ஆதவா
New member
முன்குறிப்புகள்
1. முன்பே சொல்லிவிடுகிறேன். இப்பதிவின் மூலம் யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை. ஆனால் எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம். குறிப்பாக கமலஹாசனை தனது ஆதர்ஷ நாயகனாக நினைக்கும் அவரது ரசிகர்கள்.. நம் மன்றத்திலும் கமல் ரசிகர்கள் உண்டு என்பதால் அவர்களும் தன் பங்கு நியாயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
2. இப்பதிவு முழுக்க முழுக்க கருந்தேள்.காம் (http://www.karundhel.com) சென்ஸ் ஸ்பாட் (http://jackofall.blogspot.com) ஆகிய தளங்களில் உள்ள கமல்ஹாசனைப் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்தது. ஆகவே, பதிவின் மூலமான அவர்களுக்கு முதலில் நன்றி. எடுத்து வழங்குவது மட்டுமே என்னுடைய வேலை.
3. இந்த விவாதம் முழுக்க கமல்ஹாசனின் நடிப்பு, சினிமா சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டுமே பேசப்படும். கமல்ஹாசனின் அந்தரங்க நடவடிக்கைகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், மற்றும் தனிநபர் தாக்குதல் குறித்தெல்லாம் பேசப்படாமல் இருப்பது வரவேற்க்கப்படும்.
சரி இப்போது விவாதத்திற்குள் செல்லலாம்.
Plagiarism என்று சொல்லப்படும் அறிவு சார்ந்த சொத்து திருட்டு என்பது பரவலாக எல்லா மொழியிலும் குறிப்பாக இந்திய சினிமாக்களில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது போல பலவருஷங்களாகவே இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே... அதிலும் தற்சமயம் உள்ள இணைய தொடர்புகளின் வழியே எல்லா திரைப்படங்களையும் வெகு எளிதாக கண்டுவிடமுடிகிறது. ஒவ்வொரு சினிமாவையும் எடை போடுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ விஷயங்கள் வந்துவிட்டன. ஆக காப்பியடித்தல் என்பது இன்னும் கனஜோராக நடைபெற்று வரும் என்பதில் ஐயமில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் எண்ட் கிரடிட்டில் பிலிமோகிராபி என்று சில படங்களின் பெயர்களையும் அப்படங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார் ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன். அதில், cache, Amores perros, Babel, தேவர்மகன், விருமாண்டி, பருத்திவீரன் போன்ற படங்களின் இன்ஸ்ப்ரேஷனிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக நாம் அறியலாம். ஆடுகளம் எந்த படத்தின் காப்பியுமல்ல. ஒரு இன்ஷ்ப்ரேஷன்,, தூண்டுதல் மட்டுமே. அந்த இயக்குனருக்கு அதனைத் தெரிவிக்க வேண்டுமென்று விருப்பம் இருந்திருக்கிறது. இது அவரின் நேர்மையையும் ஒழுக்கத்தையும், சினிமா மீதுள்ள காதலையும் காட்டுகிறது. ஆனால் கமலுக்கு அந்த நேர்மை இருக்கிறதா???
கமல்ஹாசன்!!! ஒவ்வொரு தமிழ்ரசிகருக்குள்ளும் கமல் பற்றிய ஒரு அதீத பிம்பம் இருக்கிறது. அவர் நல்ல நடிகர், திறமையான இயக்குனர், வித்தியாசமான கதைக்களனைக் கையாள்பவர், தொழில்நுட்ப ரீதியான பல புதுமைகளை தமிழ் திரையுலக்கு அளித்தவர், வணிக சினிமாக்களிலிருந்து தள்ளி ஒரு கலைப்படைப்பு ஒன்றினைத் தர கமலா மட்டுமே முடியும் என்ற பிரமிப்பு எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கமல் சொந்தமானவரா? கொஞ்சம் ஆராய்ந்தால் கமல் தனது தொழிலை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கிறார் என்பது புரியும். கமல்ஹாசன் எனும் பிம்பம் தமிழ் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாக்களின் மிக உயரிய பிம்பம். பல புதிய இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் ரோல்மாடலாக விளங்குகிறார். கமல் ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தும் போது மற்றவர்களும் அதைப் பின்பற்ற தயங்குவதேயில்லை. ஏனெனில் கமல் எனும் உயரிய பிம்பம்!! இந்த பிம்பத்திற்குள் நெடியடிக்கும் விஷயமொன்று இருப்பது சாதாரண கமல் ரசிகர்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை. ஏனெனில் அப்படியொரு திறமைக்காரர் இவர்.
முதலில் அவரது கடைசி படத்திலிருந்து செல்லுவோம்.
மன்மதன் அம்பு. இத்திரைப்படத்தை இந்நேரம் மன்றத்திலுள்ள அனைவரும் பாத்திருப்பீர்கள். ஒரு காதலன், கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் காதலியை வேவு பார்க்க உளவாளி ஒருவனை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். உளவாளியும் காதலியும் ஒருசமயத்தில் காதலிக்கத் துவங்க, தொடர்ந்து வரும் காதலனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம் இது. சரி, இதிலென்ன கமல் சினிமாவைக் கெடுத்துவிட்டார்?
இத்திரைப்படம் முழுக்க முழுக்க Romance on the High Seas எனும் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. கணவன் கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் மனைவியை சந்தேகப்பட்டு வேவு பார்க்க ஒரு உளவாளியை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். கப்பல் பிரயாணத்திற்கு முன்னர் மனைவி வேறொருத்தியை அனுப்பிவிட, உளவாளியும் இன்னொருத்தியும் காதலிக்கத் துவங்க தொடர்ந்து வரும் கணவனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம்...
இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள், மன்மதன் அம்புவில் காதலன் காதலி, Romance on the High Seas இல் கணவன் மனைவி, தவிர, மனைவிக்குப் பதில் இன்னொருத்தி செல்லுகிறாள்... மற்றபடி கதையின் முக்கியமான கரு (சந்தேகப்பட்டு வேவு பார்த்தல்) மற்றும் கதைக் களன் (க்ரூஸ்) போன்றவை அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் சினிமா உலகிலேயே இலக்கியங்கள் படிப்பவரும், பல உலகசினிமாக்கள் பார்ப்பவருமான கமல்ஹாசனுக்கு இந்த படம் பற்றி தெரியவாய்ப்பில்லை என்றும், தற்செயலானது என்றும் 0.0001% கூட சொல்ல முடியாது. ஒரு சாதாரண ரசிகருக்கே மூலப்படம் தெரியும் பொழுது அனைத்தும் அறிந்தவருக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமாகவே படுகிறது.
கதைதானே காப்பியடிக்கப்பட்டிருக்கு என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டால்??
அது தவறில்லையா??/ ஒருவரின் அனுமதியில்லாமல் அவரது கதையைத் திருடலாமா? பொருள் திருட்டுமட்டும் குற்றமல்ல, அறிவுசொத்துத் திருட்டும் ஒரு குற்றமே... மன்றத்தில் சிறப்பான கதைகளை எழுதும் சிவா.ஜி அண்ணா, கீதம் அக்கா, தக்ஸ் போன்றவர்களின் கதையை அப்படியே திருடி அல்லது, மூலக்கதைப் போக்கை மட்டும் மாற்றி இன்னொருவர் விற்று சம்பாதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோபப்படமாட்டீர்களா? அல்லது இன்னொருவன் தின்றுவிட்டுப் போகட்டும் என்று சொல்வீர்களா?? அதைவிடுங்கள், உங்களது வெற்றிகரமான ஒரு ஐடியாவை இன்னொருவர் திருடிக் கொண்டால் நீங்கள் உண்மையிலேயே என்ன நினைப்பீர்கள்?? சந்தோஷப்படுவீர்களா??? ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது இன்ஸ்ப்ரேஷன் (கவனிக்க, படக்கதைகூட தழுவல் இல்லாத நிலையிலும்) படங்களைப் பட்டியலிடும் பொழுது, ஏன் கமலால் தான் இந்த படத்தின் கதையைக் கையாண்டோம் என்று சொல்லமுடியவில்லை?? தனது சொந்தக் கதை என்று ஏன் “அழுத்தி” சொல்லவேண்டும்...
“மன்மதன் அம்பு வின் இயக்குனரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் கமலிடம் கேட்கிறாய்” என்று யாரோ டைப்படிக்க எண்ணியிருப்பதாக கேள்வி... அப்படி டைப்படிக்கும் முன் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது.
அடுத்து, இந்த ஒரு படம்தானே ஆதவா என்று ஆதங்கப்படுபவர்களும் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். ஏனெனில் இன்னும் பல கமலின் படங்கள் காப்பியடிக்கப்பட்ட, கமலின் சொந்த சரக்கற்ற படங்களே என்று ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்... அவ்வளவு ஏன், கமலின் நடிப்பு கூட சுயநடிப்பே கிடையாது என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்...
இப்போதைக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டு பிறகு தொடர்கிறேன். அதற்குள் மக்கள் தங்களது கருத்துக்களை, முக்கியமாக விவாதத்தைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்!!! உங்களது பங்களிப்புக்கு ஏற்ப நிச்சயம் தொடருவேன்.... ஆதாரத்துடன்
1. முன்பே சொல்லிவிடுகிறேன். இப்பதிவின் மூலம் யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை. ஆனால் எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம். குறிப்பாக கமலஹாசனை தனது ஆதர்ஷ நாயகனாக நினைக்கும் அவரது ரசிகர்கள்.. நம் மன்றத்திலும் கமல் ரசிகர்கள் உண்டு என்பதால் அவர்களும் தன் பங்கு நியாயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
2. இப்பதிவு முழுக்க முழுக்க கருந்தேள்.காம் (http://www.karundhel.com) சென்ஸ் ஸ்பாட் (http://jackofall.blogspot.com) ஆகிய தளங்களில் உள்ள கமல்ஹாசனைப் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்தது. ஆகவே, பதிவின் மூலமான அவர்களுக்கு முதலில் நன்றி. எடுத்து வழங்குவது மட்டுமே என்னுடைய வேலை.
3. இந்த விவாதம் முழுக்க கமல்ஹாசனின் நடிப்பு, சினிமா சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டுமே பேசப்படும். கமல்ஹாசனின் அந்தரங்க நடவடிக்கைகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், மற்றும் தனிநபர் தாக்குதல் குறித்தெல்லாம் பேசப்படாமல் இருப்பது வரவேற்க்கப்படும்.
சரி இப்போது விவாதத்திற்குள் செல்லலாம்.
Plagiarism என்று சொல்லப்படும் அறிவு சார்ந்த சொத்து திருட்டு என்பது பரவலாக எல்லா மொழியிலும் குறிப்பாக இந்திய சினிமாக்களில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது போல பலவருஷங்களாகவே இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே... அதிலும் தற்சமயம் உள்ள இணைய தொடர்புகளின் வழியே எல்லா திரைப்படங்களையும் வெகு எளிதாக கண்டுவிடமுடிகிறது. ஒவ்வொரு சினிமாவையும் எடை போடுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ விஷயங்கள் வந்துவிட்டன. ஆக காப்பியடித்தல் என்பது இன்னும் கனஜோராக நடைபெற்று வரும் என்பதில் ஐயமில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் எண்ட் கிரடிட்டில் பிலிமோகிராபி என்று சில படங்களின் பெயர்களையும் அப்படங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார் ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன். அதில், cache, Amores perros, Babel, தேவர்மகன், விருமாண்டி, பருத்திவீரன் போன்ற படங்களின் இன்ஸ்ப்ரேஷனிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக நாம் அறியலாம். ஆடுகளம் எந்த படத்தின் காப்பியுமல்ல. ஒரு இன்ஷ்ப்ரேஷன்,, தூண்டுதல் மட்டுமே. அந்த இயக்குனருக்கு அதனைத் தெரிவிக்க வேண்டுமென்று விருப்பம் இருந்திருக்கிறது. இது அவரின் நேர்மையையும் ஒழுக்கத்தையும், சினிமா மீதுள்ள காதலையும் காட்டுகிறது. ஆனால் கமலுக்கு அந்த நேர்மை இருக்கிறதா???
கமல்ஹாசன்!!! ஒவ்வொரு தமிழ்ரசிகருக்குள்ளும் கமல் பற்றிய ஒரு அதீத பிம்பம் இருக்கிறது. அவர் நல்ல நடிகர், திறமையான இயக்குனர், வித்தியாசமான கதைக்களனைக் கையாள்பவர், தொழில்நுட்ப ரீதியான பல புதுமைகளை தமிழ் திரையுலக்கு அளித்தவர், வணிக சினிமாக்களிலிருந்து தள்ளி ஒரு கலைப்படைப்பு ஒன்றினைத் தர கமலா மட்டுமே முடியும் என்ற பிரமிப்பு எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கமல் சொந்தமானவரா? கொஞ்சம் ஆராய்ந்தால் கமல் தனது தொழிலை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கிறார் என்பது புரியும். கமல்ஹாசன் எனும் பிம்பம் தமிழ் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாக்களின் மிக உயரிய பிம்பம். பல புதிய இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் ரோல்மாடலாக விளங்குகிறார். கமல் ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தும் போது மற்றவர்களும் அதைப் பின்பற்ற தயங்குவதேயில்லை. ஏனெனில் கமல் எனும் உயரிய பிம்பம்!! இந்த பிம்பத்திற்குள் நெடியடிக்கும் விஷயமொன்று இருப்பது சாதாரண கமல் ரசிகர்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை. ஏனெனில் அப்படியொரு திறமைக்காரர் இவர்.
முதலில் அவரது கடைசி படத்திலிருந்து செல்லுவோம்.
மன்மதன் அம்பு. இத்திரைப்படத்தை இந்நேரம் மன்றத்திலுள்ள அனைவரும் பாத்திருப்பீர்கள். ஒரு காதலன், கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் காதலியை வேவு பார்க்க உளவாளி ஒருவனை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். உளவாளியும் காதலியும் ஒருசமயத்தில் காதலிக்கத் துவங்க, தொடர்ந்து வரும் காதலனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம் இது. சரி, இதிலென்ன கமல் சினிமாவைக் கெடுத்துவிட்டார்?
இத்திரைப்படம் முழுக்க முழுக்க Romance on the High Seas எனும் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. கணவன் கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் மனைவியை சந்தேகப்பட்டு வேவு பார்க்க ஒரு உளவாளியை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். கப்பல் பிரயாணத்திற்கு முன்னர் மனைவி வேறொருத்தியை அனுப்பிவிட, உளவாளியும் இன்னொருத்தியும் காதலிக்கத் துவங்க தொடர்ந்து வரும் கணவனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம்...
இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள், மன்மதன் அம்புவில் காதலன் காதலி, Romance on the High Seas இல் கணவன் மனைவி, தவிர, மனைவிக்குப் பதில் இன்னொருத்தி செல்லுகிறாள்... மற்றபடி கதையின் முக்கியமான கரு (சந்தேகப்பட்டு வேவு பார்த்தல்) மற்றும் கதைக் களன் (க்ரூஸ்) போன்றவை அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் சினிமா உலகிலேயே இலக்கியங்கள் படிப்பவரும், பல உலகசினிமாக்கள் பார்ப்பவருமான கமல்ஹாசனுக்கு இந்த படம் பற்றி தெரியவாய்ப்பில்லை என்றும், தற்செயலானது என்றும் 0.0001% கூட சொல்ல முடியாது. ஒரு சாதாரண ரசிகருக்கே மூலப்படம் தெரியும் பொழுது அனைத்தும் அறிந்தவருக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமாகவே படுகிறது.
கதைதானே காப்பியடிக்கப்பட்டிருக்கு என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டால்??
அது தவறில்லையா??/ ஒருவரின் அனுமதியில்லாமல் அவரது கதையைத் திருடலாமா? பொருள் திருட்டுமட்டும் குற்றமல்ல, அறிவுசொத்துத் திருட்டும் ஒரு குற்றமே... மன்றத்தில் சிறப்பான கதைகளை எழுதும் சிவா.ஜி அண்ணா, கீதம் அக்கா, தக்ஸ் போன்றவர்களின் கதையை அப்படியே திருடி அல்லது, மூலக்கதைப் போக்கை மட்டும் மாற்றி இன்னொருவர் விற்று சம்பாதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோபப்படமாட்டீர்களா? அல்லது இன்னொருவன் தின்றுவிட்டுப் போகட்டும் என்று சொல்வீர்களா?? அதைவிடுங்கள், உங்களது வெற்றிகரமான ஒரு ஐடியாவை இன்னொருவர் திருடிக் கொண்டால் நீங்கள் உண்மையிலேயே என்ன நினைப்பீர்கள்?? சந்தோஷப்படுவீர்களா??? ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது இன்ஸ்ப்ரேஷன் (கவனிக்க, படக்கதைகூட தழுவல் இல்லாத நிலையிலும்) படங்களைப் பட்டியலிடும் பொழுது, ஏன் கமலால் தான் இந்த படத்தின் கதையைக் கையாண்டோம் என்று சொல்லமுடியவில்லை?? தனது சொந்தக் கதை என்று ஏன் “அழுத்தி” சொல்லவேண்டும்...
“மன்மதன் அம்பு வின் இயக்குனரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் கமலிடம் கேட்கிறாய்” என்று யாரோ டைப்படிக்க எண்ணியிருப்பதாக கேள்வி... அப்படி டைப்படிக்கும் முன் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது.
அடுத்து, இந்த ஒரு படம்தானே ஆதவா என்று ஆதங்கப்படுபவர்களும் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். ஏனெனில் இன்னும் பல கமலின் படங்கள் காப்பியடிக்கப்பட்ட, கமலின் சொந்த சரக்கற்ற படங்களே என்று ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்... அவ்வளவு ஏன், கமலின் நடிப்பு கூட சுயநடிப்பே கிடையாது என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்...
இப்போதைக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டு பிறகு தொடர்கிறேன். அதற்குள் மக்கள் தங்களது கருத்துக்களை, முக்கியமாக விவாதத்தைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்!!! உங்களது பங்களிப்புக்கு ஏற்ப நிச்சயம் தொடருவேன்.... ஆதாரத்துடன்
Last edited: