முரளி1
Facebook User
“இதோ ஆட்டோல வந்துகிட்டேயிருக்கேங்க! இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே இருப்பேன்!”
“சீக்கிரம் வா! ஏன் இவ்வளவு லேட்? நெய்வேலி பஸ் புறப்பட ரெடியாயிருக்கு”
“எல்லாம் செக் பண்ண நேரமாயிடுச்சுங்க!”
****
மீனா ஆட்டோவில், சென்னை கோயம்பேடு ,பஸ் ஸ்டாண்ட் நோக்கி பயணம். ஒரு பத்து நிமிஷம் கழித்து:
“என்னங்க!”
“என்ன சொல்லு மீனா? எதை மறந்தே ? ஏன் இன்னும் வரல்லே!”
“காஸ் அணைக்க மறந்துட்டேங்க! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இந்த ஆட்டோவிலேயே வீடு வரை திரும்பப் போய் வந்துடறேன்”
“சரியாப்போச்சு. போ! ஆரம்பிச்சுட்டியா! இனிமே நெய்வேலி போய் சேந்தாபோலதான். சரி சீக்கிரம் வா!”.
“கோபிக்காதீங்க! டிரைவர் சார், கொஞ்சம் வீட்டுக்கு வண்டியை திருப்ப முடியுமா?”
“சரிம்மா!. மறக்கறது எல்லாம் சகஜம் தானே! ஐம்பது ரூபாய் போட்டு கொடுத்துடுங்கம்மா!”
“சரிப்பா”
****
மீனா அவசர அவசரமாக கதவை திறந்து, சமயலறைக்கு சென்றாள். காஸ் அணைத்து தான் இருந்தது. மற்றுமொரு முறை சரி பார்த்து விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினாள்.
“போலாமாம்மா?”
“சரிப்பா!”
கொஞ்ச தூரம் போனதும், “ஆட்டோ! ஆட்டோ! கொஞ்சம் திருப்புப்பா!”
“என்னம்மா!”
“இஸ்திரி பெட்டி அணைக்க மறந்திட்டேம்பா. கொஞ்சம் திருப்பேன் ! ப்ளீஸ்!”
“பரவாயில்லேம்மா! ஏதோ பாத்து, மேல போட்டு கொடுங்கம்மா! பெட்ரோல் என்ன விலை விக்குது தெரியுமா?”
ஐந்து நிமிஷம் கழித்து:
“போலாம்பா! எல்லாம் செக் பண்ணிட்டேன்! எல்லாம் சரியாயிருக்கு! ”
****
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம். மீனாவின் கணவன் ரவி நின்று கொண்டிருந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் கிளம்ப இன்னும் முக்கால் மணி நேரம். அண்ணா பெண்ணின் கல்யாணம். நேரமானால் அண்ணன் மூஞ்சை தூக்கி வெச்சுப்பார்.
“என்ன மீனா! இவ்வளவு லேட் பண்ணிட்டே!”
“ஏன் சொல்ல மாட்டீங்க! என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்”
“நான் இல்லேன்னா, உனக்கு ஏன் இவ்வளவு, குழப்பம்.! எப்பவும் நான் கூடவே இருக்க முடியமா? இப்போ பார், பஸ் மிஸ் ஆயிட்டுது!”
“ரொம்ப சாரிங்க!”
“லேட் ஆனா, அண்ணன் திட்டபோறார்.தேவையா எனக்கு! ”
ஐந்து நிமிடம் கழித்து, மீனா மீண்டும் கையை பிசைந்தாள்.
”என்னங்க!”
“ம்”
“இங்கே பாருங்களேன்!”
“சொல்லு கேட்டுகிட்டு தானே இருக்கேன்!”
“திரும்ப வீட்டுக்கு போய் செக் பண்ணணுங்க!”
“விளையாடறியா! படிச்சி படிச்சி சொன்னேனே!. லிஸ்ட் போட்டு செக் பண்ணிட்டு வான்னு”
“எல்லாம் உங்களாலேதான்! நீங்க பண்ண அவசரத்திலே, வாசற் கதவை பூட்டினேனான்னு இப்போ சந்தேகமா இருக்கு”
“கல்யாணத்திற்கு போறதா வேண்டாமா?”
“கோவிக்காதீங்க! என்னமோ இந்த பாழாய் போற மறதி”
“சரி!. கீழ் வீட்டிலே, ஒரு சாவி இருக்கில்லே! அவங்களுக்கு போன் பண்ணி செக் பண்ண சொல்லு! தலைவிதிடா சாமி. பேசாம எப்பவும் போல நானே வீட்டுக்கு வந்து உன்னை பிக் அப் பண்ணி தொலச்சிருக்கலாம்.”
***
“கல்யாணி !நான்தான் மாடி மீனா பேசறேன்! ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா!”
“சொல்லுங்க அக்கா ! கல்யாணிதான் பேசறேன். வீடு பூட்டியிருக்கான்னு பாக்கணும், அவ்வளவுதானே!”
“அப்படியே, குளியலறை ஹீட்டர் அணைச்சிருக்கான்னு பாத்துக்கோங்க கல்யாணி”
“சரிக்கா ! லயன்லேயே இருங்க!”
ஐந்து நிமிஷம் கழித்து: “எல்லாம் பூட்டியிருந்தது அக்கா! நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க! கல்யாணம் ஜம்மென்று அட்டென்ட் பண்ணுங்க! வரும்போது ஒரு பலாப்பழம் வாங்கிண்டு வாங்க அக்கா!. அங்கே மலிவா கிடைக்குமாமே!”
“ஓ! கட்டாயம் கல்யாணி! தேங்க்ஸ். வெச்சுடட்டுமா”
“ஏங்க! கல்யாணிக்கு ஒரு பலாப்பழம் வேணுமாம். போகச்சே வாங்கிண்டு போகணுங்க”
“இது வேறயா! இதுக்கு தான் சொல்றது! மத்தவங்களை தொந்திரவு பண்ண கூடாதுன்னு!”
“சாரிங்க!”
****
தொடரும் ............. மீதி இதே திரியில் பார்க்க..கீழே...
Last edited: