இலக்கணங்கள் கற்கவில்லை: இலக்கியங்கள் இயற்றவில்லை!
காவியங்கள் படைக்கவில்லை: கவிஞனாக நினைக்கவில்லை!
இதயம் கரும்பாய் இனிக்கும் போதும் இரும்பாய் கனக்கும் போதும் ஏற்படும் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்களே இங்கே சுவடுகளாகவும் சுவடிகளாகவும் சுற்றித் திரிகின்றன! அவற்றை தாலாட்டுவதையும் தலையில் கொட்டுவதையும் தங்களின் தனிபட்ட விருப்பத்திற்க்கே விட்டுவிட்டேன்?!
சுவடிகள்:
நான் மட்டும்
மௌனயுத்தம்
மறுபக்கம்
துளிகள்
என்ன(அ)வளோ?!
நானும் உன் நினைவும்
முன்பும் பின்பும்
பாவையும் பார்வையும்
காந்தவிழிகள்
எண்ணங்கள்
பூவும் பொட்டும்
தகிப்பு
துயில்கொண்ட துறவி
கலாச்சாரம்
மதில்மேல் பூனை
அந்தநாள் ஞாபகம்
காலச்சமுத்திரம்
சம்மதிப்பேன்
நெஞ்சுகுள்ள காதல்
அன்பின் வலி
இறுதி கணக்கு
நடிப்பும் நாடித்துடிப்பும்
ஏ(ன்)மாற்றம்
உன்னுடனிருந்த நான்
குறைபாடு
நேசிப்பின் நினைவு
கண்ணீர்
சூழ்நிலை கைதி
முகத்துவாரம்
துறவிமனம்
நிழல் நண்பன்
அழகான யுத்தம்
தவிப்பு
தொல்லைகள்
அடைமழைக் காலம்
புரியாமலும் புன்னகைக்காமலும்
நீ யாரோ..?!
கோர யுத்தம்
நிறம் மாறும் நிஜங்கள்
நாய்க்குட்டி
கண்ணீர் கனவுகள்
காதல் தீ....
ஒற்றை நம்பிக்கை
இருண்ட உலகம்
பாவி நான்
எதார்த்த உலகம்
வாழ்வியல்
பூனை குட்டியானது
சுவடுகள்:
நானேந்திய கேள்விச்சுடர்
கலையாத கவிதை-காஜல்
பெண்மனசு ஆழமென்று...
கொடுத்து வச்சிருக்கனும்டா
திருமணமும் நட்பும்
இது மன்றமல்ல குடும்பம்
நெனச்சிக்கிட்டுதான் கழுதை
விவசாயமும் தொழிலும்
எடக்கு நாட்டான்
உறவுகளை பற்றி...
ஆளில்லாத அநாதைகள்
பெருங்குடி மக்கள்
கற்றலும் நிற்றலும்
அவனும் ஆடியும் அத்துடன் அமாவாசையும்
**************************************************************************என் இயற்பெயர் ஜெ.பெ.சீனிவாசன். தமிழ்மீது கொண்ட தாகத்தாலும் என்னிரு தோழிகள்மீது கொண்ட பாசத்தாலும் எனக்கு நானே இட்டுக்கொண்ட பெயர் சுகந்தப்ரீதன். நான் சோழநாட்டையும் தென்னாற்காட்டையும் இணைக்கும் பெரியாற்றங்கரை பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். சோழநாட்டில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு தமிழ்மீது தீராத காதலுண்டு இருந்தும் கவிபுனையும் அளவுக்கு என்னிடம் கவிப்புலமையெல்லாம் கிடையாது. என் பள்ளிப் பருவத்திலிருந்து இன்றுவரை என்னை இன்னும் இன்னும் மேலேப்போ என்று உந்தும் ஆனால் ஒருமுறைக்கூட என்னிடம் உரையாடாத இன்று எங்கிருக்கிறாள் என்ற தடமறியாத என்தோழியின் நினைவாக முதன்முதலில் நான் கிறுக்கிய கிறுக்கல் இதோ:
தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்
மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?
அதன்பிறகு கல்லூரிவாழ்வில் காதல்தேவதையின் ஒருதலைபட்சமான ஆசிர்வதிப்பால் என் உணர்வுகளை நான் மௌனயுத்தமாய் வடிக்க, அதை கவிதையாக கருதி என் நண்பனொருவன் கல்லூரியாண்டு மலருக்கு கொடுக்க, அதில் அது வெளிப்பட, அதை ரசித்த சிலர் என்னை பாராட்ட பற்றிக்கொண்டது கவித்"தீ" எனக்கும். இருந்தும் நான் எழுதியவை சில கவிதைகள்தான், அதுவும் என்னைப்பற்றியும் என் உணர்வுகளைப்பற்றியும் மட்டுமே − என்றும் நட்பன்புடன் சுகந்தப்ரீதன்.
Bookmarks