அதிகாலை நேரம் சூரியன் தனது கதிர்களை விரித்து இருண்ட வானத்திற்கு ஒளிபரப்பிக்கொண்டிருந்தான்.துவண்டிருந்த செடிகள் எல்லாம் தலை நிமிர்ந்தன. நிசப்தமாய் இருந்த உலகம் ஆர்ப்பாரிக்கத் தொடங்கின கீச்சிடும் குருவிகள்,மெட்டுக்கள் பூக்காளாய் மாறி பூக்கள் கனிகளாய் மாற்றம் பெற்றுக்கொண்டிருந்த அழகிய காலை நேரம்.உலகமே விழித்தெழ வீசிய தென்றல் காற்றில் சிலிப்புற்று இன்னும் போர்வையை இறுக்கிப் பிடித்தவாறு கண்கள் திறக்க மனமற்று இன்னும் உறக்கத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தது ஒரு ஜீவன்.
துறுதுறுவென்ற கண்கள் எப்பொழுதும் எதாவது செய்து கொண்டே இருக்கும் அவளது கரங்கள் ஓய்வின்றி ஓடோடி திரியும் கால்கள் சூரியன் விழிக்கும் முன்னே விழித்திடும் விழிகள் இன்று விடியலைப் பார்க்க மனமின்றி மூடிய போர்வைக்குள் மூடிய விழிகளாய் உறக்கத்தில் கழித்தது காலைப் பொழுதை."காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்" என வானொலியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை காதுகள் செவிமடுக்க அவள் மனமோ கடந்த கால நினைவுகளை நோக்கி படையெடுத்தது...
ரேகா தாய் தந்தையற்று சிறுவயது முதல் ஓர் ஆசிரமத்தில் படித்து வளர்ந்து இன்று ஒரு நல்ல நிலையில் இருப்பவள். சிறுவயது முதலே அன்பிற்காய் ஏங்கிய அவளின் உள்ளத்திலே குடி கொண்டான் ராகுல்.
ஒரே இடத்தில் வேலை செய்யும் இருவருக்கும் நட்பு மலர்ந்தது. தான் சிறுவயது முதலே ஏங்கித் தவித்த அன்பு அவனிடத்தில் கிடைக்க நட்பாக இருந்த அவர்கள் உறவு காதலாக உருப்பெற்றது...
அவனுடைய அன்பில் இந்த உலகையே மறந்து வானில் சிறகடித்துப் பறந்தால் ரேகா.. இந்த பூலோகத்தில் அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மறைந்து போயினர் மாயமாய்.சிறு கற்கள் கூட சிற்பமாய் சிறு கோடுகள் கூட அழகிய ஓவியமாய் உருப்பெற்றது அவள் கண்களுக்கு காதல் தந்த போதையில் வேலையை மறந்தாள் உலகை மறந்தாள் ராகுலே உலமென நினைத்தாள் சிறுவயது முதல் தான் அனுபவித்து வந்த வேதனைகளை இவன் அன்பில் கரைத்தாள்..
ராகுல் வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியவனாய் அந்த நற்செய்தியை இவளுக்கு தெரிவிக்க காற்றை விட வேகமாய் பறந்தான் இருசக்கர வண்டியில் (மோட்டர் சைக்கிள்) இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!
முற்றும்
(என் முதல் கதை என்றோ உருப்பெற்ற கரு இன்று கதையாகி)
நன்றி
இனியவள்
Bookmarks