shivasevagan
New member
ஸ்நானம்
19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்நானஞ் செய்யத்தக்கது.
20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.
21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?
கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.