நித்தியகருமவியல்

shivasevagan

New member

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்​



10. நித்தியகருமவியல்

230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

109. சிவ தீக்ஷை பெற்ற பின் ஆவசியமாக அநுட்டிக்கப்படும் கருமங்கள் எவை?
இயமநியமங்களும், சந்தியாவந்தனம் சிவலிங்க பூசை, தேவார திருவாசக பாராயணம், சிவாலய கைங்கரியம், சிவாலய தரிசனம், குருவாக்கிய பரிபாலனம், இயன்றமட்டும் மாகேசுர பூசை முதலியவைகளுமாம். (கைங்கரியம் = தொண்டு)

110. இயமம் என்பன யாவை?கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துமாம்.

111. நியமம் என்பன எவை?
தவம், மனமுவந்திருத்தல், கடவுள் உண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமா யுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலஞ்செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெருவம் இன்றி அடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம், விரதம் என்னும் பத்துமாம்.

112. அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை?
சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திரநிந்தை, தேவத்திரவியங்களை உபயோகஞ் செய்தல், உயிர்க்கொலை முதலியவைகளாம்.

113. அநுட்டானத்தில் வழுகிய பாவங்கள் எப்படி நீங்கும்?அறியப்பட்ட பாவங்கள் பிராயச்சித்தங்களினாலே நீங்கும்; அறியப்படாத பாவங்கள் அந்தியேட்டிக் கிரியையினாலே நீங்கும்.

114. தீக்ஷை பெற்றுந் தத்தமக்கு விதிக்கப்பட்ட சைவாசாரங்களை அநுட்டியாது விடுத்தவர் யாது பெறுவர்?பைசாச புவனத்திற் பிசாசுகளாய் அங்குள்ள போகங்களை அநுபவிப்பர்.


115. சிவதீக்ஷை பெற்றுச் சிவபெருமானை வழிபடுவோர்கள் யாது பெயர் பெறுவார்கள்?
சைவர் என்னும் பெயர் பெறுவார்கள்.

116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

117. ஆதிசைவராவார் யாவர்?
அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)

118. மகாசைவராவர் யாவர்?
பிரமாவினுடைய முகங்களிற் றோன்றிய இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய வைதிகப் பிராமணருள்ளே சிவதீக்ஷை பெற்றவர்.

119. அநுசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரியரும், வைசியரும்.

120. அவாந்தரசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற சூத்திரர்.

121. பிரவரசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற அநுலோமர்.

122. அந்நியசைவராவார் யாவர்?
சிவதீக்ஷை பெற்ற பிரதிலோமர் முதலிய மற்றைச் சாதியார்.

123. சைவர்கள் தீக்ஷா பேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், நிருவாண தீக்ஷிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவார்கள்.

124. சமயதீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.

125. சந்தியாவந்தனம் மாத்திரம் அநுட்டிக்குஞ் சமயிகள் யாது பெயர் பெறுவர்?
சந்தியோபாஸ்திபரர் என்னும் பெயர் பெறுவர். (உபாஸ்தி = வழிபாடு)

126. சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்னும் இரண்டும் அநுட்டிக் குஞ்சமயிகள் யாது பெயர் பெறுவர்?
சிவகர்மரதர் என்னும் பெயர் பெறுவர்
(ரதர் = விருப்பமுடையவர்)

127. விசேஷ தீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டும் அநுட்டிப்பவர்.

128. நிருவாண தீக்ஷிதராவார் யாவர்?
சமய தீக்ஷை, விசேக்ஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு, சந்தியா வந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டனோடு ஞான பூசையும் அநுட்டிப்பவர்.
 
[FONT=TSCu_Paranar]129. ஞானபூசை யென்பது என்ன?[/FONT]
[FONT=TSCu_Paranar]ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.[/FONT]

[FONT=TSCu_Paranar]130. ஆசாரியராவார் யாவர்?[/FONT]
[FONT=TSCu_Paranar]சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை, ஆசாரியபிஷேகம் என்னும் நான்கும் பெற்றுக் கொண்டு, நித்திய கருமங்களோடு தீக்ஷை, பிரதிட்டை முதலிய கிரியைகளுஞ் செய்பவர்.[/FONT]

[FONT=TSCu_Paranar]131. ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?[/FONT]
[FONT=TSCu_Paranar]பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருள்ளும், மனக்குற்றங்களும், உடற்குற்றங்களும் இல்லாதவராய், நிகண்டு கற்று, இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கணமுந் தருக்கமும், நீதிநூல்களுஞ் சிவபுராணங்களும் படித்தறிந்தவராய், தேவார திருவாசங்களைப் பண்ணோடு ஓதினவராய், சைவாகமங்களை ஓதி அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய், சீடர்களுக்கு நல்லொழுக்கத்தையுஞ் சைவ சமயத்தையும் போதித்தலின்கண் அதிசமர்த்தராய் உள்ளவர்.[/FONT]

[FONT=TSCu_Paranar]132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?[/FONT]
[FONT=TSCu_Paranar]நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).[/FONT]

[FONT=TSCu_Paranar]133. இக்குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீக்ஷை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?[/FONT]
[FONT=TSCu_Paranar]அவைகளால் ஆகும் பயனை இழந்து, நரகத்தில் வீழ்ந்து வருந்துவர். ஆதலினாலே, குருலக்கணங்கள் அமையப் பெற்ற ஆசாரியரைக் கொண்டே தீக்ஷை, பிரதிட்டை முதலியன செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]134. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன வருணத்தாருக்கு ஆசாரியராகலாம் என்னும் நியமம் உண்டோ?[/FONT]
[FONT=TSCu_Paranar]ஆம்; பிராமணர், பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும், வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கரசாதியருக்கும் ஆசாரியராகலாம். இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம; ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.[/FONT]

[FONT=TSCu_Paranar]135. சிவஞானத்தை அடைய விரும்பி சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், யாது செய்தல் வேண்டும்?[/FONT]
[FONT=TSCu_Paranar]வண்டானது தான் அடைந்த பூவினிடத்தே தேன் இல்லையாயின், அதனை விட்டுத் தேன் உள்ள பூவைத் தேடி அடைவது போலச், சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், அவரை விட்டுச் சிவஞானம் உள்ள ஆசாரியரைத் தேடியடையலாம்; அடையினும், மூன்று சந்தியினும், கிரியை உபதேசித்த முந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்து கொண்டே, ஞானம் உபதேசித்த பிந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்தல் வேண்டும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]136. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன தீக்ஷை பெறுதற்கு யோக்கியர் என்னும் நியமம் உண்டோ?[/FONT]
[FONT=TSCu_Paranar]ஆம்; நான்கு வருணத்தாரும், அநுலோமர் அறுவரும் ஆகிய பத்துச் சாதியாரும் ஒளத்திரி தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். மற்றைச் சாதியார் ஒளத்திரி தீக்ஷைக்கு யோக்கியரல்லர். ஒளத்திரி தீக்ஷைக்கு அங்கமாகிய நயன தீக்ஷை, பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, மானச தீக்ஷை, சாத்திர தீக்ஷை, யோக தீக்ஷை என்னும் ஆறனுள்ளுந் தத்தஞ் சாதிக்கும் பரிபக்குவத்துக்கும் ஏற்ற தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். ஆசாரியர் தமது பாதோதகத்தைக் கொடுத்தலும் ஒரு தீக்ஷையாம்; சீடர் அதனைச் சிரத்தையோடும் ஏற்றுச் சிரசின் மீது புரோக்ஷித்து ஆசமனஞ் செய்யக் கடவர்.[/FONT]

[FONT=TSCu_Paranar]137. ஒளத்திரி தீக்ஷையாவது யாது?[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓமத்தோடு கூடச் செய்யப்படும் தீக்ஷை. (ஹோத்திரம் = ஓமம்)[/FONT]

[FONT=TSCu_Paranar]138. ஒளத்திரி தீக்ஷை எத்தனை வகைப்படும்?[/FONT]
[FONT=TSCu_Paranar]ஞானவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.[/FONT]
 
[FONT=TSCu_Paranar]139. ஞானவதியாவது யாது?[/FONT]
[FONT=TSCu_Paranar]குண்டம், மண்டலம், அக்கினி, நெய், சுருக்குச்சுருவ முதலியவைகளெல்லாம் மனத்தாற் கற்பித்துக் கொண்டு, விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது சத்தி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]140. கிரியாவதியாவது யாது?[/FONT]
[FONT=TSCu_Paranar]குண்ட மண்டலங்களைப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது மாந்திரி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]141. ஞானவதி, கிரியாவதி என்னும் இரண்டுந் தனித்தனி எத்தனை வகைப்படும்?[/FONT]
[FONT=TSCu_Paranar]சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என மூன்று வகைப்படும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]திருச்சிற்றம்பலம்[/FONT]​
 
உதயத்தில் எழுவதே அதமம்... அப்ப நாங்க???

இந்தக் கேள்வி பதில்கள் எல்லாம் எங்காவது ஒட்டு மொத்தமாக இருந்தால் சொல்லுங்கள். தொகுத்து வைத்துக் கொள்கிறேன்.
 
Back
Top