கமல்ஹாசனின் (காப்பி)யங்கள் - பகுதி 5

கடவுளே இந்த ஆதவாவுக்கு மட்டும் ஏன் ஒரு நாளுக்கு நாற்பத்தி எட்டு மணி நேரம் கொடுக்குற ..... ரொம்ப யோசிக்கிறார், ரொம்ப படிக்கிறார் ... ரொம்ப ரொம்ப பதிகிறார் ..... கடவுளே காப்பாத்து ............ :sprachlos020: .......... கமலை ....:sport-smiley-002:

ஆதவா சினிமா சி ஐ டி யாய் இருந்தவராம்... பல நடிகர்களை பத்தி பல் துலக்கி துப்பி உள்ளாராம் :redface: சாரி துப்பு துலக்கி உள்ளாராம்.. :aetsch013::lachen001:
 
ஆதவா

பிறகு எதுக்குங்க டைட்டில்ல “உலக நாயகன்” ”உனிவர்சல் ஹீரோ”... முன்பு ”ஆஸ்கர் நாயகன்” இருந்தது... “காதல் இளவரசன்” (காதல் மன்னன்?) உம் இருக்கிறது..


இவை எல்லாம் அவரின் நடிப்புக்கு தரும் பட்டங்கள். "உலக எழுத்தாளன்", "சிந்தனை கதையாளன்" என்றா பட்டம் உள்ளது? நடிப்பில் அவர் ஒரு இமயம். அதை குறை கூற ஒன்றும் இல்லை. நான் கடந்த 15 வருடங்களாய் ரஜினியின் ரசிகன். இப்பொது கொஞ்சம் கொஞ்சமாய் கமலின் ரசிகராக மாறிக் கொண்டிருக்கிறேன். நானும் நீங்கள் சொன்ன "தெனாலி"யின் ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். கதை அப்படியே காப்பியடிக்கப்பட்டது தான். ஆனால் ஆங்கில நாயகனின் நடிப்பையும், கமலின் நடிப்பையும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. கமலை நல்ல நடிகராக நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்.

மற்ற நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்(ல்)கிறார்கள். பொதுவாக வெளியில் கம்பெனிகளில் அவரவரின் "செயல்பாடு தெரிவு" Performance Apparaisal என்று செய்வார்கள். அதில் 5 க்கு எவ்வளவு என்று நிர்ணயம் செய்வார்கள். அதில் 3 க்கு "Meet the expectation", 4 - Above Expectation, 5 - Exceeding expectation.

அதாவது உங்கள் வேலையை மட்டும் நீங்கள் சரியாக செய்தால் உங்களுக்கு 3 தான். உங்கள் வேலையும் தாண்டி உங்களின் பங்களிப்புக்கு தான் 4 / 5 கிடைக்கும். இதை தான் கமலும் செய்கிறார். நடிப்போடு நிறுத்தாமல் பாடல் எழுதுதல், பாடுதல், கதை என்று தன்னை ஒரு பந்தொழில் வித்தகனாக தன்னை முன் நிறுத்டுகிறார். அதற்கு பாராட்டலாமே தவிர. குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

திரைப் படத்தில் எழுத்து வரும் போது "கதை. மூலதனத்துக்கு நன்றி" என்று போட்டு இருந்தால்.... உங்களின் நிலை என்ன? இப்போதும் அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள்.அவர் இதுவரை நடித்த நடித்த அத்தனை படங்களும் காப்பி தான்.
ராமாயணம் தமிழுக்கு காப்பி தான். ஆனால் அதில் கம்பரின் எழுத்து, தமிழின் சுவை என்று தான் பார்த்தோமே தவிர காப்பி என்று ஒதுக்கவில்லை. காப்பியங்களே ஒருவேளை "காப்பி" என்ற சொல்லிலிருந்து தான் வந்ததோ?? :-)


அது போல...நீங்கள் சொன்ன கமலின் படங்கள் அனைத்தும் தமிழுக்கு காப்பி என்றாலும் கமல் என்ற ஒரு கலைஞனின் வாசனையை தடவி வரும் போது அந்த படைப்பின் தரம் மேலும் உயருகிறது.

எவருக்கு தெரியும்? உலகம் முழுக்க இன்று நாம் புகழும் "திருக்குறள்" ஒரு மொழி பெயர்ப்பாகக் கூட இருக்கலாமே? மூலம் அழிந்து போய் இருக்கலாமே? இது மொழி பெயர்ப்பு இல்லை என்று நாம் ஒரு போதும் வாதம் செய்ய முடியாது. அல்லது அது ஒரு கூட்டு முயற்சியாகக் கூட இருக்கலாம். யார் கண்டார்? ஆனால்... அப்படியான ஆராய்ச்சி வீண். அவரின் படைப்புக்கு நாம் தலை வணங்குகிறோம். அப்படியே இதுவும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி எவரும் "A Film By XXXXX" என்று யாரும் போடக் கூடாது. இது 1000க்கும் மேற்பட்டவர்களின் கூட்டு முயற்சி. அப்படி இருக்க அதை எப்படி ஒரு மனிதன் தன் படம் என்று
சொல்ல முடியும்?
எனவே "A Film by following 1000 persons" என்று சொல்லும் காலம் வரை "கதை - கமல்" என்று தான் வரும்.
 
ஒருவர் திருடினாலும் பரவாயில்லை, எங்களுக்கு அவர் திறமைசாலியாகத் தெரிகிறார் என்கிறீர்கள்!!!
நாளை உங்களின் கவிதையும் திருடப்படலாம்!! அப்பொழுது நீங்கள் இதைச் சொல்லுவீர்களா என்று தெரியாது!

லென்ராம்!! உங்கள் வாதம் நன்றாக இருக்கிறது. அதற்கு முன்னர், நான் கேட்ட 25 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!! பிறகு கொஞ்சம் “டீடெய்லாக” பேசலாம்!
 
ஒருவர் திருடினாலும் பரவாயில்லை, எங்களுக்கு அவர் திறமைசாலியாகத் தெரிகிறார் என்கிறீர்கள்!!!
நாளை உங்களின் கவிதையும் திருடப்படலாம்!! அப்பொழுது நீங்கள் இதைச் சொல்லுவீர்களா என்று தெரியாது!

தமிழிலேயே திருடினால் தான் அதை திருட்டு என்று சொல்வேன். என் கவிதையை யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் அது எனக்குக் கிடைத்தப் பெருமை. அப்படி மொழி பெயர்ப்பவன் அவனின் மொழிக்கேற்ப ரிதங்களோடு பெயர்த்தால்.. அது அவனுக்குப் பெருமை. அதை தான் கமலும் செய்கிறார். அவன் என் பெயரைப் போட்டு நன்றி என்று சொன்னால்.. அது அவனின் பெருந் தன்மை. அப்படி இல்லாவிட்டாலும் அவனின் மொழிப் புலமையை யாரும் குறை சொல்ல முடியாதே!


ஆதவாவின் வாதம் அருமையாகத் தான் உள்ளது. கண் மூடி சொல்லாமல் எடுத்துக் காட்டுகளுடன் கூடிய உங்கள் விவாதம் அருமை.. நீங்கள் கிளப்பும் பிரச்சனைகள் பட்டையை கிளப்புகிறது.

நீங்கள் கர்ணன் போல.! Right person on the wrong side!
 
கமல்ஹாசனின் (காப்பி)யங்கள் ==== காப்பியங்களே ஒருவேளை "காப்பி" என்ற சொல்லிலிருந்து தான் வந்ததோ??

oh god!
எப்போது உங்கள் தலைப்பை மாற்றினீர்கள்? நானும் காப்பியங்கள்- காப்பி என்று சொல்லிஉள்ளேன், அதற்காக உங்களுக்கு நான் "நன்றி" என்று சொல்லமாட்டேன். இது இரண்டு பேருமே ஒன்றாக செய்த சிந்தனை!
 
காப்பின்னு எப்படி சொல்றீங்க ஆதவா....இன்னைக்கு தமிழ்நாட்டுல நூத்துக்கு 60 பேர் ஆங்கிலம் தெரியாதவங்க(படிச்சவங்களையும்தான் சொல்றேன்). உங்களப்போல தேடித்தேடி நல்லப் படங்களப் பாக்காதவங்க. அவங்களுக்கு நதிமூலம், ரிஷிமூலம் பாக்கத் தெரியாது...பாக்கவும் நேரமில்ல....24 மணி நேரமும் இண்டெர்நெட்டுக்கு முன்னால இருக்கிறவங்க சொல்றதக் கேக்கவும் அவங்களுக்கு நேரமில்ல. திரையிலப் பாக்கறதை அனுபவிக்கறவங்க.

சமஸ்கிருத ராமயாணத்தைக் காப்பிப் பண்ணக் கம்பரைப்போல(நன்றி லெனின்) ஏன் கமல் இருக்கக்கூடாது...அவர் மேல மட்டும் ஏன் உங்களுக்கு இவ்ளோ....

எண்ட்டெர்டென்மென்....பொழுதுபோக்குன்னு வந்துட்டாலே அது காதல் மாதிரி....காதல்லயும், போர்லயும்.....எந்தக் கட்டுப்பாடும் கிடையாது...வுடுங்க......பாருங்க...முடிஞ்சா. எஞாய் பண்ணுங்க....முடிஞ்சா....
 
ஆதவனுக்கு ஒரு குட்டு

இந்த திரி கமல் மிது தனிப்பட்ட தாக்குதல்..
வெளி நாட்டு படங்களை போல இறக்குமதி செய்வது பெரிய குற்றமில்லை.. அதை விட உள்நாட்டு காப்பிகள் அதுவும் ஒரே மொழியில் வரும் காப்பிகள் தான் அபத்தம்.. தமிழன் வாழ்ந்தால் தட்டிகொடுங்கள்..
 
காப்பின்னு எப்படி சொல்றீங்க ஆதவா....இன்னைக்கு தமிழ்நாட்டுல நூத்துக்கு 60 பேர் ஆங்கிலம் தெரியாதவங்க(படிச்சவங்களையும்தான் சொல்றேன்). உங்களப்போல தேடித்தேடி நல்லப் படங்களப் பாக்காதவங்க. அவங்களுக்கு நதிமூலம், ரிஷிமூலம் பாக்கத் தெரியாது...பாக்கவும் நேரமில்ல....24 மணி நேரமும் இண்டெர்நெட்டுக்கு முன்னால இருக்கிறவங்க சொல்றதக் கேக்கவும் அவங்களுக்கு நேரமில்ல. திரையிலப் பாக்கறதை அனுபவிக்கறவங்க.

சமஸ்கிருத ராமயாணத்தைக் காப்பிப் பண்ணக் கம்பரைப்போல(நன்றி லெனின்) ஏன் கமல் இருக்கக்கூடாது...அவர் மேல மட்டும் ஏன் உங்களுக்கு இவ்ளோ....

எண்ட்டெர்டென்மென்....பொழுதுபோக்குன்னு வந்துட்டாலே அது காதல் மாதிரி....காதல்லயும், போர்லயும்.....எந்தக் கட்டுப்பாடும் கிடையாது...வுடுங்க......பாருங்க...முடிஞ்சா. எஞாய் பண்ணுங்க....முடிஞ்சா....

பாரதியார் என்ன சொன்னார்

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

அதைத்தானே கமல் செஞ்சுகிட்டு இருக்கார். பாரதி சொன்னதை செய்தால் ஆதவா அழுவதா?

அவரை விடுங்க.. நம்ம மன்றத்துச் சாம்பவி என்ன சொன்னாங்க?


வேண்டுமென கேட்டால் நான் வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான் வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை வெண்டாமரையே... !



நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே! கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..

ஆக
அப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே

அப்படி நான் மட்டுமே இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வெண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே!(வெண்டாமரையே)

அதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..!! ஆகவே உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் தமிழில் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நான் பழமாவேன்... இல்லாவிட்டால் வெம்பி உதிரும் பிஞ்சுதான்.


கமல் படம் சொல்லும் செய்திகள் சமூகத்திற்கு தேவையா இல்லையா என்று ஆராய்ந்தால் அதில் அர்த்தம் இருக்கு. அதன் மூலம் என்ன என்று ஆராய்ந்தால் அர்த்தம் இருக்கு. ஆனால் குற்றம் சுமத்தறது தப்பு!!!
 
திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னும் சொல்லி இருக்காங்க
 
தமிழிலேயே திருடினால் தான் அதை திருட்டு என்று சொல்வேன். என் கவிதையை யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் அது எனக்குக் கிடைத்தப் பெருமை. அப்படி மொழி பெயர்ப்பவன் அவனின் மொழிக்கேற்ப ரிதங்களோடு பெயர்த்தால்.. அது அவனுக்குப் பெருமை. அதை தான் கமலும் செய்கிறார். அவன் என் பெயரைப் போட்டு நன்றி என்று சொன்னால்.. அது அவனின் பெருந் தன்மை. அப்படி இல்லாவிட்டாலும் அவனின் மொழிப் புலமையை யாரும் குறை சொல்ல முடியாதே!


ஆதவாவின் வாதம் அருமையாகத் தான் உள்ளது. கண் மூடி சொல்லாமல் எடுத்துக் காட்டுகளுடன் கூடிய உங்கள் விவாதம் அருமை.. நீங்கள் கிளப்பும் பிரச்சனைகள் பட்டையை கிளப்புகிறது.

நீங்கள் கர்ணன் போல.! Right person on the wrong side!


உங்கள் கவிதையை மொழிபெயர்த்தால் ”மூலம் : லென்ராம்” என்று போடுவார்கள்... அப்படி பெருமைப் படுவதில் தவறேயில்லை. உங்கள் கவிதையை இன்னொருவன் உபயோகப்படுத்தி பெயர் வாங்கிக் கொண்டால் பிறகு நீங்கள் எதற்கு எழுதவேண்டும்!! இதுதான் என் வாதம் லெனின்!!

” தழுவுங்கள்!!! மூலத்தின் பெயரைச் சொல்லி தழுவுங்கள்!!! என்னுடைய கதை என்று ஏமாற்றாதீர்கள்..” இதை ஒரு அறிவுரையாக சினிமாவுக்குச் சொல்லுகிறேன்... நான் சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை என்பதால் சினிமா ரசிகர்களிடம், அப்படி ஏமாற்றுபவர்களை நிராகரியுங்கள் என்கிறேன்!!! சரிதானே?

காப்பின்னு எப்படி சொல்றீங்க ஆதவா....இன்னைக்கு தமிழ்நாட்டுல நூத்துக்கு 60 பேர் ஆங்கிலம் தெரியாதவங்க(படிச்சவங்களையும்தான் சொல்றேன்). உங்களப்போல தேடித்தேடி நல்லப் படங்களப் பாக்காதவங்க. அவங்களுக்கு நதிமூலம், ரிஷிமூலம் பாக்கத் தெரியாது...பாக்கவும் நேரமில்ல....24 மணி நேரமும் இண்டெர்நெட்டுக்கு முன்னால இருக்கிறவங்க சொல்றதக் கேக்கவும் அவங்களுக்கு நேரமில்ல. திரையிலப் பாக்கறதை அனுபவிக்கறவங்க.

சமஸ்கிருத ராமயாணத்தைக் காப்பிப் பண்ணக் கம்பரைப்போல(நன்றி லெனின்) ஏன் கமல் இருக்கக்கூடாது...அவர் மேல மட்டும் ஏன் உங்களுக்கு இவ்ளோ....

எண்ட்டெர்டென்மென்....பொழுதுபோக்குன்னு வந்துட்டாலே அது காதல் மாதிரி....காதல்லயும், போர்லயும்.....எந்தக் கட்டுப்பாடும் கிடையாது...வுடுங்க......பாருங்க...முடிஞ்சா. எஞாய் பண்ணுங்க....முடிஞ்சா....

இராமாயணத்தை நீங்கள் எழுதினாலும் அது காப்பியென்று ஆகாது.. அவை பொதுப்படைப்புகள்!! திருக்குறளுக்கு ஆயிரம் பேர் விளக்கம் தரலாம்... ஆனால் ஆயிரத்தில் ஒருவன் பரிமேலழகரை காப்பியடித்தால் அதை காப்பியென்று சொல்லாமல் “அடடே!! உரை அருமையாக இருக்கிறதே!! “ என்று யாராவது சொல்வார்களா???

கமல் படம் என்றால் பொழுது போக்குக்கும் மீறிய ஒரு கலைத்தன்மை இருப்பதாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது... வெறும் பொழுதுபோக்குதான் என்றால் எப்படியோ ஒழியுங்கள்,, ஆனால் கலைப்படம் என்று காப்பியடிக்காதீர்கள் என்கிறேன்.

ஆதவனுக்கு ஒரு குட்டு

இந்த திரி கமல் மிது தனிப்பட்ட தாக்குதல்..
வெளி நாட்டு படங்களை போல இறக்குமதி செய்வது பெரிய குற்றமில்லை.. அதை விட உள்நாட்டு காப்பிகள் அதுவும் ஒரே மொழியில் வரும் காப்பிகள் தான் அபத்தம்.. தமிழன் வாழ்ந்தால் தட்டிகொடுங்கள்..

மறுபடியுமா????
விருமாண்டி!! திரிமுழுக்க அடிக்கடி சொல்லிவருகிறேன். கமல்மீது தாக்குதலல்ல... இது கமலின் செயல்மீது தாக்குதல்!!! வெளிநாட்டு படங்களைக் காப்பியடிப்பதால் குற்றமில்லை என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது!!! உங்கள் கருத்துப்படி கமல் மிகவும்... மிகவும் நல்ல செயல் செய்பவர்தான்!

பாரதியார் என்ன சொன்னார்

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

அதைத்தானே கமல் செஞ்சுகிட்டு இருக்கார். பாரதி சொன்னதை செய்தால் ஆதவா அழுவதா?

அவரை விடுங்க.. நம்ம மன்றத்துச் சாம்பவி என்ன சொன்னாங்க?


வேண்டுமென கேட்டால் நான் வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான் வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை வெண்டாமரையே... !



நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே! கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..

ஆக
அப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே

அப்படி நான் மட்டுமே இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வெண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே!(வெண்டாமரையே)

அதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..!! ஆகவே உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் தமிழில் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நான் பழமாவேன்... இல்லாவிட்டால் வெம்பி உதிரும் பிஞ்சுதான்.


கமல் படம் சொல்லும் செய்திகள் சமூகத்திற்கு தேவையா இல்லையா என்று ஆராய்ந்தால் அதில் அர்த்தம் இருக்கு. அதன் மூலம் என்ன என்று ஆராய்ந்தால் அர்த்தம் இருக்கு. ஆனால் குற்றம் சுமத்தறது தப்பு!!!


அண்ணே..

பாரதியார், தாகூரின் கவிதைகளை தமிழில் எழுதும்பொழுது “தனது” என்று சொல்லவில்லை.
எத்தனையோ ஆங்கில கவிதைகள் பாரதி படித்திருக்கக் கூடும். அதனை தமிழ்படுத்தி நாந்தான் எழுதினேன் என்று அன்று பாரதி சொல்லியிருந்தால் இன்று நம்மாட்கள் கிழிகிழியென்று கிழித்திருப்பார்கள்

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்றார் பாரதி.... அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல மேலைநாட்டு மேதைகளின் புத்தகங்களை மொழிபெயர்க்கிறார்கள்!!! இலக்கிய அளவில் ”காப்பி” இருப்பதில்லை!

பாரதி எப்பொழுதும் காப்பியடிக்கச் சொல்லமாட்டார்... கொண்டு வந்து சேருங்கள் என்றால் தமிழ்படுத்துங்கள் என்று அர்த்தம்தான்... அதற்காக அதனை உரிமை கொண்டாடுங்கள் என்று அர்த்தமில்லை!!

அடுத்து,

கமல் படங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி பேசவே நான் வரவில்லை!! அப்படியிருந்தால் எத்தனை படங்கள் மிஞ்சும்??? இருக்கட்டும்!!

ஆனால் காப்பியடிப்பதன் மூலம் கமல் உயருகிறார் என்று குற்றம் சொல்வது தப்பு என்று நீங்கள் சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது.!
 
திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னும் சொல்லி இருக்காங்க

அதான் மலேசியா சிங்கப்பூர்னு கலை”டூர்” போடறாங்களே பாஸ் ;)
 
பாருங்க ஆதவா! உங்க கேள்வி கணைகள கண்டு மன்றத்துக்கு வராதவா எல்லாம் வந்துட்டா பாருங்கோ!! :lachen001::lachen001::D
 
கமல் படம் சொல்லும் செய்திகள் சமூகத்திற்கு தேவையா இல்லையா என்று ஆராய்ந்தால் அதில் அர்த்தம் இருக்கு. அதன் மூலம் என்ன என்று ஆராய்ந்தால் அர்த்தம் இருக்கு. ஆனால் குற்றம் சுமத்தறது தப்பு!!!

நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் ஆராய கூடாதுன்னு சொல்லுவா...
 
அதான் மலேசியா சிங்கப்பூர்னு கலை”டூர்” போடறாங்களே பாஸ் ;)

அப்ப டூர் போறது பிலிம் பெஸ்டிவல்லுன்னு போய் படம் பாக்குறது எல்லாம் இதுக்குத்தானா? :icon_ush:
 
அப்ப டூர் போறது பிலிம் பெஸ்டிவல்லுன்னு போய் படம் பாக்குறது எல்லாம் இதுக்குத்தானா? :icon_ush:

அதெல்லாம் முன்னே தாங்க... இப்பல்லாம் வீட்ல உட்கார்ந்துட்டே பார்க்கிறாங்களாம்!!

இப்ப பட டிஷ்கஷனுக்கு எதுக்கு பத்து பேரைக் கூப்படறாங்க?? பத்து பேரும் பத்து படம் பார்த்திருப்பாங்க... அதிலிருந்து ஒவ்வொரு சீனா உருவி...... படம் உருவாகறதே இப்படித்தாங்க!!
ஒண்ணுமில்ல... நீங்க ஒரு பத்து உலகத் திரைப்படம் பார்த்தீங்கன்னா, அதில எத்தனை படத்திலிருந்து அடிச்சிருக்காங்கன்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க.

தமிழ் சினிமாவுல ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லாருக்கும் (கமலையும் சேர்த்துதான்) தனது சொந்த திறமை மேல நம்பிக்கையே கிடையாது!! பலபேரு ஈயடிச்சாங்காப்பிங்கதான்!!

ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க..

செல்லுலார்னு ஒரு ஹாலிவுட் படம் வந்தது. (இத்தனைக்கும் அது தமிழ் டப்பிங்கில் வந்தது!!) அதை அச்சு அசல் அப்படியே “வேகம்” அப்படிங்கற படத்தில காப்பியடிச்சாங்க... அதில என்ன குறையோ தெரியலை, தானைத்தலைவர் ஜே.கே. ரித்தீஸ் நடிச்ச “நாயகன்” படம் வேகம் படத்தோட காப்பி!!! ஒருத்தன் இங்கிலிஷைப் பார்த்து காப்பியடிச்சா, அவனைப் பார்த்து தமிழ்ல இன்னொருத்தன் காப்பியடிக்கிறான்... விளங்குமாய்யா தமிழ் சினிமா?

அதென்னவோ நாயகன் பேர்ல வந்த இரண்டு படமும் அச்சு அசல் காப்பிதான் போங்க...
 
கமல் படம் என்றால் பொழுது போக்குக்கும் மீறிய ஒரு கலைத்தன்மை இருப்பதாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது... வெறும் பொழுதுபோக்குதான் என்றால் எப்படியோ ஒழியுங்கள்,, ஆனால் கலைப்படம் என்று காப்பியடிக்காதீர்கள் என்கிறேன்.



அண்ணே..

பாரதியார், தாகூரின் கவிதைகளை தமிழில் எழுதும்பொழுது “தனது” என்று சொல்லவில்லை.
எத்தனையோ ஆங்கில கவிதைகள் பாரதி படித்திருக்கக் கூடும். அதனை தமிழ்படுத்தி நாந்தான் எழுதினேன் என்று அன்று பாரதி சொல்லியிருந்தால் இன்று நம்மாட்கள் கிழிகிழியென்று கிழித்திருப்பார்கள்

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்றார் பாரதி.... அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல மேலைநாட்டு மேதைகளின் புத்தகங்களை மொழிபெயர்க்கிறார்கள்!!! இலக்கிய அளவில் ”காப்பி” இருப்பதில்லை!

பாரதி எப்பொழுதும் காப்பியடிக்கச் சொல்லமாட்டார்... கொண்டு வந்து சேருங்கள் என்றால் தமிழ்படுத்துங்கள் என்று அர்த்தம்தான்... அதற்காக அதனை உரிமை கொண்டாடுங்கள் என்று அர்த்தமில்லை!!

அடுத்து,

கமல் படங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி பேசவே நான் வரவில்லை!! அப்படியிருந்தால் எத்தனை படங்கள் மிஞ்சும்??? இருக்கட்டும்!!

ஆனால் காப்பியடிப்பதன் மூலம் கமல் உயருகிறார் என்று குற்றம் சொல்வது தப்பு என்று நீங்கள் சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது.!

இங்கதான் ஆதவா தொழில் என்ன என்பது முக்கியமாகிறது.

கமல் படைப்பாளி அல்ல நடிகர் என்பதை இன்னுமே நீங்க புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அடிப்படைக் காரணம்.

நடிப்பு என்பதில் இரண்டு வகை உண்டு..

ஒன்று... ஏற்கனவே அறிந்த ஒருவர் போலவே காப்பியடித்தல்.. (உதாரணமா ஆட்டோ டிரைவரா நடிச்சா ஆட்டோ டிரைவர் மாதிரியே நடை உடை பாவனைகளை மாத்திக்கணும்)

இன்னொன்னு நாம் அறியாத பாத்திரங்கள் (ஒரு அயல்கிரகவாசி இப்படி கற்பனை பாத்திரங்கள்)

ஆக நடிப்பு என்பதே காப்பி என்னும் பொழுது... கமல் காப்பியடிக்கிறார் என்பது ஒரு தகவலே தவிர.. நீங்க உண்மையில் எதை ஆராயணும்னா..

கமல் காப்பி அடிச்சி சொதப்பிய விஷயங்களை மட்டுமே பேசணும். சொதப்பலில்லாம காப்பியடிச்சி இருந்தா கமல் சூப்பரா நடிக்கறார்னு தானே அர்த்தம்?
 
இங்கதான் ஆதவா தொழில் என்ன என்பது முக்கியமாகிறது.

கமல் படைப்பாளி அல்ல நடிகர் என்பதை இன்னுமே நீங்க புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அடிப்படைக் காரணம்.

நடிப்பு என்பதில் இரண்டு வகை உண்டு..

ஒன்று... ஏற்கனவே அறிந்த ஒருவர் போலவே காப்பியடித்தல்.. (உதாரணமா ஆட்டோ டிரைவரா நடிச்சா ஆட்டோ டிரைவர் மாதிரியே நடை உடை பாவனைகளை மாத்திக்கணும்)

இன்னொன்னு நாம் அறியாத பாத்திரங்கள் (ஒரு அயல்கிரகவாசி இப்படி கற்பனை பாத்திரங்கள்)

ஆக நடிப்பு என்பதே காப்பி என்னும் பொழுது... கமல் காப்பியடிக்கிறார் என்பது ஒரு தகவலே தவிர.. நீங்க உண்மையில் எதை ஆராயணும்னா..

கமல் காப்பி அடிச்சி சொதப்பிய விஷயங்களை மட்டுமே பேசணும். சொதப்பலில்லாம காப்பியடிச்சி இருந்தா கமல் சூப்பரா நடிக்கறார்னு தானே அர்த்தம்?

தாமரை அண்னா..

கமல் படைப்பாளி அல்ல என்பது உண்மைதான்... ஏனெனில் படைப்பாளி எப்பொழுதும் அடுத்தவர் அறிவைத் திருடமாட்டான்.

ஆனால் கமல் ஒரு நடிகர் மட்டுமே படைப்பாளி அல்ல என்பதை எந்தவொரு கமல் ரசிகர்களும் ஒத்துக்கொள்ளவேமாட்டார்கள்.!! சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு டைட்டிலில் புத்திசாலித்தனமாக

”எழுத்து - கமல்ஹாசன்” என்பதை இணைத்திருக்கிறார். அவர் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, அமைத்திருக்கிறார்... இன்னும் பல படங்களுக்கு கோஸ்ட் டைரக்டராக பணிபுரிந்திருக்கிறார்.
வெறும் நடிப்பு மட்டுமே வழங்கும் கமல்ஹாசன் இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும்??/ தானும் ஒரு படைப்பாளி என்பதைக் காட்டத்தானே??

தவிர,

அவரது நடிப்பைக் காப்பியடிப்பதைப் பற்றி நான் பேசவரவில்லை... நடிப்பு என்பதே பிரதியெடுத்தல்தானே....
கதையைக் காப்பியடிப்பதைத்தான் பேசுகிறேன்.

கதை வேறு, நடிப்பு வேறு என்பது அறிவீர்கள்!! ஒரு உதாரணம் சொல்லணும்னா,...

நாயகன் படம், “தி காட்ஃபாதர்” படத்தின் அப்பட்டமான காப்பி
நாயகனில் கமலின் நடிப்பு மர்லன் பிராண்டோவின் காப்பி....

இதில் நடிப்பு காப்பியடிக்கப்படுதலைக் கூட பெரிதாக யாரும் பேசவில்லை.. ஆனால் கதை காப்பியடிக்கப்படுதல்???
 
ஆதவா சார் உங்கள் திரிக்கு எதிர்ப்பு அதிகமாகுதுனு நினைக்கிறேன்
இத மாதிரி மாற்று கருத்து வரும்பொழுதுதான் அந்த திரியின் மீது ஆர்வம் அதிகமாகும்
ஆதவா சார் தாமரை அவர்களுக்கு நீங்கள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
 
ஆதவா சார் உங்கள் திரிக்கு எதிர்ப்பு அதிகமாகுதுனு நினைக்கிறேன்
இத மாதிரி மாற்று கருத்து வரும்பொழுதுதான் அந்த திரியின் மீது ஆர்வம் அதிகமாகும்
ஆதவா சார் தாமரை அவர்களுக்கு நீங்கள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

ஏங்க... என்னையெல்லாம் சார் நு கூப்பிட்டா அநிருத்தை அண்ணானு கூப்பிடுவீங்க போலிருக்கே!!! :eek::D
ஆதவா ந்னே கூப்பிடுங்க சார்!! (மதி யை அங்கில்னு கூப்பிட்டாலும் தப்பில்லையாம்! :D)
 
ஏங்க... என்னையெல்லாம் சார் நு கூப்பிட்டா அநிருத்தை அண்ணானு கூப்பிடுவீங்க போலிருக்கே!!! :eek::D
ஆதவா ந்னே கூப்பிடுங்க சார்!! (மதி யை அங்கில்னு கூப்பிட்டாலும் தப்பில்லையாம்! :D)
மதி :lachen001:மாமா வரட்டும் உங்களை மாமான்னு கூப்பிட சொன்னாரு
ஆதவானு சொல்லிடறேன்
 
Back
Top