நண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது
இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ
நண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது
இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
இதெல்லாம் ஒரு பிரச்சினையா நண்பரே இப்போது நம் மன்றத்தில் ஒரு நாளில் பதிக்கப்படு எல்லாப் பதிவுகளையும் முழுமையாகப் படிக்க நம் வாழ் நாளே போதாது போலுள்ளது.
உங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே!.
உண்மைதான் அண்ணா!
உங்கள் வாழ்த்துக்கள் அவருக்குத் தேவையே.......
நன்றிகள் கோடி உங்கள் பின்னூட்டத்திற்கு............
உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கடும் மனோஜ்!
மிக்க நன்றிகள்.......
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஓவியன்
நான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................
என்றுதான் விடியும் எங்களுக்கு
Last edited by என்னவன் விஜய்; 10-10-2007 at 04:00 PM.
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!
இத்தனை ரணமா...
இத்துணை வலியா...
நித்தம் நித்தம்
ரத்தக் களரியா ...
இழப்பும் இறப்பும்
பழகித் தான் போனதோ...
குலைந்துத் தான் போனேன் .
விடியல் ...
வரட்டும் அது விரைவில் !
வானம் வசப்படட்டும்
உங்களுக்கே உங்களுக்காய்... !
பிரார்த்தனையுடன்.....
Last edited by சாம்பவி; 10-10-2007 at 08:31 PM.
..
இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
.
மிக, மிக தாமதமான பின்னூட்டத்துக்கு என்னை முதலில் மன்னியுங்கள் சாம்பவி...
நிதம் நிதம் ஏற்படுத்தப் படும்
இழப்புக்கள், திட்டமிடப் பட்டவை...
உணர்ச்சிகளின் கொந்தளிப்பை
பயத்தால் அடக்கும் முயற்சி அது...
ஆனால், அதர்மம் ஒரு போதும்
தொடர்ந்தே ஜெயிக்காதே
தர்மமும் ஒரு நாள் தலை நிமிர்த்தும்..
அந்த ஒரு நாளுக்காவே நாமெல்லாம்
நாளெல்லாம் இழப்புக்களுடன்........
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சாம்பவி...!!
Last edited by ஓவியன்; 20-01-2008 at 01:47 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஓவியரே.. விடியக் காத்தால இந்தப் பதிவை வாசித்து நெஞ்சு கனத்து விட்டதப்பா!!!
பல தடவை முயன்று முடியாமல் போனாலும் கடைசியில் ஆனைஇறவை, தமிழீழ தேசியப்படை கைப்பற்றியது என்பதையும் இங்கே நினைவு படுத்துகின்றேன்!!!
துசிக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!!! எம் வெற்றி விழாவில் துஷியும் கலந்துகொள்ளும் காலம் வரட்டும்.
இத்தனைக்கும் மத்தியில் நம்மவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது நினைத்து நாம் பெருமை பட வேண்டும்.Originally Posted by இதயம்
நமக்கான விடியல் தொலைதூரத்தில் இல்லை.... அதுவரை காத்திருப்போம்....
Last edited by ஓவியன்; 27-03-2008 at 07:08 AM. Reason: மேற்கோள் திருத்தம்
நன்றி லோஜினி, எதனையும் தடுக்க, தடுக்கத் தான் ஆவேசம் இன்னும் இன்னும் பொங்கிப் பிரவாகிக்கும் - நம்மவர் கல்வியும் அப்படித்தான்...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நண்பரே, நாங்கள் ஈழத்தின் கொடுமைகளை படித்து தான் அறிந்திருக்கிறோம். நீங்களெல்லாம் அனுபவித்து இருக்கிறீர்கள்.
"எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை, எறிகணைகளே எமை எழுப்புவது வழக்கம்"
என்ற அமரனின் வரிகள் அங்குள்ள நிலையை மேலும் விளக்குகிறது.
நீங்கள் குறிப்பிட்டது போல் போராளிகளாய் யாரும் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.
விடியாத இரவில்லை. நிச்சயம் இந்த நிலை மாறும்.
நல்ல படைப்புக்கு நன்றிகள்.
கீழை நாடான்
அழுகையில் நனைகிறது எனது கண்கள்...
உங்களுக்கு ஒரு துஷி போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.
பாரிசவாதத்தால' பாதிப்படைந்த தனது தாயை குளிக்க வைத்து தூங்கவைத்து..தனது பிஞ்சுக்கரங்களினால் தூக்கித்தூக்கி முன்னாண் நரம்பு வெடித்துப்போ உடலின் கீழ்பாகம் எதுவும் சரியாக இயங்காத நிலையில் 6 மாதங்கள் அல்லலுற்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த போது எனது பெயரை உச்சரித்ததாக தாதிகள் சொன்னார்கள்...
அது நிகழ்ந்து 8 ஆண்டுகளாகின்றன...
அவனது பெயர் ஹைசான்..
கிரிக்கெட் போட்டியொன்றில் இருவரும் இணைந்து எங்கள் அணி வெல்ல காரணமாயிருந்த அந்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான்...
டாக்டராகி பாரிசவாதத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்ற அவனின் நம்பிக்கைக்கு என்னவாயிற்று...????
ஒர நாள் கனவில் வந்து எனது தங்கைக்கு 500 ரூபா காசு கொடு என்று சொன்ன போதுதான் அவனை கடைசியாக பார்த்தேன்(இறப்புக்குப்பின்..)
ஓவியனே எனது பசுமை நினைவொன்றை மீட்க உதவினீர்கள்..
நன்றி கலந்த பாராட்டுக்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks