View Full Version : தலைப்பில்லா கவிதை 7
கண்ணீர் மறந்தவர்களால் புதைக்கப்படும்
என் பிணத்தின் நடுவிலிருந்து
எழுந்து சென்றது
அங்கங்கே விரவியிருந்த ரகசியங்களும்
அன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.
mukilan
04-07-2008, 04:49 AM
இறந்த பிறகாவது
அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
மரணம் என்பது மனதிற்கேது?
இறந்த பிறகாவது
அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
மரணம் என்பது மனதிற்கேது?
இறந்த பிறகு பேசி என்ன பிரயோசனம் அண்ணா? அவன் இருக்கும்போது தூற்றுவதும் இல்லாதபோது போற்றுவதும் கண்ணீர் மறந்தவர்களின் வழக்கம்...
Mano.G.
05-07-2008, 06:07 AM
இதுவும் பகட்டாகவே படுகிறது.
இருக்கும் போது கவனிக்காதவர்கள்
இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.
மனோ.ஜி
இறந்தவனை மட்டுமல்ல...
ஓரிடத்தில் இல்லாதவனைப் பற்றியும்.
பொல்லாப்பு சொல்லாதீர்கள் -
அவர் பக்கம் அறிய வாய்ப்பே இல்லை என்பதால்!
----------------------------------------
மாண்ட பிறகு மணிமண்டபம்..
வாழும்போது கூரையும் சிதிலம்..
இது கவிஞன் பாரதி முதல் ஓவியன் வான்கா வரை
உலக வழக்கம்... நினைத்தால் வெட்கம்!
-----------------------------------
பாராட்டுகள் ஆதவா!
இதுவும் பகட்டாகவே படுகிறது.
இருக்கும் போது கவனிக்காதவர்கள்
இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.
மனோ.ஜி
மிக்க நன்றி மனோ.ஜி அண்ணா. நீங்கள் சொன்னது மிகச் சரியே!