாலும் வலுவான சம்பவங்களோ நம்மை நிமிர்ந்து உட்கார செய்யும் முடிவோ இல்லாதது வருத்தமே. வழக்கமான உன் கதைகளில் வரும் நகைச்சுவையும்.. மனதை கனத்துப் போகும் சம்பவங்களும் இதில் மிஸ்ஸிங்..

    மன்னிக்கவும் மயூ.. உன் கதைகளில் ரசிகன் என்ற வகையில் இக்கதை சுமார் தான்.
    நன்றி மதி அண்ணா!!! ம்.. என்ன செய்ய.. சும்மா ஒரு முயற்சிதான்.... அடுத்த கதையில் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று எதிர்பார்க்கின்றேன்!!!!!

    Quote Originally Posted by ஆதவா View Post
    வணக்கம் மயூர்.

    குகனை உருவகமாய் மயூரேசனை மனதில் வைத்துக் கொண்டேன். கொழும்பு வீதிகளில் செல்லும் கொரொல்லாவைப் போல நானும் பயணித்துக் கொண்டேன்.

    கதையின் ஆரம்பம் முதலே எனக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வசனங்களில் ஈழவாசம் அடிப்பதை தவிர்க்க இயலாது,. அது கதைப்படி. நல்ல தேர்ந்த கதாசிரியருக்குரிய தொடக்கம், மற்றும் முடிவு. இதை என் பாஷையில் கானல் நிழல்கள் என்று சொல்வேன். நம் நினைவுகள் ஒரு உருவத்தை அடக்கி நினைத்துக் கொள்ளும். இரவு நேரப் பயணங்களில் இம்மாதிரி நிகழ்வது கனவா இல்லை நிசமா என்பதைவிட இரண்டும் கலந்ததே என்பதை ஒப்புக் கொள்ளலாம். திடீரென விழித்துப் பார்த்தால், அட இதை நாம் நிசமென்று நினைத்தோமே என்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் குகனுக்கு கல்யாணம் ஏற்படவில்லை. (குகன்=மயூ) ஆதலால் அந்த காரணம் இருக்கலாம். இரவு தோறும் மிரட்டும் இந்தக் கானல் உருவங்கள் அவரவர் எண்ணங்களின் வடிகால். சீக்கிரமெ திருமணம் புரிந்துகொள்வது நலம். இல்லையெனில் அவளைத் திருமணமே செய்துகொண்டு குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொள்வான்..

    நினைவுகளைத் தவிர்த்து வேறு ஏதும் வைத்து எழுதியிருப்பாயோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. (ஆவி, பேய் இந்த மாதிரி) அப்படி இருந்தால் சொல்லிவிடு,

    நல்ல அருமையான சிறுகதை எழுத்தாளராகிய மயூவுக்கு இந்தக் கதையும் கூட்டற்புள்ளிகளே ஆயினும், கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

    வாழ்த்துகள் மயூர்
    நெத்தி அடிகளுக்குள் ஒரு ஆறுதல் வார்த்ததை... நன்றி நண்பா... நான் பேய் என்று எங்கும் சொல்லவில்லை... அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீ சொன்ன மாதிரி நினைவுகளாகவும் இருக்கலாம்!!!

    கதையில் அழுத்தம் போதாது வாசர் மனத்தில் இடம் பிடிப்பதற்கான பஞ் இல்லை என்பதையும் ஏறறுக்கொள்கின்றேன்!!!

    Quote Originally Posted by பென்ஸ் View Post
    நல்ல துவக்கம்....
    சரி கதையை சொல்லு....
    அட... அட.. அட.... யாரு பென்சு அண்ணாவா.. வாங்க வாங்க....
    உங்க பாணியிலேயே நச்சுன்று ஒரு விமர்சனம்...!!!
    புரிகின்றது!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by இளசு View Post
    வாழ்த்துகள் மயூ..

    உன் தரத்துக்கு இது கம்மி என மதி, பென்ஸ் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..
    எனக்கென்னவோ கதை பிடித்துத்தான் இருக்கு..

    அதிலும் வர்ணனைகள், வசனங்கள் - !
    நன்றி இளசு அண்ணா அவர்களே!!!
    உங்கள் விமர்சனம்... கொஞ்சம் தெம்பூட்டுகின்றது!!

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஐயோ மயூ யாரந்த பென் பேயா இல்ல பிசாசா. இல்ல ஆதவா சொன்ன மாதிரி ஏக்கத்தினால் ஏற்பட்ட மனபிராந்தியா. முடிவ மட்டும கொஞ்ச விளக்குங்கள்
    அது எதுவாகவும் இருக்கலாம்... ஆதவன் சொன்னமாதிரி!!! ஹி.. ஹி.. பார்த்தீங்களா உங்க கேள்விக்குள்ளேயே விடை இருக்குது!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஒரு சம்பவம்,சில கதாபாத்திரங்கள்...சொன்னவிதம் அருமை.ஆனால் புதிது என்றோ, இதில் ஏதோ இருக்கிறது என்றோ நினைக்கமுடியாத பழகிய கரு.
    உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இதனையே வித்தியாசமாக இன்னும் தொடருங்கள்.சுவைக்க காத்திருக்கிறோம்.வாழ்த்துகள் மயூ.
    நன்றி. சிவா.ஜி....!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by அமரன் View Post
    வாழ்த்துக்கள் மயூ! நல்ல தொடக்கம். நல்ல நடை. நல்ல முடிவு.

    ஏ~9 வீதி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துகும் இடையிலான ஒரே ஒரு தரைவழிப்பாதை. கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் நீளமுடையது. கொழும்பிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ 2/3 மணித்துளிகளின் பின்னர் தொடர்ச்சியான காட்டை ஊடறுத்துச்செல்லும் சாலை. ஊருடன் சேர்ந்து வாகனங்களும் உறங்கிவிட நிலவு, குளிர்காற்று, நிர்ச்சலனம் விரட்டும் சில சத்தங்கள் போன்றவற்றின் துணையுடன் பயணம் தொடரும்..
    தொடரும் பயணத்தில் கும்பலாக ஒரு வேனில் போனாலென்ன, தனிமகிழுந்தில் போனால் என்ன ஆபத்து இருக்கு.

    வாகனக்கொள்ளையர் ஒருபக்கம், திருடர்கள் இன்னொரு பக்கமுமாக அடிக்கடி மண்சரிவு நிகழும் இரண்டு செங்குத்து மலைகளுக்கு இடையில் செல்வதுபோல இருக்கும்.. அந்தப்பெண் கைகளை குரொல்லாவுக்கு குறுக்காக நீட்டும்போது அந்தகூட்டத்தினரோ என்ற திடுக் ஏற்படுகின்றது.. ஆனால் பேய் என்னும்போது நம்பமுடியாத உணர்வு. அப்படியான விடயங்கள் அங்கே நிகழ்ந்ததாக புதினக்குற்றிப்புகள் காதில் தேக்கியிருந்தால் திடுக்செறிவு அதிகரித்து இருக்கும்..
    நன்றி அமரன் உங்கள் அழகான விமர்சனக்த்திற்கு.. நான் கதையில் முழுதாக புரியப்படுத்தாத விடையங்களைக் கூறியுள்ளீர்கள்!!! நன்றி அமரன்!!!

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இலங்கையில் ஒருவன் ப்ராடோ வைத்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவன் கோடீஸ்வரன் தான்.... கதை நன்றாக இருக்கிறது...

    அனுபவம் ஏதுமில்லையே.... (கொரெல்லா... ஹொன்டா சிட்டி அதை அப்படியே ப்ராடோவாக மாற்றலியே)
    வாங்க முடியாததை நினைத்துத்தானே எழுதுவது!!! ஹி.. ஹி.. மற்றும் படி எந்த உள்குத்தும் இல்லை!

    Quote Originally Posted by மலர் View Post
    எனக்கு கதை புடிச்சிருக்குப்பா...

    மயூவோட வித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...

    ஆனா அந்த பொண்ணு பேய்ங்கிற தான் நம்ப முடியலை...
    நன்றி மலர்! தாங்சுங்க!!!

    Quote Originally Posted by பூமகள் View Post
    நல்லதொரு வர்ண்னை...விவரிப்பு..!
    கதையின் கரு ஏற்கனவே பல கதைகளை நினைவூட்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி வித்தியாசமான முறையில் முடித்திருக்கலாம் என்பது எனது கருத்து.
    ஆனாலும், முயற்சி பாராட்டுதலுக்குரியதே..! வாழ்த்துகள் மயூ...!!
    நன்றி பூமகள்!!! உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்!!!!

  4. #16
    புதியவர் Ram-Sunda's Avatar
    Join Date
    21 Apr 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    பேய் பெண்?
    அருமையான ஈழத்து தமிழ் உங்கள் கதைக்கு தனி சிறப்பு சேர்த்தது...
    வாழ்த்துக்கள் மயூ

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மயூ முதல்முறையாக உங்களின் படைப்பை படிக்கிறேன்.. பின்னூட்டங்களில் நீங்கள் தேர்ந்த காதாசிரியன் என்று படிக்கும் முன்னரே உங்கள் உரைநடையும்.. காட்சிப்படுத்தும் விதமும் அதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டன.. இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கனமான பதிவுகளை தரலாமே.. இது போன்ற பிடிப்பில்லா கதைகளை பிரசவிக்க வேண்டாமே என்பது எனது கருத்து... தங்களின் வளமான எழுத்து நடைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல கதை ஆனால் பேய்கதையா போச்சு இனியாவது நடப்பு கதைகள் சுவாரசியமாக எழுதுங்கள் மயூ வாழ்த்துக்கள்
    Last edited by மனோஜ்; 03-01-2008 at 08:55 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by Ram-Sunda View Post
    பேய் பெண்?
    அருமையான ஈழத்து தமிழ் உங்கள் கதைக்கு தனி சிறப்பு சேர்த்தது...
    வாழ்த்துக்கள் மயூ
    நன்றி ராம்...
    உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    மயூ முதல்முறையாக உங்களின் படைப்பை படிக்கிறேன்.. பின்னூட்டங்களில் நீங்கள் தேர்ந்த காதாசிரியன் என்று படிக்கும் முன்னரே உங்கள் உரைநடையும்.. காட்சிப்படுத்தும் விதமும் அதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டன.. இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கனமான பதிவுகளை தரலாமே.. இது போன்ற பிடிப்பில்லா கதைகளை பிரசவிக்க வேண்டாமே என்பது எனது கருத்து... தங்களின் வளமான எழுத்து நடைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!
    நன்றி சுகந்தப் பிரீதன்.. ஒரு வட்டத்துக்குள் எழுதக் கூடாது என்பதனால்தான் ;இவ்வாறு எழுதினேன். மற்றும்படி இனிமேல் பேய்க்கதை எழுதுவதில்லை என்று திடமான முடிவு எடுத்திட்டேன்!

    உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி


    Quote Originally Posted by மனோஜ் View Post
    நல்ல கதை ஆனால் பேய்கதையா போச்சு இனியாவது நடப்பு கதைகள் சுவாரசியமாக எழுதுங்கள் மயூ வாழ்த்துக்கள்
    அப்படியே ஆகட்டும் மனோஜ் அவர்களே!!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •