சினிமா புதிர்.

2) வீரபாண்டியக் கட்டபொம்மன்
3)அந்த நாள் ( ஏவிஎம் தயாரிப்பில் நடிகர்திலகம்)
 
மதுரை வீரன் ஒரு புதிர் இன்னும் முடியாமல் இருக்க அதற்குள் இன்னொரு புதிரை துவங்குவது நியாயமா ஐயா!!

சரி எனது புதிரின் விடைகளை சொல்லி விடுகிறேன்



1.ஜெய்சங்கர், தேவிகா இணைந்து நடித்த 2 படங்களை கூறவும்

தெய்வீக உறவு, அன்புச்சகோதரர்கள்(இதில் ஜோடியல்ல)
2. ஏ.விம்.ராஜன், வாணிஸ்ரீ இணைந்து நடித்த படம் எது?
அன்னையும் பிதாவும்
3. இளையராஜாவின் இசையில் மனோ ஸ்வர்ணலதா பாடிய சில பாடல்களை கூறவும்


சொல்லி விடு வெள்ளி நிலவே(அமைதிப்படை)
அந்தியில வானம்(சின்னவர்)
காடுக்குயில் பாடு சொல்ல, வெண்ணிலவு(சின்ன மாப்ளே)
கண்ணே இது கல்யாண கதை (ஆணழகன்)
மலைக்கோவில் வாசலில்(வீரா)

4. தமிழில் கண்டசாலா பாடிய சில பாடல்களை கூறவும்
உலகே மாயம் வாழ்வே மாயம்,
ஆகாய வீதியில்,
தேசுலாவுதே
துணிந்த பின் மனமே
முத்துக்கு முத்தாக*
ஆஹா இன்ப நிலாவினிலே
அமைதியில்லதென் மனமே

5. சசிரேகா பாடிய 5 பாடல்களை கூறவும்

ஓவியா சொன்ன அனைத்துப்பாடல்களும் இதில் அடங்கும்
 
விடைகளுக்கு நன்றி குருவே

அட, சின்ன மாப்ளே பாட்டுகூட பொறிதட்டலை பாருங்க எனக்கு!
 
1. பாரதியாரின் " மனதில் உறுதி வேண்டும்" பாட்டு முதன் முதலில் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன? (சிந்து பைரவி அல்ல)


சுமங்கலி படத்தில் கே.வி. மகாதேவன் இசை அமைப்பில் தான் இந்தப் பாடல முதலில் இடம் பெற்றது.
 
சரோஜாதேவி, வேறுயாரிடம் இணைந்து நடித்த படம் எது

சரோஜாதேவி அனேகமாக MGR சிவாஜி ஜெமினி ஆகியோரிடம் இணைந்து நடித்த இருக்கிறார்

சரோஜாதேவி, வேறுயாரிடம் இணைந்து நடித்த இருக்கிறரர் ? படம் எது? hero யார் ?
 
நமக்கு பழைய படங்கள் பற்றி அவ்வளவா தெரியாது அதனால ஒரு கேள்விக்கு விடை தெரியலை..என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன இதே போல் இங்கே பதில் தெரிந்தால் சொல்லுங்க

சின்ன வயசுல பக்கத்து வீட்டு பசங்களோடு, சரத்குமார் ட்ரிபிள் ஆக்ட் பண்ணிய படம் பேரு என்ன? , ரஜினி வில்லனா நடிச்ச படம் என்னனனு நாங்க எங்க சினிமா அறிவை பெருக்கிக் கொள்ள போட்டி வைத்து விளையாடுவோம் , சில சமயம் ஆசிரியர் இல்லாத போரடிக்கும் வகுப்பில், சில சமயம் ஆசிரியர் இருந்தும் போரடிக்கும் வகுப்பிலும் விளையாடுவோம்..


அப்படி நான் பெருக்கி கொண்ட சினிமா அறிவை உங்க கிட்ட காட்ட வேண்டாமா? :) அதனால தான் இந்த சினி குவிஸ்ஸ்..தெரிஞ்சா சொல்லுங்க, கூகிள் பண்ணிக் கூட சொல்லலாம்..டிரை பண்ணுங்க


1. டி.எம்.சவுந்தர் ராஜன் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல் எது?

குறிப்பு: ஒரு புத்தகத்தில் இதை படித்தேன், இப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார், வேண்டுமென்றால் ராஜ் டிவியில் அவரை பார்க்கலாம்

2. புதிய முகம் படத்தில் வரும் 'கண்ணுக்கு மையழகு பெண் குரல் பாடியவர் யார் ??

குறிப்பு:இவங்க கூட ஓல்ட் பாடகி

3. டவுசர் ராமராஜனின் படத்தில் வரும் பேமஸ் 'செண்பகமே செண்பகமே 'பாடலை பாடிய பாடகி யார்..

குறிப்பு: தமிழ் தெரியாது என்றாலும் பிழை இல்லாமல் பாடியிருப்பார்.

4. வரிசை படுத்துக

a)பாண்டியராஜன்
b)விக்ரமன்
c)பாரதிராஜா
d)பார்திபன்
e)விக்ரமன்
f)கே எஸ் ரவிக்குமார்


குறிப்பு: யார் யாருக்கு கீழ அசிஸ்டெண்டா இருந்தாங்கன்னு வரிசை படுத்துங்க


5. எம்.எச்.வியும், இளையாராஜாவும் சேர்ந்து இசை அமைத்த படம் எது?

குறிப்பு: இளையராஜா 1985-90 ஸ்ஸ் ல பயங்கர பிஸி, ஒரே நேரத்துல பல படங்களுக்கு இசையமைத்தார், அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க நேரம் இல்லாம, எம்.ஸ்வி கு சேர்ந்து இசையமைத்தார்
 
1. நான் ஒரு ராசியில்லா ராஜான்னு பாடிய பின்னால் பாடிய மாதிரி தெரியலை. ஆனால் இப்ப சுற்றும் உலகம் வாலிபனோ, வாலிபன் சுற்றும் உலகமோ என்னவோ ஒரு படத்தில பாடப்போறார்னு கேள்விப்பட்டேன். சரியான்னு யாராச்சும் சொல்லணும்

2. அந்தப் பாடலை வைரமுத்து எழுதினார்னு தெரியும். யார் பாட்னாங்கன்னு தெரியாது.

3. ஆஷா போன்ஸ்லே

4. பாரதிராஜா - பாண்டியராஜன் - பார்த்திபன் ரெண்டு விக்ரமன்ல எது எந்த விக்ரமன் என்று தெரியலையே. மத்தவங்களைப் பத்தி தெரியாது

4. மெல்லத் திறந்தது கதவு
 
1. நான் ஒரு ராசியில்லா ராஜான்னு பாடிய பின்னால் பாடிய மாதிரி தெரியலை. ஆனால் இப்ப சுற்றும் உலகம் வாலிபனோ, வாலிபன் சுற்றும் உலகமோ என்னவோ ஒரு படத்தில பாடப்போறார்னு கேள்விப்பட்டேன். சரியான்னு யாராச்சும் சொல்லணும்

2. அந்தப் பாடலை வைரமுத்து எழுதினார்னு தெரியும். யார் பாட்னாங்கன்னு தெரியாது.

3. ஆஷா போன்ஸ்லே

4. பாரதிராஜா - பாண்டியராஜன் - பார்த்திபன் ரெண்டு விக்ரமன்ல எது எந்த விக்ரமன் என்று தெரியலையே. மத்தவங்களைப் பத்தி தெரியாது

4. மெல்லத் திறந்தது கதவு



3 , 5 கரெக்ட்..5 ஆவது கேள்விக்கு இன்னும் சில படங்கள் கூட இருக்கு

அன்பு ரசிகன் 3 வதுக்கு சரியா ப்தில் சொல்லிருக்காரு

1 வது கேள்விக்கு எனக்கே குழப்பமா இருக்கு யாராது உதவினா தேவல
 
1. நான் ஒரு ராசியில்லா ராஜான்னு பாடிய பின்னால் பாடிய மாதிரி தெரியலை. ஆனால் இப்ப சுற்றும் உலகம் வாலிபனோ, வாலிபன் சுற்றும் உலகமோ என்னவோ ஒரு படத்தில பாடப்போறார்னு கேள்விப்பட்டேன். சரியான்னு யாராச்சும் சொல்லணும்

2. அந்தப் பாடலை வைரமுத்து எழுதினார்னு தெரியும். யார் பாட்னாங்கன்னு தெரியாது.

3. ஆஷா போன்ஸ்லே

4. பாரதிராஜா - பாண்டியராஜன் - பார்த்திபன் ரெண்டு விக்ரமன்ல எது எந்த விக்ரமன் என்று தெரியலையே. மத்தவங்களைப் பத்தி தெரியாது

4. மெல்லத் திறந்தது கதவு


4 வது விக்ரமன் தான் , தப்பா டைப் பண்ணிட்டேன் அதை இப்படி திருத்தி படிக்க


வரிசை படுத்துக
------


பார்திபன்
பாண்டியராஜன்
பாரதிராஜா
பாக்யராஜ்
விக்ரமன்
 
மெல்லத்திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் ஆகிய படங்களுக்கு எம்.எஸ்.வி, இளையராஜா சேர்ந்து இசையமைத்தனர்
 
குரு,
நலமா?

இரு மேதைகள் மும்முறைச் சங்கமாமானதை அறியத்தந்தமைக்கு நன்றி..

----------------------------------

நல்லமுறையில் திரியை உயிர்ப்பித்த கார்த்திக்குக் பாராட்டு!

------------------------------------------------

தாமரை

அதுக்கப்புறமும் டி.எம்.எஸ் பாடியிருக்கிறார்..
கீழ்வானம் சிவக்கும் வெளியாகியது ஒருதலைராகத்துப் பிறகுதானே..


கடைசியாப் பாடிய பாடல்னு சட்டென எதையும் சொல்ல முடியவில்லை..
முன்னமே பாடி ( அண்ணாவின் ஆசை) பின்னர் வெளிவந்த பாடல்னா -
அவசரபோலீஸ் ( பாக்யராஜ்) படத்தில் எம்ஜிஆர் பாடும் -
என் மாப்பிள்ளைக்கு இந்த மணிப்பிள்ளையை --- பாடலைச் சொல்லலாம்!
 
குரு,
நலமா?

இரு மேதைகள் மும்முறைச் சங்கமாமானதை அறியத்தந்தமைக்கு நன்றி..

----------------------------------

நல்லமுறையில் திரியை உயிர்ப்பித்த கார்த்திக்குக் பாராட்டு!

------------------------------------------------

தாமரை

அதுக்கப்புறமும் டி.எம்.எஸ் பாடியிருக்கிறார்..
கீழ்வானம் சிவக்கும் வெளியாகியது ஒருதலைராகத்துப் பிறகுதானே..


கடைசியாப் பாடிய பாடல்னு சட்டென எதையும் சொல்ல முடியவில்லை..
முன்னமே பாடி ( அண்ணாவின் ஆசை) பின்னர் வெளிவந்த பாடல்னா -
அவசரபோலீஸ் ( பாக்யராஜ்) படத்தில் எம்ஜிஆர் பாடும் -
என் மாப்பிள்ளைக்கு இந்த மணிப்பிள்ளையை --- பாடலைச் சொல்லலாம்!


நான் ஒருகூட்டு கிளியாக எனும் படிக்காதவன் பட பாடலை தான் அவரது கடைசி பாடல் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்
 
மெல்லத்திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் ஆகிய படங்களுக்கு எம்.எஸ்.வி, இளையராஜா சேர்ந்து இசையமைத்தனர்



சமீபத்தில் கூட இருவரும் சேர்ந்து ஒரு படத்து இசையமைத்தார்கள் ..அது விஷ்வதுளசி
 
நான் ஒருகூட்டு கிளியாக எனும் படிக்காதவன் பட பாடலை தான் அவரது கடைசி பாடல் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்

கார்த்திக்

இப்பாடல் பாடியவர் - மலேசியா வாசுதேவன்..
 
ஒரு கூட்டுக்கிளியாக பாடியவர் மலேசியா வாசுதேவன்

டி.எம்.எஸ் சிவாஜிக்கு பாடிய பழைய பாடல் போலே , சத்யராஜுக்கு பாடிய ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூ மனம் (தாய் நாடு)
என்று நினைவு
 
ஆம். ஆம். நான் இன்று எதேச்சையாக தேடும் போது 1987ல் வெளியாகிய உழவன் மகன் திரைப்படப்பாடலில் அவர் பாடியுள்ளார். விஜயகாந்தின் படம்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000245

உழவன் படப்பாடல் தேடச்சென்ற போது இதை கண்டேன்...

ஆனால் தாய் நாடு அதன் பின்னர் வந்துள்ளது. 1989... ராஜேஷ் அண்ணா... என்னா விபரம் உங்க தலையில் உள்ளது... அசந்தேன்...
 
Back
Top