மீண்டும் முத்திரை பதித்த நடிகைகள்.

சுகந்தப்ரீதன்;329077 said:


ஆமாம் அண்ணா... பாலிவுட்டை கலக்கிய தென்னிந்திய தேவதைகளில் எனக்கு தெரிந்து மூன்று பேர்..

1. ஜெயமாலினி
2. ஜெயப்ரதா
3. ஸ்ரீதேவி

இதில் ஜெயப்ரதாவை பற்றி தெரிந்து கொண்டேன் இப்போது..
மற்ற இருவர் பற்றி எப்போது சொல்லுவாரோ நம்ப குரு அண்ணாச்சி..!!:wuerg019:

சுகந்தா... ஒருவேளை கேமா மாலினியைப் பற்றி சொன்னியாப்பா..?

[நம் தள ஒருங்குறி மாற்றியில் HEMA MALINI என்று தமிழில் எப்படிப்பா அடிக்கணும்.. கொஞ்சம் சொல்லிக் கொடேன்..]]
 
ராஜா;329084 said:
சுகந்தா... ஒருவேளை கேமா மாலினியைப் பற்றி சொன்னியாப்பா..?

[நம் தள ஒருங்குறி மாற்றியில் HEMA MALINI என்று தமிழில் எப்படிப்பா அடிக்கணும்.. கொஞ்சம் சொல்லிக் கொடேன்..]]

அய்யோ...அண்ணா...மாத்திட்டேன்...!!:icon_rollout:
அது வேற ஒன்னுமில்ல... ஜெயப்ரதா புராணத்த படிச்சிட்டே வந்தனா.. அதனோட தாக்கத்துல ஹேமாவை மறந்துட்டு ஜெயாவை அடிச்சி தொலைச்சிட்டேன்...(இப்ப புரிஞ்சுக்குமே...மூனுபேருல எனக்கு யாரை ரொம்ம்ம்ம்ம்ப புடிக்கும்ன்னு..)
நல்லவேளை உங்க பூனை புண்ணியத்துல புரியவச்சிட்டீங்கோ.. போங்கோ...:wuerg019:
 
எனது தெரிவு ஜெயப்பிரதா,

அறிவு சார்ந்த நடிப்பு மிகைப்படுத்தப்படாத அழகு.

சலங்கை ஒலி படம் ஒன்றுபோதும் அவரின் அபரிமித இயல்பான நடிப்பிற்குச் சான்று கூற.
 
நினைத்தாலே இனிக்கும்
சலங்கை ஒலி
47 நாட்கள்
இன்னும் பல படங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம் ஜெயப்பிதாவைப் பற்றி.

சென்னை மிட்லெண்ட் மற்றும் லியோ தியேட்டரை வாங்கியவர்கள்.
 
சுகந்தப்ரீதன்;329077 said:
அண்ணாவின் வாக்கை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்..
எனக்கும் ஜெயப்ரதாவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்குமாக்கும்...:icon_rollout:

அடடே அண்ணனைப் போல தம்பி.......!! :)

எனக்கும் ஜெயப்ரதாவைப் பிடிக்கும், என் அபிமானப் படங்களிலொன்று சலங்கை ஒலி..!!
:)
 
ஓவியன்;329730 said:
அடடே அண்ணனைப் போல தம்பி.......!! :)

எனக்கும் ஜெயப்ரதாவைப் பிடிக்கும், என் அபிமானப் படங்களிலொன்று சலங்கை ஒலி..!! :)

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அண்ணாச்சி...:icon_ush:

நாந்தான் முதல்ல சொன்னேன்... அதனால தம்பியை போல அண்ணன் என்பதுதான் சரி......:aetsch013:

என்ன நான் சொல்லுறது சரியா...?!:lachen001:
 
சுகந்தப்ரீதன்;329899 said:
என்ன நான் சொல்லுறது சரியா...?!:lachen001:

அதெப்படி சரியாகும், சரினு சொன்னா பொருள் குற்றம் கண்டு பிடிக்க மன்றத்திலே எத்தனை பேர் இருக்காங்க.......!! :eek:
 
ஓவியன்;329900 said:
அதெப்படி சரியாகும், சரினு சொன்னா பொருள் குற்றம் கண்டு பிடிக்க மன்றத்திலே எத்தனை பேர் இருக்காங்க.......!! :eek:

அப்படியா...? அப்ப சரி..சரி..:wuerg019:
 
வஹீதா ரெஹ்மான்

தென்னகத்திலிருந்து ஹிந்திக்கு சென்று பிராகசித்தவர்கள் பற்றி பேசும்பொழுது நாம் பேசுவது ஸ்ரீதேவி, ஹேமாமாலினி மற்றும் ஜெயப்பிரதா
பற்றித்தான். இவர்களுக்கு முன்னரே முன்னோடிகளாக விளங்கியவர்கள் இருவர்.
ஒருவர் வைஜெயந்திமாலா மற்றொருவர் வஹீதா ரெஹ்மான்.
மற்றவர்களுக்கும் இவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். மற்றவர்கள் தென்னக மொழிகளில் நடித்து புகழ்பெற்று ஹிந்திக்கு சென்றனர். இவர் தென்னக மொழியில் அறிமுகமாகி உடனேயே ஹிந்தியில் நடித்து புகழ்பெற்றவர்.
அழகு, நடனம், நடிப்பு இவை இருந்தாலே போதும் கூடவே இவருக்கு உயரமும் .. கேட்கவும் வேண்டுமா.. எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருக்கிறார் இன்றும். அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்.

1_wahidarehman01.jpg



பிறந்த இடம்: ஹைதராபாத்
முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர் மருத்துவராக நினைத்து பின் சினிமாவில் நுழைந்தார்.

ஜெயசிம்மா என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் அறிமுகமானார்

முதல் திரையிலேயே என்.டி.ஆருடன் அறிமுகம்
[media]http://www.youtube.com/watch?v=GMn-rfEzofA[/media]

அதை தொடர்ந்து ரோஜுலு மாராயி என்ற திரையிலும் தோன்றினார்
தமிழில் ஒலித்த ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்ண்ணே(குரல் ஜிக்கி)
இதை தெலுங்கில் ஆடிப்பாடியவர் வஹீதா

இதோ
[media]http://www.youtube.com/watch?v=l_Kj7zKpT10[/media]

இளம் வஹீதா எவ்வளவு அழகு பாருங்கள்

இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஹிந்தி நடிகர் குருதத் இவரைக்கண்டு தனது படமான சி.ஐ.டி(1956)ல் இவரை ஹிந்தியில் அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தானே

(over night star) என்று சொல்வார்களே அதுபோல் உடனே ஹிந்தியில் பிரபலாமானர்.
படங்கள் குவிந்தன. தன் ஆசானான குருதத் படங்களில் நிறைய நடித்தார்

ஃப்யாஸாவில்(1957) நாயகியாக நடித்தார் . அப்படியே இவருக்கும் குருதத்திற்கும் காதல் மலர்ந்தது. குருதத் திருமணமானவர்(மனைவி கீததத்). இதனால் இந்த உறவில் விரிசல் விழுந்தது. இந்த சூழலிலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். பின்னர் பிரிந்துவிட்டனர்.

இந்த சமயத்தில் தான் சத்யஜித்ரேயின் அபிஜான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
பின்னர் தேவானந்துடன் இவர் நடித்த கைட்(1965)'ல் இவருக்கு பெரும் பெயர் தேடித்தந்தது. இதில் இவரது நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதற்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது

கைட் (Guide)

[media]http://www.youtube.com/watch?v=2KEbAecACzc[/media]

[media]http://www.youtube.com/watch?v=3koQIDoNGMU[/media]


பின்னர் ராம் ஒவுர் ஷ்யாம் ( எங்கவீட்டுப்பிள்ளை) திலீப்குமாருடன், நீல்கமல் ராஜ்குமாருடன் என அவரது வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம்


(neel kamal)
[media]http://www.youtube.com/watch?v=GoeQAddx_sE[/media]

[media]http://www.youtube.com/watch?v=TNH0K16htWc[/media]

பின்னர் வந்த ரேஷ்மா அவுர் ஷேரா(1971)வில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்

[media]http://www.youtube.com/watch?v=Tvw9RSdwbLk[/media]


நடனம்
[media]http://www.youtube.com/watch?v=b6FcQwfdFUw[/media]


நடுவில் அமிதாப்பச்சனுக்கு அம்மாவாக நடித்தார்

சமீபத்தில் வந்த ரங்தே பசந்தியிலும் தன் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
[media]http://www.youtube.com/watch?v=IWGrZKFc8lM[/media]

gr8 award
http://ishare.rediff.com/filevideo-Waheeda-Rahman-getting-GR8-Award-id-124805.php

தென்னகத்திலிருந்து சென்று அங்கே பெரும் புகழ் பெற்றவர்களில் முன்னோடி இவர்.

சமூகவேவையிலும் ஈடுபடுத்திக்கொண்டார். நல்ல காரியங்கள் பல செய்து வருகிறார்
http://www.screenindia.com/old/fullstory.php?content_id=7160
 
Last edited:
ஒருவர் வைஜெயந்திமாலா மற்றொருவர் வஹீதா ரெஹ்மான்.
குருவே... மிக்க நன்றி... நான் வைஜெயந்திமாலாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் வஹீதா ரெஹ்மான் பற்றி இப்போதுதான் தாங்கள் மூலம் அறியபெற்றேன்...!!

இளம் வஹீதா எவ்வளவு அழகு பாருங்கள்

சும்மா சொல்லக்கூடாது...முன்னோடி என்னிக்குமே முன்னோடிதான் போலிருக்கு..! அந்தனை அழகு..குருவே...!!
 
அருமையான தகவல்கள்
நண்றி நண்பரே
தொடருங்கள்... உங்கள் பணியை
 
அருமையான தொகுப்பு குரு முத்திரை பதித்த நடிகைகளை பற்றி அழகாக தொகுத்து கொடுத்து உள்ளீர்கள் பாராட்டுக்கள்
 
மீண்டும் முத்திரை பதித்த நடிகைகள் -ஜமுனா

இதோ மீண்டும் வந்துட்டேன்... (மதன்பாப் style 'ல் படியுங்கள்)

சுஜாதாவின் மரணம் என்னை என்னமோ செய்து விட்டது. இந்த பதிப்பை தொடரச்சொல்லி ஒரு குரல் .. ஆம் இப்படி ஒவ்வொருவர்களாக ந்ம்மை விட்டு பிரியப்போகிறார்கள். அதற்கு முன் எல்லோரைப்பற்றியும் எழுதியாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இதோ உங்கள் முன்னால் ..

ஜமுனா .. அமுதை பொழியும் நிலவே * துரு துரு கரு விழிகளும், பாந்தம் அதே சமயம் கர் வமும் கொண்ட ஒரு வசீகர முகம் ஜமுனாவினுடையது..

50'களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து பின் 60'களில் தெலுங்கில் கொடிகட்டி பறந்த நிடிகைகளில் மிகவும் முக்கியமானவர் இவர்.

தமிழிலும் நல்ல கதாபாத்திரங்கள் செய்துள்ளவர். அழகான தமிழ் உச்சரிப்பும் உண்டு.

எத்தனை படங்கள் எத்தனை கதாபாத்திரங்கள்

தங்க மலை ரகசியத்தை மறக்க முடியாது.

பாவாடை தாவனியில் என சிவாஜி இவரைப்பார்த்து பாடும் நிச்சயதாம்பூலத்தையும் மறக்க இயலாது.

போதும் உந்தன் ஜாலமே என டி.ஆர்.ராமசந்திரன் இவரிடம் செய்யும் கேலி

அன்புள்ள மான் விழியே என செய்சங்கருடன் இவர் நடித்த குழந்தையும் தெய்வமும்

சின்னஞ்சிறு வயது முதல் என எம்.ஜி.ஆரோடு ஆடும் பாடலாகட்டும்

எல்லா பாத்திரத்திலும் மின்னியவர் இவர்.

தமிழை விட தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்தவர்.

[media]http://www.youtube.com/watch?v=jDOoKX0Cqeo[/media]

http://www.youtube.com/embed/XMEJZbkQCBE

http://www.youtube.com/embed/bJCoqJSTThY


அறியா பருவமடா , பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலை மறக்க முடியுமா..

இன்பமான இரவிதுவே மனிதன் மாறவில்லை திரையில் இவரும் நாகேஸ்வரராவும்

http://www.dailymotion.com/video/xeb90i_inbamana-iravu_creation

[media]http://www.youtube.com/watch?v=-k0qEZOFU4M[/media]

[media]http://www.youtube.com/watch?v=LyKgHU5n5M4[/media]

[media]http://www.youtube.com/watch?v=ff0PqrzOkMQ[/media]

[media]http://www.youtube.com/watch?v=P9qeiUIcOBc[/media]

[media]http://www.newsofap.com/uploaded_files/news_img/newsofap.com4b99ef8795a62Jamuna.jpg[/media]
 
வணக்கம் குருவே...


கனிந்த, கனிவான இனிய பெண்மையை ஜமுனாவிடம் முழுதாய்க் காணலாம்.
(மோகமுள் நாயகி பெயரும் ஜமுனாதான்..)

மயிலா மானா.... பாவாடை தாவணி பாடலில் அவர் நடையழகு..

அன்பா அமைதியா...... அமுதைப் பொழியும் பாடலில் முகவடிவு..

பெருமிதமா கர்வமா ... அன்புள்ள மான்விழியில் அவர் பாவனை வடிப்பு..

அழகிய நினைவூட்டலுக்கு நன்றியும் பாராட்டும்.
 
கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படம் பார்க்கும்போது என் அப்பாவும் அம்மாவும் 'அட, ஜமுனா!' என்று அப்படத்தில் கமலின் தாயாக வருபவரைப் பார்த்து சிலாகித்தார்கள். அப்போது அவர் யாரென்றே தெரியாத காலம். அதன்பின் தொலைக்காட்சிகளின் உபயத்தால் பழையபடங்கள் பார்த்து எனக்குள்ளும் ஒரு சிலாகிப்பு' அட, இவரா?' என்று.

மிஸ்ஸியம்மா பார்த்து வியந்தேன். வசீகரம் காட்டும் அந்தக்கண்கள் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட். பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் அவர்களே.
 
நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும் போன்ற படங்களில் அவரது நளினமான நடிப்பு தெரியும்...

பாவாடை தாவணி பாடலில் அவர் நடையழகு, காண்போரை சிக்கென்று இழுக்கும் கண்ணழகு ஹ்ம்ம்... மன்ற ஒல்டீஸ் உங்களது ஃபீட்பேக் ப்ளீஸ்

நம்ம தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு ஜெய்ஷங்கர் கூட இவர் இனைந்து அபிநயித்த காதல் பாடல்கள் பலரது மனதையும் கொள்ளை கொண்டிருப்பது நம்மில் பலரும் அறிந்ததே...
 
நடிகை திருமதி வைஜெயந்திமாலா

முத்திரை பதித்த மற்றுமொரு நடிகை திருமதி வைஜெயந்திமாலா அவர்கள்.

நமது சென்னைப்பெண் தமிழ்ப்பெண் அகில இந்திய அளவில் புக்ழ்பெற்று நகம்மு பெருமை சேர்த்து தந்தவர் இவர்.

சென்னை திருவல்லிக்கேனியில் பிறந்தவர். மங்கம்மா சபதம் (ரஞ்சனுடன்) நடித்த வசுந்தராதேவியின் மகளாக பிறந்தவர்.

நாட்டியத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்.

வாழ்க்கை படம் முதல் திரையுலக பிரவேசம்.
உன் கண் உன்னை ஏமாற்றினால் பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.

அடுத்து ஏ.வி.எம்மின் பெண். படம் மாபெரும் வெற்றி.

வாழ்க்கை ஹிந்தியில் எடுத்த போது இவரே நாயகி. அங்கும் வெற்றி.

அதை தொடர்ந்து ஹிந்தி படங்களும் ஒப்பந்தமாயின.

தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்கள் நடித்தார். நட்சத்திர அந்தஸ்துடன் மின்னினார்.

தேன் நிலவு படப்பிடிப்பு தளத்தில் பல மணி நேரம் காத்திருந்து இவரது கால்ஷீட்டை பெற்றாராம் ராஜ்கபூர் சங்கம் திரைப்படத்திற்காக.

பிமல் ராய்யின் தேவ்தாஸ் திரையில் சந்திரமுகி வேடமேற்று மிகவும் சிறப்பாக நடித்தார்.

துணை நடிகை பிலிம்பேர் விருதை மறுத்து அதில் என் பாத்திரம் துணை நடிகை அல்ல*
என்று கூறினாராம்.

http://www.dailymotion.com/video/xenn1e_nilavum-malarum-paadudhu_tech


[media]http://www.youtube.com/watch?v=X9_lhdEW44A[/media]

[media]http://www.youtube.com/watch?v=X7oBW8QsHmg[/media]

[media]http://www.youtube.com/watch?v=TNjLIwE-YKs[/media]

[media]http://www.youtube.com/watch?v=OS6MLNolf-w[/media]

[media]http://www.youtube.com/watch?v=rj1GTKC80js[/media]

[media]http://www.youtube.com/watch?v=e6xvBbU5uF4[/media]

[media]http://www.youtube.com/watch?v=weItqjKUw6w[/media]

http://www.dailymotion.com/video/xelm69_nenjil-kudiyirukkum_auto

பல வித்ததில் முத்திரை பதித்த வைஜெயந்திமாலவை நாம் மறக்கவே இயலாது.

நாட்டிய பேரொளியும் இவரும் இணைந்து நடனமாடிய
கண்ணும் கண்ணும் கலந்து பாடல் இன்றும் பேசப்படும் போட்டிப்பாடல்

[media]http://www.youtube.com/watch?v=TMzK4sVU_OY[/media]
 
வைஜெயந்திமாலா இந்தி திரையுலகிற்குச் சென்று நன்றாகவே கலக்கினார். இவர் தமிழர்களுக்கு பெருமையைச் சேர்த்தவர். தென் சென்னை நாடாளுமன்றத்தின் எம்பியாகவும் இருந்தவர்.

இவர் ஒய்.ஜி.பியின் அக்காள் மகள் என்கிறார்களே. அப்படியென்றால் வசுந்தராதேவி ஒய்.ஜி.யின் அக்காவா.
 
Back
Top