கமல் - 50 , சிம்பு -25 , ராதிகா-30 : கலக்கமூட்டும் தொலைக்காட்சிகள்

Honeytamil

New member
கமல்-50 க்கு பிறகு கோடம்பாக்கத்திலே புது பீவர் கிளம்பியிருக்கு. ஷாம் ஒம்போதரை, சங்கவி புளியோதரை என்று ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொண்டு விழா நடத்த திட்டம் போடுகிறார்களாம். லேட்டஸ்ட்டாக சிம்பு கலைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைய போகிறதாம். இதனால் சிம்பு -25 என்ற நிகழ்ச்சியை நடத்தி, இன்டஸ்ட்ரியை கலங்கடிக்கலாமா என்ற திட்டத்திலிருக்கிறது அவரது வட்டாரம்.

இன்னொரு பக்கம் சின்னத்திரையின் முடிசூடா ராணியாக இருக்கும் ராதிகா, திரைக்கு வந்து முப்பது வருடங்கள் முடியப் போவதாகவும், அவருக்கும் ராதிகா-30 என்றொரு விழா எடுக்கலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.

ஏன் இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்? எல்லாம் தொலைக்காட்சிகள் படுத்தும் பாடு. மக்களை மகிழ்விக்க எதையாவது செய்ய வேண்டும் என்று மண்டையை குடைந்து கொள்கிறார்கள். கமல் போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு விழா எடுக்கும் போது ரசிகர்களுக்கும் அது பெரிய திருவிழாவாக இருக்கிறது. திரையுலகமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய கமல் விழா பற்றி கூட தனியாக ஒரு சர்ச்சை, இறக்கை கட்டி அலைகிறது கோடம்பாக்கத்தில். (அந்த மேட்டருக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட திட்டுகள் விழும் என்பதால் கப்சிப்) ஆனால், இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருப்பதால், இதே ஸ்டைலில் பல லட்சங்களை இறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம் வேறு பல தொலைக்காட்சிகள்.

போகிற போக்கை பார்த்தால் வையாபுரிக்கு கூட விழா எடுப்பார்கள் போலிருக்கிறது. ஹ¨ம்ம்ம்ம்ம்...:sprachlos020:
 
கூத்தாடிகள் என்ற சொல்லுக்கு மாறாதவர்கள். அவர்களுக்கும் எப்போதும் விளம்பரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். போததற்கு தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வேறு நிகழ்ச்சி பசி எடுத்து அலைந்து கொண்டிருப்பதால் விரைவில் அனைத்தும் நடக்கும்.
 
வரட்டும். ஆனால் நிகழ்ச்சிகள் சுவையாக இருக்கும்பட்சத்தில் பார்ப்பவர்கள் சந்தோஷப்படுவார்கள்.
 
மக்களை சந்தோஷப்படுத்த என்ன என்ன திட்டம் எல்லாம் போடுகின்றனர் நமது தமிழ் சேனல்கள். வாழ்க அவர்களது கலைச்சேவை.
 
பிரவிண் சொல்வது போல் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாம் என்ன நிகழ்ச்சி கொடுப்பது என்று தெரியமால் இது போன்று கொடுக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை
 
அந்த கமல் 50 சர்ச்சையை பற்றி கொடுங்களேன் தேன்தமிழ் (அப்படி ஒண்ணு இருந்தா...!!)
 
காதல் காட்சிகளில் ஆணும் பெண்ணும் இரண்டடி வித்தியாசத்தில் ஆடிப்பாடி நடித்த நம்மவர்கள் கமல் புண்ணியத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி இனிமேல் எங்கே கொண்டு சென்றுவிடும் என்று யோசியுங்கள்.
 
காதல் காட்சிகளில் ஆணும் பெண்ணும் இரண்டடி வித்தியாசத்தில் ஆடிப்பாடி நடித்த நம்மவர்கள் கமல் புண்ணியத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி இனிமேல் எங்கே கொண்டு சென்றுவிடும் என்று யோசியுங்கள்.

கமல் என்ற ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் நுழையாமல் இருந்தால், இன்று வரை தமிழ் சினிமாவில் காதல் காட்சிகளில் ஆணும் பெண்ணும் இரண்டடி வித்தியாசத்தில் ஆடிப்பாடி நடித்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ......

கமல் என்ற ஒருவரால்தான் இந்த மாற்றங்கள் என்று நீங்கள் சொன்னால் கமல் இன்னும் சந்தோஷப்படுவார்..
 
மன்மதன் இதை பார்ப்பவர்களின் நோக்கத்தை கொண்டே வளர்ச்சியா சீரழிவா என்று எடுத்துக்கொள்ளமுடியும். இளைஞர்கள் இதை வளர்ச்சி என்பார்கள். பெரியவர்கள் கலாச்சார சீரழிவு என்பார்கள். உங்கள் உறவினர் (இளம்பெண்) பொது இடத்தில் ஒரு இளைஞனுக்கு முத்தம் கொடுப்பதை காண்கின்றீர்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? வளர்ச்சி என்றா?
 
மன்மதன் இதை பார்ப்பவர்களின் நோக்கத்தை கொண்டே வளர்ச்சியா சீரழிவா என்று எடுத்துக்கொள்ளமுடியும். இளைஞர்கள் இதை வளர்ச்சி என்பார்கள். பெரியவர்கள் கலாச்சார சீரழிவு என்பார்கள். உங்கள் உறவினர் (இளம்பெண்) பொது இடத்தில் ஒரு இளைஞனுக்கு முத்தம் கொடுப்பதை காண்கின்றீர்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? வளர்ச்சி என்றா?

இந்த சீரழிவுகள் சினிமாவினால்தான் வருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்களா? இது நாகரீக மோகம். அதைத்தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள்.

உண்மை 50%, செயற்கை 50%, இதுதான் சினிமா!!!!
 
மன்மதன் இதை பார்ப்பவர்களின் நோக்கத்தை கொண்டே வளர்ச்சியா சீரழிவா என்று எடுத்துக்கொள்ளமுடியும். இளைஞர்கள் இதை வளர்ச்சி என்பார்கள். பெரியவர்கள் கலாச்சார சீரழிவு என்பார்கள். உங்கள் உறவினர் (இளம்பெண்) பொது இடத்தில் ஒரு இளைஞனுக்கு முத்தம் கொடுப்பதை காண்கின்றீர்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? வளர்ச்சி என்றா?

உங்களுக்கு தெரிந்து யாராவது கொடுத்திருக்கிறார்களா??
 
ஆஹா இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்ப போறங்களோ...

இதனால் பல ஏழைகளுக்கு தொழில் கிடைத்தால் நல்லது தான்.
 
இந்த சீரழிவுகள் சினிமாவினால்தான் வருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்களா? இது நாகரீக மோகம். அதைத்தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள்.

உண்மை 50%, செயற்கை 50%, இதுதான் சினிமா!!!!

சீரழிவுக்கு முக்கியமான காரணிகளுள் சினிமாவும் ஒன்று . பலருக்கு நேதாஜி அப்துல்கலாம் போன்றோரின் பிறந்தநாள் தெரியாமல் இருக்கும். நயன்தாரா போன்றோரின் பிறந்தநாள் கண்டிப்பாக தெரியும். இங்குதான் ஒரு திரியில் படித்தேன் யாரோ ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்போவதாக . ஏன் அவர்களுக்கு காந்திக்கோ அல்லது பகத்சிங் போன்றோருக்கு கோவில் கட்டும் எண்ணம் தோன்றவில்லை.
 
உங்களுக்கு தெரிந்து யாராவது கொடுத்திருக்கிறார்களா??


மன்மதன் நான் உங்களிடம் கேட்டது எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்றுதான். அதற்காக நான் பார்த்தது என்று அர்த்தமில்லை
 
எத பண்ணுனாலும் முகம் சுழிக்காம பார்க்கிற மாதிரி இருந்தால் சரி
 
எத பண்ணுனாலும் முகம் சுழிக்காம பார்க்கிற மாதிரி இருந்தால் சரி

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் அருண்
 
எத பண்ணுனாலும் முகம் சுழிக்காம பார்க்கிற மாதிரி இருந்தால் சரி

கண்களை மூடிக்கொண்டால் போதுமே, எதற்கு முகம் சுழிக்கணும்.
 
Back
Top