மெய்யுலக கூற்று

leomohan

New member
மெய்யுலகம்
கட்டுரை
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி


இந்த கட்டுரையில் நான் மெய்யுலகம், மாய உலகம், பொய் உலகம் பற்றி பேச விரும்புகிறேன். பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள் கொடுத்துள்ளேன். கட்டுரை சுவாரஸ்யமாக இருக்க படங்கள், அட்டவனைகள் மற்றும் பட்டியல் பிரயோகித்துள்ளேன்

நாம் நம்மை ஒரு கொடிய உலகில் காண்கிறோம். நம்மை சுற்றி உள்ள விஷயங்களின் விவரங்கள் அறிய விரும்புகிறோம். புரிந்துக் கொள்ள முயல்கிறோம். நம் அண்டத்தின் இயல்பு என்ன? நம்முடைய பங்கு என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் காணும் விஷயங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? - நேரத்தின் குறும் சரித்திரம் எனும் ஸ்டீவன் ஹாக்கிங் புத்தகத்திலிருந்து.

சில கேள்விகளும் சூழல்நிலைகளுடன் துவங்குவோம்:

சைவம் - இந்த உலகமே சைவமாக மாறிவிட்டால் என்ன நடக்கும். மக்கள் மற்ற உயிரினங்களை, இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொல்ல மறுத்தால்? விலங்குகளின் எண்ணிக்கை மக்களின் தொகையை கடக்கும். பிறகு அவற்றை கொல்ல வேண்டி வரும். நாம் உண்பதற்காக இல்லாவிட்டாலும் அவற்றின் தொகையை குறைக்க.

காடு அழிப்பு - நாம் காடுகளை ஆக்கரமிக்கின்றோம். மரங்களை வெட்டுகின்றோம். நாம் பல உயிர்களை கொல்கிறோம் அல்லவா. மரங்கள், விலங்குகள், பூச்சியினங்கள், தற்போது காட்டில் இருப்பவை, காடு அழிக்காமல் இருந்தால் எதிர்கால சந்ததி கொடுப்பவை அனைத்தும் அழிகின்றன. அப்படியென்றால் நாம் வீடுகள் கட்டக்கூடாது, கட்டிடங்கள் அமைக்கக்கூடாது, சாலைகள், தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. மீண்டும் காடுகளில் சென்று வாழவேண்டும், அல்லவா?

பூச்சிக் கொல்லிகள் - நாம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகிறோமே. வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட, வீடுகளில். இதை கொலை என்று சொல்ல முடியுமா? நாம் ஏன் தியானத்தின் மூலமும், பூஜைகளின் மூலமும் கோரிக்கை விடுத்து இந்த பூச்சிகளை தாமாகவே வீட்டிலிருந்து வெளியே செல்ல செய்யக்கூடாது. ஏன் கொல்கிறோம் இவற்றை.

பிராமணர் - ஒரு பிராமணர் கடல் கடந்து போனால் அவர் பிராமணர் இல்லை. அப்படியென்றால் தம்மை பிராமணர்களா சொல்லிக் கொள்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தம் தகுதியை இழந்து விடுகின்றனர். அப்படியென்றால் பெரிய மகான்கள், சாமியார்கள் இந்த தகுதியை இழுந்தவிட்டனர் அல்லவா. இந்த மகான்கள் சொசுகுசு பேருந்துகளில் செல்வதும், விமான பயணம் செய்வதும், 5 நட்சத்திர விடுதிகளில் தங்குவதும் வெளிநாட்டவர்களிடமிருந்து பல ஆயிரம் டாலர்களை காணிக்கையாக பெறுவதும் சரியா? இவர்கள் தம் கோட்பாடுகளை தம் கிராமத்தில் பரப்பி முதலில் வெற்றியடைய வேண்டாமா? எதற்கு நம் நாட்டிலேயே வெற்றி பெறாத ஒரு கோட்பாடை வெளிநாடுகளில் பரப்ப முயலவேண்டும்? பௌத மதம் இந்தியாவில் பரவில்லை. வெளிநாட்டில் கிழக்கில் பரவியது. ஆக கௌதமரால் தம் கொள்கையை தம் நாட்டில் பரப்பும் அளவுக்கு பேச்சு சக்தி இல்லாதவரா?

உடலின் ஆசைகள் - நம் காம உணர்ச்சிகளை கட்டுபடுத்தினால் சந்ததி பெருகாது. ஆகையால் மனித இனத்தின் வளர்ச்சி நிற்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் அழிந்துவிடும். வேதங்கள் போதிப்பவர்கள் அதை கேட்கும் மக்களே இல்லாவிட்டால் வேதம் என்னவாகும். காமம் கொள்ளக்கூடாது என்று சொல்லும் கருத்துக்களை என்னவென்பது.

மக்கள் வெறும் பழங்கள் காய்கறிகள் மட்டும் உண்டால் உணவு சம்பந்தப்பட்ட ஆயிரமாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். மக்கள் தம் வேலைகளை இழுந்துவிடுவார்கள். நாம் பொய்யுலகத்தின் ஆசிகளை பெற நம் கண் முன்னால் இருக்கும் மெய்யுலகத்தை அழிப்பது சரியா?

மற்ற ஆசைகள் - பெண்கள் பொன், வெள்ளி, வைர நகைகளுக்கு ஆசைப்படுவதை நிறுத்தினால் ஆண்கள் சம்பாதிப்பதை நிறுத்துவார்கள். பிறகு விவசாய தொழில் மட்டும் இருந்தால் போதும்.

மனிதர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி, ஆத்மாவை சுத்தப்படுத்த துவங்கினால், ஆசைகள் விடுப்பார்கள். வேலையும் தேவையில்லை. அதிகம் சம்பாதிக்கவும் தேவையில்லை. கடவுள் முன்னே அமர்ந்திருக்கலாம். இல்லை குருமார்களின் முன் அமர்ந்திருக்கலாம். பிறகு காடுகளுக்கு செல்லலாம். பழ வகைகளை பூசிக்கலாம். நாம் மீண்டும் காட்டு மனிதனாக மாறிவிட்டோமோ? பிறகு நாம் நம்மை மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள மரங்களை வெட்டி ஆயுதங்கள் படைப்போம். விரைவாக செல்லும் மிருகங்களை விரட்ட வாகனங்கள் உருவாக்குவோம். அப்படியென்றால் இன்றைய நிலை அடைய மீண்டும் ஒரு பெரிய சக்கரத்தை கடந்து வருவோம். இன்றைய நிலையை மீண்டும் அடைய எதற்கு இத்தனை சிரமம்? நாம் இன்றில் இருக்கிறோமே இப்போதே?

நாம் இங்கு சட்டங்களை அமைக்கவோ கோட்பாடுகளை நிர்ணயம் செய்யவோ இல்லை. நாம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை.

சில சமயம் எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டறிய நினைப்பது சாத்தியம் இல்லை. நமக்கு விடை தெரியாதவைகளுக்கு ஒரு பெரும் சக்தி தான் காரணம் என்று சொல்ல வேண்டியதில்லை.

அந்த பெரும் சக்தியை வணங்கி வ்ழிபட தேவையில்லை. அதை சுற்றி சடங்குகள் உருவாக்க தேவையில்லை. கடவுள் உயிருள்ள ஒன்று என்றால், உங்கள் கோரிக்கை கேட்கும் என்றால், அந்த கடவுளுக்கு இறப்பும் உண்டு இல்லையா.

நாம் எப்படி கடவுளை மட்டும் பிறப்பு-இறப்பு சக்கிரத்திலிருந்து வெளியேற்றுகிறோம்.

சில விஷயங்களை ஏற்போம்.

1. ஆண்கள் காமம், பலம், அங்கீகாரம், பணம் இவைகளை விரும்புவர்.

2. பெண் காமம், நகை, அலங்காரம், சமூக அந்தஸ்து, பணம் இவைகளை விரும்புவர்.

3. இந்த விருப்பங்கள் தான் உலகத்தின் பொருளாதாரத்தை இயக்குகின்றன.

4. மனிதன் அவன் விரும்பியதை உண்ணலாம்.

5. மனிதன் அவன் விரும்பியதை செய்யலாம்

6. இந்த சக்தரத்தில் மனிதன் அமைதியில்லாமல் இருக்கிறான்

7. சமுதாயம் நிலை, நிலையற்ற, சமநிலையில்லாத தன்மை கொண்டது. இது தான் சரி, இது தான் தவறு என்றில்லை.

ஒவ்வொருவருடைய பார்வைக்கு ஏற்றவாறு சரி-தவறு மாறுகிறது.

ஒரு வரைமுறை இருக்கிறது. வரைமுறையும் இல்லை. இது ஒரு வரைமுறையில் செல்லும் குழப்பம் Organized Chaos எனலாம். ஆனால் வரைமுறை உண்டு. சரியில்லாமல் இருக்கலாம். மேன்பாடுகள், திருத்தங்கள் தேவைப்படலாம். ஆனால், இதை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய சமுதாய கட்டுபாட்டை அமைக்க முடியுமா?

தொடரும்...........
 
சில விஷயங்கள் நாம் அறிய வேண்டும்:

1. காமம், பலம், அங்கீகாரம், செல்வம் இவற்றை விரும்பாத ஆண் சராசரியானவன் அல்ல.

2. காமம், நகை, அலங்காரம், சமூக அந்தஸ்து, செல்வம் இவற்றை விரும்பாத பெண் சராசரி பெண் அல்ல.

3. இந்த கோட்டிலிருந்து விலகும் எவரும் பொருளாதாரத்தையும் உலக இயக்கத்தையும் நிலை குலையச் செய்பவர்கள்.

4. மனித-விலங்கு சமநிலை வேண்டாமானாலும் அசைவம் உண்பவர்கள் அவசியம்.

5. சமூகம், சட்டம், திட்டம் மனிதனால் தன்னால் இயன்றவைகளை கட்டுபடுத்த அமைக்கப்பட்டதே. இதை விரிவாக பேசலாம்.

6. அமைதியில்லாதவற்றை குறைக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் பதட்டம், பாதுகாப்பின்மை, பேராசை, பொறாமை இவை தன்னிலை அறியும் மூலம், அல்லது சுய ஆய்வு மூலமே சரியாக்கபடவேண்டும். இதற்காக நாம் அறியாத ஒன்றின் மேல் தொற்றிக் கொள்ளக்கூடாது.

வெட்டுண்டு இருக்கும் வியூகங்களிருந்து பொது நிலை கண்டறிய வேண்டியதை மெய்யுலகத்தின் பழக்க-வழக்கங்கள் எனும் தலைபில் பின்னால் பேசலாம்.

நாம் என்ன எதிர்பார்க்கலாம்:

1. ஆணின் காம, பல, அங்கீகார, செல்வம் சேர்க்கும் முயற்சிகள் நேர்மையான வழியில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம். எது நேர்மை என்பதும் கருத்து மாறுபடலாம். அதனால், நேர்மை இங்கு - மற்றவரை பாதிக்காமல் என்று கொள்ள வேண்டும்.

2. பெண் அடைய விரும்புவதை நேர்மையாக அடைய விரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

3. மக்கள் சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, விட்டு கொடுத்தல், மற்றவர்கள் சொல்வதை கேட்கும் குணம், மற்றவர்களின் கருத்தை ஏற்கும் விதம், ஏற்காவிட்டாலும் அதை துவேசமாக மாற்றாத விதம் போன்ற குணங்கள் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் சகோதரத்துவம், அன்பு, வாழு-வாழு விடு எனும் கட்டமைப்பில் வாழ வேண்டும் என ஆசைப்படலாம்.

அமைதி சூழல் அமைக்க உத்தி

மதங்களுக்கு இடையே கோட்பாட்டில் வித்தியாசங்கள். கடவுள் எப்படி என்பதில் குழப்பங்கள். அவனை எப்படி சென்றடைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள்.

மனிதர்கள் அனைவரும் சமமாகிவிட்டால் உலகத்தில் இயக்கங்கள் நின்றுவிடும் அதீத அமைதி உருவாகிவிடும். இது சாத்தியம் அல்லவே.

இந்த சமமற்ற நிலையில் அமைதி காண்பது எவ்வாறு.

ஒரு பிறந்த குழந்தை கைகால் ஊனமாக பிறந்தால் பூர்வ ஜென்ம பாவம் என்கிறோம். அவன் முற்பிறவியில் செய்த பலனுக்கு இறைவனின் தண்டனை என்கிறோம். ஆனால், அந்த குழந்தையை எண்ணி அவன் பெற்றோர்கள் காலம் முழுவதும் கஷ்டப்படவேண்டும். அந்த குழந்தை முற்பிறவியில் செய்த பாவத்திற்கு அவனுடைய பெற்றோர்களை தண்டிப்பது சரியா?

சரி அவன் பெற்றோர்களும் முற்பிறவியில் பாவம் செய்ததாக கொள்வோம். அப்படியென்றால் மனிதனுடைய தன்னுடைய சுய விருப்பத்தில் நல்லது கெட்டது செய்யலாம் என்பது ஊர்ஜிதமாகிறது. அவனால் புண்ணியம் செய்ய முடியும், பாவம் செய்ய முடியும் அல்லவா?

அவன் நல்லது செய்தால் அடுத்த பிறவியில் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் அடுத்த பிறவியில் ஊனத்தோடு பிறப்பான். அல்லவா?

இது மனிதன் தன் விருப்பப்படி காரியங்கள் செய்வான் என்றும் அதனால் அதன் பலனை அவன் அனுபவிப்பான் என்றும் ருசுவாகிறது.

இதனால், பிரம்மனின் ? உருவாக்கும் கடவுளின் பணி இல்லாமல் போய்விடுகிறது. விதி எனும் கூற்றையும் முழுங்கிவிடுகிறது.

ஏனென்றால் ஒருவனின் சாவு இன்னொருவன் கையால் எனும் விதியை பிரம்மன் நிர்ணயித்தால் அந்த கொல்பவனுக்கு பாவங்கள் போய் சேரக்கூடாது. ஏனென்றால் அவன் விதிப்படி தான் இந்த கொலையை செய்தான். அவன் சுய விருப்பம் இல்லை இதில். அல்லவா?

சுலபமான இரு கேள்விகள்-

1. நாம் விரும்பியதை செய்து அதனால் வரும் சங்கடங்களை சந்திக்கும் சுய விருப்ப மனிதர்களா அல்லது

2. இறைவன் கையில் வெறும் பொம்மலாட்ட பொம்மைகளா

ஏனென்றால் இது இரண்டும் இருக்க முடியாது. ஏனென்றால் திடமான மனிதர் தன் சுயவிருப்பத்தின் மூலம் விதியை வெல்லலாம்.

அப்படியில்லை என்றால், பொம்மாலாட்ட மனிதன் தன் திடத்தை கொண்டு சுய விருப்புடன் என்ன செய்தாலும் விதிக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. இதில் எது சரி?

மெய்யுலகில் இந்த எல்லா கூற்றும் நிராகரிக்கப்படுகின்றன. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் நிர்ணயிப்பது இல்லை. நீங்கள் தான் நீங்கள் செய்யும் செயல்களுக்கு பொறுப்பானவர். இதில் சில புரியாத விஷயங்களுக்கு விடை தேவை. அவசியம்.

உங்களுடைய கட்டுபாட்டில் இல்லாத விஷயங்களை கடவுளின் செயல் அல்லது விதி என்று கண்மூடித்தனமாக ஏற்பது முட்டாள்தனம்.

நீங்கள் 30 நிமிடத்தில் ஒரு இடம் சென்று அடைய வேண்டும். சரியாக கணக்கிட்டு செல்கிறீர்கள். ஆனால் அரசியல் கட்சி மரங்களை வெட்டி சாலையில் போடுகின்றனர். நீங்கள் தாமதமாகிறீர்கள். இது உங்களுடைய Free Will or Fate, அந்த அரசியல்வாதிகளின் Free Will or Fate?

தொடரும் ..............
 
மோகன்,

பலர் மனங்களில் அருவமாய் புகையாய் உலவும் கேள்விகளுக்கு
எழுத்துருவம் அளித்தமைக்கு முதல் பாராட்டு.

ஆழமான சிந்தனைகளை எதிர்-எதிராய் நின்று யோசித்து எழுதும்
மன வளமைக்கு இரண்டாம் பாராட்டு.

சொல்லப்பட்ட கருத்துகள் ஒரு அறுந்த சங்கிலியின் கணுக்களாய் அவ்வப்போது என் மனக் கழுத்தை வருடி/இறுக்கியவையே...

இந்த மாத தீராநதியில் இருண்மை தலைப்பில் வந்த கட்டுரை வாசியுங்களேன்...


மேலும் பேசலாம்...
 
மோகன்,

பலர் மனங்களில் அருவமாய் புகையாய் உலவும் கேள்விகளுக்கு
எழுத்துருவம் அளித்தமைக்கு முதல் பாராட்டு.

ஆழமான சிந்தனைகளை எதிர்-எதிராய் நின்று யோசித்து எழுதும்
மன வளமைக்கு இரண்டாம் பாராட்டு.

சொல்லப்பட்ட கருத்துகள் ஒரு அறுந்த சங்கிலியின் கணுக்களாய் அவ்வப்போது என் மனக் கழுத்தை வருடி/இறுக்கியவையே...

இந்த மாத தீராநதியில் இருண்மை தலைப்பில் வந்த கட்டுரை வாசியுங்களேன்...


மேலும் பேசலாம்...

நன்றி இளசு. Your encouragement is infectious and it catches-up fast, thanks
 
மோகன்,

பலர் மனங்களில் அருவமாய் புகையாய் உலவும் கேள்விகளுக்கு
எழுத்துருவம் அளித்தமைக்கு முதல் பாராட்டு.

ஆழமான சிந்தனைகளை எதிர்-எதிராய் நின்று யோசித்து எழுதும்
மன வளமைக்கு இரண்டாம் பாராட்டு.

சொல்லப்பட்ட கருத்துகள் ஒரு அறுந்த சங்கிலியின் கணுக்களாய் அவ்வப்போது என் மனக் கழுத்தை வருடி/இறுக்கியவையே...

இந்த மாத தீராநதியில் இருண்மை தலைப்பில் வந்த கட்டுரை வாசியுங்களேன்...


மேலும் பேசலாம்...

மன்னிக்க வேண்டும். தேடுதல் வசதி இல்லாததால் கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது. தீராநதியின் இருண்மை கட்டுரைக்கு தொடுப்பு தாருங்களேன். நன்றி.
 
பல வேறு மதங்களை பின்பற்றுபவர்களிலும் ஏழை பணக்காரர்கள் உண்டு. புத்திசாலி முட்டாள் உண்டு. நல்லவை கெட்டவை உண்டு. குண்டு ஒல்லி மக்கள் உண்டு. உயரம், குட்டை, பலசாலி, பலமற்றவன், துக்கம் நிறைந்தவன், மகிழ்ச்சியானவன் இப்படி உண்டு. ஆக எந்த ஒரு மதமும் தன் மதத்தை பின்பற்றினால் வாழ்கை சந்தோஷமயமாகிவிடும் என்று மார் தட்டிக் கொள்ளமுடியாது. எந்த ஒரு மதம், சமயம், கோட்பாடு மனிதர்களை 100 சதவீதம் மகிழ்ச்சிப்படுத்த முடியாத போது எந்த மதத்தை பின்பற்றுகிறோம் என்பது முக்கியமற்ற ஒன்றாகிவிடுகிறது.

மனிதன் ஆசைப்படுவதை நிறத்தக்கூடாது. அவன் ஆசைப்படுவதை நிறத்தினால் உலகம் முடிவுக்கு வந்துவிடும். அவன் எதைக் கொண்டு திருப்தி அடைய கூடாது. அவன் திருப்தி அடைந்தால் அவன் மெய்யுலகத்தை விட்டு விலகுகிறான். ஆனால் அவனுடைய அதிப்தியின்மை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அவனுடைய பேரைசை திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பிறர்வாழ்வில் தொல்லைகள் விளைவிக்க கூடாது.

ஆனால், மனிதன் இந்த மெய்யுலகத்தில் தன் மன அமைதிக்கு பிற மனிதனை நாடக்கூடாது. ஏனென்றால் இது இயற்கைக்கு ஒவ்வாதது. நான் குருமார்களை, சாதுக்களை, சாமியார்களை வெறுக்கவில்லை. ஒதுக்க வில்லை. ஆனால், அவர்கள் அந்த அளவு ஞானம் பெற்றவர்கள் என்பது நிர்ணயிப்பது யார். ஒரு மாணவன் ஒரு வாத்தியாரை நல்ல வாத்தியார் என்று சொன்னால் எப்படி. ஒரு குருமாரை ஒரு பின்பற்றும் மனிதன் ஞானம் உள்ளவர் என்று சொன்னால் எப்படி.

அவர்கள் உலகத்தின் அறியாதவைகளுக்கான விடைகள் கண்டவர்களா.

உலகத்தின் அறியாதவைகளை நம் கண்முன் வெளிக்கொண்டு வரும் புத்தகங்களை படித்திருக்கிறேன். அதற்கு பின் என்ன நடக்கிறது. எழுதுபவர்கள் இன்னும் 1000 கேளிவ்கள் நம்மை கேட்கின்றனர். பல கதைகளும் கூறுகின்றனர். கதைகள் மூலம் விஷயங்கள் புரிய வைக்கிறேன் என்று ஒப்பு கட்டுகின்றனர்.

நம் கேள்விகளுக்கு பதிலாக இன்னும் கேள்விகள். புத்திசாலி ஒருவர் தன் வார்த்தை ஜாலங்களால விளையாடி நமக்கு தெரியாத விஷயங்களை புரிய வைப்பதாக சொல்லி முடிந்த பிறகு நம்மை அதே குழப்பத்தில் விட்டுவிடுகின்றனர். ஆனால், நமக்கோ அனைத்தும் சற்று நேரத்தில் புரிந்துவிட்டதாக ஒர சந்தோஷம்.
பெரிய பாஷணைகளை கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் அதே இருட்டு. குருடன் குருடனுக்கு வழிகாட்டும் முயற்சி. நீங்கள் குருடர் அல்லவே. உங்களுக்கு எதுக்கு இன்னொருவரின் துணை. பதில்களை நீங்களே தேடுங்கள். எதுக்கு ஊன்று கோல். நீங்கள் உங்கள் வாழ் நாள் முழுவதும் விடை தேடுவதில் கழித்துவிடலாம் ஆனால் பிறர் உங்களை தவறான பாதையில் வழிநடத்தாத திருப்தி பிறக்கும். நீங்கள் உங்கள் இளமையை, பணத்தை, உழைப்பை அணு அளவு அறிவில்லாத மனிதர்-தாம் எல்லாம் அறிந்தவராக சொல்லிக் கொள்பவர்களுக்கு பின்னால் சென்று செலவழிக்காமல் இருந்தீர்களே என்று சந்தோஷம் கொள்ளலாம்.

ஆனால் இந்த தேடல்கள் உங்களை மெய்யுலகத்தை விட்டு விலகி செல்ல செய்யக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் விடை தேடுவது உங்கள் உரிமைக்குள் இருக்கிறது. தேடுங்கள் கடவுள் என்றால் என்ன, சாத்தான் எது, பொய்யுலக, மாய உலகம் என்று ஆனால் இன்றில் இருந்தவாறு, இன்றில் இருந்துக் கொண்டு, மெய்யுலகத்தை விட்டுச் செல்லாமல். இந்த தேடலில் ஏதாவது தவறு நேர்ந்தாலும் நீங்கள் அசாதரணமானவராக மெய்யுலகத்தில் இல்லாதவராக கருதப்படுவீர்கள்.

நாம் இதுவரை பேசியவை நம்மை மெய்யுலக கூற்றுக்கு எடுத்து செல்கிறது. நிறைய பெரியவர்கள், எழுத்தாளர்கள், ஞானிகள் இந்த தலைப்பை பற்றி பேசியிருக்கலாம். இது என் பாணியில் எழுதியது. அவ்வளவுதான்.

நாம் இருப்பது மெய்யுலகத்தில்.

நாம் பார்ப்பது, உணர்வது, அறிவது நேரிடியாக. வலி, துக்கம், மகிழ்ச்சி, பரிதாபம், பொறாமை, பேராசை, மக்கள், மரம், நெருப்பு, காற்று, நீர், ஒளி மற்றும் பூமி. இவை மெய்யுலகம். இது உண்மை. இது தான் சத்தியம். ஆனால் மேதைகள், ஞானிகள், புத்திசாலிகள், மகான்கள் இவை மாயை என்றும் பொய் என்றும் நம்மை நம்பவைக்க ஏனோ துடிக்கிறார்கள். இந்த மாயத்தில் இருப்பவர்கள் அவர்கள்தானே ஒழிய நாம் இல்லை.

image005.gif

படம் 1 - மக்களும் உலகங்களும்

பொய்யுலகம் நம்பும் பரப்பும் மக்கள், மாய உலகம் பரப்பும் மக்கள், மெய்யுலம் பரப்பும் மக்கள்.
 
இரண்டாவதாக மாய உலகம், அல்லது மெய்யுலகம் போல் தோன்றும் உலகம் ஆனால் மெய்யுலகம் இல்லாத உலகம்.

சாதுக்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள், கண்கட்டி வித்தை செய்பவர்கள் இவர்கள் செய்பவற்றை விஞ்ஞானம் விளக்க முடியாமல் இருக்கலாம், அல்லது சாதாரணனின் அறிவுக்கு அப்பால் இருக்கலாம்.

இது சிலருக்கு வரையறுக்கப்பட்டவை, மற்றவர்களுக்கு வரையறுக்கப்படாதவை. சிலருக்கு அறிந்தவை, மற்றவருக்கு அறியாதவை. சிலருக்கு இவை சுலபம் மற்றவர்களுக்கு கடினம். 40 சதவீதம் மக்கள் சாதாரண மக்களை இந்த மாய உலகத்திற்கு தம் சொந்த லாபத்திற்காக இழுக்க முயலுகின்றனர். இது ஒரு சதிகார கும்பல். நல்ல படியாக திட்டமிட்டு சரிவர இயக்கப்படும் திட்டங்கள். சாதாரணன் தான் இவர்களின் இரை.

இந்த மக்களக்கு செல்வம், வெற்றி, மகிழ்ச்சி, சொர்க்கத்தில் இடம் இவையல்லாம் தான் புழுக்களாக வைத்து தூண்டில் மூலம் இழுக்கும் மீன்பிடிப்பவர்களே மேலே சொன்ன சதிகார கும்பல்.
image009.gif


படம் 2 - பொது மக்களை மெய்யுலகத்தில் இழுக்கும் முயற்சியில் 25 சதவீதம் முயல பெரும்பான்மை அவர்களை மெய்யுலகத்தை விட்டு இழுக்க முயலுகின்றன.
 
பொய்யுலகம் என்று இவ்வுலகத்தை சொல்லி இல்லாததை தேட உதவும் மகான்கள். ஆனால், இவ்வுலகம் பொய்யுலகம் இல்லை. அவர்கள் சொல்வது தான் பொய்.

மோட்சம், ஆத்மா, தியானம், முக்தி, மறுபிறவி, கர்மம், யோகம், யோகா என்று பல வார்த்தைகள் தெளிவானவை அல்ல. ஆனால், அனைவரும் இவை தெளிவாக வரையறுக்கப்பட்டதாக, பொருளுடையவைகளாக கூறுகின்றனர்.

இந்த வார்த்தைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல்வேறு பொருட்களை தாங்கி நிற்கும், பிரயோகம் செய்யும் பலரால், பல்வேறு வகைகளில் பேசப்படும். சுருங்கச் சொன்னால் நாம் இவற்றை கண்டதில்லை, உணர்ந்ததில்லை, உணரப்போவதும் இல்லை, நம் இயல்பு நிலையில். நாம் இயல்பு நிலையில் உணரமுடியாத எவற்றையும் தள்ளி வைப்பது சரிதானே.


வெறும் 10 சதவீத சிந்தனையாளர்கள் தான் வேறு பாதையில், பொது மக்களை இந்த பொய்யுலகத்தில் இருந்து மீட்க வருகின்றனர். புத்தகம் எழுதியோ, ஒரு மேடை பேச்சு கொடுத்தோ, பொது மக்களை பொய்யுலகம் மற்றும் மாய உலகம் இவற்றிலிருந்து மீட்க வருகிறார்கள். அவர்கள் கூட்டத்திலிருந்து தனியாக நிற்க விரும்புவர்கள். அவர்கள் நம்மை மெய்யுலகத்திற்கு அழைத்து செல்ல விரும்புவர்கள்.


இவர்கள் சிறுபான்மை தான். விஞ்ஞானம் முன்னேற சாதாரணன் தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்கிறான். இந்த விழிப்பு ஏற்படும் முன் அவன் முழுமையாக ஏமாந்தும் விடுகிறான். அவன் எப்போது விழிப்படைகிறான் என்பதை இந்த கட்டுரையில் பேசி பிரயோஜனம் இல்லை. ஆனால், உண்மை எது, பொய் எது என்று பேசலாம்.

இந்த கட்டுரையில் குருட்டு நம்பிக்கைகளை விட்டு விவரிக்க வேண்டும். நாம் ஏதாவது ஒரு மதத்திலோ, மறையிலோ, கடவுளின் மீதோ விளக்கம் இல்லா நம்பிக்கை வைத்திருந்தோமானால், இந்த கட்டுரையை படிப்பது வீண். இந்த கட்டுரை புது மறையை படித்து, அலச தயாராக இருக்கும் மன பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டும் தான்.

மூடிய மனதை திறந்து படிக்க முயலுபவர்களுக்கு மட்டும் தான்.

இறைவன் இருக்கிறானோ இல்லையோ அவனைத்தான் நம்புவேன் என்று சொல்பவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள். நீங்கள் விடை பெறலாம்.

பொய்யுலகத்தை விட்டு வெளியேற இந்த கட்டுரை உதவும் என்று இருந்தால் கூட, பொய்மையில் இருந்துக் கொண்டு இதை படிப்பதும் வீண் தான்.

இந்த உலகங்களை விட்டு தெளிந்த பார்வையுடன் படியுங்கள்.

மேலும் புதிய விஷயங்களை ஏற்கும் பொறுமையும் தேவை.

ஏனென்றால் மாய-பொய் உலகத்தில் சிக்க தவிக்கும் நீங்கள் இன்னமும் சாதாரணனை பாதித்து கொண்டு இருக்கிறீர்கள்.

உலகத்தை மூன்றாக பிரிப்போம்


1. மெய்யுலகம்


2. மாய உலகம்


3. பொய்யுலகம்

சில கேள்விக் கனைகளை சந்திப்போம், ஆனால் காற்றில் அல்ல. சில புள்ளிவிவரங்களுடன். சிந்தனைக்கு பஞ்சம் உண்டு.

மக்கள் பிரம்மாண்டாமாய் இருப்பதையும் அதிசயமாக இருப்பதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.

பல விஷயங்களில் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்.

சில விஷயங்களில் கேள்வி கேட்பதையே பாவமாக நினைக்கிறார்கள்.


1. கோடான கோடி லிட்டர் பசும்பால் கல் கடவுளர் மீது, இல்லாத-நாம் உணராத, ஆனால் இருப்பதாக நம்பும் சிலைகள் மீது அந்த இறைவனை மகிழ்விக்க ஊற்றப்படுவதை தினமும் அறிவோம். ஆனால், ஒரு வேளை கூட உணவில்லாமல் இருக்கும் மனிதர்களை மறக்கிறோம்.


2. ஆயிரமாயிரம் பழங்கள், தேன், நெய், தயிர், அரிசி, கோதுமை இந்த கடவுளர்மீது தினமும் கொட்டப்படுகின்றன ? பட்டனிச் சாவும் நம் நாட்டில் உண்டு.


3. நாம் உண்டியலில் போடும் காசுகள் கடவுளக்கு போய் சேருகிறதா இல்லை சில தனியார்களின் வங்கி கணக்கை அதிகரிக்கிறதா.


4. இன்று இருக்கும் ஏதாவது ஒரு சாது, மகான், சாமியாரை, புராணத்தில் நாம் கேட்டது போல காடுகளில் பல மாதங்கள் தவம் செய்யச் சொன்னால் செய்வார்களா.


5. இன்று புது உலக குருமார்கள் தரையில் படுக்கச் சொன்னால், கால்களில் செருப்பில்லாமல் ஊரைச் சுற்ற சொன்னால், வெறும் பால் பழம் மட்டும் பூசிக்க சொன்னால், குளிர்சாதன வசதியில்லாத வாகனங்களில் வரச் சொன்னால் அவர்களால் முடியுமா.


6. நாம் சடங்குகளில் செலவிடும் ஆயிரமாயிரம் ரூபாய் பல ஆயிரம் அநாதை குழந்தைகள், குருட்டு,மூடமான குழந்தைகள், சுனாமி, பூகம்பத்தினால் அவதிப்படும் பிள்ளைகளுக்கு உதவும் என்பதை நாம் உணரவில்லையா


7. எத்தனை கோவில்களின் கூரைகள் தங்கத்தால் வேயப்பட்டுள்ளன, இதே நாட்டில் கூரையே இல்லாத வீடுகள் எத்தனை என்பதை உணர்கிறீர்களா.


8. வீடுகள் இல்லாதவர் எத்தனை என்ற புள்ளி விவரம் அறிவீர்களா.


9. ஒரு எழைக்கு உணவு அளித்து அவன் கண்களில் தோன்றும் மகிழ்ச்சியை நீங்கள் கண்டதுண்டா.


மெய்யுலகம் மற்றும் அதில் நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள்
  • உடல் நலம்
  • செல்வம்
  • சுகம்
  • துக்கம்
  • வலி
  • பேராசை
  • பொறாமை
  • பாதுகாப்பின்மை
  • பதட்டம்
மாய உலகம் மற்றும் அதில் பிரயோகிக்கும் வார்த்தைகள்
  • கடவுளை அடைய வழி
  • ஆன்மீகம்
  • தியானம்
  • யோகா ? உடல் பயிற்சி அல்ல, மனப்பயிற்சி
  • மந்திரம்
  • தந்திரம்
  • சடங்கு
  • பரிகாரம் ? பாவத்தை குறைக்க அல்லது விடுபட
  • மனகஷ்டங்களை குறைக்க குருமார்களின் ஆலோசனை
பொய்யுலகம் மற்றும் அதில் பிரயோகிக்கும் வார்த்தைகள்
  • சொர்க்கம்
  • நரகம்
  • முக்தி
  • மறுபிறவி
  • கடவுளை அடைவது
  • சாத்தான்
  • தேவதைகள்
  • பாவம்
  • புன்னியம்
  • அவதாரம்
தொடரும்.....
 
மனிதர்களை மூன்று வகையாக இந்த மெய்யுலகத்தில் பிரிக்கலாம்.

முதல் வகை

மனிதன் மனதிருப்தி இல்லாமல் இருக்கிறான். போதும் என்ற மனமில்லை. ஆனால் தன்னுடைய அதிருப்தியை நல்ல வழிகளில் செலுத்தி, அதாவது பட்டமோ, பட்டயமோ பெற்று, கடினமாக நேர்வழியில் பிறரை பாதிக்காமல் உழைத்து தன் ஆசைகளை அடைய விரும்புகிறான். சொத்து சுகங்களை பெற விழைகிறான்.

இம்மாதிரி மனிதர் நல்லவர். சமுதாயத்திற்கும் நல்லவர்.

இரண்டாம் வகை

மனிதன் மனதிருப்தி இல்லாமல் இருக்கிறான். போதும் என்ற மனமில்லை. ஆனால் தன்னுடைய அதிருப்தியை கெட்ட வழிகளில் செலுத்தி பெண், அதிகாரம், பலம், பணம் பெற முயல்கிறான். லஞ்ச லாவண்யங்களை கையாள்கிறான்.

இம்மாதிரி மனிதர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் தான். சமுதாயத்திற்கு இவர்களால் நல்லது இல்லையென்றால், இவர்களை முதல் வகை மனிதராக மாற்ற முயலலாம்.

மூன்றாவது வகை

இந்த வகை மனிதர் திருப்தியுடன் இருக்கிறார்.
ஆசைப்படுவதை நிறுத்திவிடுகிறார். இவர் இருக்கும் போதும் இறந்த நிலையை அடைந்துவிடுகிறார். விருப்பு வெறுப்பு அற்றுவிடுகிறார். இவர் மெய்யுலகத்தை விட்டு விலகி செல்கிறார். இவர் பொய்யுலகத்தை தேடி செல்கிறார். அதில் சொல்லப்பட்ட புரியாத, விளங்காதவைகளுக்கு விளக்கம் தேடி அலைகிறார்.

இம்மாதிரி மனிதர்களை கவனமாக பார்க்கவேண்டும். இவர்களால் மெய்யுலகிற்கு எந்த பயனும் இல்லை. இவர்களை முதல் வகை அல்லது இரண்டாவது வகை மனிதராக மாற்ற முயலவேண்டும்.

மனிதர் சில விஷயங்களை உண்மையில் உணரவேண்டும் ? அதாவது அவர் என்ன தான் முயற்சி செய்தாலும் இவ்வுலகத்தில் இருக்கும் அறியாதவைகளை அவற்றின் விளக்கங்களை அவர் அறிய முடியாது என்று. எங்காவது ஒரு இடத்தில் அவர் நிறுத்த வேண்டும். நீங்கள் கேள்விகளுக்கு பதிலை தேட முயலலாம். ஆனால், பதில் கிடைக்கும் என்று நிச்சயம் இல்லை. கட்டாயமும் இல்லை.

பணம், மனை, மனைவி எதுவாக இருந்தாலும் மனிதர் முற்றிலும் சந்தோஷமாக இருப்பதில்லை. மனிதர் ஏதோ ஒரு பைத்தியக்கார தேடலில் இருக்கிறார். பல சமயம் அவர் என்ன தேடுகிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. ஆனால் ஓடிக் கொண்டே இருக்கிறார். தேடிக் கொண்டே இருக்கிறார். காலையில் எழுந்து பேருந்து நிறுத்தத்தில் பார்த்தால் தெரியும். ஓட்டம். ஓட்டம். ஓட்டம்.

யாருக்காக, எங்கே, எதற்கு, எப்படி, எதனால். எத்தனை நாள். யாரும் அறியார்.
 
முதல் வகை மனிதர்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக, தலைவர்களாக மாறிவிடுகிறார்கள், இரண்டாவது வகை மனிதர் சிறையில் சென்று அடைய, மூன்றாவது வகை மனிதர் இங்கும் இல்லாமல் அங்குமில்லாமல் நடுவில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் கடவுளாகவும் ஆவதில்லை, சராசரி மனிதர்களாகவும் இருக்க முடிவதில்லை.

எந்த ஒரு மதமும் முற்றிலும் சரியானதாக நிரூபனமாகவில்லை. ஆனாலும் மதங்கள் இன்னும் உருவாகின்றன. மதபிரிவுகள் உருவாகின்றன. இந்த இடைப்பட்ட நிலையில் குருமார்கள், சாதுக்கள், மது தலைவர்கள், பூஜாரிகள், கடவுளின் மைந்தர்கள், சில சமயம் தன்னையே கடவுள் எனும் சொல்லிக் கொள்பவர்களும் உருவாகின்றார்கள். இந்த அமைதியற்ற மனிதர்களின் நடுவில் புகுந்து அவர்களை துவம்சம் செய்கின்றனர் இந்த போலிகள்.

The area test influence on the mind is the way we live. Tension created by just living in the twentieth century is the greatest cause of ill health, and not many doctors realize this. We may be given a pill to ease the tension, but this does nothing to attack the cause of the tension and so the disease grows.
Around our bodies we have channels called meridians through which energy flows, something like the vessels through which the blood flows. All eastern philosophies of health talk of such a flow The Indians talk of prana, the Japanese call it ki, the Chinese call it ch?i, we call it electricity or life-force. The fact that it exists is not the question for most western scientists now know of such a force. What is not known is how to keep a plentiful supply and how to keep the channels open.
What is needed is some way to train the mind not to allow tension to affect us. Whether the tension is psychological or physical it has the same effect on the body?s energy. If the body?s energy flow is interrupted or slowed down our natural healing systems are unable to cope with normal external attacks. --- From Chinese Self Healing Methods for Health

மனிதனுக்கு என்ன வேண்டும்?

வாருங்கள் உங்களை மெய்யுலகத்திற்கு அழைத்து செல்கிறேன். சமுதயாத்திற்கு பங்களியுங்கள். உங்கள் அருகிலுள்ள மக்களுக்கு உதவுங்கள். ஏழைகளுக்கு ஆதரவு தாருங்கள்.

தேவைப்படுவோர்களுக்கு முன்னே சென்று நில்லுங்கள். உங்கள் மனம் அமைதி பெறும். இந்த அமைதியை தேடி நீங்கள் யாருடைய உரைகளை கேட்க செல்லவேண்டாம். பரிகாரம் எனும் பெயரில் பல ஆயிரம் ஸ்வாகா செய்யவேண்டாம்.

மறுபிறவிக்காக ஏங்கவேண்டாம் பரிகாரம் செய்ய. உலகத்தின் கடைசி நாளுக்காகவும் பயப்படவேண்டாம். ஒரு மனிதரை சந்தோஷப்படுத்துங்கள் இன்று, பிறகு பாருங்கள் உங்கள் அருகில் இருக்கும் உலகம் எப்படி மாறுகிறது என்று.

மெய்யுலகத்தை பாருங்கள். எத்தனை அழகாக இருக்கிறது. பலவிஷயங்கள் சரியில்லை தான். சமமில்லை தான். அதனால் தான் இது இன்னும் அழகாக இருக்கிறது. நேரான சாலைகளா மகிழ்ச்சி. அந்த வளைந்து நெளிந்து செல்லும் சாலையின் அழகே அழகல்லவா. மிகவும் சரியானவை எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சி தராது. சில சரியில்லாதவைகள், சில ஆச்சர்யங்கள், சில எதிர்பாராத விஷயங்கள், சில புதுமைகள், கொஞ்சம் கோபங்கள், கொஞ்சம் தாபங்கள், ஏக்கங்கள், துன்பங்கள் அதன் பிறகு வரும் இன்பங்கள், தோல்விகள், அதனால் வரும் வருத்தங்கள், அதன் பிறகு வரும் வெற்றிகள், அவை தரும் சந்தோஷங்கள். பாருங்கள். தினமும் 8 மணிக்கு சரியாக வேலைக்கு செல்பவர்கள் உண்டு. முன்னும் பின்னும் செல்பவர்கள் உண்டு. 7.55 நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தால், 50 வருஷங்களாக 7.55 க்கு அதே இரண்டு இட்லி நீங்கள் உண்டுக்கொண்டிருந்தால். இம்மி அளவு கூட பிசகு இல்லாதவை மகிழ்ச்சி அல்ல. ஆரம்பத்தில் பிசகற்றவை

நன்றாக இருக்கும். ஆனால் ஆச்சர்யங்கள் அற்ற உலகம் அலுத்துவிடும். மெய்யுலகத்தில் உங்களுக்கு இந்த கவலை இல்லை. ஏனென்றால் எதுவும் சரியானவை இல்லை இங்கு.
நன்றாக எழுதப்பட்ட, பயிற்சி செய்யப்பட்ட நாடகங்கள் தோற்றுவிடும். காரணம் அவை எல்லாம் சரியெனும் நோக்கில் செல்கின்றன. இந்த நாடகத்தை இரண்டு முறை நம்மால் பார்க்க முடியாது. ரசிக்க முடியாது. ஆனால், நாளுக்கு நாள் மாறும் நடிகர்கள், அதே கதை தான், ஆனால், கூட்டத்திற்கு தகுந்தவாறு மாறும் வசனங்கள். நினைத்து பாருங்கள். அபாரம். காரணம் இங்கு சரியானது எதுவும் இல்லை. நிலையானது நிதமும் இல்லை. நித்தமும் புதுமை. கூட்டத்திற்கு தகுந்த ஆட்டம். வெற்றியோ வெற்றி.
 
இந்த மெய்யுலகத்தில் எதையும் வரையறுக்க முயலாதீர்கள். விளக்கம் சொல்ல முயலாதீர்கள். நிர்ணயிக்க முயலாதீர்கள். பார்ப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் உணர்வது, நீங்கள் புரிந்துக் கொள்ளவது, அப்படியப்படியே இருக்கட்டும்.

உங்களுக்கு ஏதாவது புரியவில்லையா, பதிலை தேடுங்கள், புரிந்துக் கொள்ள முயலங்கள் ? மூன்றாவது மனிதர் மூலம் அல்ல. ஏனென்றால் மூன்றாவது மனிதரின் விளக்கம் சந்தேகத்திற்குரியது, தனிமனித விருப்பு-வெறுப்புக்கு உட்பட்டது.

மற்றவர் மூலம் அறிய முயல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல, ஒரு நிலை சார்ப்பாக ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. நடுநிலை தன்மையும் இழந்துவிடுகிறது. ஏனென்றால் மற்றவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் சிறந்தவர்கள் இல்லை. அதிக ஞானம் உள்ளவர்கள் இல்லை. உங்களுக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததாக அவர்கள் சொல்வதிலும் ஆதாரமும் இல்லை. நம்பிக்கை தான். நான் ஆரம்பத்திலே சொன்னது போல நம்பிக்கை அளக்கத்தக்கதல்ல. விஞ்ஞானம் அல்ல. மெய்ஞானம் அல்ல. மேலும் உங்கள் கேள்விக்கு விடையளிக்கும் அளவுக்கு அடுத்தவர் தகுதியானவரா, ஞானம் பெற்றவரா என்று எதை வைத்து நிர்ணயிப்பது. மற்றவர் சொல்லியா. மீண்டும் 3வது மனிதரா. வானத்தில் மேகத்தை அடையாளமாக வைத்து தரையில் துணிமணிகளை விட்டுச் சென்றானாம் ஒரு மூடன். விவரமில்லாதவர்கள் மற்றவரை விவரம் உள்ளவர் என்று சொல்லியதை நம்பி விவரம் கேட்கச் சென்றால் நீங்கள் விவரமானவரா விவரம் இல்லாதவரா.

நீங்களாக கண்டுணரும் விடைகள் அதிக திருப்தியளிக்கும். முழுமையாக இருக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. புகைப்பிடிப்பது உடலுக்கு கெடுதல். காசநோய் உண்டாக்கும் என்பதை அறிந்தும் புகைக்கும் மூடர்களை ஏன் தடுக்க முயல்கிறீர்கள். புகைகட்டும். சாகட்டும். அவர்கள் முட்டாள்களா. இல்லை. அவர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் புகை எனும் மாயவலையில் சிக்கி தவிப்பவர்கள். அவர்கள் புகைப்பிடிப்பதை விடமுடியாமல் இருப்பவர்கள். அதிக தூரம் சென்றுவிட்டவர்கள். இனிமேல் திரும்பி வரமுடியாத தூரம். இன்னும் சிலர் திரும்பி வருகின்றார்கள். மெய்யுலகத்திற்கு. சிலருக்கு வெற்றி, சிலருக்கு தோல்வி.

மது அருந்துவது வைத்தியமா. இல்லையே. மக்கள் தங்கள் சோகத்திலிருந்து தற்காலிகமாக விடைபெற அருந்துகிறார்கள். போதை இறங்கியதும் அதே பிரச்சனை, அதே நிதர்சனம், அதே சமூகம், அதே மாறாத குழப்பங்கள். தீராத குழப்பங்கள். ஒரு கோப்பை மது உங்களை பிரச்சனையிலிருந்து நீங்கவிடும் என்றால் குடிப்பதை மட்டுமே பிரதானமாக கொள்வோமே. போதை இறங்க விடாமல் பார்த்துக் கொள்வோமே. சம்பாதிக்கும் பணத்தை சாராயம் வாங்க செலவிடலாமே. ஏன் வீடு, வாசல், மனைவி, மக்கள், சொத்து, சுகம், தொழில், சுற்றுலா செலவுகள்.

"Moksa Purusartha" presents the vedantic point of view when he states that "Man has been gradually becoming aware (in evolution) of his several kosas (sheaths) so to speak. Of the real nature of himself as spirit (Atman), he has only rarely become aware. The ancient rishis in their advanced evolution had seen these formulations of nature as Spirit (atman). The realization of the Spirit as the essence of oneself is freedom from the lower formulations of nature such as physical (annam), vital (Pranam), mental (manas), intellect (buddhi). Each movement upward to a deeper and extensive layer of being is a movement towards freedom or release (moksa). But the ultimate and final or Absolute freedom, that is from which there is no further urge to freedom, is Brahman, spirit Vast and Complete (Purnam)".

Make out a single word out of it and its meaning. Fiction giving reference to further fictions.

மேலுள்ள பத்தியில் ஒரு வாக்கியம் புரிந்து கொள்ள முயலுங்கள். கற்பனைக்கு உதவியாக கற்பனைகளின் மேற்கோள். கதைக்கு பதிலளிக்க கதை. வெத்து வேட்டுகள். ஏட்டுச்சுரக்காய்.
போதையில் இருக்கும் பித்தர்கள் தான் பொய்யுலகை நாடுபவர்கள். மெய்யுலகம் போன்ற உண்மையானது எதுவும் இல்லை. நிரந்தரமானதும் இல்லை. உங்கள் பிரச்சனைகளை சந்தியுங்கள். அதைக் கண்டு ஓடாதீர்கள். குழப்புங்களை கையாளுங்கள். ஓடுவது ஒரு தீர்வில்லை.

தியானங்கள், மத குருக்களின் கதாகாலட்சேபங்கள், மோட்சம், முக்தி போன்றவை சாராயம், புகை போன்ற பொய்யான அடைக்கலங்கள். இவற்றால் உங்கள் சத்தியமான பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. இவற்றில் நேரம் செலவழிப்பதால் நீங்கள் மெய்யுலகத்தை விட்டு விலகிச் செல்கிறீர்கள். இறப்புக்கு பின் நமக்கு அமைதி கிட்டுமா. கிட்டாது. ஏனென்றால், அமைதி என்பது நீங்கள் முழு நினைவில் இருக்கும் போது கிடைப்பது. அது உங்கள் மனதின் முழு எச்சரிக்கையில் கிடைப்பது. நீங்கள் புகைத்திருந்தாலோ, குடித்திருந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீங்கள் ? நான் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இவை அனைத்திலும் நீங்கள் எச்சரிக்கை நிலையில் இல்லை. முழு நினைவில் இல்லை. இதில் கிடைப்பது அமைதியும் இல்லை. மற்றவை அனைத்தும் வலிநிவாரணி போல தான். ஒரு தற்காலிக அடைக்கலம். கண்கட்டு வித்தைகள். மாயங்கள். பொய்கள்.
 
மெய்யுலகம் ஒரு சரியான சக்கரத்தில் சுழலுகிறது. அப்படித்தான் என்று நாம் நம்புகிறோம். நாம் சில சக்கரங்களையும் பார்த்துவிட்டோம். சரியில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒரு சக்கரம் இருக்கிறது.

ஆனால் பொய்யுலகத்திற்கு ஒரு சக்கரமும் இல்லை. மோட்சத்தை அடைந்த யாரும் தனக்கு மோட்சம் கிடைத்ததாகவோ முக்தி கிடைத்ததாகவோ சொல்லவில்லை. மீண்டும் நம்பிக்கை என்று சொல்லப்போகிறீர்களா. புத்திசாலியாரும் மெய்யானவற்றை தவிர்த்து வேறு எதையும் நம்ப மாட்டார்.

அதிசயங்கள் வெறும் தற்செய்லகளே. தற்செயல்களை நாம் நிரந்தரமாக்க முயலவேண்டாம்.

தஞ்சாவூர் நந்தியை சிறியதாக கண்டவர் யாரும் இல்லை. ஆனால் அது வளர்கிறது என்று மட்டும் நம்பு்வர்கள் உண்டு.

பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் மறைந்துபோவதை கண்டவரில்லை. ஆனால் ஆயிரமாயிரம் கதைகள் உண்டு.

அதிசயங்கள் எப்போதுமே அதிசயங்கள் தான். ஏனென்றால் அவை நம் கண்முன் நிகழ்வதே இல்லை. எப்போதுமே கேட்டவை தான் ? படித்தவை தான்.

ஏன் நம் முன் அம்மன் அழுவதில்லை. ஆனால் அழுததை பார்த்தவர்கள் அடித்து சொல்கிறார்களே. மேரி மாதாவின் கண்களில் ரத்தம் வழிந்ததை கண்டவர் உண்டு. ஆனால் அந்த கண்டவர்கள் நாமில்லை. யார் இந்த நிஜமாக கண்டவர்கள். யாருமே இல்லை.

ஆனால் மெய்யுலகத்தில் எந்த சட்டமும் இல்லை. சட்டம் இருந்தால் கூட அது ஒரு ஒரு சட்டம் தான் ? மெய்யாக இரு, மெய்யானவற்றை நம்பு.

ஆனால் பொய்யுலகம் பல வித சட்ட திட்டங்களை திணிக்கின்றன. அனைத்தும் அனைத்து கூட்டங்களாலும் ஏற்கப்படுவதில்லை. உலகின் சத்தியம் கடவுள் என்றால் அந்த கடவுளை வைத்து ஏன் இத்தனை குழப்பங்கள். கடவுள் யார் எப்படி என்ன என்பதில் ஏன் வேறுபாடுகள். வேறுபாடுகளற்ற ஒன்றான கடவுள் ஏன் இப்படி சிதைந்து போகிறார் மக்களிடம் மாட்டிக் கொண்டு.


நீ விரும்புவதை விரும்பு, விரும்புவதை வெறுத்துக் கொள், நீங்கள் வெறுப்பதையும் விரும்பு முயற்சி செய், முடியாவிட்டால் விட்டுவிடு.

நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் மெய்யுலகம். மெய்யுலக்த்தில் நீங்கள் யார் மீதும் அனுதாபப்பட தேவையில்லை. நேர்மையாக இருங்கள். அனுதாபத்திலும் நேர்மையாக இருங்கள். ஆனால் உங்கள் காதல், நட்பு, பாசத்தை பொய்யுலக விஷயங்களில் காட்டாதீர்கள்.

மெய்யுலகத்தில் நீங்கள் காட்டும் அன்பு பன்மடங்காக திரும்பி வருகிறது உங்களிடம். ஆனால் பொய்யுலகத்தில் காட்டும் அன்பு திரும்பி வருவதில்லை.

சில நேரம் ஏமாற்றங்களும் உண்டு. உங்கள் அன்பு துரோகமாக திரும்பி வரலாம். வரட்டும். இது தானே மெய்யுலகம். ஆச்சர்யங்களும் உண்டல்லவா.

ஆனால் உங்கல் பணம், நேரம், உழைப்பு, காதல், அன்பு, பாசம், அனுதாபம் பொய்யுலகத்தில் கொண்டால் திரும்பி வருவதில்லை. துரோக வடிவில் கூட வருவதில்லை.
 
மாய உலக சொற்கள்
வழிநடத்துதல்

மாய உலக வழக்கங்கள்
குரு அல்லது சாது நம்மை கடவுளக்கு வழி நடத்தி செல்வார்

மெய்யுலக வழக்கங்கள்
உங்கள் அறிவை கொண்டு ஆராயுங்கள். உங்கள் நலம்விரும்பிகளிடம் உங்கள் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்

மாய உலக சொற்கள்
பிரச்சனையிலிருந்து விடுவி்ப்பது

மாய உலக வழக்கங்கள்
மகான்களை சந்தித்தல், ஜோசியரிடம், கைரேகை பார்ப்பவரிடமிருந்து பிரச்சனைகளிலிருந்து விடிவு தேடுதல்

மெய்யுலக வழக்கங்கள்
சொந்த மூளையை பயன்படுத்தி ஆராயுங்கள். அல்லது உங்கள் நலம்விரும்பிகளிடம் கேளுங்கள்

மாய உலக சொற்கள்
ஆன்மீகம்

மாய உலக வழக்கங்கள்
பலவகை முயற்சிகளின் மூலம் தன்னை சுத்தப்படுத்துதல், அல்லது கடவுளை அடைய முயலுதல்

மெய்யுலக வழக்கங்கள்
உங்களுக்கு நல்லவராக இருங்கள். மற்றவர்களுக்கும் நல்லவராக இருக்க முயலுங்கள். உங்கள் மனம் குற்ற உணர்வை, பதட்டங்களை விடுத்து அமைதி அடையும். உங்கள் மனதை கேளுங்கள் ? எது செய்தால் அது சந்தோஷம் அடையும் என்று. அதை பின்பற்றுங்கள்.

மாய உலக சொற்கள்
தியானம்

மாய உலக வழக்கங்கள்
பிரச்சனைகளிலிருந்து விடுபட ஒன்றுமில்லாததில் மனதை செலுத்த முயலுதல். வெற்றிடத்தை நோக்கி மனதை ஒரு நிலை படுத்த முயலுதல்

மெய்யுலக வழக்கங்கள்
உங்கள் பிரச்சனையில் உங்கள் கவனம் இருக்கட்டும். பிரச்சனையிலிருந்து வெளியே சிந்திப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தியானத்தில் இருப்பது கண்களை மூடிக் கொண்டு இரவாகிவிட்டது என்று சொல்வது போல.

மாய உலக சொற்கள்
யோகா ? உடல் பயிற்சி அல்ல

மாய உலக வழக்கங்கள்
மனப்பயிற்சி மன பயிற்சி

மெய்யுலக வழக்கங்கள்
உங்கள் பிரச்சனைகளை அலசி ஆராயுங்கள். கட்டற்று சிந்தியுங்கள். நல்ல பக்கத்தில் சிந்தியுங்கள். அந்த பிரச்சனையை பல்வேறு கோணத்தில் அலசுங்கள்.

மாய உலக சொற்கள்
மந்திரம்

மாய உலக வழக்கங்கள்
கடவுள்களையும் தேவதைகளையும் மகிழ்ச்சிப்படுத்த சொல்லப்படுபவை

மெய்யுலக வழக்கங்கள்
தேவையில்லை. மனதை உற்சாகமூட்டும் புத்தகங்களை படியுங்கள், ஊக்குவிக்கும் பேருரைகள் கேளுங்கள். உங்களிடமிருந்து பல பக்கத்தை வெளி கொணரும்

மாய உலக சொற்கள்
தந்திரம்

மாய உலக வழக்கங்கள்
பல்வேறு வகை மந்திரங்கள், சடங்குகள், தாயத்துகள், பொருட்கள் உங்கள் மெய்யுலக பிரச்சனைகளை தீர்க்கும் பலம் கொண்டவை

மெய்யுலக வழக்கங்கள்
தேவையில்லை. உடல் உபாதைகளுக்கு மருத்துவரை நாடுங்கள். மன உபாதைகளுக்கு உளவியல் நிபுணர்களை கண்டு அறிவரை கேளுங்கள்.

மாய உலக சொற்கள்
பூஜை

மாய உலக வழக்கங்கள்
கடவுளை சந்தோஷப்படுத்த தேவையில்லை.

மெய்யுலக வழக்கங்கள்
நிஜத்தில் வாழுங்கள். மனிதர்களை சந்தோஷப்படுத்துங்கள். இல்லாத கடவுளை அல்ல.

மாய உலக சொற்கள்
சடங்குகள்

மாய உலக வழக்கங்கள்
குழுவோடு சேர்ந்து செய்யும் காரியங்கள். வழக்கத்திலிருந்து மாறுபட

மெய்யுலக வழக்கங்கள்
அநாதை ஆசிரம் செல்லுங்கள். முதியோர் இல்லம் செல்லுங்கள். உங்கள் நேரம், பணம், உழைப்பு உங்கள் கண் முன்னால் பலரை இன்பப்படுத்துவதை பாருங்கள். இதுவே உங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட உதவும்.
 
பொய்யுலக சொற்கள்
சொர்க்கம்

பொய்யுலக வழக்கங்கள்
பல

மெய்யுலக வழக்கங்கள்
உங்கள் சாவை உங்கள் அருகில் உள்ளவர்கள் நினைத்து வருந்தினால் உங்களைப்பற்றி உயர்வாக பேசினால் நீங்கள் சொர்க்கம் அடைந்துவிட்டீர்கள்.

மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தான் மெய்யுலகத்தில் சொர்க்கம்

பொய்யுலக சொற்கள்
நரகம்

பொய்யுலக வழக்கங்கள்
பல

மெய்யுலக வழக்கங்கள்
உங்கள் உள்மனதை கேளுங்கள். நீங்கள் நரகம் செல்லும் அவசியமே இல்லை.

துக்கமும் வலியும் தான் மெய்யுலக நரகம்.

பொய்யுலக சொற்கள்
முக்தி

பொய்யுலக வழக்கங்கள்
பிறவாமை, கடவுளை அடைவது

மெய்யுலக வழக்கங்கள்
தேவையில்லை. நிகழ் காலத்திற்கு வாழுங்கள். நிகழவுக்கு வாழுங்கள். மெய்யுலகத்தில் பிறவாமை பற்றி பேசுவது முட்டாள்தனம். இல்லாத ஒன்றை துரத்துவதற்கு சமம். பிறந்தது வாழ்வதற்கு. வாழுங்கள். நன்றாக வாழுங்கள். மறுபிறப்பை பற்றி கவலைப்பட்டு இப்பிறப்பை வீணடிக்காதீர்கள்.

பொய்யுலக சொற்கள்
மறுபிறப்பு

பொய்யுலக வழக்கங்கள்
பல

மெய்யுலக வழக்கங்கள்
யார் கவலைப்பட்டார். இப்பிறப்புக்கு நியாயம் செய்தீர்களா.
சொர்க்கம் பற்றி எழுதியதை படியுங்கள்.

பொய்யுலக சொற்கள்
கடவுள்

பொய்யுலக வழக்கங்கள்
பல்லாயிரம் கடவுள், பல்லாயிரம் விளக்கங்கள், பல குழப்பங்கள் கடவுள் உன்னுள் இருக்கிறார்.

மெய்யுலக வழக்கங்கள்
நீங்கள் கடவுளாக சாத்தானாக உருவங்கள் எடுக்கிறீர்கள். ஆளவந்தானில் சொன்னது போல கடவுளை வளர்த்து சாத்தானை அழியுங்கள்.

பொய்யுலக சொற்கள்
தேவ, தேவதைகள்

பொய்யுலக வழக்கங்கள்
கடவுளின் தூதர்கள். கடவுளிடம் அழைத்து செல்வர்

மெய்யுலக வழக்கங்கள்
நீங்கள் தான் தேவதை. தேவன். வேறு யாரை ஏன் தேடுகிறீர்கள்.

பொய்யுலக சொற்கள்
சாத்தான்

பொய்யுலக வழக்கங்கள்
கடவுளின் எதிரி

மெய்யுலக வழக்கங்கள்
ஏன் சாத்தான். ஒரு மனிதர் உங்களை கெட்டவர் என்று நினைத்தால் நீங்கள் தான் சாத்தான்.

பொய்யுலக சொற்கள்
அவதாரம்

பொய்யுலக வழக்கங்கள்
கடவுளின் மனித-மிருக வடிவம்

மெய்யுலக வழக்கங்கள்
நிரூபிக்க படாதது. நீங்களே உங்களை ஏன் கடவுளின் அவதாரமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்களிடமும் மற்றவர்களிடமும் இருக்கும் தீமைகளை அழிக்கக்கூடாது?

பொய்யுலக சொற்கள்
பாவம்

பொய்யுலக வழக்கங்கள்
சொர்க்கத்தில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய நடத்தை

மெய்யுலக வழக்கங்கள்
மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ மிருகத்தையோ மனிதனையோ பாதிக்கும் செயல்கள் மெய்யுலகத்திலும் பாவம் தான். செய்யாதீர்கள்.

பொய்யுலக சொற்கள்
புன்னியம்

பொய்யுலக வழக்கங்கள்
சொர்க்கத்தில் ஒரு இடம் பெற்றுத் தரக்கூடியது

மெய்யுலக வழக்கங்கள்
கட்டாயம். நீங்கள் மெய்யுலகத்தில் செய்யும் நல்லவை எல்லாமே சொர்க்க வாசலுக்கு வழி காட்டும். சொர்க்கம் இப்பிறவியில் மெய்யுலகத்தில் உங்கள் சந்தோஷமாக வைத்திருக்கும் நடவடிக்கைகள்.
 
Back
Top