பசு ஓம்பல்- கோமாதா

பசு வதையைத் தடுப்பேன்

  • ஆம்

    Votes: 8 47.1%
  • இல்லை

    Votes: 9 52.9%

  • Total voters
    17

shivasevagan

New member
P1011807.jpg



பசு ஓம்பல்​


சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன.

இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

cow.jpg


இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக.

இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம்.


பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க.

கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.


Cow_with_calf.jpg



கோமாதா நமக்கு இன்னொரு மாதா(அம்மா)

தாய் தன் முலைப் பாலை தன் பிள்ளைகளுக்கு கொடுக்கிறாள்.

பசுவோ நம் எல்லோருக்கும் அம்மா அது எல்லோருக்கும் பால் கொடுக்கிறது.


யாராவது அம்மாவைக் கொன்று உண்பார்களா?

சிந்தியுங்கள்.

இன்று பசு மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது.


நமக்கு பால் கொடுத்த அம்மாவைக் கொல்லலாமா?

தோலுக்காவும் பசுமாடுகள் கொல்லப்படுகின்றன.

ஆதலால் பசுதோலில் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட், செருப்பு, சூ, முதலியவற்றை புறக்கணியுங்கள்.

பசு வதையை உண்மையான பசுவின் பிள்ளைகள் தடுங்கள்.

நமக்கு பால், தயிர், நெய், வீடு தெளிக்க சாணம், பூச விபூதி என்று அணைத்தையும் தரும் பசுவை வதைக்காதீர்கள்.

இந்த செய்தியை ஒவ்வொருக்கும் அனுப்பி வையுங்கள்....

ஆதரவு தாருங்கள்.
 
நண்பர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் பயனுள்ள தகவல்கள் என்பதை விட ஆன்மீக நம்பிக்கையே மேலோங்கியுள்ளது. அதனால், இதை ஆன்மீக பகுதிக்கு மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
நல்ல தகவல்.

நான் முற்றிலும் தோளினால் ஆனவைகளை பயன்படுத்த மாட்டேன்


இதுதான் ஆன்மீக பதிவு. மிக்க நன்றி.

ஆன்மீக பகுதிக்கு மாற்றிவிட வழிமொழிகிறேன்.
 
சிவசேவகா, தாங்கள் கூறியதை
ஏற்று கொல்ல முடியாது.

நான் ஹிந்து தான்
அதுவும் விவசாயம் செய்யும் சாதியை சார்ந்தவன் தான்.
பால் கறக்க தெரிந்தவன். பசுவை கொஞ்ச தெரிந்தவன்.

மாட்டு கறி உன்பது என் சாதிக்கு உகந்தல்ல
நான் மாட்டு கறியை தொட கூட மாட்டேன்
அதுக்கு பல காரனம் இருக்கு. நீங்கள் கூறும் காரனம் அல்ல



நீங்கள் மாமிசமே உன்ன கூடாது என்று கூறி இருந்தால்
அது உங்கள் நம்பிக்கை என்று இந்த திரியை கண்டுக்காமல்
சென்றிருப்பேன்.

ஆனால் நிங்கள் குறிப்பாக பசுவை உன்பதை மட்டும் திட்டுவது
தவறான செயல் போல எனக்கு படுகிறது
ஒரு குறிப்பிட்ட மதத்தை மற்றும் சாதியை தாக்குவது போல இருக்கு

நாங்கள் கரந்து கொடுக்கும் பாலை அருந்திய உங்களுக்கு என்ன தெரியும்.

நாங்கள் பசுவை அன்பாக பாவித்து புல் தந்து அதுவும் அன்பாக நமக்கு பால் தரவில்லை.
அதை துண்புறுத்தினால் தான் அதனிடம் இருந்து பால் எடுக்க முடியும்.

மாமிசம் சாப்பிடுவது, பால சாப்பிடுவது தவறு என்று கூறுங்கள்
உங்கள் தரப்பில் ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் பசுவுக்கு மட்டும் வாதாடினால் அது போலி ஆண்மீகமே ஆகும்
தங்களை திருத்தி கொள்ளுங்கள்.
 
என்னது
பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் பிரமாவும் விட்டுணுவும் இருக்காங்களா???????

கேக்குறவன் கேனைப்பயலா இருந்தா கேப்பயில சீஸ் வழியுதுன்னு சொல்லுவீங்களே. இப்படி புருடாக்களை நீங்கள் விடப்போவதே இல்லையா?
 
என்னது
பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் பிரமாவும் விட்டுணுவும் இருக்காங்களா???????

கேக்குறவன் கேனைப்பயலா இருந்தா கேப்பயில சீஸ் வழியுதுன்னு சொல்லுவீங்களே. இப்படி புருடாக்களை நீங்கள் விடப்போவதே இல்லையா?

வெங்கட் இது பொது தளம். அனைவரும் தங்கள் கருத்துகளை கூறு முழு உரிமையும் உண்டு. சிவசேவன் அவர்கள் சொல்வது உங்களுக்கு கதையாக பட்டால் அவருடைய பதிப்புகளை படிக்காமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால் அவர் பதிக்கும் திரிகளுக்கு சென்று இது போன்ற பின்னூட்டங்கள் இடுவது சரியல்ல.

மேலும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டுள்ளது. அதனை மதித்து நடப்போம்.

அப்படி இரு மதங்களுக்கு இடையில் ஒரு விஷயத்தினால் பேதம் ஏற்பட்டால் அதனை இரண்டு மதத்தவர்களும் சேர்ந்து அறிந்து அதை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பசுவை இந்து மதம் புனிதமாக கருதுகிறது. இதில் தவறில்லை. அது கொல்லப்படக்கூடாது என்று அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை. மேலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் நேபாளத்திலும் அவர்களுடைய மத நம்பிக்கை பங்கம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில் என்ன தவறு.

சௌதியில் மெக்காவில் இஸ்லாமியர் அல்லாதவர் உள்ளே நுழையமுடியாது. அது அவர்களுடைய மத கட்டுப்பாடு. அதை மதித்து அங்குள்ள மற்ற மதத்தவர்கள் நடக்கிறார்கள். அப்படி தவறாக உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று சட்டம் சொல்கிறது.

அது போல மத்திய கிழக்கு நாட்டில் ரமாலான் புனித மாதத்தில் பிற மதத்தவர்கள் வெளியே சென்று உணவு உண்பதோ புகைப்பிடிப்பதோ இல்லை. காரணம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களின் உணர்வை மதிக்க.

ஒவ்வொருவரும் பிற மதத்தின் புனிதத்துவத்தை அறிந்து அவர்களை மதித்து நடத்தல் வேண்டும்.

உங்களுக்கு விருப்பில்லாத தலைப்பு என்றால் நீங்களா வாளாயிருங்கள். அவமானப்படுத்தாதீர்கள்.
 
இது பொது தளம். அனைவரும் தங்கள் கருத்துகளை கூறு முழு உரிமையும் உண்டு.

அதனால்தான் என் கருத்தை சொன்னேன்.

அவர்கள் சொல்வது உங்களுக்கு கதையாக பட்டால் அவருடைய பதிப்புகளை படிக்காமல் இருப்பது உங்கள் உரிமை.


சரியாக சொன்னீர்கள், நான் சொல்லுவது உங்களுக்கு கதையாகப்பட்டல் படிக்காமல் போவது உங்களது உரிமையும் கூட.

மேலும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டுள்ளது. அதனை மதித்து நடப்போம்.


மிகச்சரியான அறிவுரை
"நாகேசர் அடிவாலிலும் இருப்பர்" என்பதை படித்து விட்டு எங்க பக்கத்துவீட்டு மாமா நாகேசை பாகும் ஆசையில், அவுங்க வீட்டு மாட்டின் வாலை தூக்கிப்பாத்தார், மாடு வுட்டுச்சு பாருங்க ஒரு உதை.

எங்களுக்குன்னு ஒரு ந்ம்பிக்கை இருக்கு தயவு செய்து. அதை மதித்து நடங்கள்.
இப்படியெல்லாம் பொய்த்தகவலை கொடுத்து பக்கத்து வீட்டு மாமாக்களின் காலையெல்லாம் உடைக்கதீங்க.

நான் சொல்லுவது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், வாளாயிருங்கள், அவமானப்படுத்ததீர்கள்.
 
இது பொது தளம். அனைவரும் தங்கள் கருத்துகளை கூறு முழு உரிமையும் உண்டு.

அதனால்தான் என் கருத்தை சொன்னேன்.

நீங்கள் கருத்து சொல்லவில்லை. சொன்னவரின் integrityஐ கேலி செய்தீர்கள்.

அவர்கள் சொல்வது உங்களுக்கு கதையாக பட்டால் அவருடைய பதிப்புகளை படிக்காமல் இருப்பது உங்கள் உரிமை.

சரியாக சொன்னீர்கள், நான் சொல்லுவது உங்களுக்கு கதையாகப்பட்டல் படிக்காமல் போவது உங்களது உரிமையும் கூட.

இது விதண்டாவாதம். நல்ல கருத்து இருந்தால் சொல்லுங்கள். கேட்கிறோம்.

மேலும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டுள்ளது. அதனை மதித்து நடப்போம்.

மிகச்சரியான அறிவுரை
"நாகேசர் அடிவாலிலும் இருப்பர்" என்பதை படித்து விட்டு எங்க பக்கத்துவீட்டு மாமா நாகேசை பாகும் ஆசையில், அவுங்க வீட்டு மாட்டின் வாலை தூக்கிப்பாத்தார், மாடு வுட்டுச்சு பாருங்க ஒரு உதை.

எங்களுக்குன்னு ஒரு ந்ம்பிக்கை இருக்கு தயவு செய்து. அதை மதித்து நடங்கள்.
இப்படியெல்லாம் பொய்த்தகவலை கொடுத்து பக்கத்து வீட்டு மாமாக்களின் காலையெல்லாம் உடைக்கதீங்க.

எந்த மதத்தில் இது போன்ற கதைகள் இல்லை. இவையெல்லாம் நம்பிக்கைகள். இதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால் சில பதில் கிடைக்கும். பகுத்தறிவு எனும் பகட்டினால் ஆராய்ந்தால் விதண்டாவதாம் தான் மிஞ்சும்.

இன்று க்ளோனிங்க முறை பற்றி விஞ்ஞானம் பேசுகிறது. அது சாத்தியம் என்று புராணங்கள் முன்பே கதை மூலம் சொல்கிறது. புஷ்பகவிமானம் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கிறார்கள். இன்று அதை விமானம் என்று சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.


நான் சொல்லுவது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், வாளாயிருங்கள், அவமானப்படுத்ததீர்கள்

நீங்கள் இங்கு கருத்துள்ள விவாதம் செய்யவந்தவர் போல் தெரியவில்லை.
 
நீங்கள் சொன்னல் எல்லாம் நல்ல கருத்து, எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளனும் அதையே வரிக்கு வரி நான் சொன்னால்.

விதண்டாவாதம்.
கருத்துள்ள விவாதம் செய்யவந்தவர் போல் தெரியவில்லை.

அப்படித்தானே
 
நீங்கள் சொன்னல் எல்லாம் நல்ல கருத்து, எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளனும் அதையே வரிக்கு வரி நான் சொன்னால்.

விதண்டாவாதம்.
கருத்துள்ள விவாதம் செய்யவந்தவர் போல் தெரியவில்லை.

அப்படித்தானே

இல்லை நண்பரே. நாம் தவறான பாதையில் வாதம் செய்ய வேண்டாம்.

இறை என்பது நம்பிக்கை. நானே இறை நம்பிக்கை இல்லாதவன். ஆனால் இறைவனை நம்புபவர்களை மதிப்பவன்.

நாம் அனைத்தையும் பார்த்து சுவைத்து உணர்ந்து மகிழ முடியும். இறைவன் மட்டுமே இதற்கு அப்பாற்பட்டு இருப்பதாக நம்பிக்கை.

சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்து மதத்திலும் உள்ளது. அது நம் மதத்தில் மட்டும் இல்லை.

"நாகேசர் அடிவாலிலும் இருப்பர்" என்பதை படித்து விட்டு எங்க பக்கத்துவீட்டு மாமா நாகேசை பாகும் ஆசையில், அவுங்க வீட்டு மாட்டின் வாலை தூக்கிப்பாத்தார், மாடு வுட்டுச்சு பாருங்க ஒரு உதை.

இந்த வரி மாத்திரம் கேலி செய்வது போல் உள்ளது. இறைவன் நெருப்பில் இருக்கிறான் என்றால் உங்கள் மாமா நெருப்பில் விழுந்து பார்ப்பாரா. ஆக எது சுலபமோ அதை மட்டும் செய்து இறைவனை பார்க்க நினைக்கிறார் உங்கள் மாமா.

இறைவனை நம்புபவர்கள் இறைவன் நம் சாதாரண இந்திரியங்களால் உணர முடியாதவன் என்று நம்புகிறார்கள். அதை நாம் ஏற்போம். மதிப்போம்.

நாம் எதை மூட நம்பிக்கை என்று சொல்கிறோமோ அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

சிவசேவகன் அவர்கள் சொன்ன அனைத்தையும் நான் ஏற்கவில்லை. அவரோ இன்னும் பல விவாதங்கள் நான் செய்திருக்கிறேன். ஆனால் அவருடைய நம்பிக்கை மதிக்கிறேன்.
 
இதை ஆன்மீகத்துக்கு என்று இருக்கும் தனி இடத்தில் வெளியிடலாமே
 
Last edited:
நண்பர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் பயனுள்ள தகவல்கள் என்பதை விட ஆன்மீக நம்பிக்கையே மேலோங்கியுள்ளது. அதனால், இதை ஆன்மீக பகுதிக்கு மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நண்பர்களே..! நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளத்தான் நம் மன்றம் இருக்கிறது. ஒருவொருக்கொருவர் தாக்கிக் கொள்ளவும், பழி தீர்த்துக் கொள்ளவும் அல்ல. நான் ஆரம்பத்தில் பின்னூட்டத்தில் கூறியது போல இதை ஆன்மீக பகுதிக்கு மாற்றியிருந்தால் இந்த விவாதம் தவிர்க்கப்பட்டிருக்கும். பலதரப்பட்ட நண்பர்கள் வருவதால் தான் மன்றம் பொருள் வாரியாக, ரசனை வாரியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரி ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்பதால் அந்த பகுதியில் இட்டிருந்தால் அதில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தான் பின்னூட்டம் இடுவார்கள். மற்றவர்கள் அந்தப் பக்கமே போகப்போவதில்லை. எதுவும் அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் மதிப்பு என்று சும்மாவா சொன்னார்கள்..? இருவருடைய கருத்துக்களிலும் ஏற்புடைய விஷயங்கள் இருக்கின்றன. போலி ஆன்மீகத்தின் பெயரில் மனிதத்தின் வளர்ச்சியை தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் ஆன்மீக நம்பிக்கையை காரணமாக கொண்டு மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதும் தவறு தான். கடவுள் இருப்பதை படம் போட்டு பாகம் குறிக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை, கடவுளுக்கும் தேவையில்லை.

போலி ஆன்மீகம் எந்த மதத்திலிருந்தாலும் அது மிகவும் கண்டிக்கத்தக்கது. பசுவை உண்ணக்கூடாது என்பது நண்பரின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணம் தான் அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவர்களை தொந்தரவு செய்வது கூடாது. நண்பர்கள் தங்கள் கருத்துக்களை உள்ளடக்கிய பின்னூட்டங்களை இடுங்கள். ஆனால், ஆரோக்கியமானதாக இருக்கட்டும். இந்த திரி மூலம் யார் மனமும் கஷ்டப்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.
 
தாய்க்கு நிகரான பசுவைக் கொல்லக்கூடாது என்று சொன்னதற்கு இவ்வளவு எதிர்ப்பா?

சிப்பாய் கலகம் நம்முடைய இந்திய நாட்டில் எதனால் வந்தது தெரியுமா?

பன்றியின் கொழுப்பினால் ஆன தோட்டாக்களை செய்தது ஆங்கில அரசு, அதைக் கடித்து தான் துப்பாக்கியில் வைக்க வேண்டும். பன்றியின் கறியை முஸ்லீம் சகோதரர்கள் உண்ண மாட்டார்கள். இந்துக்களும் தான். அதனால் முஸ்லீம் மற்றும் இந்து மக்கள் துவங்கியதே இந்த சுதந்திரத்திற்கான புரட்சி. அதில் எது முக்கியத்துவம் பெற்றது பாருங்கள்.

அதைப் போல பசுவும் நம் அனைவருக்கும் பால் கொடுக்கிறது.

நாம் தினமும் உபயோகிக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், சாணம், என்று அனைத்தையும் தருவது பசு.

அதனிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டு அதனையே கொல்லலாமா? இது தான் என்னுடைய கேள்வி? இதை மதச் சம்பந்தமாக இல்லாமல் அன்பு சம்பந்தமாக பாருங்கள்.

ஒரு கன்றுக்குட்டி சாலையில் செல்கிறது திடீரென ஒரு பேருந்து வந்து மோதுகிறது அது துடி துடித்து இறக்கிறது அதை நீங்கள் நேரில் காண்கிறீர்கள்.

இப்போது உங்களது மனோநிலை எப்படி இருக்கும்?

1. சந்தோசமாக இருக்குமா?

2. வருத்தப்படுவீர்களா?

வருத்தப்படுவீர்கள் என்றால் ஏன்?

இதே வருத்தம் நீங்கள் அதை உணவாக உண்ணும் போதும் வருகிறதா?

வருவில்லை என்றால் ஏன்?

இது அன்புக்கும் வம்புக்கும் நடக்கும் போராட்டம்!!!

முடிவு உங்கள் கையில்
 
அன்பு சிவசேவகனுக்கு,
நீங்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று நான் ஒற்றை வார்த்தையில் சொன்ன விஷயத்தை உங்களுக்கு புரிய வைக்கும் பொருட்டு கொஞ்சம் விளக்கமாக எழுத வேண்டியிருக்கிறது. ஒரு பொருளை உண்ணாதிருக்க பல காரணங்கள் இருக்கலாம். அது மருத்துவரீதியாக ஏற்கக்கூடியது அல்ல என்பதை தவிர மற்ற காரணங்களை நாம் அடுத்தர்களிடம் திணித்தல் ஆகாது. அதையும் கூட அவர் ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம்.

முஸ்லீம்கள் பன்றி கறியை உண்ணமாட்டார்கள் என்றால் அதற்கு காரணம், அவர்கள் பன்றியை தாயாக நினைத்து அல்ல, மருத்துவரீதியாக அது உகந்ததல்ல என்பதால் தான். விலங்கான பசுவை தாயாக நினைக்கும் மனிதர்கள் மத்தியில் தாயை ஒரு விலங்கை போல் நாம் நடத்துவது முரண்பாடாக தெரியவில்லையா..? பசு தாய் என்றால் அதை ஏன் தொழுவத்தில் வைக்க வேண்டும்.? வீட்டிற்குள் அல்லவா அனுமதிக்க வேண்டும்?

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பசு மட்டுமல்ல பால் கொடுக்கிறது. இவ்வுலகத்தின் எல்லா பாலூட்டிகளும் பால் தர தக்கவை. அதில் மனிதன் அருந்தும் பால் ஆடு, ஒட்டகத்திலிருந்து கூட கிடைக்கிறது. ஆனால் அவைகளை மட்டும் கொல்லலாமா? இதில் உங்கள் கருத்து முரண்படுகிறது. உயிர் வதை கூடாது என்றால் நீங்கள் உணவே உண்ண முடியாது. காரணம், தாவரங்களுக்கும் உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிக எளிதான உதாரணம் தொட்டால் சிணுங்கி. நாம் அதை தொட்டால் ஏதோ ஆபத்து என்று உணர்ந்து தன்னைக் காக்க இலைகளை உடன் மடித்துக் கொள்கிறது.

கன்று மட்டுமல்ல எந்த உயிரினமும் அடிபட்டு துடித்து இறக்கும் போது பரிதாபம் ஏற்படுவது இயல்பு. நாம் எங்கோ போய்க் கொண்டிருக்கும் போது யாராவது அடிபட்டு உயிருக்கு போராடும் போது எத்தனை பேர் நம் வேலையை விட்டு விட்டு அவருக்கு உதவுகிறோம். ஒரு நிமிடம் உச் கொட்டிவிட்டு பிறகு அதை மறந்தே போகிறோம். இதை தவறு என்று சொல்வதற்கில்லை. இது தான் உலக இயல்பு. எல்லாவற்றை திருத்தவும், காப்பாற்றவும் நினைத்தால் நாம் வாழமுடியாது.

இன்றைக்கு ஏழைகளுக்கு மாட்டிறைச்சி தான் மலிவு மாமிச உணவாக இருக்கிறது. உங்கள் ஆசைப்படி எல்லோரும் சைவ உணவிற்கு மாறிவிட்டால் காய்கறிகள் விலை கண்டபடி ஏறி சமநிலை பாதிக்கப்பட்டு உங்களைப் போன்றவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

உடல் திடகாத்திரம் சம்பந்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெல்ல உடல் திறன் அவசியமென்றால் அதற்கு மாமிச உணவின் பங்கு அதிகம். நீங்கள் பருகும் பால் கூட பசுவின் இரத்தமாக தான் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் தாயின் இரத்தத்தை குடிப்பதாக உணரவில்லையா?

நீங்கள் சைவ சமயப்பற்றுள்ளவர் என்பது உங்கள் பெயர், அவதார், திரிகள், கையெழுத்து ஆகிய எல்லாவற்றிலிருந்து புரிகிறது. உங்களுடைய கருத்துக்களை இரசித்து படிக்க, ஆனந்த கொள்ள நிறைய பேர் இங்கு இருப்பார்கள். ஆனால், அதை நீங்கள் வைத்த இடம் தான் சரியில்லை. விபூதியை கோவிலில் வைத்தால் தான் பக்தர்கள் எடுத்து பக்தியோடு நெற்றியில் பூசிக்கொள்வார்கள். மற்ற இடங்களில் வைத்தால் பிடிக்காதவர்கள் சாம்பல் என்று அலட்சியப்படுத்தவும், அவமானப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் திரியை இடும் போது உங்கள் சுய கருத்துக்களை இடவும். அப்படி இல்லாமல் இணையத்திலிருந்து வெட்டி ஒட்டினால் அது உங்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது. என் கருத்தை உங்களுக்கு புரிய வைக்கும் பொருட்டே இந்த விளக்கம், தங்களை காயப்படுத்த அல்ல.
 
