kavinila
07-01-2007, 05:22 PM
வில்லங்கங்கள் பல செய்து
வீட்டை விட்டு ஓடிவந்த
வியயனுக்கு வீடளித்த
வீணனுக்கு பெயர் தமிழன்.......
ஐம்பதுக்கு நாற்பது என...
இல்லையென்று சொல்லி
இருந்ததையும்
இழந்திட்ட
இருமனத்தால் கெட்டெ
பேயனுக்கு பெயர் தமிழன்
வந்தேறுகுடியென்று
வாய் விட்டு சொன்னபின்னும்
வாளெடுத்து வீசாமல்
வாழாது இருந்த
பேயனுக்கு பேர் தமிழன்
தேயிலை தோட்டத்தில்லே-உடல்
தேய வேலை செய்த
எம் இரத்தங்கள்..........
இல்லாமல் போவதற்கு
கையொப்பம் இட்ட
கல் மனத்தானுங்கு பேர் தமிழன்...
செம்மணியில் கிருசாந்தி
தீவினிலே சாரதாம்பாள்
யாழிலே ரயனி...
என..
எம் பெண்கள் சாகையிலே
என் தங்கையில்லையெனே
எழும்பாமல் இருந்த
எங்களுக்கு பேர் தமிழன்
எம் தேசம்தனில்லே
இத்தனையும் நடந்திருக்க
இந்திராகாந்தியின் பின்
எதுவுமெ தெரியாததுபோல
இந்தியாவில்....
இருக்கைக்காய்
இழுபறிப்படுகின்ற
இதயம் இல்லாதோர்க்கு பேர் தமிழன்
வீட்டை விட்டு ஓடிவந்த
வியயனுக்கு வீடளித்த
வீணனுக்கு பெயர் தமிழன்.......
ஐம்பதுக்கு நாற்பது என...
இல்லையென்று சொல்லி
இருந்ததையும்
இழந்திட்ட
இருமனத்தால் கெட்டெ
பேயனுக்கு பெயர் தமிழன்
வந்தேறுகுடியென்று
வாய் விட்டு சொன்னபின்னும்
வாளெடுத்து வீசாமல்
வாழாது இருந்த
பேயனுக்கு பேர் தமிழன்
தேயிலை தோட்டத்தில்லே-உடல்
தேய வேலை செய்த
எம் இரத்தங்கள்..........
இல்லாமல் போவதற்கு
கையொப்பம் இட்ட
கல் மனத்தானுங்கு பேர் தமிழன்...
செம்மணியில் கிருசாந்தி
தீவினிலே சாரதாம்பாள்
யாழிலே ரயனி...
என..
எம் பெண்கள் சாகையிலே
என் தங்கையில்லையெனே
எழும்பாமல் இருந்த
எங்களுக்கு பேர் தமிழன்
எம் தேசம்தனில்லே
இத்தனையும் நடந்திருக்க
இந்திராகாந்தியின் பின்
எதுவுமெ தெரியாததுபோல
இந்தியாவில்....
இருக்கைக்காய்
இழுபறிப்படுகின்ற
இதயம் இல்லாதோர்க்கு பேர் தமிழன்