மீண்டும் முத்திரை பதித்த நடிகைகள்.

முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் &#2

முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் பகுதி- 1

ஸ்ரீபிரியா

அறிமுகம்: முருகன் காட்டிய வழி (1974)
முருகன் காட்டிய வழி - ஏ.வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம். இதில் அவரின் தங்கையாக அறிமுகம் ஆனார் ஸ்ரீபிரியா.
இயக்கம் பி.மாதவன்

அறிமுக திரைப்படத்திலேயே முழுப்பாடல் பெற்றார் ஆம்
ஜானகியின் குரலில் ஒலிக்கும் முருகா வடிவேலா உனை அறிவேன் தெய்வ பாலா என்ற பாடல், திரு.ஜி.கே வெங்கடேஷின் இசையில் மிகவும் பிரபலமான பாடல்

அதற்கு பின் வந்த அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவின் தங்கை வேடம்
அதுவும் விதவை வேடம் . அதிலும் நன்றாக நடித்திருப்பார் .. தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்

பாலசந்தரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்களில் இவரும் ஒருவர்

மெதுவாக திரை வானில் மின்ன தொடங்கினார் அட யார் இவர் என எல்லோரும் பார்க்கும் படி அந்த துடுக்குப்பேச்சு இவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்

இளையராஜாவின் இரண்டாவது படமான பாலூட்டி வளர்த்த கிளியில் இவர் தான் கதாநாயகி

ஜானகியின் கொல கொலயான் முந்திரிக்கா பாடல் பிரபலாமான பாடல்

ஆடு புலி ஆட்டம், பாலாபிஷேகம் என தொடர்ந்தது இவரது வளர்ச்சி
அதுவும் பாலாபிஷேகத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது
வில்லி ராஜசுலோசனாவை இவர் கிண்டல் செய்து பேசுவதாகட்டும், ஜெய்யுடன் சேர்ந்து கொண்டு உண்மையை கண்டுபிடிப்பதாகட்டும் தூள்..

எனக்கு தெரிந்து பானுமதிக்கு பின், ஆண்களை அடக்கி படத்தின் நிஜ கதா நாயகனாக ஜொலித்த
நடிகை ஸ்ரீபிரியா மட்டும் தான்..

ஆடுபுலி ஆட்டத்தில் இரு பெரிய நட்சத்திரங்களும் உண்டு ஆம் ரஜினி - கமல் இதில் நடித்தபோது மூவருக்கும் தெரிந்ததிருக்க வாய்ப்பில்லை .. இவர் இவர்களின் ஆஸ்தான நாயகியாவார் வரும் நாளில் என்று.

நவரத்தினம்(1976) - ஆம் எம்.ஜி.ஆரை வைத்து ஏ.பி. நாகராஜன் இயக்கிய ஒரே படம்.
படத்தில் பல நடிகைகள் நடித்தனர் , ஜெய்சித்ரா, லதா என்ற பெயர்களுடன் ஸ்ரீபிரியாவும் இருந்தார்
இந்த படத்தில் இவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து

பின்னர் 1978'ல் வெளிவந்த அவள் அப்படித்தான் படத்தில் இவர் நடிப்பு மிகவும் குறிப்பிடதக்கது.

ஆம் அந்த மஞ்சு கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்..
இதிலும் கமல் - ரஜினி என இருவருடனும் நடிப்பு..
கமலுக்கும் இவருக்கும் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது.
ருத்ரய்யாவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில், அவள் அப்படித்தான் தமிழ் திரையுலகில் ஒரு மைல்க்கல்

யேசுதாஸின் குரலில் உறவுகள் தொடர்கதை, கமலின் குரலில் பன்னீர் புஷ்பங்களே, ஜானகியின் குரலில்
வாழ்கை ஓடம் என எல்லா பாடல்களும் அருமை.

அவள் அப்படித்தான் - ஸ்ரீபிரியாவிற்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தியது

குக நாதனின் மதுரகீதம், மாங்குடி மைனர் என இவரது வளர்ச்சி தொடர்ந்தது.
தேவரின் ஆட்டுக்கார அலமேலு இவருக்கு நடிப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.

சிவகுமார் - ஸ்ரீபிரியா ஜோடி சேர்ந்து நடித்தனர்.படம் அமோக வெற்றி பெற்றது
சங்கர் கணேஷ் இசையில் பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளும் பார்த்த மச்சான்
சுசீலா,டி.எம்.எஸ் குரல்களில் மதுரகீதம்

அதை தொடர்ந்து வந்த பைரவியில் மீண்டும் ரஜினியுடன் ஜோடியாக நடித்தார்
இதில் கிராமிய மனம் கமழும் வித்தியாசமான வேடம் மிகவும் நன்றாக செய்திருப்பார்

அவள் ஒரு அதிசயம்,வாழ நினைத்தால் வாழலாம்,இளமை ஊஞ்சல் ஆடுகிறது என தொடர்ந்தது இவர் வளர்ச்சி

குறிப்பாக இளமை ஊஞ்சல் ஆடுகிறது ஸ்ரீதரின் இயக்கத்தில் இவர் நடித்த படம். இதில் மிகவும் கடினமான பாத்திரம் இவருக்கு நன்றாக செய்திருப்பார்

இப்படி தொடர்ந்த இவரது வளர்ச்சியின் உச்சகட்டமாக நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது வெற்றிக்கு ஒருவன் மூலமாக..

இவரை புகழேனிக்கு கொண்டு சென்ற படம் 1979'ல் வெளியான நீயா..
துரையின் இயக்கத்தில் கமல்,ஜெய்கணேஷ்,ரவிச்சந்திரன்,ஸ்ரீகாந்த்,லதா,மஞ்சுளா என பட்டாளமே நடித்த படத்தில் பாம்பாக வந்து எல்லோரையும் கிரங்கடித்த ஸ்ரீபிரியாவை யாரும் மறந்திருக்க முடியாது..

வாணிஜெயராமின் குரலில் ஒலித்த ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்

1979'ல் இவரது மற்ற படங்கள்
ரஜினியுடன் அன்னை ஓர் ஆலயம்,
வேலும் மயிலும் துணை,மங்கல வாத்தியம்,என்னடி மீனாட்சி, யாருக்கு யார் காவல்

1980 இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே சொல்லாம்
ஆம் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது
குறிப்பாக ஸ்ரீதரின் செளந்தர்யமே வருக வருக, அவன் அவள் அது மற்றும் இவரது சொந்த தயாரிப்பான
நட்சத்திரம்
முக்தா ஸ்ரீனிவாசனின் அவன் அவள் அது(கதை சிவசங்கரி) ஒரு மறக்க முடியாத படம். சிவகுமாரின் கருவை சுமக்கும் ஒரு வாடகை பெண்ணாக வந்து பின் சிவகுமாரிடம் தன் மனதை பறிகொடுக்கும் பாத்திரம் மிகவும் நேர்த்தியாக செய்திருப்பார்

80'ல் தொடர்ந்த படங்கள்
கண்ணில் தெரியும் கதைகள், பொல்லாதவன், பில்லா, யமனுக்கு யமன்

1981'ல் சுஜாதாவின் நாவலை படமாக்கினார் ஜி.என்.ரங்கராஜன் ஆம் கரையெல்லாம் செண்பகப்பூ.இதிலும் கிராமிய மனம் கமழும் பாத்திரம் வெளுத்து வாங்கியிருப்பார்
பின் கே.சங்கரின் ஸ்ரீனிவாச கல்யாணம், மாடி வீட்டு ஏழை, லாரி டிரைவர் ராஜா கண்ணு,அமரகாவியம், சவால், ராம் லக்ஷ்மண் என பட்டியல் நீண்டது..

பின் வசந்தத்தில் ஓர் நாள்(சிவாஜியுடன்), தனிக்காட்டு ராஜா, சிம்லா ஸ்பெஷல்,சங்கிலி,பகடை பன்னிரெண்டு,கடமை, சிரஞ்சீவி, நினைவுகள், நட்பு, எனக்குள் ஒருவன்,திரிசூலம், அலாவுதீனும் அற்புத விளக்கும்,ஊருக்கு ஒரு பிள்ளை,இலங்கேஸ்வரன் பின் நீயா- பாகம் இரண்டு ஆம் நானே வருவேன் இவரே இயக்கியது என எல்லாமே மாறுபட்ட பாத்திரங்கள்

குறிப்பாக 1982'ல் வந்த வாழ்வே மாயம் திரைப்படத்தில் தாசி வேடம் இவருக்கு இருந்தாலும் கமல் இவருக்கு தாலி கட்டும் காட்சியிலாகட்டும், கண்களாலேயே நடித்திருப்பார் இவர்.. சபாஷ்

இயக்குனராக இவர் இயக்கிய படங்கள்
சாந்தி முகூர்த்தம் (1984) - மோகன் - ஊர்வசி
எங்க ஊர் ஆட்டுக்காரன் (1990) - இவரது தம்பி சந்திரகாந்தை நாயகனாக அறிமுகப்படுத்தினார்
சந்திரகாந்த் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுகாசினியின் கணவராக வருபவர்
நானே வருவேன்(1992) ரகுமான்,சசிகலா, கெளதமி
பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிவருகிறார்

தமிழ் திரைஉலகில் ஜொலித்த நட்சத்திரங்களில் இவர் மிகவும் முக்கியமானவர்

ரஜினி-கமல் வளர்ச்சியில் இவரது பங்கும் உண்டு

http://www.hindu.com/2007/02/22/stories/2007022218510200.htm
 
Last edited:
அறிமுகம் படித்ததுமே ஸ்ரீபிரியாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். சரியாகப் போயிற்று. நவரத்தினத்தில் எம்.ஜி.ஆரோடு ஸ்ரீபிரியாவுக்குப் பாட்டு உண்டு. "புரியாததை புரிய வைக்கும் புது இடம்...அதைப் புரிந்து கொண்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம்..நான் உன்னிடம்" என்ற பாடல்.

நடிகர் திலகத்துடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிக்கு ஒருவன் இளையராஜா இசையில் வெளிவந்த படம். "தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி" என்ற பாடல் மிகப் பிரபலம்.

ஆனால் "வேண்டும் வேண்டும் உங்கள் உறவு" என்ற பாடல் மிகமிகப் பிரபலம். ஆனால் அந்தப் படம் (வசந்தத்தில் ஓர் நாள்) ஓடவில்லை. அது ஒரு அருமையான கதை. வங்காளத்தில் இருந்து இந்தி வழியாகத் தமிழுக்கு வந்தது. நடிகர் திலகத்திற்கும் பொருத்தமான வேடம். ஆனால் இயக்கமும் திரைக்கதையும் சரியில்லாததால் படம் தோல்வியுற்றது.
 
அசத்தல் குரு.

எனக்கு நீயா படம் பிடிக்கும். இரண்டாம் பாகமும் பிடிக்கும். ஸ்ரீபிரியாவாக்கும் நல்ல நடிப்பு திரன் இருக்கு.

நன்றி.
 
ஸ்ரீபிரியா பற்றிய சுவையான தகவல்களை அளித்த ராஜேஷுக்கு நன்றிகள்.இவரை இந்த மாதம் முதல்தேதி சென்னை விமானநிலையத்தில் அவரை பார்த்தபோது வருத்தம் அடைந்தேன்..உடல் நலம் சரியில்லையோ என்னவோ..மிகவும் சிரமப்பட்டு நடந்துபோனார்..முதுமை முகத்தில்..அங்கு யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை..இலையுதிர்காலம் என்பது யாருக்கும் விதிவிலக்கில்லை...
 
முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் 

முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் பகுதி- 2

ஊர்வசி சாரதா..

ஆம் மலையாளம்,தெலுங்கு,தமிழ்,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால்
எல்லோரையும் கவர்ந்தவர் சாரதா

நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல்லது ஒரு அலட்டலையோ இன்றளவும் இவரிடம் நான் கண்டதில்லை

1945'ல் ஆந்திர மாநிலம் தெனாலியில் பிறந்தார் சாரதா.
இயற்பெயர்: சரஸ்வதி தேவி
சிறு வேடங்களில் முதலில் தோன்றினார்

அப்படி அவர் தெலுங்கு நகைச்சுவை மன்னன் பத்மனாபத்துடன் நடித்த இத்தரு மித்ரலு படத்தில்
நடித்தார்
நாகேஸ்வரராவ்வின் தங்கையாக .. நல்ல புகழை தேடி தந்தது
ஆம் முதன் முதலில் ஒரு முழு நீள பாத்திரம் செய்தது இந்த படத்தில் தான்
http://www.telugucinema.com/tc/movies/printer_iddarumitrulu1961.php

பீ.பி.ஸ்ரீனிவாஸ் - சுசீலா பாடிய சக்கனிசுக்க சரசுக்கு ராவே பாமா/பாவா என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல் (பதம்னாபம் - சாரதா)

இப்படி சிறு சிறு வேடங்கள் செய்து வந்த நிலையில் மலையாள படவுலகின் இயக்குனர்களின் பார்வையில் இவர் பட மலையாள திரையுலகம் இவரை இருகை விரித்து வரவேற்றது .. இப்படி நுழைந்த இவர் மலையாள சேச்சியாகவே மாறிப்போனார் என்றால் அது மிகையில்லை

மலையாள உலகின் முன்னணி இயக்குனர்கள் அனைவரின் படத்திலும் நடித்தார் சாரதா ..

அதே போல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதாவது ஊர்வசி விருது முதலில் பெற்றவரும் இவர் தான்

அதை மூன்று முறை பெற்றவரும் இவரே.
முதலில் இந்த விருதின் பெயர் ஊர்வசி என்று இருந்தது பின்னர் தேசிய விருதாக மாறியது

ஷபானா ஆஸ்மியெல்லாம் இவருக்கு பின் தான் 3 முறைக்கு மேல் விருதுபெற்றவர்

அதுவும் யதார்த்தமாக நடிப்பதில் பெயர் போனவர் இவர் அதனால் தான் நாகேஸ்வரராவ்,என்.டி.ஆர் என்று எல்லோருடனும் ஜோடி சேர்ந்தார்

சிவாஜி இவருக்கு வாய்ப்பு கொடுக்க சொல்வாராம், நம்மவர்கள் மறுத்துவிடுவார்களாம் இவர் அழகில்லை என்று காரணம் கூறி .. அப்படியும் சிவாஜி குங்குமம், ஞானஒளி, என்னைப்போல் ஒருவன் என தன் படங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கத்தான் செய்தார் இவரும் அவரின் நம்பிக்கையை
பொய்யாக்கியதில்லை

குறிப்பாக ஞானஒளியில்
மணமேடை மலர்களுடன் தீபம் என்ற பாடலும், இவர் நடிப்பும் அபாரம்

எம்.ஜி.ஆரின் தங்கையாக நினைத்ததை முடிப்பவன் படத்தில் இவர் நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது ..

இருந்தாலும் மலையாள உலகில் ஒரு 7 -8 ஆண்டுகள் முண்ணனி நடிகையாகவும் சிறந்த நடிகையாகவும்
விளங்கினார் . பிரேம் நசீர், மது என எல்லா முண்ணனி நடிகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் நடிப்பை வழங்கினார்

ஆடூர் பாலகிருஷ்ணனின் சுயம்வரம் திரைப்படத்திற்கு இவர் தேசிய விருது பெற்றார்

சரி இவரது படப்பட்டியலை பார்ப்போம்
இத்தரு மித்ருலு (1961)
வால்மீகி
ஆத்மபந்தவு
சகுந்தலா
காட்டுத்துளசி
காத்திருந்த நிக்காஹ்
திலோத்தமா
இனப்பிராவுகள்
திலோத்தம்மா
கண்மணிகள்

ராகம்(பாடியவர் சுசீலா)
[media]http://www.youtube.com/watch?v=33x_pOHxdzk[/media]


திரிவேணி(பாடியவர் சுசீலா)
[media]http://www.youtube.com/watch?v=je5dlq_JT78[/media]

நதி(பாடியவர் சுசீலா)
[media]http://www.youtube.com/watch?v=GIUyZSrc2Tw[/media]

அர்ச்சணா
[media]http://www.youtube.com/watch?v=Jwu-8cc68qE[/media]

[media]http://www.youtube.com/watch?v=J9gGdSdmVX0[/media]


[MEDIA]http://www.youtube.com/watch?v=0-cKmOP7BZM[/MEDIA]

அதே சமயம் தெலுங்கில் நல்ல பெண்ணுரிமை பாத்திரங்கள் கிடைக்க ஆரம்பித்தன
இவரும் சோபன் பாபுவும் தெலுங்கில் ஒரு வெற்றிக்கூட்டணியாகவே திகழ்ந்தனர்
மனுஷ?லு மாறாலி
கார்தீக தீபம்
காலம் மாறிந்தி
சாரதா
பலிபீடம்
சம்சாரம்
ரகுராமுடு
மிஸ்டர் பாரத்


அம்மா ராஜினாமா -இதில் கலெக்டர் வேடம் இவருக்கு மிகவும் நன்றாக செய்திருப்பார்
[media]http://www.youtube.com/watch?v=6TjkKkdYZFE[/media]

அரசியலிலும் நுழைந்தார்
மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்

நெடு நாட்களுக்கு பிறகு கிருஷ்ணவம்சியின் அந்தப்புரம் படத்தில் பிரகாஷ்ராஜ்ஜின் மனைவியாக நடித்தார்
இந்த பாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று வம்சி அடம்பிடித்து இவரை மீண்டும் நடிக்கை வைத்தாராம்

மீண்டும் சில தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்

நல்ல திறமையான நடிகைக்கு உதாரணம் சாரதா

அவரின் நேர்காணலை இங்கே படித்து மகிழுங்கள்
http://www.telugucinema.com/tc/stars/interview_Sarada_2005.php
நன்றி - தெலுங்குசினிமா
 
Last edited:
தமிழ் நடிகைகளில் எனக்கு பிடித்த நடிகைகளில் ஸ்ரீப்ரியாவும் ஒருவர். நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

இவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்:
இளமை ஊஞ்சாலுடுகிறது
நீயா
அவள் அப்படித்தான்
அவன் அவள் அது
பாலாபிஷேகம்
நட்சத்திரம்
இன்னும் பல

நன்றி வணக்கம்
ஆரென்
 
அருமையான கட்டுரை, நன்றி குரு.

ஸ்ரீப்ரியா ஒரு சிறந்த நடிகை, அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம். எனக்கு அவரின் நடிப்பில் பிடித்த படங்கள் நீயா, அவள் அப்படிதான், ராம் லக்ஷ்மன், வாழ்வே மாயம், அவளோரு தொடர்கதை, இளமை ஊஞ்சல் ஆடுகிறது. சொல்லிக்கொண்டே போகலாம்.

பில்லாவிலும் நல்ல நடிப்பை வழங்கி இருப்பார்.

அவள் அப்படிதான் படத்தின் கடைசி காட்சியில் நடு ரோட்டில் நின்று ஒரு பார்வை பார்ப்பார், எத்தனை அர்த்தம் போதிந்த பார்வை அது, ஒரு பெண்ணின் அவல நிலையை விவரிக்கும் ஒரு ஏக்கப்பார்வை.
 
சாரதா அவைர்களை எனக்கு தெரியாது, இருப்பினும் அந்தப்புரம் படத்தில் கண்டுல்லேன். நல்ல நடிப்பு. ஒரு அம்மாவின் ஏக்கத்தினை அழகாக காட்டியிருப்பார். ஆண்களிடம் மாட்டும் ஒரு கூண்டுக்கிளியா அருமையாக நடித்திப்பார்.

நல்ல பதிவு. நன்றி குரு.
 
Last edited:
ஊர்வசி சாரதா...அவரை எப்படி மறக்க முடியும்? மலையாளத்தில் அத்தனை விதமான பாத்திரங்களில் நடித்துச் சிறப்பித்தவராயிற்றே. பின்னாளில் தெலுங்கிலும் கொடி நாட்டியவர். தமிழ்த் திரைப்படம் இவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது உண்மை. கிடைத்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மொத்தத்தில் ஊர்வசி சாரதா...மிகச் சிறந்த நடிகை.
 
அடுத்த முத்திரை பதித்த நடிகை விரைவில்

அடுத்த முத்திரை பதித்த நடிகை விரைவில்

ஒரு குறிப்பு தருகிறேன் .. கண்டுபிடியுங்கள்

இவர் சத்யஜித்ரேயால் அழகான பெண் என்று பெயர் வாங்கியவர்

கமல், ரஜினி, சிரஞ்சீவி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் மற்றும் அமிதாப்,
ஜிதேந்திரா என எல்லா முன்னணி நட்சந்திரங்களுடனும் எல்லா மொழிகளிலும் தன் முத்திரை பதித்து பின் அரசியலிலும் நுழைந்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளவர் ..

யூகியுங்கள் ..
 
Last edited:
வாங்க குரு..

தொடர் தொடர்வதில் மகிழ்ச்சி..

ஜெயப்ரதா பற்றி என நினைக்கிறேன்.. சரீங்களா?
 
மிகவும் சரி

இளசு சொல்லாமல் பதில் யார் சொல்லக்கூடும்
 
now a days sneha is a good actress

நண்பரே அறிமுகம் செய்துபின் இங்கு வருக..
அப்பதான் உங்களை நாங்கள் அறிய உதவும்..
அது எப்படி சினேகாவா??
இப்ப அசின்,ஸ்ரேயா, இன்னும் பலர்..
 
அசத்துகின்றீர்கள் குரு தொடரட்டும் உங்கள் பணி
 
ஜெயப்ரதா

பகுதி- 3 ஜெயப்பிரதா

பிறந்த ஊர் : ராஜமண்டிரி, ஆந்திரா
வருடம்: 1962
முதல் திரைப்பிரவேசம் : பூமிக்கோசம்(தெலுங்கு)

அறிமுகமான புதிதிலேயே பாலசந்தர், பாபு, கே.விஸ்வநாத் என மேதைகளுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் சுஜாதா செய்த வேடத்தை தெலுங்கில் ஜெயப்பிரதா ஏற்று நடித்தார் ஆம் அவள் ஒரு தொடர்கதை. இதில் அண்ணன் வேடம் செய்தவர் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்...

இதோ தெய்வம் தந்த வீடின் தெலுங்கு வடிவம்..
[media]http://www.youtube.com/watch?v=SKyWRSjpk-0[/media]

பின்னர் கிருஷ்ணாவுடன் ராஜேஸ்வரி காபி கிளப் என்ற* திரையில் நடித்தார்.
இதோ அந்த வெகுளியான முகம் கொண்ட இளம் ஜெயப்பிரதாவை பாருங்கள்

[media]http://www.youtube.com/watch?v=lB4guGwWw50[/media]

ஒலிக்கும் குரல் இசையரசி

1976'ல் வெளிவந்த சிரி சிரி முவ்வா என்ற திரைப்படம் தான் ஜெயப்பிரதாவை நிலையான நடிகையாக்கியது . ஆம் தன் நடிப்பாலும் குறிப்பாக நடனத்தாலும் இவர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இதில் ஊமை விதவை வேடம். மிகவும் அருமையாக செய்திருப்பார். கே.விஸ்வ நாத் அவர்கள் இயக்கிய இந்த படத்தில் இடம்பெற்ற ஜும்மந்தி நாதம் சையந்தி பாதம் என்ற பாடல் இசையரசிக்கு தேசிய விருது வாங்கி தந்தது..

இந்த படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டார் விஸ்வநாத். இது தான் ஜெயப்பிரதாவின் முதல் ஹிந்தி படம் . ஆம் சர்க்கம் என்ற அந்த படத்தில் ரிஷிகபூருடன் இணைந்து நடித்தார். இதில் நடித்த பின் ஜெயப்பிரதா நிரந்தர ஹிந்தி நடிகையானார் என்றால் மிகையில்லை.
[media]http://www.youtube.com/watch?v=yVMpqjMHl7o[/media]

பின்னர் வந்த எத்தனையோ படங்களில் தன் பாங்கான நடிப்பாலும் திறமையான நடனத்தாலும் தெலுங்கிலும் ஹிந்தியிலும் கொடிகட்டி பறந்தார் . தமிழில்
பாலசந்தரின் இயக்கத்தில் கமல், ரஜினியுடன் இவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

[media]http://www.youtube.com/watch?v=VZRvuiXnEAs[/media]

[media]http://www.youtube.com/watch?v=JlokOIc2nvQ[/media]


[media]http://www.youtube.com/watch?v=nHiRi7iiDHE[/media]
இவரும் ஸ்ரீதேவியும் மிகவும் பிரபலமான திரை ஜோடிகள் ஆம் இவருவரும் சேர் ந்து தெலுங்கிலும் ஹிந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளனர். ஆனால் நிஜத்தில் இருவரும் செட்டில் கூட பேசமாட்டார்களாம். ஜிதேந்திரா எவ்வளவோ முயற்சி செய்தாராம் ஆனாலும் ஏனோ நடக்கவில்லை . இது பற்றி ஜெயப்பிரதாவே சொல்வதை இங்கே கேளுங்கள்..

[media]http://www.youtube.com/watch?v=4bxv3lJb_d8[/media]

கன்னடம், மலையாளம் என எல்லா மொழியிலும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார்

இதோ அவர் தோன்றிய சில கன்னட பாடல்கள்

[media]http://www.youtube.com/watch?v=1jcakqbeCQg[/media]

[media]http://www.youtube.com/watch?v=1qN5v66bhnU[/media]


[media]http://www.youtube.com/watch?v=yy_ffUCQ_Nc[/media]


[media]http://www.youtube.com/watch?v=sRaD0JYTcGQ[/media] ( ராஜ்குமாரின் கடைசிப் படம்)


சலங்கை ஒலி/சாகரசங்கமம் கமல் ஜெயப்பிரதா நடித்த மாபெரும் வெற்றிப்படம் .
இதில் ஜெயப்பிரதா அழகோ அழகு. இதோ இரண்டு அழகான பாடல்கள்

[media]http://www.youtube.com/watch?v=q6VCxXno848[/media]

[media]http://www.youtube.com/watch?v=wy4B9aao1a0[/media]


இவரது நடனத்திறமை புகழ்பெற்றது . இதோ சில சான்றுகள்

[media]http://www.youtube.com/watch?v=0A7H7l_Pt5o[/media]

[media]http://www.youtube.com/watch?v=tBlgBBezzaQ[/media] (சங்கராபரணம் ஹிந்தி வடிவம்)

[media]http://www.youtube.com/watch?v=vH5AT9Bb_Vw[/media]



மலையாளத்தில் சில நல்ல பாத்திரங்கள் செய்தார்
[media]http://www.youtube.com/watch?v=f3zzQ2xPT7I[/media]


எல்லா மொழிகளிலும் நல்ல திறமையான பாத்திரங்களை ஏற்று நடித்து அதனுடன் தன் நடனத்திறனையும் சேர்த்து ஒரு அழகான திறமையான நடிகை என பெயர் பெற்றார் என்றால் அது மிகையில்லை

குறிப்பாக ஹிந்தியில் அமிதாபச்சனுடன் மிகவும் பிரபலமான ஜோடியானார்

[media]http://www.youtube.com/watch?v=En5zUEFv9XQ[/media]


அதேபோல் ஜிதேந்திராவுடன் நிறைய படங்களில் நடித்தார்

[media]http://www.youtube.com/watch?v=0kXpHvMuKrM[/media]


பின் அரசியலில் நுழைந்து அங்கும் வெற்றி கண்டார்.

ஜெயப்பிரதா ஒரு மிகச்சிறந்த நடிகை மற்றும் அபாரமான நடனக்கலைஞரும் கூட
 
Last edited:
தென்னிந்திய அழகு மொத்தத்துக்கும் ஓர் உருவம் கொடுத்தால் = ஜெயப்ரதா.

இலட்சணங்கள் முழுதும் உள்ளவரிடம் நடனமும் நடிப்பும் சேர்ந்தால் =
அற்புதத் தாரகை..

அந்த சாதனை நட்சத்திர ஜொலிப்புகளில் சிறப்பானவற்றைச்
சிரத்தையுடன் கோர்த்துத் தந்த குருவுக்கு நன்றி!
 
சத்யஜித் ரே அவர்களால் "கிளாசிக்கல் பியூட்டி" என்று வர்ணிக்கப்பட்டவர் ஜெயப்பிரதா.

இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் இந்தி சினிமாவில் எட்டாத உச்சங்களை எட்டிப் பிடித்திருப்பார்..

ஜெயப்பிரதாவின் சொந்த வாழ்க்கை மர்மங்கள் மிக்கது..

அது சரி.... ஜெயப்பிரதா 14 வயசுக்குள்ளேயே கதாநாயகி ஆயிட்டாங்களா..? ஆச்சரியமா இருக்கே..!
 
இளசு;328888 said:
தென்னிந்திய அழகு மொத்தத்துக்கும் ஓர் உருவம் கொடுத்தால் = ஜெயப்ரதா.!

அண்ணாவின் வாக்கை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்..
எனக்கும் ஜெயப்ரதாவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்குமாக்கும்...:icon_rollout:

ராஜா;328901 said:
ஜெயப்பிரதாவின் சொந்த வாழ்க்கை மர்மங்கள் மிக்கது....!
அந்த மர்மம் உங்களுக்கு எப்படி அண்ணா தெரிஞ்சது...?
பூனை கண்டுபுடிச்சி கொடுத்ததா...?

இது கிசுகிசு பகுதிப்பா... எல்லாத்தையும் மர்மமாவே வச்சிருந்தா எப்படி... எனக்கு ஒரே மர்மமாவே இருக்குது போங்கோ...!!

இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் இந்தி சினிமாவில் எட்டாத உச்சங்களை எட்டிப் பிடித்திருப்பார்..


ஆமாம் அண்ணா... பாலிவுட்டை கலக்கிய தென்னிந்திய தேவதைகளில் எனக்கு தெரிந்து மூன்று பேர்..

1. ஹேமாமாலினி
2. ஜெயப்ரதா
3. ஸ்ரீதேவி

இதில் ஜெயப்ரதாவை பற்றி தெரிந்து கொண்டேன் இப்போது..
மற்ற இருவர் பற்றி எப்போது சொல்லுவாரோ நம்ப குரு அண்ணாச்சி..!!:wuerg019:
 
Last edited:
Back
Top