Last edited:
மோகன் உங்கள் கருத்துகள் அருமை.
ஆனால் வெண்கட் மீது முழு தவறும் கூற இயலாது.
வெண்கட் வார்த்தையை நயமாக கையாள தெரியவில்லை.
போக போக அவர் மாறி விடுவார் என்று நம்புகிறேன்

சிப்பாய் கலகம் பண்றியின் கொழுப்பினால் மட்டும் வரவில்லை
மாட்டு கொலுப்பினால் தோட்ட உரை செய்ததாலும் வந்தது.
அதையும் இதையும் ஒன்றாக கருத வேண்டாம்.

ஐயா பசு நமக்கு எதையும் தரவில்லை.
நாம் தான் அதனிடமிருந்து வலுகட்டாயமாக பிடுங்கி கொள்கிறோம்.
எப்படி பிடுங்குகிறோம் என்றால் செய்யும் நான் விளக்க முடியாது
அவ்வளவு கொடுமையானது.

மத சம்மந்தமாக பார்க்காமல் அண்பு சம்மந்தமாக பாருங்கள் என்று கூறினீர்கள்
நானும் மாட்டு கறி சாப்பிடாத சாதியை சார்ந்தவன் தான்
ஆனால் அதை சாப்பிடுபவர்களை கேலி செய்ய கூடாது.

மனிதன் எதை தான் இன்று உனவாக சாப்பிட வில்லை.
கோழி, ஆடு ஒட்டகம், மீண் மட்டுமல்ல
முதலை நாய் கூட மாமிசமாக சாப்பிட படுகிறது.

நீங்கள் பசுவுக்கு மட்டும் வடிக்கும் கண்ணீரை
நான் நீலி கண்ணீர் என்பேன்.
என்னை தவறாக நினைக்க வேண்டாம்.
பல திரிகளில் உங்களுக்கு சார்பாகவும் பேசி இருகிறேன்.

உங்கள் வாதத்தை நான் மறுக்கவில்லை
உங்கள் நம்பிக்கையில் நான் அவமதிக்க வில்லை.

நான் விவசாயி மாட்டு பொங்கலன்று மாட்டை சுத்தம்
செய்து அதுக்கு பொங்கல் வைப்பவன் நான்.

ஆனால் அதே மாடு வயதான பிறகு
அடி மாட்டு விலைக்கு விற்று விடுவோம்.

உங்கள் முந்தைய திரிகளில்
வெண்கட் மிகவும் அநாகரிகமாக சாதியை பற்றி பேசினார்
ஆனால் இப்பொழுது வெண்கட் பழைய மாதிரி இல்லை
இப்பொழுது சிறிது பக்குவமாக பேசுகிறார்
சபாஷ் வெண்கட்
இன்னும் சிறிது பக்குவமாக்கி கொள்ளும்படி என் தாழ்மையான வேண்டுகோள்.
 
மனிதன் எதை தான் இன்று உனவாக சாப்பிட வில்லை.
கோழி, ஆடு ஒட்டகம், மீண் மட்டுமல்ல
முதலை நாய் கூட மாமிசமாக சாப்பிட படுகிறது.

ஆனால் இவை எல்லாவற்றில் இருந்து நான் எதையும் உபயோகப்படுத்துவதில்லை. சாப்பாட்டுக்குத் தான் பயன்படுத்துகிறோம். இதில் ஒட்டகம் மட்டும் பாலைவனங்களில் வாகனமாக பயன்படுகிறது.

உங்களுடைய லொள்ளு எப்பவும் சூப்பர் தான். கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!
 
நீங்கள் பருகும் பால் கூட பசுவின் இரத்தமாக தான் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் தாயின் இரத்தத்தை குடிப்பதாக உணரவில்லையா?

ஆம். இது ரத்தச் சம்பந்தம் உள்ள பந்தம். என்னுடைய தாய் எனக்கு தன்னுடைய ரத்தத்தையே பாலாக கொடுக்கிறாள் அதைப் போல பசுவையும் தாயாகத் தான் பார்க்கிறோம். நன்றி நண்பரே!
 
Back
Top