இளந்தமிழ்ச்செல்வன்
New member
மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்
நீண்ட நெடு நாட்களாகவே சில பல விசயங்களை சில பதிவுகளைப் பார்க்கும்போது விளக்கவேண்டும் அல்லது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து சிலவற்றை ஆரம்பித்து உங்களை குழப்பி முழுமையாய் முடிக்காமல் இருந்தேன். இரு நாட்கள் முன்பு ஒரு சிறு கையேடு கிடைத்தது. நானாக குழப்புவதைவிட கோர்வையாய் எளிமையாய் ஏற்கனவே சொன்னதை சொல்வது எளிது.
எனவே "உலக சமயம்" (உலகப் பொது அருள்நெறி சமயம் ஏன்?) என்ற தலைபில் அருட்தந்தை "வேதாத்திரி மகரிஷி" அவர்கள் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி: உலகப் பொது அருள்நெறி சமய அறக்கட்டளை, கும்பகோணம்.
ஆறாவது அறிவைப் பெற்ற மனிதப் பிறவியினது நோக்கம்
அறிவிலே முழுமைப் பெற்று மனம், உயிர், டெய்வம் எனும் மூன்று மறை பொருட்களையும் உணர்ந்து கொள்ளுதல்.
இறைநிலையே மனிதனிடத்தில் அறிவாக விளங்குகின்றது என்ற உண்மையினைத் தெரிந்து கொண்டு நிறைவு மற்றும் அமைதி பெறுதலாகும்.
உடல், உயிர், அறிவு முன்றும் ஒருங்கிணைந்து இயங்கௌம் ஒரு சிறப்பு நிலையே உடலாகும். அதில்
1. பசி
2. வெட்பதட்ப ஏற்றத்தாழ்வு
3. உடல் கழிவுப் பொருட்களின் உந்துதல் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் என மூவகையான உணர்ச்சிகள் உண்டாகின்றன. இது இயற்கை நியதி.
காலத்தோடு தக்கப் பொருட்களையும், இன நட்பையும் கொண்டுதான் பசி முதலிய மூவகை உணர்ச்சிகளையும், சமப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வகையில் ஏற்படும் மூவகைத் தேவைகளும் உடலியக்கத்தின் விளைவாக உடலிலிருந்தே தான் எழுகின்றன.
இதோடு உடலுக்கு வெளியே இருந்தும் வரக்கூடிய மூன்று தாக்குதல்களாலும் துன்பங்கள் எழலாம். அவை:
1. இயற்கைச் சீற்றம்
2, வேற்றுயிர் பகை
3. தற்செயலாக எதிர்பாராது ஏற்படும் மோதல் என்னும் விபத்து என்பனவாகும்.
இவ்வாறு உள்ளிருந்து எழும் மூன்றுவகையான தேவைகளையும் அவ்வப்போது காலந்தாழ்த்தாமல் தக்க பொருட்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்ளவும், வெளியிலிருந்து வரும் இயற்கைச் சீற்றம், வேற்றுயிர் பகை, விபத்து ஆகிய மூன்றுவகையான சங்கடங்களையும் தாங்கிக் கொள்ளவும், எதிர்த்து நின்றூ வெற்றி கொள்ளவும், மனிதன் ஐந்து வகையான இன்றீயமையாச் செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது. அவையாவன:
1. உணவு உண்னல்
2. உழைத்தல்
3. உறங்குதல்
4. உடலுறவு கொள்ளுதல்
5. மனதை ஆளுதல் எனபனவாகும்.
இந்த ஐவகைத் தொழில்களையும் அலட்சியம் செய்வதோ, மிகையாகக் கொள்வதோ, உடலுக்கும், மனதுக்கும் பொருந்தா உணர்வாகித் துன்பம் உண்டாக்கும். வாழ்வில் சிக்கல் பெருகும்.
இந்த ஐவகைச் செயல்களையும் முறையாகவும், ஒழுங்காகவும் ஆற்றுவதற்கு
1. உடலியக்க, மன இயக்க நியதிகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. தொடர்பு கொள்ளும் மக்களுடைய மற்றும் பொருட்களுடைய மதிப்பையும், தன்மைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. அணுக்களின் சேர்க்கையால் அமையும் எந்தப் பொருளும் ஒன்றோடு மற்றது நெருங்கும்போது, உரசும்போது அல்லது கலக்கும்போது எழும் விளைவுகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இத்தகைய அறிவின் விழிப்புடன் பொருட்களோடும் மக்களோடும் அளவு மற்றும் முறையோடு உறவுகொள்வதும், அனுபோகிப்பதும் நெறியான, சிக்கலற்ற துன்பம் விளையாத வாழ்வுக்கு இன்றியமையாதானவாக இருக்கின்றன. இந்த முறைகளில் வாழ்வில் இனிமையும், பொருத்தத்தையும் காத்து வாழ்ந்தால்தான் மனதில் அமைதி நிலவும். ஆன்மீகச் சிந்தனை ஓங்கும்; அறிவு முழுமை நிலை அடைந்து, இறைநிலையுணர்ந்து, இயற்கையோடு ஒன்றிப் பேரின்ப வாழ்வை எய்தமுடியும்.
நீண்ட நெடு நாட்களாகவே சில பல விசயங்களை சில பதிவுகளைப் பார்க்கும்போது விளக்கவேண்டும் அல்லது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து சிலவற்றை ஆரம்பித்து உங்களை குழப்பி முழுமையாய் முடிக்காமல் இருந்தேன். இரு நாட்கள் முன்பு ஒரு சிறு கையேடு கிடைத்தது. நானாக குழப்புவதைவிட கோர்வையாய் எளிமையாய் ஏற்கனவே சொன்னதை சொல்வது எளிது.
எனவே "உலக சமயம்" (உலகப் பொது அருள்நெறி சமயம் ஏன்?) என்ற தலைபில் அருட்தந்தை "வேதாத்திரி மகரிஷி" அவர்கள் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி: உலகப் பொது அருள்நெறி சமய அறக்கட்டளை, கும்பகோணம்.
ஆறாவது அறிவைப் பெற்ற மனிதப் பிறவியினது நோக்கம்
அறிவிலே முழுமைப் பெற்று மனம், உயிர், டெய்வம் எனும் மூன்று மறை பொருட்களையும் உணர்ந்து கொள்ளுதல்.
இறைநிலையே மனிதனிடத்தில் அறிவாக விளங்குகின்றது என்ற உண்மையினைத் தெரிந்து கொண்டு நிறைவு மற்றும் அமைதி பெறுதலாகும்.
உடல், உயிர், அறிவு முன்றும் ஒருங்கிணைந்து இயங்கௌம் ஒரு சிறப்பு நிலையே உடலாகும். அதில்
1. பசி
2. வெட்பதட்ப ஏற்றத்தாழ்வு
3. உடல் கழிவுப் பொருட்களின் உந்துதல் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் என மூவகையான உணர்ச்சிகள் உண்டாகின்றன. இது இயற்கை நியதி.
காலத்தோடு தக்கப் பொருட்களையும், இன நட்பையும் கொண்டுதான் பசி முதலிய மூவகை உணர்ச்சிகளையும், சமப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வகையில் ஏற்படும் மூவகைத் தேவைகளும் உடலியக்கத்தின் விளைவாக உடலிலிருந்தே தான் எழுகின்றன.
இதோடு உடலுக்கு வெளியே இருந்தும் வரக்கூடிய மூன்று தாக்குதல்களாலும் துன்பங்கள் எழலாம். அவை:
1. இயற்கைச் சீற்றம்
2, வேற்றுயிர் பகை
3. தற்செயலாக எதிர்பாராது ஏற்படும் மோதல் என்னும் விபத்து என்பனவாகும்.
இவ்வாறு உள்ளிருந்து எழும் மூன்றுவகையான தேவைகளையும் அவ்வப்போது காலந்தாழ்த்தாமல் தக்க பொருட்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்ளவும், வெளியிலிருந்து வரும் இயற்கைச் சீற்றம், வேற்றுயிர் பகை, விபத்து ஆகிய மூன்றுவகையான சங்கடங்களையும் தாங்கிக் கொள்ளவும், எதிர்த்து நின்றூ வெற்றி கொள்ளவும், மனிதன் ஐந்து வகையான இன்றீயமையாச் செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது. அவையாவன:
1. உணவு உண்னல்
2. உழைத்தல்
3. உறங்குதல்
4. உடலுறவு கொள்ளுதல்
5. மனதை ஆளுதல் எனபனவாகும்.
இந்த ஐவகைத் தொழில்களையும் அலட்சியம் செய்வதோ, மிகையாகக் கொள்வதோ, உடலுக்கும், மனதுக்கும் பொருந்தா உணர்வாகித் துன்பம் உண்டாக்கும். வாழ்வில் சிக்கல் பெருகும்.
இந்த ஐவகைச் செயல்களையும் முறையாகவும், ஒழுங்காகவும் ஆற்றுவதற்கு
1. உடலியக்க, மன இயக்க நியதிகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. தொடர்பு கொள்ளும் மக்களுடைய மற்றும் பொருட்களுடைய மதிப்பையும், தன்மைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. அணுக்களின் சேர்க்கையால் அமையும் எந்தப் பொருளும் ஒன்றோடு மற்றது நெருங்கும்போது, உரசும்போது அல்லது கலக்கும்போது எழும் விளைவுகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இத்தகைய அறிவின் விழிப்புடன் பொருட்களோடும் மக்களோடும் அளவு மற்றும் முறையோடு உறவுகொள்வதும், அனுபோகிப்பதும் நெறியான, சிக்கலற்ற துன்பம் விளையாத வாழ்வுக்கு இன்றியமையாதானவாக இருக்கின்றன. இந்த முறைகளில் வாழ்வில் இனிமையும், பொருத்தத்தையும் காத்து வாழ்ந்தால்தான் மனதில் அமைதி நிலவும். ஆன்மீகச் சிந்தனை ஓங்கும்; அறிவு முழுமை நிலை அடைந்து, இறைநிலையுணர்ந்து, இயற்கையோடு ஒன்றிப் பேரின்ப வாழ்வை எய்தமுடியும்.
Last edited: