கமல்ஹாசனின் (காப்பி)யங்கள் - பகுதி 5

அப்பாவும் அம்மாவும்தானே கடவுள் அதான்
(நான் smilies எதும் போடமாட்டனே அப்புறம் அதுக்கு எதாவது சொல்லுவிங்க)
 
அப்பாவும் அம்மாவும்தானே கடவுள் அதான்
(நான் smilies எதும் போடமாட்டனே அப்புறம் அதுக்கு எதாவது சொல்லுவிங்க)

ஆமாங்க அப்பாவும் அம்மாவும் தானே கடவுள்..

மத்தவங்களைத்தான் யாராச்சும் எதுக்காச்சும் கடவுளா காண்பிக்கிறாங்க ..:lachen001::lachen001::lachen001:

ஸ்மைலி போடாட்டி என்ன? புகழ்வதற்கு ஒரு புள்ளி மட்டுமல்ல.. மௌனம் கூட ஒரு வய்ப்புதான். :icon_b::icon_b:
 
இப்படியான கட்டுரை ஒன்று நான் வெகு மாதங்கள் முன்பு பதித்த நியாபகம்.. கமலின் திரைப்படங்கள் பற்றிய விமர்சனம்.. அதற்கு ஏகபோக எதிர்ப்பு தெரிவித்த கமல் ரசிகர் பின் ஒரு காலத்தில் அதையெல்லாம் புரிந்து கொள்வார் என்று நம்பினேன்.

இன்று இந்த திரி அதற்குச் சாட்சி.

மகிழ்ந்தேன்..

திரியைப் படித்துவிட்டு என் கருத்திருந்தால் சொல்கிறேன். :)
 
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=371111&postcount=2110

ஒரு கதாசிரியரான சுஜாதா சொல்லி இருப்பதை நன்கு உண்ர்ந்து புரிந்து கொள்ளவும்.

கமல் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என்பதை நாம் நம்முடைய வசதிக்கேற்ப கற்பனை செய்து கொள்வதுதான் இத்தனைக்கும் அடிப்படைக் காரணம்.

ஹூமாயூனின் கல்லறை அமைப்பில் தாஜ்மஹால் போலத்தான் இருக்கும். ஷாஜகான் காப்பியடித்தார் எனச் சொல்லி விடலாம்.

கமல் தமிழ் சினிமாவை தலை நிமிர வைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் உங்கள் எதிர்பார்ப்பை அவர் மீது திணிப்பது உங்கள் தவறு.

கண்மணியோட சில வரிகளை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்


கமலின் அப்பாவி முகப் பாவனைகளை மாவுக்கட்டு வெளிப்படுத்த இயலாமல் தடுமாறுகிறது.. உயரமாய் இருக்கவேண்டுமென மாவு மெனக்கெடப்பட்டிருக்கிறது.. அவரது கன்னக்கதுப்பு, தாடை போன்றவை நடிப்பை வெளிப்படுத்த இயலாமல் குமுறுவதை காமிராவின் துல்லியம் கச்சிதமாய் படம் பிடித்திருக்கிறது. ஒருவேளை உயரமானவராக கிராஃபிக்ஸ், மற்றும் தோற்றப்பிழைகளைக் கொண்டு காட்டி இருக்கலாமோ என எண்ண வைக்கிறது.. அல்லது கமலை மிக உயரமானவராகக் காட்டாமல் சராசரி முஸ்லீமாக விட்டு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ!!!


ஜார்ஜ் புஷ்ஷை எல்லோருக்கும் தெரியும். அவரின் மேனரிஷம், பேச்சின் ஆழம், முடிவெடுக்கும் இன்ஸேன் ஜீனியஸ்னஸ் இதையெல்லாம் கமல் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்.

புஷ் வேடம் போட்டதினால் கமல் தவறு செய்து விட்டாரோ? சிவாஜியில் ரஜினி வெள்ளைக்காரராய் தோன்றியதற்குப் போட்டியோ என்ற எண்ணங்களையெல்லாம், கமல் சொன்னால்தான் சில விஷயங்களின் கோணங்களைச் சிந்திக்கத் தோன்றுகிறது என்பது முட்டுக் கொடுத்து நிற்க வைக்கிறது...

மேக்கப் கொஞ்சம் முகபாவனைகளை காட்ட அனுமதிக்கிறதுங்கறதைத் தவிர, தங்கை மச்சான் ஆகியோர் இறந்ததால் வரும் சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கொஞ்சமாத்தான் காட்டுது... (ஜென் துறவியோன்னு சந்தேகம் கூட வருதுன்னா பாத்துக்கங்களேன்)..

கடைசி சண்டைக் காட்சியில் மட்டும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார். ஹிரோஷிமா நினைவிருக்கா என ஃபிளெச்சர் கேட்க, முத்துத் துறைமுகம் (பியர்ல் ஹார்பர்) நினைவிருக்கா என இவர் கேட்பது நறுக்.. (அப்பதான் ஜெட் விண்ட்ஸ் பத்தி அமெரிக்கா காரங்களே தெரிஞ்சுகிட்டாங்க, தெரியுமா, இதைக் கமல் சொல்லலை.. நான் சொல்றேன்)..

மேக்கம் பரவாயில்லை ரகம். பாடி லேங்க்வேஜ் போகப் போக நல்ல முன்னேற்றம். ஆரம்பக் காட்சிகளில் ஜப்பானியர்களுக்கே உள்ள சுறுசுறுப்பு இல்லை.. .. (இதை எண் 5 ல் மறுபடி விவாதிப்போம்..)

இறுதிக் காட்சியில் ஜப்பானியராவே மாறிவிடுகிறார் கமல்... அதனால 2 இடத்தை ஜம்ப் பண்ணி 8 ல வந்து நிக்கிறார்..
.

கமலிடம் மட்டுமில்லை. நமக்குத் தெரிஞ்ச அத்தனை பேரிடமும் நமக்கு எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்குது. அதைச் சொல்லிச் சொல்லியே பலபேரை நாம டென்சனாக்கிடறோம். டென்சனாகிடறோம்.

உண்மையில் நாம் கடமைகளைச் செய்யணும். அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கணும். இதுதான் அமைதியான நிம்மதியான, சந்தோஷமான, நிறைவான வாழ்க்கைக்கே அஸ்திவாரம்.

ஆனால் நாம் மற்றவர்கள், அவர்களின் கடமை என்ன? அவர்கள் அதைச் செய்யலியே இதைச் செய்யலியே என்று அடுத்தவரின் கடமைகளையும், இதைச் சொல்ல உரிமை எனக்கு இருக்கு, அதைச் சொல்ல உரிமை எனக்கு இருக்கு என்று நமது உரிமைகளையும் பார்க்கிறோம்.

பல மனக் குழப்பங்கள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாவற்றிற்கும் இதுதான் காரணம்.

கொஞ்சம் மாத்தி யோசிச்சிப் பாருங்க..

உதாரணமா அந்த நீலவானம் பாடல்..

அவருக்கு அந்தக் காட்சி பிடித்து அதை நாமும் செய்யணும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம்,

அதை இரவிகுமார்கிட்ட சொல்லி, அவர் அதில வருமானம் இருக்கு என்று உணர்ந்து சரி செய்து விடலாம் என்று சொல்லி இருக்கலாம்.

கதையை தமிழ்படுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி நகாசு வேலைகள் செய்து அதில் அவருக்குத் தெரிந்த சில பல நுணுக்கங்கள் செஞ்சு கடை விரிக்கிறார். அவர் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொள்கிறார்.

நாம ஏன் தமிழ் சினிமாவை அவர்தான் தலை நிமிர்த்தணும் என்கிற கடமையை அவர் மேல் திணிக்கணும்? தேர்தலில் வாக்குறுதி கொடுத்து ஓட்டு கேட்கிறவன்கிட்ட நாம கேட்கணும் ஏன்னா அங்க டீலிங் இருக்கு, ஆனால் கமல் காப்பியடிச்சா தமிழ் சினிமாவுக்கு கெட்ட பேரு என்பது நம்ம ஆசை நிறைவேறாதா கடுப்புதானே தவிர வேற ஒண்ணுமில்லை..:lachen001::lachen001::lachen001:

இனியாவது அடுத்தவங்க மேல நம்ம ஆசையைத் திணிக்காம இருக்கணும்
 
அண்ணே... கண்மணி, கமலோட நடிப்பை ரசிக்கிறாங்க.... இதை வெச்சு பார்த்தா,

கமலோட ரசிகர்கள் எப்படியெல்லாம் கமலை ரசிக்கிறார்கள்?

1. கமலின் மிகத்திறமையான நடிப்பு
2. கமலின் வேறுபட்ட கதைக்களம்
3. கமலின் வித்தியாசமான முயற்சிகள்.

இந்த மூன்றின் கீழ் ரசிகர்கள் வருவார்கள்... நடிப்பை ரசிக்கத் தெரிந்த யாராக இருந்தாலும், அது கண்மணியாக இருந்தாலும் கமல் மட்டுமல்ல, மற்ற நடிகர்களின் திறமையான நடிப்பையும் ரசிப்பார்கள்... எனக்குத் தெரிந்து கமல்ரசிகர்களே, “காஞ்சிவரத்தில் பிரகாஷ்ராஜ் நல்லா நடிச்சான்” “பிதாமகனில் சூர்யா நல்லா நடிச்சான்” என்று சொல்லக் கேட்டிருக்கிரேன்.
ஆனால் இந்த வேறுபட்ட கதைக்களம், வித்தியாசமான முயற்சி ஆகியவற்றில்தான் இப்போ பிரச்சனையே...

அதற்கு அவர் துளியும் சொந்தமில்லாதவர்... ஜஸ்ட் ஒரு கைமாத்தி விடுபவர் மாதிரி, அங்கிருபப்தை இங்கு கொண்டுவருகிறார்... சொந்தமாக யோசிக்க எண்ணம் மட்டுமல்ல, திறமையும் கூட கமலுக்குக் கிடையாது என்பதை எல்லாரும் உணரவேண்டும்....

சரி.... நீங்களே சொல்லுங்கள்... ஏன் கமலால் தனது சொந்த திறமையை முழுமையாக உபயோகப்படுத்தி அல்லது ஒரு சிறந்த எழுத்தாளரின் கதையை உபயோகப்படுத்தி சினிமா எடுக்க முடியவில்லை???

( ஹேராம், ஆளவந்தான் என்று சொல்வீர்கள். அவைகளும் காப்பியடிக்கப்பட்ட லிஸ்டில் இருப்பதை இத்திரியிலேயே பார்க்கலாம்..)
(பி.மு. குறிப்பு: மருத நாயகம் வந்தாலொழிய அதைப் பற்றி பேசமுடியாது!!)

கமலிடம் மட்டுமில்லை. நமக்குத் தெரிஞ்ச அத்தனை பேரிடமும் நமக்கு எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்குது. அதைச் சொல்லிச் சொல்லியே பலபேரை நாம டென்சனாக்கிடறோம். டென்சனாகிடறோம்.

இத்திரியில் அறிவுரை கூறுவதெல்லாம் கமலுக்கு அல்ல. கமலை மிகப்பெரிய சக்தி என்றும் திரையுலகை வாழ்விக்க வந்த கடவுள் என்றும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு... அவர்களிடம், “கமல் அப்படியெல்லாம் இல்லை” என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனில், கமலிடம் எதிர்பாராதீர்கள் என்பது மறைமுகமாக அர்த்தமாகிவிடுகிறது. ஆக, தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எனக்கு சார்பாக எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது!! :)

கமல் என்றால் வித்தியாசம் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் வரை கமல் காப்பியடித்துக் கொண்டுதான் இருப்பார்.

உண்மையில் நாம் கடமைகளைச் செய்யணும். அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கணும். இதுதான் அமைதியான நிம்மதியான, சந்தோஷமான, நிறைவான வாழ்க்கைக்கே அஸ்திவாரம்.

இதைத்தான் பதிவு முழுக்க சொல்லிக் கொண்டிருக்கிறேன். நமது கடமைகளைச் சரிவரசெய்யணும்... அடுத்தவர் உரிமைகளை மதிக்கணும்!! கமல் அப்படி செய்கிறாரா?? அடுத்தவருக்குச் சொந்தமான உரிமையை மதித்து தனது படங்களில் நன்றி போடுகிறாரா?? இல்லை... எனில் அவர் தொழில்ரீதியாக உரிமைகளை மிதிப்பவர். இந்த கருத்துப்படியும் நீங்கள் எனக்கே சார்பாக வாதாடுகிறீர்கள்!

உதாரணமா அந்த நீலவானம் பாடல்..

அவருக்கு அந்தக் காட்சி பிடித்து அதை நாமும் செய்யணும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம்,

அதை இரவிகுமார்கிட்ட சொல்லி, அவர் அதில வருமானம் இருக்கு என்று உணர்ந்து சரி செய்து விடலாம் என்று சொல்லி இருக்கலாம்.

தவறில்லை... தவறேயில்லை... ஆனால் ஒரு உத்தியைக் கொண்டு இன்னொன்றுதான் படைக்கவேண்டுமே தவிர, இருப்பதையே எழுதக்கூடாது. சிறுகதைக்கு பல உத்திகள் உள்ளன. குறிப்பாக இறுதி வார்த்தையில் மொத்த சிறுகதையின் முடிவும் மாறுவது ஒருவகை உத்தி. அதைப் பயன்படுத்தி இன்னொன்றுதான் உருவாக்கவேண்டுமே தவிர, இருப்பதையே காப்பியடிக்கக் கூடாது.. இன்னும் சொல்லப்போனால் வெண்பா என்பது ஒரு உத்தி... அதற்காக ஔவையாரின் ஒரு பாடலை அப்படியே எடுத்துக் கொண்டு தனது என்று சொல்லக் கூடாது!!

சோ, முன்பே சொன்னதுதான்.... தழுவுங்கள்!!! நன்றாகத் தழுவுங்கள்!!!! ஆனால் மூலத்திற்கும் காப்பிக்கும் வித்தியாசப்படுத்தித் தழுவுங்கள்!! அப்படியே ஒற்றுமை இருந்தால் மன்சாட்சிப்படி நன்றி கூறி தழுவுங்கள்

கதையை தமிழ்படுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி நகாசு வேலைகள் செய்து அதில் அவருக்குத் தெரிந்த சில பல நுணுக்கங்கள் செஞ்சு கடை விரிக்கிறார். அவர் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொள்கிறார்.

அதே அதே!! முற்றீலும் உண்மை!! அப்படியெனில் கமலை ஒரு பெரிய ஐகானாக நாம் பார்ப்பது நமது தவறுதானே??? அப்படியெனில் கமலைவிட, கமலை உயர்த்திப் பிடிப்பவர்களே குற்றம் செய்கிறார்கள்.. கமலிடம் ஒரிஜினல் படைப்பு வேண்டி நிராகரித்தால், நிச்சயம் தனது திறமையை அல்லது இன்னொரு கதாசிரியன் திறமையை மதிப்பார்!!!

கமல் காப்பியடிச்சா தமிழ் சினிமாவுக்கு கெட்ட பேரு என்பது நம்ம ஆசை நிறைவேறாதா கடுப்புதானே தவிர வேற ஒண்ணுமில்லை.

தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயர் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு சினிமா ரசிகர்களுக்கும் உண்டு!! அதைக் கெடுக்கும் கமல் போன்ற காப்பிகேட்டுகளால் எங்களைப் போன்றவர்கள் கடுப்பாவதில் தவறேயில்லை.... மிகத் துளி தவறுகூட இல்லை!!!
 
இப்படியான கட்டுரை ஒன்று நான் வெகு மாதங்கள் முன்பு பதித்த நியாபகம்.. கமலின் திரைப்படங்கள் பற்றிய விமர்சனம்.. அதற்கு ஏகபோக எதிர்ப்பு தெரிவித்த கமல் ரசிகர் பின் ஒரு காலத்தில் அதையெல்லாம் புரிந்து கொள்வார் என்று நம்பினேன்.

இன்று இந்த திரி அதற்குச் சாட்சி.

மகிழ்ந்தேன்..

திரியைப் படித்துவிட்டு என் கருத்திருந்தால் சொல்கிறேன். :)

நீங்க சொல்றதப் பார்த்தா, அந்த கமல் ரசிகர் நான் தானோன்னு சந்தேகமா இருக்கு... அந்த இணைப்பைக் கொடுங்க!!!
 
அதெல்லாம் தூக்கியாச்சு அப்பவே ஆதவா.. அதுக்கு காரணம் அப்ப வந்த ரசிகர்கள் பிரச்சனை தான்.. அதுல நீங்க இருந்தீங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா என்ன?:cool:

இணைப்பு இருக்குதான்னு தேடித்தான் பார்க்கனும்..
 
அதெல்லாம் தூக்கியாச்சு அப்பவே ஆதவா.. அதுக்கு காரணம் அப்ப வந்த ரசிகர்கள் பிரச்சனை தான்.. அதுல நீங்க இருந்தீங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா என்ன?:cool:

இணைப்பு இருக்குதான்னு தேடித்தான் பார்க்கனும்..

அட... நெஜமாவே மறந்து போச்சுங்க.... அட்லீஸ்ட் எதைப் பற்றி ஆரம்பித்தது, யார் ஆரம்பித்ததுன்னு தனிமடல்லயாவது சொல்லுங்க தேடியாவது பார்க்கிறேன்.
 
அட இந்த திரி இன்னுமா ஓடிகிட்டு இருக்கு. ஆச்சர்யம் தான். எப்படியோ புகழ் இழந்த கமலை இன்னும் நினைக்க வைக்கிறது. அதற்க்கு ஆதவாவுக்கு நன்றி.
நாளை உங்களின் கவிதையும் திருடப்படலாம்!! அப்பொழுது நீங்கள் இதைச் சொல்லுவீர்களா என்று தெரியாது!
ஒருவேலை என் கவிதை திருடபட்டால் என்னை விட ச ந்தோசபடர ஆளு வேறு யாரும் கிடையாது (பின்ன போயும் போயும் என் கவிதையை திருடும் முட்டாள் ஒருத்தன் இருக்கானு சந்தோசம் தான்)

ஒருத்தன் இங்கிலிஷைப் பார்த்து காப்பியடிச்சா, அவனைப் பார்த்து தமிழ்ல இன்னொருத்தன் காப்பியடிக்கிறான்... விளங்குமாய்யா தமிழ் சினிமா?
ஹி ஹி முதலில் அந்த இங்கிலிசு காரன் எங்கிருந்து சுட்டான் என்று கண்டுபிடிக்கனும். ஆதவா நீங்க இப்ப போன டீப்பை விட இன்னும் டீப்பா போனா இங்கிலீஸ்காரனும் இங்கிருந்தா சுட்டிருப்பானு கண்டுபிடிக்கலாம் என்பது என் கருத்து.

ஆனால் ஒரு உத்தியைக் கொண்டு இன்னொன்றுதான் படைக்கவேண்டுமே தவிர, இருப்பதையே எழுதக்கூடாது.
நீங்க சொன்ன அந்த யுக்தி எங்கிருந்து சுட்டது என்று தெரியாது. அதுவும் சுட்டதாக இருக்க வேன்டும் என்று நான் நம்புகிறேன்.
சினிமா மட்டுமல்ல இங்கிருந்து சையின்ஸ் கூட பலது சுட்டு வெள்ளைகாரன் இப்ப அதுக்கு மூலகர்தா ஆகி விட்டதாகவும் சொல்லறாங்க.

பொய் கூட பொருந்த பேசனும்னு சொல்லுவாங்க. அதுபோல காப்பி கூட காப்பி அடிச்சதுனு தெரியாத அளவுக்கு செஞ்சா அதுவும் ஒரு சூப்பர் திறமைதான்.

கமலை மிகப்பெரிய சக்தி என்றும் திரையுலகை வாழ்விக்க வந்த கடவுள் என்றும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு...
முதலில் இந்த விசயத்தை நாம் தெளிவு படுத்தி கொள்வோம். கமல் ரசிகர்கள் கமலை கன்மூடிதனமாக நம்புவது இல்லை. கடவுள் போல் பாவிப்பதும் இல்லை. அப்படி ஒரு கலாச்சாரத்தை கமல் விரும்புவதும் இல்லை.

அப்படியெனில் கமலை ஒரு பெரிய ஐகானாக நாம் பார்ப்பது நமது தவறுதானே???

திறை உலகத்தில் கமலை விட ரஜனியை தான் மக்கள் ஐக்கானா பார்த்தார்கள். ரஜனியை முதலம்மைராகா ஆசைப்பட்டவர்கள் அதிகம். ரஜனியும் நல்ல நடிகர் நன்றாக ஸ்டைல் பன்னுவார் ஆனால் கமலை விட எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று சொல்ல முடியாது (என் சொந்த கருத்து மட்டுமே). ஆனால் பாருங்க யார் பாப்புலர் ரஜனியா கமலா? நிச்சயம் பொது மக்களை பொருத்தவரை ரஜனி தான் பாப்புலர். கமல் ரசிகர்கள் என்பது மிக மிக குறைவாக இருக்கும்.

இது இன்றல்ல அப்ப இருந்து இப்படி தான். எம் ஜி ஆரை விட சிவாஜி சிறந்த நடிகர் ஆனால் எம் ஜி ஆர் மக்களிடம் ஏற்படுத்தி இம்பேக்ட் முதவர் ஆனதும் அவர் ஆரம்பித்த கட்சி இன்றும் பாப்புலர் ஆக இருக்கு.

அதனால் நீங்க சொன்னது கமல் ஒரு ஐகான் என்பது நிஜமல்ல. பாவம் சுமாரான பாப்புலாரிட்டி மட்டும் தான் வச்சிருக்காரு, என்னை போன்ற குறைந்த அளவு ரசிகர்களை மட்டுமே வச்சிருக்கும் அவர மட்டும் போட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்களே. சரி சரி ஓட்டுங்க ஓட்டுங்க அப்படியாச்சும் கமல் பெரிய ஐகான் ஆகனும் என்று ஆசைபடுகிறேன்.

அப்புறம் ஆதவா கம்முனு நாமளே ஒரு சினிமா எடுத்தா என்ன?
படத்தின் பெயர்: "கமலின் காப்பியங்கள்"
தயாரிப்பாளர் + பைனான்சியர் : ஆதவா
டைரக்டர் + உதவி டைரக்டர்கள் : தமிழ்மன்ற குசும்பர்கள்.
கமலாக நடிக்க நல்ல பர்சனாலிட்டியான ஆளு வேனுமுல்ல அதுக்கு நானே நடிச்சுகறேன். (நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்)
கதாநாயகியா மூனு பேரு வேனும் என் சாய்ஸ் ஐஸ்வர்யா ராய், அசின் அப்புறம் நல்ல பிகரா இருக்கும் புதுமுகம் ஒன்னு
கதை : தலைப்பிலேயே இருக்கு 100 ஆங்கில படங்களிருந்து காப்பி அடிச்சிருவோம்.

டீல் ஓக்கேவா (கலந்துகறவங்க பேர் கொடுங்கப்பா) இத வச்சு ஒரு படைப்பு போட முயற்ச்சிகிறேன்.
 
அட இந்த திரி இன்னுமா ஓடிகிட்டு இருக்கு. ஆச்சர்யம் தான். எப்படியோ புகழ் இழந்த கமலை இன்னும் நினைக்க வைக்கிறது. அதற்க்கு ஆதவாவுக்கு நன்றி.

ஒருவேலை என் கவிதை திருடபட்டால் என்னை விட ச ந்தோசபடர ஆளு வேறு யாரும் கிடையாது (பின்ன போயும் போயும் என் கவிதையை திருடும் முட்டாள் ஒருத்தன் இருக்கானு சந்தோசம் தான்)

.
இதை கொஞ்சம் ரிவர்சில் யோசிச்சு பாருங்க. இங்க சொந்தமாக பதிய படும் ஒரு படைப்ப எடுத்து பிறதளத்தில் ஒருவர் பதித்து அறியாத விசயம் எங்கிருந்து வந்தால் என்ன என்று சொல்லலாம். சரி இன்னும் ஒரு ஜோக்கான மேட்டர் சொல்கிறேன்.
நான் இங்கு மன்றத்தில் ஒரு படைப்பு பதிக்கிறேன். அதற்க்கு பின்னூட்டமே திருப்திகரமாக இல்லை. அதையே ஒருவரு சுட்டு வேறு ப்ளாக்கில் அவர் பெயரில் பதிக்கிறார் அங்கு இங்கத்த விட உருப்பினர்கள் அதிகம் பின்னூட்டம் இட்டு அவரை உற்சாக படுத்தி இருக்கிறார்கள். இதை கான நேர்ந்த எனக்கு எப்படி இருக்கும்.

காப்பி பேஸ்ட் கமான்ட் என்று ஒன்று இல்லையென்றால் அனைவருமே படைப்பாளி ஆக முடியும் என்று நம்புகிறேன்.

:confused::confused::confused::confused:
 
ஆதவா அவர்தான் கமல் ரசிகர்னு சொல்லிட்டார்ல
அப்ப இப்படித்தானே மாத்தி மாத்தி சொல்லி நம்மள குழப்புவாரு:lachen001::lachen001:
 
அப்புறம் ஆதவா கம்முனு நாமளே ஒரு சினிமா எடுத்தா என்ன?
படத்தின் பெயர்: "கமலின் காப்பியங்கள்"
தயாரிப்பாளர் + பைனான்சியர் : ஆதவா
டைரக்டர் + உதவி டைரக்டர்கள் : தமிழ்மன்ற குசும்பர்கள்.
கமலாக நடிக்க நல்ல பர்சனாலிட்டியான ஆளு வேனுமுல்ல அதுக்கு நானே நடிச்சுகறேன். (நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்)
கதாநாயகியா மூனு பேரு வேனும் என் சாய்ஸ் ஐஸ்வர்யா ராய், அசின் அப்புறம் நல்ல பிகரா இருக்கும் புதுமுகம் ஒன்னு
கதை : தலைப்பிலேயே இருக்கு 100 ஆங்கில படங்களிருந்து காப்பி அடிச்சிருவோம்.

டீல் ஓக்கேவா (கலந்துகறவங்க பேர் கொடுங்கப்பா) இத வச்சு ஒரு படைப்பு போட முயற்ச்சிகிறேன்.

லொள்ளு வாத்தியார் ஹீரொன்னா கண்மணி வில்லி வேஷம் கட்டுவாங்களோ????:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:
 
அப்புறம் ஆதவா கம்முனு நாமளே ஒரு சினிமா எடுத்தா என்ன?
படத்தின் பெயர்: "கமலின் காப்பியங்கள்"
தயாரிப்பாளர் + பைனான்சியர் : ஆதவா
டைரக்டர் + உதவி டைரக்டர்கள் : தமிழ்மன்ற குசும்பர்கள்.
ஆதவா குறித்துக்கொள்ளவும் :sprachlos020::sprachlos020::sprachlos020:

கமலாக நடிக்க நல்ல பர்சனாலிட்டியான ஆளு வேனுமுல்ல அதுக்கு நானே நடிச்சுகறேன். (நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்)

இந்த வரிகளில் லொள்ளு அதிகம் இருப்பதால் இதனை நீக்குமாறு பொறுப்பாளர்களுக்கு மன்றத்தில் அழகானவர்களின் சார்பாக பரிந்துரைக்கிறேன்

கதாநாயகியா மூனு பேரு வேனும் என் சாய்ஸ் ஐஸ்வர்யா ராய், அசின் அப்புறம் நல்ல பிகரா இருக்கும் புதுமுகம் ஒன்னு
கதை : தலைப்பிலேயே இருக்கு 100 ஆங்கில படங்களிருந்து காப்பி அடிச்சிருவோம்.

டீல் ஓக்கேவா (கலந்துகறவங்க பேர் கொடுங்கப்பா) இத வச்சு ஒரு படைப்பு போட முயற்ச்சிகிறேன்.

இளைங்ஞ்ர்களின் சார்பாக மென்மையாக கண்டிப்பதோடு

பறவை முனியம்மா, கொள்ளக்குடி கருப்பாயி, புதுமுகமும் ஒரு 60 வயதுக்கு குறையாமல் இருக்க
ஆவனை செய்கிறேன்

:wuerg019::lachen001::lachen001::lachen001::lachen001::D:D:D:D
 
இதைத்தான் பதிவு முழுக்க சொல்லிக் கொண்டிருக்கிறேன். நமது கடமைகளைச் சரிவரசெய்யணும்... அடுத்தவர் உரிமைகளை மதிக்கணும்!! கமல் அப்படி செய்கிறாரா?? அடுத்தவருக்குச் சொந்தமான உரிமையை மதித்து தனது படங்களில் நன்றி போடுகிறாரா?? இல்லை... எனில் அவர் தொழில்ரீதியாக உரிமைகளை மிதிப்பவர். இந்த கருத்துப்படியும் நீங்கள் எனக்கே சார்பாக வாதாடுகிறீர்கள்!

!

இந்த இடத்திலேயே நீங்க தடம் புரண்டு விட்டீங்களே..


நான் சொன்னபடி பார்த்தா, த்மிழ் படம் எப்படி இருக்கணும்னு நாம் எண்ணுகிறோமோ அதை ஆதரிப்பதுதான் நம்ம கடமை. கமலை பற்றி பிரச்சாரம் செய்வதில்லை. முடிஞ்சா நாம நாலு நல்ல படம் எடுக்கணும்.

அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று பேசுவது ரொம்ப சுலபம். ஆனால் இது சரி இவர் சரி என்று சொல்லுவது மிகக் கடினம். ஆனால் இந்த கடினமான பகுதிதான் உண்மையான முன்னேற்றத்திற்கு வழி.

அந்த வகையில் நல்ல படங்களைப் பற்றி அதன் நுணுக்கங்களைப் பற்றி எழுதுங்க..

கண்மூடித்தனமா யாரையும் நம்பவும் வேண்டாம். திட்டவும் வேண்டாம்.

அதுதான் உங்க உடலுக்கும் மனசுக்கும் ஏன் உலகத்துக்கே நல்லது.


சரி.... நீங்களே சொல்லுங்கள்... ஏன் கமலால் தனது சொந்த திறமையை முழுமையாக உபயோகப்படுத்தி அல்லது ஒரு சிறந்த எழுத்தாளரின் கதையை உபயோகப்படுத்தி சினிமா எடுக்க முடியவில்லை???

அவர் ஏன் எடுக்கலைன்னு அவருக்குத்தான் வெளிச்சம். கமல் இன்னதைச் செய்யணும் என்று சொல்ல கமல் என்ன மக்கள் பணி, அரசியல் இப்படி மக்களைப் பாதிக்கும் தொழிலில் இருக்கிறாரா? இல்லை அவர் நாம் செலவு பண்ணி அவரைத் தமிழ் நாட்டின் பிரதிநிதியா அனுப்புகிறோமா?

சினிமா அவரோட தொழில். அதில் அவர் பல உத்திகளைப் பயன்படுத்தி அவர் வாழ்கிறார். அதைச் சரியா அவர் செஞ்சா சரவணபவன் சாம்பார் மாதிரி நாம ருசிச்சி சாப்பிடுவோம். காசு குடுப்போம். சரியா செய்யலைன்னா அடுத்த ஹோட்டல் தேடி போய்கிட்டே இருப்போம்.
 
அண்ணா... ஒரு படத்தின் அல்லது ஒருவரின் அல்லது ஒருவரின் செயலை குறை கூறும் பொழுது பொதுவாக குறைகூறுபவர்கள் எதிர்கொள்வது “உன்னால் முடியுமா?” போன்ற எதிர்கேள்விகள்தான். அதைத்தான் தங்களிடமிருந்தும் இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறேன்.
கமல் காப்பியடிப்பது தவறு, சொந்தமாக படமெடுக்க வேண்டும் என்று நான் சொன்னால், “முடிஞ்சா நாம நாலு நல்ல படம் எடுக்கணும்” என்று சொல்கிறீர்கள்.. லொள்ளு வாத்தியாரை வைத்து நான் படமெடுத்தால் சினிமா துறை தாங்குமா?? கொஞ்சம் யோசிக்கவும்!!

உங்கள் கருத்தில் சில உடன்பாடு உண்டு..
அதாவது கண்மூடித்தனமா யாரையும் நம்பவும் வேண்டாம்..... நிச்சயமாக.... கமலை விட மிகத் திறமைசாலிகள் மொத்த சினிமாத்துறையில் உண்டு. அவர்களை நம்பலாம்... இன்ஸ்ப்ரேஷன் இருப்பதை வெளிக்காட்டும் நபர்களை மதிக்கலாம்... நம்பிக்கை வைக்கலாம்... மறைப்பவர்களை எப்படி நம்புவது!!! சரியான வார்த்தை!!

ஆனால் திட்டவும் வேண்டாம்... அதாவது கண்மூடித்தனமாகத் திட்டவும் வேண்டாம்... என்பது சரியானதுதான் என்றாலும் இதுவரையிலும் கண்மூடித்தனமாகத் திட்டவில்லை (ஆக்சுவலி திட்டவேயில்லை.... கமல் இப்படி செய்கிறார் என்று எல்லாருக்கும் ரிவீல் செய்கிறேன்.)

அப்பறம்!!! கமல் இன்னதைச் செய்யணும்னு நாம் சொல்லக் கூடாது அல்லது எதிர்பார்க்கக் கூடாது... என்பது உண்மையானால், கமல் ரசிகர்கள் அவரை எதிர்பார்ப்பதும் கூடாது... எதிர்பார்ப்பு இல்லாத எந்த கமல் படமும் வெளிவருவதில்லை என்பதை இச்சமயத்தில் கூறிக் கொள்கிறேன். கமலின் படங்கள் சர்ச்சைகளைக் கடந்துதான் வருகின்றன. அது ஒருவேளை “ஹைப்”க்காகக் கூட இருக்கலாம்... ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாகக் கூட இருக்கலாம்!!!

நான் என்ன சொல்கிறேன் எனில், கமலிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்!! ஏனெனில் அவர் எப்படியும் காப்பியடிக்கத்தான் போகிறார்...... எதிர்பார்ப்புகள் குறையும் பொழுது சொந்த சரக்கு தரவேண்டும் என்று தூண்டுதல் வரும்!!! ஆனால் இதெல்லாம் நடக்கிற கதையில்லை!

சினிமா அவரோட தொழில்... ஆனால் அது அவருக்காக அல்ல, ரசிகர்களுக்காக... உங்கள் உவமைப்படி, கமலின் ஹோட்டல் சாம்பார் ருசியாக இருக்கிறது. ஆனால் அடுத்தவன் ஹோட்டலிலிருந்து “சுடப்பட்டது”
 
அண்ணா... ஒரு படத்தின் அல்லது ஒருவரின் அல்லது ஒருவரின் செயலை குறை கூறும் பொழுது பொதுவாக குறைகூறுபவர்கள் எதிர்கொள்வது “உன்னால் முடியுமா?” போன்ற எதிர்கேள்விகள்தான். அதைத்தான் தங்களிடமிருந்தும் இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறேன்.
கமல் காப்பியடிப்பது தவறு, சொந்தமாக படமெடுக்க வேண்டும் என்று நான் சொன்னால், “முடிஞ்சா நாம நாலு நல்ல படம் எடுக்கணும்” என்று சொல்கிறீர்கள்.. லொள்ளு வாத்தியாரை வைத்து நான் படமெடுத்தால் சினிமா துறை தாங்குமா?? கொஞ்சம் யோசிக்கவும்!!

சினிமா அவரோட தொழில்... ஆனால் அது அவருக்காக அல்ல, ரசிகர்களுக்காக... உங்கள் உவமைப்படி, கமலின் ஹோட்டல் சாம்பார் ருசியாக இருக்கிறது. ஆனால் அடுத்தவன் ஹோட்டலிலிருந்து “சுடப்பட்டது”

ஆதவா நான் எப்பவுமே உன்னால முடியுமா என முன்னிலையில் கேட்பதேயில்லை. என்னால் முடியுமா? நம்மால்முடியுமா என தன்னிலையிலேயே பார்க்கிறேன். கேட்டுக்கொள்கிறேன்.. பட்ர்க்கையை பற்றி குறை சொல்வதில்லை..

இங்க கூட நம்மால் முடிந்தால் என்றுதான் சொல்லி இருப்பேன். ஏன்னா நான் எப்பவும் சிந்திப்பது இந்தக் கோணத்தில்தான். வாதாடும் போது கூட நீ - நான் என பிரித்துப் பார்க்காமல் நாம் எனத்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இதற்குக் காரணமும் சொல்லி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை நான் - நாம் என்று பேசும்பொழுது குற்றம் காண முயற்சிக்கவில்லை.. விஷயங்களை அலசுகிறோம்..

நீ .. நீங்கள் என்று பேசும் பொழுது உல்ட்வா பிரச்சனையை தள்ளி வச்சிட்டு மனுஷங்களை குறை சொல்லறோம்.


நீங்கள் கமலின் இந்த இந்த படங்களின் கதைகள் இன்னின்ன படங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று மக்களுக்குத் தெரிவிக்க எழுதலாம். அதில் தப்பு இல்லை.

ஆனால் கமல் செஞ்சது சரியா தவறா என்று சொல்லனும்னா அது சரியா தவறான்னு நமக்குச் சரியா தெரிஞ்சிருக்கணும்.

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு விவகாரம். மொத்தமே இதுவரைக்கும் உலக சினிமாவில் உள்ள கதைகளை 32 பிரிவுகள்தான் என்பதை நம்ம பென்சன்னா சொல்லி இருக்கார் என்பதை நீங்கள் கவனிக்கணும். எனவே புதுமை என்பதை முதல்ல என்ன என்று புரிஞ்சுக்கணும்.

இன்வென்சன் - இன்னோவேசன் இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். இரண்டுமே கிரியேட்டிவிடிதான். அதாவது கண்டுபிடிப்பு என்பது புதுதாகச் செய்வது அது இன்வென்சன். ஆனா இன்னோவேசன் என்பது புதுமை அதாவது ஏற்கனவே இருக்கறதை கொஞ்சமா மாத்தி அதனால எளிய முறையில் பயனை அதிகரிப்பது...அதாவது மேம்படுத்துவது.

கமல் இன்வெண்டர் கண்டிப்பா இல்லை. சில இடங்களில் இன்னோவேட்டரா இருந்திருக்காரு.. அதைத்தான் புதுமைன்னு சொல்றமே தவிர கமல் எல்லாத்தையும் மிகப் புதுசா செய்வாருன்னு அவரே சொல்லலை. நான் இதை இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்தேன் என்றுதான் அவர் பேட்டியில் சொல்வாரே தவிர இது முழுக்க முழுக்க புதியது. உலகத்தில யாருமே செய்யாதது என்று சொல்ல மாட்டார்.

நாமே ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொள்வது. அது பொய் என அறியும் பொழுது நாம அதை நிறைவேத்தாதவங்களை குறை சொல்றது... கல் தடுக்கி விட்டது என்று சொல்வது போல அபத்தமானது.

லொள்ளு வாத்தியார் சாகஸங்கள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியை விட இரசமானவை. சரியான கைகளில் கிடைக்கலை. அதுக்காக அவர் எழுத்துக்களை நீங்க குறைச்சு மதிப்பிடக்கூடாது.
 
நீ, நீங்கள், நான், நாங்கள் போன்றவற்றை விடுத்து, நீங்கள் சொன்ன ஒரு விஷயம், ”முடிஞ்சா நாலு நல்ல படம் எடுக்கணும்...” அதன்பிறகு ”அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று பேசுவது ரொம்ப சுலபம். ஆனால் இது சரி இவர் சரி என்று சொல்லுவது மிகக் கடினம்.”

இவைகள் நாசூக்காக சொல்லப்பட்டவை... அதாவது நீங்கள் அல்லாத இன்னொருவர் (அது நானாக்வே இருந்தாலும்) இந்த வரியைச் சொல்வதாக இருந்தால் “ குறை சொல்றத நிறுத்திட்டு நாலு நல்ல படங்களை எடுத்து காண்பிங்க பார்ப்போம்” என்கிற தொனி அது!! அதனால்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறேன். சரி, இதை விடுங்க.... அடுத்து!!

///இதுவரைக்கும் உலக சினிமாவில் உள்ள கதைகளை 32 பிரிவுகள்தான்////

முப்பத்திரண்டாவது.... நூற்றியிருபத்திரண்டே இருக்கட்டும். முன்பே சொன்னது போல, ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்கள்!!!!! அதன் நரம்பு வேண்டுமானால் ஏழாக இருக்கலாம் ஆனால் அத்தனைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு..... அப்படி வித்தியாசமாக இசைப்பவரைத்தான் இசையமைப்பாளர் என்று சொல்லமுடியும்!!! இன்றைக்கும் தேவா, ஸ்ரீகாந்த் போன்றவர்கள் ஏன் முன்னேறவில்லை??? அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காப்பிகேட்கள்!! சொந்த சரக்கில்லாமல் எத்தனை நாளைக்குத்தான் தாட்டமுடியும்? ஆனால் இன்று ரஹ்மானோ, இளையராஜாவோ, ஏன் யுவனோ கூட தாங்களே நினைத்தால் கூட காப்பியடிக்க இயலாது!!! கமலால் ஏன் முப்பத்திரண்டிலிருந்து ஒன்றை வித்தியாசமாக சமைக்கமுடியவில்லை??? முப்பத்திரண்டில் ஒன்றைத்தானே எடுக்கமுடிந்தது???

இப்போதும் சொல்கிறேன். தெனாலிக்கும் what about bob க்கும் ஆயிரம் ஒற்றுமைகள் உண்டு. இதை முப்பத்திரண்டில் ஒன்று என்று எப்படி சொல்லமுடியும்?? படைப்பு என்பதே, ஒன்றிலிருந்து இன்னொன்று (உருவாகி, அல்லது ) தனித்து நிற்பதுதான்!! உங்களது கவிதையிலிருந்து நான் கவிதை எழுதலாம்... உங்கள் கவிதையையே எழுதக்கூடாது!!!

///இன்வென்சன் - இன்னோவேசன் இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். இரண்டுமே கிரியேட்டிவிடிதான். அதாவது கண்டுபிடிப்பு என்பது புதுதாகச் செய்வது அது இன்வென்சன். ஆனா இன்னோவேசன் என்பது புதுமை அதாவது ஏற்கனவே இருக்கறதை கொஞ்சமா மாத்தி அதனால எளிய முறையில் பயனை அதிகரிப்பது...அதாவது மேம்படுத்துவது. ////

இதை சரியா சொல்லணும்னா,

சைக்கிள் கண்டுபிடிச்சது இன்வென்சன், சைக்கிளை வெச்சு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிச்சது இன்னோவேசன்... சரிதானா??? இரண்டுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். இதைப்பற்றியும் சொல்லிவருகிறேன். இன்வென்சனுக்கும் இன்னோவேசனுக்கும் வேறுபாடில்லாததை என்னவென்று அழைக்க?

கமல் இன்வெண்டர் கண்டிப்பா இல்லை..... அது சரியானதுதான்
சில இடங்களில் இன்னோவேட்டரா இருக்காரு.... இதுவும் சரிதான்,...
ஆனால் கமல் பெரும்பாலான இடங்களில் இன்வெண்டராகவும் இல்லை, இன்னோவேட்டராகவுமில்லை...

இன்னும் சொல்லப்போனால், 1980 களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகன் எனும் அந்தஸ்துதான் அவரை இத்தனை நாளும் “பெரிய நடிகன்” என்று ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறது. அவைகள் இல்லையேல் கமலே கிடையாது. அப்போதிருந்த கமல், தனித்தன்மை வாய்ந்தவர். ஒரிஜினாலிட்டியுடன் இருந்தவர். தன்னைத் தனியாகக் காண்பிக்க அவர் முற்பட்ட முயற்சிகள் முழுக்க அவரது தனித்தன்மை இழந்த முயற்சிகள்.. இது இப்போது யாருக்கும் தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் நிச்சயம் பின்னொருநாள் வெளிச்சமாகும்!!!

///அதைத்தான் புதுமைன்னு சொல்றமே தவிர கமல் எல்லாத்தையும் மிகப் புதுசா செய்வாருன்னு அவரே சொல்லலை. நான் இதை இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்தேன் என்றுதான் அவர் பேட்டியில் சொல்வாரே தவிர இது முழுக்க முழுக்க புதியது. உலகத்தில யாருமே செய்யாதது என்று சொல்ல மாட்டார்.////

யாரும் ”உலகத்திலேயே செய்யாதது” என்று சொல்லவும் மாட்டார்கள். அப்படியே சொன்னாலும் அது படத்தின் வெற்றிக்காக இட்டுகட்டிப் பேசப்படுவதாக இருக்கும்... ஆனால் பாருங்கள், கமல் எல்லாத்தையும் புதுசா செய்வாருன்னு அவரே சொல்லமாட்டார்... படத்தின் டைட்டில் வழியே சொல்லிவிடுகிறார்!!! இது மறுக்கமுடியாதது!!!
 
அருமையான விவாதம் ..ஒரு பார்வையாளனாக காணும் போது தான் பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிகின்றது ..இது போன்ற வாதங்கள் மூலம் அறிந்தது கமல் எனும் தனி மனிதனின் உண்மைகள் ...நாம் இன்று உணர்ந்து கொளவது ஒன்றுதான் பிரதி எடுப்பது என்பது ஒரு துறையில் நிகழ்வது என்பதில்லை பல துறைகளிலும் நிகழ்கிறது அவ்வாறு நம்மை சுற்றி நிகழும் போது அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்வது என்பது தான்.... இந்த வாதத்திற்கு தேவையான கருத்தை நம் நண்பர்கள் பதித்துள்ளனர் .இது தொடர்ந்தால் பார்வையாளனாக தொடர்கிறேன் ....
 
Back
Top